<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	>
<channel>
	<title>Comments on: Vaaranam Aayiram - not the film, but sculpture from Halebid </title>
	<atom:link href="http://poetryinstone.in/lang/en/2008/12/04/vaaranam-aayiram-not-the-film-but-sculpture-from-halebid.html/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://poetryinstone.in/lang/en/2008/12/04/vaaranam-aayiram-not-the-film-but-sculpture-from-halebid.html</link>
	<description></description>
	<pubDate>Fri, 18 May 2012 11:42:05 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.7</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>By: Dhivakar</title>
		<link>http://poetryinstone.in/lang/en/2008/12/04/vaaranam-aayiram-not-the-film-but-sculpture-from-halebid.html/comment-page-1#comment-424</link>
		<dc:creator>Dhivakar</dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2008 05:45:18 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.poetryinstone.in/?p=1664#comment-424</guid>
		<description>விஜய்,
அனைத்து சிற்பங்களும் அருமை. வாரணம் ஆயிரம் என்று பெயர் வைத்ததில் கூட தவறில்லைதான். ஆனால் இந்த ‘வாரணம் ஆயிரம்’ என்ற வரிகளுக்கு முழு முதல் சொந்தக்காரி ஆண்டாள்தான். அதனாலேயே இந்த வரிகளைப் படித்ததும் அவள் தமிழும், கண்ணன் மணக்கோலத்தில் காணப்படும் காட்சிகளும்தான் கண்களுக்கும் மனதுக்கும் புலப்படும். 
ஆனால் உங்கள் அருமையான சிற்பங்களுக்கு முழு ஆதரவாக கலிங்கத்துப் பரணி மிக அழகாக கை கொடுக்கிறது. குறிப்பாக யானைகள் இறந்துபட்ட நிகழ்ச்சிகள் கலிங்கத்துப் பரணியில் வர்ணிக்கப்படுவது போல வேறு எந்தக் காவியத்திலும் வர்ணிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. நிறையவே இருந்தாலும் ஒரு சின்ன சாம்பிள்:
பிறங்கு சோரி வாரி யிற்பி ளிற்றி வீழ்க ளிற்றினங்
கறங்கு வேலை நீரு ணக் கவிழ்ந்த மேக மொக்குமே
(யானைகள் போரில் ஏற்பட்ட மிகுந்த ரத்தவெள்ளத்தில் கொலையுண்டு விழுந்தது, மேகங்கள் கூட்டமாக எப்படி கடலில் படியுமோ அதை ஒத்திருந்தது. 
ஒட்டறப் பட்ட போரி லூர்பவர் தம்மை வீசிக்
கட்டறுத் தவர்போல் நின்று கட்டுண்ட களிற நேகம்.
தோற்று ஓடிய கலிங்கர்(ஒட்டர்) தம் அடிபட்ட யானைகளை சோழப்படைகளை நோக்கி ஏவும்போது அதை சொழர்கள் திருப்பி அடித்துக் கட்டிப் போட்டது, யோகியாகப்பட்டவரிடம் இந்த கண் மூக்கு, செவி, வாய், மெய் என்ற ஐம்புலன்கள் எப்படி கட்டுப்படுமோ அப்படி கட்டுண்டு இந்த யானைகள் கிடந்தன. 

ஏன் இன்னொரு கட்டத்தில் யானைகள் மயங்கி மடிந்து ஊர்வது போல இருந்தது கடலிலே பல கப்பல்கள் ஒரேவரிசையாக மெல்ல மிதந்து செல்வதற்கு உவமை காட்டுகிறார் ஜெயங்கொண்டார்.

இவை யாவுமே உங்கள் கடைச் சிற்பத்தை நன்றாகவே நினைவூட்டுகின்றன.

