சில தினங்களுக்கு முன் - அந்தகன் வதம் எல்லோரா சிற்பம் பார்த்தோம். இப்போது அங்கேய இன்னொரு வடிவம் - உள் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பம். மிகவும் சிதைந்த நிலையில் சிற்பம் இருந்தாலும், மிக அருமையான உணர்வுகளை வெளி கொணரும் சிற்பம்.
ஈசனின் கோபம் சற்று தணிந்த நிலையில் உள்ளது. உமையோ அதிகார தோரணையில் அமர்து இருக்கிறாள். ஈசனின் காலில் மிதிபடும் ஒரு அசுரனின் உருவம் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது - அவன் கையில் ஒரு ஆயுதம் / கதை - ஒருவேளை இது கதையின் முதல் பாகமோ - உமையை தாக்க செல்லும் அசுரனோ ? சரியாக தெரியவில்லை.
எனினும் சூலத்தின் உச்சியில் - அந்தகன் குத்து பட்டு இருக்கும் காட்சி மிக அருமை. சாகும் தருவாயில் இரு கரம் கூப்பி சரண் அடையும் அந்தகன் - அருமை.


English
தமிழ்
அண்மைய மறுமொழிகள்