தஞ்சை பெரிய கோயிலை பற்றி பல செய்திகள் பின்னர் கிடைத்த ஆவணங்களின் மூலம் தெளிவு பெற்று உள்ளன - அதன் விமானத்தின் நிழல் தரையில் விழாது ( விழுகிறது - தினமும் ), அதன் மேல் இருப்பது XX எடை கொண்ட ஒரே கல் ( அது ஒரே கல் அல்ல ) , ராஜ ராஜனுக்கு வந்த நோய் தீரவே அவன் பெரிய கோயிலை நிறுவினான் - என்று பல தவறான கருத்துகளை அண்மைய ஆய்வுகள் தெளிவு பெற உதவி உள்ளன.
பெரிய கோயிலை பற்றிய முதல் காணல் மடலில் நான் இந்த அருமையான இணைய தளத்தில் உள்ள ஒரு படத்தை விவாதம் செய்தேன்
http://www.kumbakonam.info/kumbakonam/thanjavur/images/arcpho/arph31.jpg
இதோ அந்த படம் - பெரிய கோயில் விமானத்தின் மேல் உள்ள நந்தியின் அளவை கீழே உள்ள பிரகாரத்தில் உள்ள நந்தியின் அளவை கொண்டு விளக்க ஒரு முயற்சி. இது சரியா ?
இந்த கேள்விக்கு பதில் தேட - திரு குடவாயில் பாலசுப்பிரமணியம ஐயா அவரை அணுகிய பொது - இந்த படங்களை தந்து உதவினார் ( அவரை இதுவரை நேரில் பார்க்காதவர்களுக்கு அவரை படத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு ) . மேலும் பொன்னியின் செல்வன் குழும நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களும் பல படங்களை தந்து உதவினார்.
முதலில் கீழே இருக்கும் நந்தியை பார்போம். அருகில் நிற்பது திரு பாலு ஐயா. இந்த நந்தி ராஜ ராஜன் முதலில் நிறுவிய சிற்பம். நாயக்கர் காலத்தில் அதனை மாற்றி , இங்கே கொண்டு வந்துள்ளனர். இப்போது உள்ள நந்தியும் அவர்கள் நிருவியதே. எதனால் இவ்வாறு செய்தார்கள் ? ஒருவேளை மாலிக் கபூர் சூறையாடல் பொது நேர்ந்த சேதம் காரணமோ ?
இப்போது விமானத்தின் மேல் உள்ள நந்தி வரிசை - அதன் அளவை நாம் எப்படி அளப்பது - அதற்கும் திரு பாலு ஐயாவின் படம் இதோ - பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பொது எடுத்த படம்.
சாரத்தில் நமக்கு என்றே மனிதர்கள் - அவர்களை கொண்டு நாம் நந்தியின் அளவை அலசுவோம்.
இதன் படி பார்த்தல் கீழே இருக்கும் நந்தி - மேல் உள்ள நந்தியை விட அளவில் பெரியது - அதன் வடிவமும் வேறு பாணியில் உள்ளது.
எனினும் இதனை கொண்டு பெரிய கோயில் விமானத்தின் பிரம்மாண்டமான அளவை நாம் தெரிந்துக்கொண்டோம் - மீண்டும் ஒரு முறை தொலைவில் இருந்து அருகில் சென்று இந்த அற்புத சோழ படைப்பை கண்டு ரசிப்போம்.
பகுப்பு: சிற்பம்
குறிச்சொற்கள்: பெரிய கோயில், சோழ, இந்தியா, நந்தி, ராஜ ராஜா சோழன், நிழல், தஞ்சாவூர், சுற்றுலா, விமானம்
தொடர்புடைய இடுகைகள்:
Read this in
English


தமிழ்
இதுவரை 7 மறுமொழிகள்
மறுமொழி இடுக