வாழ்த்துகள்

திவாகர்</description>
		<content:encoded><![CDATA[<p>விஜய்,<br />
அனைத்து சிற்பங்களும் அருமை. வாரணம் ஆயிரம் என்று பெயர் வைத்ததில் கூட தவறில்லைதான். ஆனால் இந்த ‘வாரணம் ஆயிரம்’ என்ற வரிகளுக்கு முழு முதல் சொந்தக்காரி ஆண்டாள்தான். அதனாலேயே இந்த வரிகளைப் படித்ததும் அவள் தமிழும், கண்ணன் மணக்கோலத்தில் காணப்படும் காட்சிகளும்தான் கண்களுக்கும் மனதுக்கும் புலப்படும்.<br />
ஆனால் உங்கள் அருமையான சிற்பங்களுக்கு முழு ஆதரவாக கலிங்கத்துப் பரணி மிக அழகாக கை கொடுக்கிறது. குறிப்பாக யானைகள் இறந்துபட்ட நிகழ்ச்சிகள் கலிங்கத்துப் பரணியில் வர்ணிக்கப்படுவது போல வேறு எந்தக் காவியத்திலும் வர்ணிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. நிறையவே இருந்தாலும் ஒரு சின்ன சாம்பிள்:<br />
பிறங்கு சோரி வாரி யிற்பி ளிற்றி வீழ்க ளிற்றினங்<br />
கறங்கு வேலை நீரு ணக் கவிழ்ந்த மேக மொக்குமே<br />
(யானைகள் போரில் ஏற்பட்ட மிகுந்த ரத்தவெள்ளத்தில் கொலையுண்டு விழுந்தது, மேகங்கள் கூட்டமாக எப்படி கடலில் படியுமோ அதை ஒத்திருந்தது.<br />
ஒட்டறப் பட்ட போரி லூர்பவர் தம்மை வீசிக்<br />
கட்டறுத் தவர்போல் நின்று கட்டுண்ட களிற நேகம்.<br />
தோற்று ஓடிய கலிங்கர்(ஒட்டர்) தம் அடிபட்ட யானைகளை சோழப்படைகளை நோக்கி ஏவும்போது அதை சொழர்கள் திருப்பி அடித்துக் கட்டிப் போட்டது, யோகியாகப்பட்டவரிடம் இந்த கண் மூக்கு, செவி, வாய், மெய் என்ற ஐம்புலன்கள் எப்படி கட்டுப்படுமோ அப்படி கட்டுண்டு இந்த யானைகள் கிடந்தன. </p>
<p>ஏன் இன்னொரு கட்டத்தில் யானைகள் மயங்கி மடிந்து ஊர்வது போல இருந்தது கடலிலே பல கப்பல்கள் ஒரேவரிசையாக மெல்ல மிதந்து செல்வதற்கு உவமை காட்டுகிறார் ஜெயங்கொண்டார்.</p>
<p>இவை யாவுமே உங்கள் கடைச் சிற்பத்தை நன்றாகவே நினைவூட்டுகின்றன.</p>
<p>வாழ்த்துகள்</p>
<p>திவாகர்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Satheesh kumar R</title>
		<link>http://poetryinstone.in/lang/en/2008/12/04/vaaranam-aayiram-not-the-film-but-sculpture-from-halebid.html/comment-page-1#comment-401</link>
		<dc:creator>Satheesh kumar R</dc:creator>
		<pubDate>Thu, 04 Dec 2008 14:23:04 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.poetryinstone.in/?p=1664#comment-401</guid>
		<description>யானைகளும், குதிரைகளும் போர்களத்தில் வீழ்ந்து கிடக்கும் என்று படித்துதான் இருந்தேன், இன்றுதான் நேரில் பார்க்கிறேன். பீமன் வேண்டுமானால் யானை உயரம் இருக்கலாம் ஆனால் மற்ற வீரர்கள் எப்படி? இருப்பினும் அற்புதமான சிற்பங்கள். நன்றி</description>
		<content:encoded><![CDATA[<p>யானைகளும், குதிரைகளும் போர்களத்தில் வீழ்ந்து கிடக்கும் என்று படித்துதான் இருந்தேன், இன்றுதான் நேரில் பார்க்கிறேன். பீமன் வேண்டுமானால் யானை உயரம் இருக்கலாம் ஆனால் மற்ற வீரர்கள் எப்படி? இருப்பினும் அற்புதமான சிற்பங்கள். நன்றி</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

