Quantcast

இதுவரை பல குடைவரைகளை நாம் பார்த்தோம். இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க, அதில் உள்ள கலை நுட்பத்தை மட்டும் அல்லாமல் தொழில் நுட்பத்தையும் அறிய வேண்டும். ஒரு பொருளின் மதிப்பு அதனுள் செல்லும் உழைப்பு, கலை திறன் சேர்த்து வரும் கலவை - அவற்றை அறிந்தால் தானே அவற்றின் அருமை முழுவதுமாக வெளிப்படும்.

இதை அறிய மல்லைக்கு மீண்டும் பயணிப்போம். இங்கே இருக்கும் அற்புத குடவரைகளை வெறும் பாறைகளில் கற்பனை செய்தது மட்டும் அல்லாமல் கருங்கல்லில் எவ்வாறு செதுக்கினான் நம் சிற்பி . அப்போது அவர்களிடம் இருந்த கருவிகள் என்ன. நமக்கு இது புரிய வேண்டும் என்பதற்காகவே அங்கே சில தடயங்களை விட்டு சென்றுள்ளனர் பல்லவ சிற்பிகள்.

மல்லையில் இங்கும் அங்கும் வேலை பாதியிலேயே நின்றுள்ளது ( இது எதனால் என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் - மல்லையை நிறுவிய மன்னன் யார் என்ற கேள்விக்கும் விடை வெளி வரலாம் - வேலை நடுவில் நிற்க்க காரணம் என்ன, எதிரி நாட்டு படை எடுப்பா ?) - இதில் நமக்கு ஒரு நல்லது - பாதியில் வேலை நின்றதனால் ஆங்காங்கே நமக்கு பல தடயங்கள் தெரிகின்றன.

கல்லில் உளி கொண்டு நேர் கொடு போல சிறு துவாரங்களை செதுக்கி, அதனுள் மர கட்டை கொண்டு அழுத்தி ( ஆப்பு ) - அதில் நீர் விட்டனர். கட்டை நீரை உரிந்து உடல் பெருக்கும் - அனைத்து ஆப்புகளும் ஒரே சீராய் பெருக்க, பாறை விரிய முயலும், பிறகு பிளக்கும்.

chiseled holes.JPG
neat row of chiselled holes.jpg
Mallai two types of working with rock.jpg
breaking a boulder.jpg
broken boulder.jpg

சரி, பாறையை பிளக்க இது உதவும். பாறையினுள் குடைந்து குடவரை எப்படி - அதற்கும் சான்றுகள் / தடயங்கள் உள்ளன.

carving into rockface via grids.jpg
hmm wip again.jpg
just started 2.jpg
just started.jpg
was work in progress.jpg
wip.jpg
work that was in progress.jpg

பாறை முகத்தில் சதுரம் சதுரமாக பிரித்து, அதை இன்னும் சிறு சதுரங்களாக செதுக்கி - முடிவில் சிறு கற்கள் போல பாறை சிதறும். அப்பா, என்ன கடினமான வேலை - கை ஓடியும், வியர்வை , உதிரம் இரண்டும் சொட்ட செய்த கலை.

2164300155_2373f0c42a.jpg
P81601610.JPG
early cave kodikkal.jpg
mahisa suramardhini cave  pillar.jpg

இப்போது அதன் வெளிப்பாடு - கடின உழைப்பு, கல்லில் செய்ததனால் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நம் கண்முன்னே நின்று பண்டைய கலை திறன் மற்றும் தொழில் நுட்பத்தின் அழியா சின்னங்களாய் திகழ்கின்றன.

the early end product.jpg

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 14th, 2008 அன்று 5:37 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 5 மறுமொழிகள்

narasiah
  1  

Extraordinary effort. You have taken same amount of trouble as the sculptors might have taken. May God bless you and keep you for doing more of this work!
Suggest reading Early Chola Temples by Balasubramania nd Rajrajeswaram by his son Venkatraman - Narasiah

செப்டம்பர் 17th, 2008 at 15:59
Raju Rajendran
  2  

உடல் பேருக்கும்= உடல் பெருக்கும்

செப்டம்பர் 17th, 2008 at 22:38
  3  

very interesting post ..by the way, thanks for being a guest blogger on backpacker.It has certainly turned the interest of my readers towards sculptiures

செப்டம்பர் 18th, 2008 at 9:40
  4  

fascinating post and a fantastic blog! sheer poetry in stone indeed, thanx for sharing!! :)

செப்டம்பர் 18th, 2008 at 22:21
arunn
  5  

stunning indeed…. infinte times tougher than my toughest of impositions i wrote in my school days!

நவம்பர் 17th, 2008 at 18:58

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி