Quantcast



நாம் மல்லை அர்ஜுன தவம் முன்னர் பார்த்தோம். அதே போல காஞ்சி கைலசனாத கோவில் சிற்பமும் பார்த்தோம்.அங்கே பல்லவ சிற்பியின் கலை பார்த்த நாம் - இப்போது அங்கிருந்து சுமார் முன்னூறு ஆண்டுகள் பின்னர் சோழ சிற்பி இதே கதையை கையாண்ட முறையை பார்போம்.

சோழ பேரரசன் ராஜ ராஜன் கட்டிய கற்றளி - தஞ்சை பெரிய கோவில் (எனினும் அவனே பெரிய கற்றளி என்று அழைத்த கோவில் காஞ்சி கைலசனாத கோவில். )

சரி, பெரிய கோவில் என்றதும் அங்கு இருக்கும் அனைத்தும் பெரியது என்று இல்லாமல் - நாம் அங்கே இருக்கும் சிறு சிற்பங்களை பார்போம். முன்பு நாம் பார்த்த சண்டேச அணுகிறஹ முர்த்தி போல, அடுத்து நாம் பார்ப்பது பசுபதஅஸ்த்ரதான முர்த்தி. சிறு சிற்பம் என்றாலும் மிக அழகான வடிவம். முதலில் முழு சிற்பத்தையும் கொஞ்சம் பாருங்கள்.

kirata arjuna panel tanjore.jpg

நிறைய நபர்கள் - புரிய கொஞ்சம் கடினமாக இருக்கிறதா ?. சரி ஒவ்வொன்றாக பார்போம். முதலில் கீழ் இருந்து மேல்

முதல் வரிசை

boar.JPG

இங்கே சிவ பூத கணங்கள் - கொஞ்சம் கொஞ்சமாக ஒரு காட்டுப்பன்றி போல மாறுவது போல வடித்து உள்ளனர். சரி கதையை மீண்டும் பார்போம். ***

அர்ஜுனன் மகாபாரத போருக்கு தன்னை தயார் படுத்து ஈசனிடம் இருந்து பசுபத அஸ்திரத்தை பெற முயல்கிறான். கடுந்தவம் புரிகிறான். அப்போது ஈசன் அவனை விளையாட்டாய் பரிசோதிக்க வேடுவன் போல வேடம் இட்டு - ஒரு பன்றியாயை இருவரும் வேட்டை ஆடுவது போல நிகழ்வு, அப்புறம் இருவருக்கும் யுத்தம் - கடைசியில் அர்ஜுனன் வந்தது ஈசன் என்று உணர்த்து அவன் தாள் பணிய, அஸ்திரத்தை பெறுகிறான்.

இப்போது மீண்டும் சிற்பத்திற்கு வருவோம் - இரண்டாம் தளம் - இங்கே அர்ஜுனன் ஒரு காலில் நின்று தவம் புரிகிறான் ( கடுந்தவம் போல இல்லை - மல்லையில் எலும்பும் தோலுமாய் இருந்த துறவி போல இல்லாமல் சற்று நன்றாகத்தான் உள்ளான் )

arjuna in penance.jpg
couldbearjuna.jpg
Mallai penance Panel- boon Giving

அடுத்த காட்சி - இருவருக்கும் யுத்தம் - அருகில் உமை, தனது மடியில் குழந்தை முருகனை வைத்து இருக்கும் கோலம் அருமை

kirataarjuna.JPG
shiva as kirada and arjuna locked in battle while parvathi watches with skanda.jpg

இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் கோலம் ( நாம் முன்பு காஞ்சி கைலாசநாத கோவிலில் பார்த்த வடிவம் ) அருமை.

kirata arjuna kaanchi.jpg
brahmavishnu+consort.JPG

அருகில் நான்முகன், மஹாவிஷ்ணு மற்றும் லெட்சுமி . மல்லையில் விஷ்ணு மட்டும் கோவிலினுள் இருப்பது போல இருக்குமே ??

Mallai penance Panel Vishnu Shrine.jpg

அடுத்த மேலும் சில தெய்வங்கள் - இந்த அறிய காட்சியை கண்டு நிற்கின்றனர்.

அடுத்த தளம் - இங்கே அருமையாக அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் ஈசன் - அடுத்து உமை - அவர்களுக்கு முன் கை கூப்பி நிற்க்கும் அர்ஜுனன் - அர்ஜுனனுக்கு அஸ்திரத்தை அளிக்கும் குள்ள பூத கணம்…இதை காணும் விண்ணவர்கள் அவர்களை போற்றுகின்றனர்.

Gana handing over the weapon.jpg
shiva parvathi, gana and arjuna.JPG

அடுத்து - அம்மையும் அப்பனும், மடியில் முருகனும் மீண்டும் கைலைக்கு செல்கின்றனர். அந்த குழந்தையின் மடி சவாரி - என்ன உயிரோட்டம்.

shiva n parvati with skanda returning to kailash.jpg

கடை தளம் - இங்கேயும் விண்ணவர். ஒரு முனிவர் தன் சீடனுக்கு ஏதோ உபதேசம் செய்வது போல உள்ளது - வியாசர் விருந்தோ ?

a saint retelling the tale.jpg
reciting the mahabaratha.jpg

***

இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி

ஒரு அருமையான நம் ஐயம் தீர்க்கும் பாடல் ( இதற்க்கு சரியான விளக்கம் தந்த திரு வி. சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.)

சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.48.6

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ(டு) எய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழும் சேய்ஞலூர் மேயவனே.

கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுன னோடு போர் புரிந்தது ஏனோ?

குறிப்புரை:
பன்றியைத் துரத்திவந்து வேடனாகி விசயனோடு சண்டையிட்டது ஏன் என்கின்றது. ஏனம் - பன்றி. இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி. இதனைத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான் பன்றியைக்கொன்று விசயனைக் காத்தனர் என்பது வரலாறு. கோடு - கொம்பு. மால் - பெரிய; மயக்கமுமாம். கோச்செங்கண்ணான் செய்த கோயில்களில் ஒன்றாதலின் அவற்கு அருள்செய் சேய்ஞலூர் மேயவனே என்றார். சேடு - பெருமை.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, செப்டம்பர் 8th, 2008 அன்று 10:39 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

ஒரு மறுமொழி

Kathie Brobeck
  1  

Dear Vijay,
What struck me about this panel, is that the
‘gana’ is a correctly depicted dwarf, not just
some mythological figure. I don’t remember the name for this genetic dwarfism, but it’s
shown accurately.

செப்டம்பர் 20th, 2008 at 17:42

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி