Quantcast

நாம் முன்னர் புலி கால் முனிவரை பார்த்தோம். இப்போது பாம்பு உடல் முனிவர் - பதஞ்சலியை பார்ப்போம். நன்றி திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் அருமையான உரைக்கு , மற்றும் பிக்காசா கோமில்லா அவர்கள் - அருமையான படங்களுக்கு )

பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சே்ஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் “பதஞ்சலி” என்று ஆனதாய் ஒரு கூற்று. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று.

patanjali 3
patanjali thillai

இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:

“பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில்ல் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் “திருமூர்த்தி மலக்குன்றுகள்” இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் “தென் கைலாயம்” என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்.”

“தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
“நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!”

சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். புரியாதவர்கள் கேட்கவும். முடிந்தால் விளக்குகிறேன்.

“அது என்னுடைய தாத்தா!
மேலே ஏறிப் பார்!
ஆனால் என்னைப் பிறப்பித்தவர்
காலங்கி நாதர்!
பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது
பார், இதுவே சரியான வழி!

அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்.”அப்பா நீ தேடினாயே இது தான் அது!” என்று.
குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது “போகர் 7,000″. அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.

மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வெளி வந்தது தான் அவ்ருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள்.

patanajali 2

இப்போது ஒரு சுவரசீயமான கதையை பார்ப்போம்.

அம்பலவாணனின் நாட்டியத்தை முதலில் கண்டு களித்தவர்களில் பதஞ்சலியும், வியாக்ரபாத முனிவரும் என முன்பே பார்த்தோம் அல்லவா? ஆனால் நந்தி தேவருக்கோ தான் தான் முதலில் கண்டு களித்தவர் என்றதொரு பெருமை இருந்ததாம். இடைவிடாமல் தான் அருகே இருந்து பார்ப்பதாயும் நந்தி தேவருக்குப் பெருமை அதிகமாய் இருந்தது. அதன் காரணமாய்க் கொஞ்சம் கர்வமும் உண்டாயிற்றாம் நந்திதேவருக்கு. வியாக்ரபாதருக்கோ, தான் பூக்களை பறிக்க என இறைவனைக் கேட்டுப் புலிக் கால் வாங்கியதால், புலித் தோலை அரைக்கசைத்த அந்தப் பொன்னார் மேனியனுக்குத் தாமே அருகில் உள்ளோம், மேலும் நமக்கும் இடுப்புக்குக் கீழே புலித்தோலால் ஆன உடலும், கால்களும் இருப்பதால், ஈசனுக்கு இணையாக நர்த்தனம் ஆடலாம் என்றும் நினைத்தாராம். இருவருக்கும் தங்கள், தங்கள் பலம் அதிகம் என்ற நினைப்போடு, பதஞ்சலியிடம் இளக்காரமும் அதிகம் இருந்ததாம்.

அதிலும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே ஈசன் ஆடிய ஆட்டத்தை நினைத்து, நினைத்து நந்தி எப்போதும் தன் தலையை ஆட்டிக் கொண்டே வேறே இருந்தாராம். (மாடுங்களெல்லாம் அதான் தலையை ஆட்டுதோ??) இப்படி நந்தி தன் கொம்பை நினைத்துப் பெருமையிலேயும், வியாக்ரபாதர் தன் புலிக் கால்களை நினைத்துப் பெருமையிலேயும் ஆழ்ந்திருந்தனர். ஒருநாள், ஈசன் புதியதொரு நடனமுறையை அறிமுகப் படுத்தப் போவதாய்ச் சொல்லி இருந்தார். அதைக் கண்டு களிக்க தேவாதி தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கூடவே பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதருடன் வந்திருந்தார். நந்தியோ தன் மத்தளத்துடன் தயாராக இருந்தார். இவர்களைப் பார்த்தார் நந்தி.

