சென்ற ஜூன் மாதம் சென்னை சென்றபோது நண்பர் சந்திரா அவர்கள் ரீச் (REACH Foundation - temple restoration group) உத்திரமேரூர் கைலாசநாத கோவில் பற்றி கூறி அங்கே செல்வோமா என்றார்.ஆஹா ஒரு வாரம் இந்தியா பயணத்தில் நமக்கு இப்படி ஒரு அதிஷ்டமா என்று ஆவலுடன் சென்றேன்.
அங்கு கண்ட காட்சி ஏன்டா சென்றோம் என்று என்னை இன்று வரை உலுக்கும் என்று அப்போது தெரியவில்லை.
பயணம் இனிதே, எட்டு மணிக்கு புறப்பட்டு பத்து மணிக்குள் சென்றோம், பெருமாள் கோவில் முதலில் சென்றோம். அங்கிருந்து கைலாசநாத கோவில் சென்றோம். பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டது, படங்களை மெதுவாக பாருங்கள்… புரியும்.
முதலில் பார்த்தபோது எப்போது வேணும் என்றாலும் விழும் என்று இருந்தது கோபுரம் ( brick super structure on a solid granite base ),எனினும் அடித்தளம் கருங்கல், ஆனால் எங்கும் ஒரே குப்பை - துடைத்தோம். எதோ கிறுக்கல் போல தென்பட்டது,கூட வந்த கல்வெட்டு அராய்ச்சியாளர்
உதவியுடன் படித்தோம்…. மேலே முதல் வரி
ஸ்வஸ்திர்ஸ்ரீ திரு மன்னி வளர இரு நில மடந்தையும் ……ஐயோ முதலாம் ராஜேந்திர சோழன் (1012 AD to 1044 AD) இன்னுமும் கிழே உள்ள இடத்தை சுத்தம் செய்து - படித்தார் ….. தந்தி வர்ம பல்லவன். (around 830 AD)
ஆயிரத்தி முன்னுறு அண்டு பழமை -சென்னை அருகில் ( approx 60 kms) -இப்படி ஒரு அவல நிலை. மொழி / மறை - தமிழ் - புழுதியில்.
பலே தமிழா, இந்த பெருமை உன்னை மட்டுமே சாரும்.
ஆனால் இப்போது இந்த கோவிலுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. REACH FOUNDATION என்ற அமைப்பு இந்த பணியில் முழு மூச்சாக இறங்கி ஆலயத்தை செவ்வனே புதுபித்து வருகிறது. இதற்கு நன்கொடைகள் பல தேவை . முடிந்தால் உதவுங்கள். இதோ நமக்கு ஒரு முன்னோடி. சாதாரண மனிதர், தனது நிலத்தை விற்று பணத்தை கொடை செய்த வள்ளல்.இவர் போல இன்னும் பல நல்ல நெஞ்சங்கள் முன்வர வேண்டும்.
http://www.conserveheritage.org/
பகுப்பு: சிற்பம்
குறிச்சொற்கள்: பல்லவ, உத்திரமேரூர்
தொடர்புடைய இடுகைகள்:
Read this in
English


தமிழ்
இதுவரை 12 மறுமொழிகள்
மறுமொழி இடுக