சரி, முந்தைய மடலில் பெரிய கோவில் ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்தோம். பொன்னியின் செல்வரான அருள்மொழி வர்மரின் தாக்கத்தில் சற்று நிறைய எழுதி விட்டேன்.
தொலைவில் இருந்து பார்த்தோம். இப்போது நெருங்கி செல்வோம், ஆனால் ஒரு மாற்றம். உங்கள் கண்களை கட்டி, அழைத்து போகிறோம். முதல் வாயில் - இது சோழர் காலத்தில் கட்ட பட்டது அல்ல - அடுத்து காந்தளூர் சாலையில் ராஜ ராஜன் பெற்ற வெற்றியை குறிக்கும் கோபுரம் - கேரளாந்தகன் வாயில் - அதையும் இப்போதைக்கு தாண்டி செல்வோம். அடுத்து அரசனாக பதவி ஏற்கும் பொது அவன் சூடிக்கொண்ட பெயரால் விளங்கும் வாயில் - ராஜ ராஜன் வாயில் - இங்கே உங்கள் கண் கட்டை சற்று அவிழ்த்து விடுகிறோம்.
இது என்ன - வாயில் காப்போன் - ( த்வார பாலகன் ) - கோரைப் பல்,பிதுங்கும் கண்களுடன் உங்களை எதிர் கொல்லும்.
நான்கு கரங்கள்,காலை உயர்த்தி,அது என்ன காலின் அடியில்,ஒரு சிங்கம்,சரி இது என்ன ஒரு பாம்பு,சரி பாம்பின் வாயில் என்ன,ஆஹா ஒரு யானை, பின்புறமாக
யானையை முழுங்கும் பாம்பு,யானை எவ்வளவு பெரியது, அதை முழுங்கும்
பாம்பு (anai kolran…anaconda ??),அது எவ்வளவு பெரியது,இப்போது
வருகிறது பாடல்.எப்படி கொர்கிறான் பாருங்கள் சிற்பி.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=1068&padhi=068&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.68.2
புரிகொள்சடையர் அடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க இருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.
பெரிய களிற்று யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள் மிக்க கயிலை
மலையில் விடம் உண்ட கரிய கண்ட ராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும்
இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர்.
கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமை மங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு
பாகமாகக் கொண்டு மகிழ்ந்த தேவர் தலைவராவார்.
இப்போது மேலிருக்கும் துவரபாலகன் கைகளை கவனியுங்கள்,கீழே பார்,யானையை முழுங்கும் பாம்பு,அதை விட நான் எவ்வளவு பெரியவன், ஜாக்கிரதை,உள்ளே இருப்பவரோ,விஸ்மயம் ( சொல்ல நாவில்லை என்று அந்த கற் சிலை தனது கையால் விளக்கும் அழகு )
பெரிய கோவில் துவாரபாலகர்கள் ( வாயிற்காப்போன்) அல்லவா, இதை எப்படி உங்களுக்கு உணர்த்துவது - சரி படத்தில் ஒரு ஆளை, இல்லை ஒரு யானையை கொண்டு வருவோம் - இப்போது புரிகிறதா - பதினெட்டு அடி உயரம் உள்ள இவர்கள்.
ராஜ ராஜன் நிறுவிய தஞ்சை பெரிய கோவில், ராஜ ராஜெஷ்வரம், பெருவுடையார்
கோவில் என்று அவனே அழைத்த, பிருகதீஸ்வரர் ஆலயம்.
அவன் இதனை தக்ஷின மேரு என்று கண்டான், தக்ஷின கைலாசம்,இதனாலேயே
இங்கு விமானம் கோபுரத்தை விட உயரமாக உள்ளது ( மற்ற ஆலயங்களில்
கோபுரம் விமானத்தை விட உயரமாக இருக்கும் )
விமானத்தை கைலாயம் என்று உணர்த்துகிறான் பார்த்தீர்களா….( திரு
K. பாலு ஐயா அவர்கள் இதனை எனக்கு மிக அழகாக விளக்கினார்)
எப்படி ஒரு சிறு சிலை வடிவம் - ஒரு பெரும் தத்துவத்தை விளக்குகிறது பாருங்கள்..
சரி இப்போது மற்ற படங்களை பாருங்கள்
முதல் கோபுரம்
இரேண்டம் கோபுரம் - கேரளாந்தகன் வாயில்
மூன்றாம் கோபுரம் - ராஜ ராஜன் வாயில்
முடிவில் மகா மேரு விமானம் - விமானத்தை பற்றி பல தகவல் உண்டு - அவற்றை விளக்க நாம் மீண்டும் அங்கே செல்வோம். அதுவரை படங்களை பாருங்கள் - அவ்வப்போது படங்களுள் வரும் மனிதர்களை வைத்து இந்த கோவிலின் பெயர் ஏன் பெரிய கோவில் என்று வந்தது என்பது உங்களுக்கு புரியும்.
(படங்கள் தந்து உதவிய நண்பர்கள் மற்றும் திரு ரோகன் ராவ் அவர்களுக்கு நன்றி
http://rohanrrao.wordpress.com/ )
பகுப்பு: சிற்பம்
குறிச்சொற்கள்: சோழ, துவாரபாலகன், ராஜ ராஜா சோழன், தஞ்சாவூர்
தொடர்புடைய இடுகைகள்:
Read this in
English


தமிழ்
இதுவரை 23 மறுமொழிகள்
மறுமொழி இடுக