இருவருடனும் ஈசன் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது வியாக்ரபாதர் தன்னுடைய புலிக்காலின் மகிமையைப் பற்றிச் சொல்லி, ஈசனைப் போல் தானும் தாளம் தப்பாமல் ஆட வசதியாக இந்தப் புலிக்கால்கள் இருக்கும் என்றும், அந்தக் காரணத்தினால் தானே ஈசனின் நடனத்தை முழுமையாய் ரசித்ததாயும், ஈசனும் அதைப் புரிந்து கொண்டே அவ்வளவு ஆனந்த நடனம் ஆடியதாயும் சொல்ல, நந்தி சிரிக்கின்றார். “புலி, இது என்ன பெரியவிஷயம்?? பிரதோஷ காலத்தில் என்னோட கொம்புகளுக்கு இடையே ஆடறாரே அதைவிடவா? அவர் ஆடி முடிச்சப்புறம் கூட எனக்குக் கண்ணு முன்னாலே அந்த நடனமே தெரியும். சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கும். எனக்காகத் தானே அவர் அப்படி ஆடினார்? அதை நினைவு வச்சுட்டுத் தான் அந்த ஜதிக்கேற்றமாதிரி என் தலையைக் கூட ஆட்டிக்கிறேனாக்கும்?” என்று சொன்னார்.
இருவரும் பதஞ்சலியைப் பார்த்து, “உனக்குக் கொம்பும் இல்லை, கால்களும் புலிக் கால்கள் இல்லை, ஆகவே ஈசனின் ஆட்டத்தையும் உன்னால் எங்கே ரசிக்க முடியும்?” என்று கேலியாய்ப் பேசினார்கள். பதஞ்சலியின் முகம் வாட்டம் அடைந்தது.

பதஞ்சலிக்கு முகம் வாட்டம் அடைந்தது. தான் ஆத்மார்த்த அனுபவத்தில் திளைத்து ஈசனின் ஆட்டத்தில் ஒன்றிப் போகவில்லையோ? இவர்கள் சொல்வது தான் சரியோ? ஒரு வேளை புலிக்கால்களும், நந்தியெம்பருமானைப் போல் கொம்புகளும் இருந்தால்தான் நாட்டியத்தை ரசிக்கும் பக்குவம் வருமோ? அப்போது அங்கே ஓங்கார சப்தம் ஒலிக்க ஈசன் வந்தார். கூடி இருக்கும் ரிஷி, முனிவர்களிடையே ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்த பதஞ்சலியைக் கிட்டே அழைத்தார் கருணைக் கடலாம் எம்பெருமான். பதஞ்சலி முனிவரைப் பார்த்து, “பதஞ்சலி, இன்று யாம் பாதம் தூக்கி ஆடப் போகும் நடனத்திற்குப் பதம் பாடப் போவது நீயே தான்! உன்னுடைய பதத்துக்குத் தான் நான் ஆடப் போகின்றேன்.” என்று சொல்லவும் பதஞ்சலிக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

மேலும் கூறுகின்றார் ஈசன், “பதஞ்சலி, இன்றைய பாடலில் கொம்பும், காலும் வரக் கூடாது!”என்று சொல்லவும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் திகைத்துப் போகப் பதஞ்சலி முனிவரோ “அப்படியே ஆகட்டும் ஈசனே!” என வணங்கி நின்றார். வியாக்ரபாதரின் முகத்திலும், நந்தி எம்பெருமானின் முகத்திலும் ஈ ஆடவில்லை. பதஞ்சலி பதம் பாட ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா? கொம்பெழுத்துகளும், துணைக்காலோடு கூடிய எழுத்துகளும் வராதபடிக்கு துதி ஒன்றைப் பாடினார். கெ, பெ, போ, ஆகிய எழுத்துகளில் போடும் ஒற்றைக் கொம்பும், இரட்டைக் கொம்பும், கா, பா, சா, லா, ளா போன்ற எழுத்துகளில் வரும் துணைக்காலும் இல்லாமல் பாடிய அந்த நடராஜர் துதி முழுமையாகக் கிடைப்பதற்காகக் காத்திருந்தேன், கிடைக்கவில்லை. கிடைத்த வரையிலும் கீழே போடுகின்றேன். வேறு யாரிடமாவது இருந்தால் போடலாம்.

“அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!”

இம்மாதிரிக் கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினார் நடராஜன்.

இந்தப் பாடலைச் சாதாரணமாய்ச் சொல்லிப் பார்த்தாலே நடனம் ஆடுவது கண் முன்னே தெரியும்.

