கஜுராஹோ லக்குமான கோவில் அற்புத வராஹ மூர்த்தி சிலை. தன்னுள் அணைத்து ஜீவராசிகளையும் கொண்ட வடிவம். தொலைவில் இருந்து பார்கையில் சிற்பியின் கலைநுட்பம் சரியாக தெரிவில்லை - சற்று அருகில் சென்று பாருங்கள்..
அடடா பன்றியின் கோரை பல் - பின்னோக்கி இருக்கும் காது மடல் - எங்கும் சிற்பங்கள்
கால் , தொடை முதுகு என்று எங்கும் வடிவங்கள் - அக்காலத்தில் பாதாள லோகத்தை உணர்த்த நாக வடிவத்தை இடுவர் - இங்கும் உண்டு - எனினும் தலை சிதைந்து விட்டது - நாகத்தின் உடம்பு அழகே பன்றியின் கால்களுக்கு நடுவில் செல்வதை பாருங்கள்
( நாம் முன்பு பார்த்த உதயகிரி சிற்பத்தில் இந்நாகத்தை நாம் கண்டோம் ) - அது மட்டும் அல்ல பல இடங்களில் சிதைந்து உள்ள இச்சிலை - அது கண்டு எடுத்த தேவியையும் தொலைத்து விட்டது -மிஞ்சியது அவள் பாதங்களே.
பகுப்பு: சிற்பம்
குறிச்சொற்கள்: வராஹம், அவதாரம், விஷ்ணு
தொடர்புடைய இடுகைகள்:
Read this in
English


தமிழ்
இதுவரை 2 மறுமொழிகள்
மறுமொழி இடுக