இப்போது தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் இந்த சுவரோவியங்களை பாருங்கள் . ஆடல் வல்லானின் ஆனந்த கூத்தை கண்டு மெய்மறந்து நிற்கும் புலிக்காலர் மற்றும் பதஞ்சலி

patanajali tanjore mural
vyagrapadhar and patanjai tanjore big temple
vyagrapadhar tanjore mural

நன்றி : http://aanmiga-payanam.blogspot.com/2007/04/6.html

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஜனவரி 21st, 2009 அன்று 15:11 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 18 மறுமொழிகள்

தமிழ்த்தேனீ
  1  

அதி அற்புதமான விளக்கங்கள்
அந்தப் பாடலைப் படித்துப் பார்த்தேன்
அடடா என்ன ஒரு நடன பதம்,
நடனமாடும் இறைவனின் பாதம் கண் முன்னே தெரிய வைக்கக் கூடிய பதம்
இந்தப் பதத்துக்கு இறைவன் ஆடிய நடனத்தை கண்டவர்கள் புண்ணியவான்கள்
அதைவிட அந்த நிகழ்ச்சியை வர்ணித்து எல்லோரையுமே அந்தக் காட்சியைக் காண வைத்த நீர் அதி புண்ணியவான்

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஜனவரி 21st, 2009 at 15:32
  2  

மிக அருமையான கட்டுரை வடிவத்தில் கொண்டு வந்தமைக்கும், ஒருங்கிணைப்புக்கும், அதைக் கூறும் அழகான சித்திரங்களின் படங்களுக்கும் ஆத்மார்த்தமான நன்றி. வாழ்த்துகளும்.

ஜனவரி 21st, 2009 at 16:02
  3  

திரு வெங்கட்ராம் திவாகருக்கும் என் நன்றி.

ஜனவரி 21st, 2009 at 16:03
நினா.கண்ணன்
  4  

அரிய பல தொகுப்புகளை ஒரே வலையில் அமைத்துள்ளீர்கள்! மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜனவரி 21st, 2009 at 17:36
  5  

பதஞ்சலி என்று சொல்லி, நந்தியையும், போகரையும், திருமூலரையும் கண் முன்னே கொண்டு வந்துவிட்டீர்களே, அற்புதம்! தங்களின் பங்களிப்பு தொடரவும் பல செய்திகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளவும் வேண்டி வாழ்த்துகிறேன். நன்றி!
ஒரு சிறிய சந்தேகம், பாடலின் முடிவில் பஜே என்று இரட்டை கொம்பு வருகிறதே அது சரிதானா?

ஜனவரி 21st, 2009 at 21:58
  6  

Geetha Amma
Super!

ஜனவரி 22nd, 2009 at 14:38
  7  

Very interesting. In so far as Patanjali is concerned, there is not much of a difference in the stories told in the North.

ஜனவரி 22nd, 2009 at 18:57
Satish Kumar
  8  

Beautiful narration Vijay. Learning a lot through your website.
Wondering, when vyagrapadar is shown with pulikaal, why patanjali is shown with normal legs and snake in his head, in the tanjavur murals? only the artist can tell us.
Thanks for the post.

ஜனவரி 22nd, 2009 at 21:27
  9  

//ஹ்ருதி பஜே!”//

இது தப்பாய் எழுதியது நான் தான். ஸ்லோகத்தில் “பஜ” என்றுதான் வருகின்றது. தீட்சிதர் ஒருவரிடமும் கேட்டு உறுதி செய்து கொண்டேன். முழு ஸ்லோகமும் கிடைத்து விட்டது. ஸ்லோகம் முழுமையும், கொம்பெழுத்தோ, காலெழுத்தோ கிடையாது என்பதே இதன் சிறப்பு!

ஜனவரி 28th, 2009 at 13:56
  10  

//why patanjali is shown with normal legs and snake in his head, in the tanjavur murals? //

ம்ம்ம்ம்ம்ம்ம்????? என்னனு கண்டு பிடிக்கிறேன், தஞ்சைச் சித்திரம் எதிலே இருக்கு, அவ்வாறுனு குறிப்பாய்ச் சொல்லுங்க! தஞ்சைக் கோயிலிலேயா? அல்லது நடராஜர் சித்திரங்கள் வீடுகளிலே இருக்குமே அவற்றிலா???

ஜனவரி 28th, 2009 at 14:01
S.Muruganandam
  11  

//கோவையில்ல் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் “திருமூர்த்தி மலக்குன்றுகள்”//

தவறாக நினைக்க வேண்டாம், அது மலக்குன்றுகள் அல்ல திருமூர்த்தி மலை. (Typing error) ஆகவும் இருக்கலாம்.

அனுசுயாவின் கற்பின் மேனமையை உலகத்தவர்களுக்கு உணர்த்த மும்மூர்த்திகளும் வந்து அனுசுயையிடம் தங்களுக்கு பால் கொடுக்க வேண்டும் என்று கேட்க தன் கற்பின் வலிமையால் அவர்கள் மூவரையும் குழந்தைகளாக மாற்றிய மாபெரும் கற்புக்கரசி அனுசுயை என்பது ஐதீகம். இவ்வாறு மும்மூர்த்திகளும் இனைந்த உருவமே தத்தாத்ரேயர் என்று வட நாட்டில் வணங்கப்ப்டும் திருமுர்த்தி.

அமணலிங்கேஸ்வரர் திருமூர்த்தி என்றே அழைக்கப்படுகின்றார்.

அடியேன் ஊருக்கு (உடுமலைப்பேட்டை)அருகில் உள்ள திருமூர்த்தி மலையைப் ப்ற்றி திருமூலர் தென் கைலாயம் என்று கூறியுள்ளார் என்ற அருமையான தகவலையும், பதஞ்சலி முனிவரைப் பற்றிய பல தகவல்களையும் அளித்ததற்க்கு நன்றி கீதாம்மா. படங்களுக்கு நன்றி கோமில்லா, மற்றும் இவ்வளவு அருமையான தளத்தை உருவாக்கி அனைவரையும் இறை பணியில் ஈடுபடுத்தும் விஜய்க்கும் நன்றிகள்.

பெப்ரவரி 6th, 2009 at 16:43
SARAVANAN, CHENNAI
  12  

superb , god bless you

ஜூன் 25th, 2009 at 15:24
  13  

there is one temple near tiruvarur Manogar pathanjal temple. From here Panthanjali and viyakarapathar comes to Sri thyagaraja temple on Thiruvadiraiday and Pagguni uthiramday to have pathdarsham of Sri Thyagaraja.(Only on these two days you can see Thyagaraja padham other day s you can see only His face.anandhi

ஜூலை 5th, 2009 at 7:13
சிவனடியான்
  14  

நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும்.

” சஹஸ்ராரம் அல்ல அது அக்ஞ சக்கரம் ” …

“திருமூர்த்தி மலக்குன்றுகள்” இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் “தென் கைலாயம்” என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர்.

எனது தாத்தன் திருமூலர் கூறும் ” தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இடம் யாதெனில் அது தென் தமிழகத்தில் உள்ள ” சதுரகிரி மலை “. இன்றும் யாத்திரை செல்லும் பக்தர்கள் அத்ரி மஹரிஷி வனத்தைக் காணலாம்.

- சிவனடியான்

ஆகஸ்ட் 20th, 2009 at 15:47
Deepa
  15  

Thirupatturil - Siddhar Pathanjali matrum Pullikaal Munivar jeeva samadhi ullathu.

Pathanjali jeeva samadhi Brahmapureeswarar koiluku ulle ullathu. Pullikaal munivarin jeeva samadhi koilluku aruge ullathu.

Thirupattur, Tiruchirapalliyil irunthu 18 km thoorathil ullathu ( Trichy - Chennai Highway)

Serpent body is an alchemical reference to the person who attained the neutral state or enlightenment. So it is not surprising Saint Pathanjali is depicted as a serpent being.

செப்டம்பர் 7th, 2009 at 12:39
  16  

Hmm sivanadiyaan & Deepa, that was really estoric. Thanks for sharing

rgds
vj

செப்டம்பர் 11th, 2009 at 7:30
  17  

I heard a news about Patanjali Siddhar Seeva Samathi. In Thiruppattur (Near Trichy) one Bramma Temple is there. In that temple Patanjali Siddhar Jeeva Samathi is there. If it is true please reply me.

ஜூலை 3rd, 2010 at 22:32
T.MUNI BALAJI
  18  

EXCELLENT

டிசம்பர் 28th, 2011 at 21:03

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி