Quantcast

தொகுப்புக்காக நவம்பர் 18th, 2009

இது ஒரு மகிழ்ச்சியான பதிவு. தொலைந்து விட்டது என்றும் மீண்டும் கிடைக்கவே வழில்லை என்ற நிலையில் தஞ்சை பெரிய கோயில் அகழியில் இருந்த இரு சிற்பங்களை பற்றிய முந்தைய பதிவை பதிவு செய்தேன்.

one-mo11
the moat with a mystery idol
the mysteryidol

ஆனால் நண்பர் திரு செல்வராஜ் அவர்கள், நான் நாற்பது வருடங்களுக்கு முன்னர் அங்கே விளையாடும் பொது பார்த்துள்ளேன், இன்றும் இருக்கும், விரைவில் படம் எடுத்து அனுப்புகிறேன் என்றதும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. எனினும் அவை கிடைக்குமோ - எந்த நிலையில் இருக்கும் என்றெல்லாம் பல கேள்விகள் மனதில் இருந்தன. உடனே செல்லமுடியாமல் விடாது மழை வேறு. ஆனால் இன்று இன்ப அதிர்ச்சி - நீங்களே பாருங்கள்.

DSC05685
DSC05686
DSC05687
DSC05688
DSC05689
DSC05690
DSC05691
DSC05692
DSC05693

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த படங்களில் இருந்தபடியே இன்றும் நிற்கின்றன இரு சிற்பங்களும். பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மறுமொழி அளிக்கவும் »

வாயிற்காப்போன் தொடரில் இன்று மேலும் பயணிக்கிறோம். காஞ்சிபுரத்தில் நவீன கட்டுமானங்களுக்கு நடுவில் மறைந்துக் கிடக்கும் ஒரு பொக்கிஷம். நண்பர் திரு அர்விந்த் மிகவும் தேடி கண்டுபிடித்து நமக்காக படங்களை கொடுத்து உதவுகிறார். அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. மாதங்கேசுவரர் ஆலயம் ( அதன் உடன்பிறப்பு முக்தேஷ்வரா ஆலயத்தையும் விரைவில் காண்போம் )

mathangeshwara kanchi

இந்த ஆலயத்தின் காலம் சரியாக தெரியவில்லை , அதை பற்றி நாம் முக்தேஷ்வரா படங்களையும் பார்த்துவிட்டு அலசுவோம்.
இப்போதைக்கு CE 700 - 800 - இரண்டாம் நந்திவர்மன் காலம் என வைத்துக்கொள்வோம். மிகவும் சுவாரசீயமான காலம் - அரசனின் அரியணை ஏறுவது முதலே பல சம்பவங்கள், நடுவில் சாளுக்கியரிடம் தோற்றல், அக்யாதவாசம், மீண்டும் அரியணை ஏறல் - பின்னர் முடிவில் தனது பேரில் ஒரு கலம்பகம் !!

வேறு எங்கோ போகிறது பதிவு, மீண்டும் சிற்பத்துக்கு வருவோம்.

Pillars infront of the doorguardians

சிங்க தூண்கள் மறைக்கின்றனவே . சரி இன்னும் அருகில் செல்வோம். .

mathangeshwara left door guardian
mathangeshwara right door guardian

கொஞ்சம் கொடூரமாக தான் இருக்காங்க. இதுவரைக்கும் ஆஜானபாகுவாக இருந்தாலும் ஒரு நக்கல் பார்வை தான் இருந்தது.நீங்களே பாருங்களேன் - முற்கால பல்லவ வாயிற்காப்போன்களை ஒப்பிட்டு பார்ப்போம்.

மண்டகப்பட்டு

mandagapattu leftdoor guardian
mandagapattu rightdoorguardian

சீயமங்கலம்

the right door guardian.jpg
the left door guardian.jpg

தளவானூர்

the right outside door guardian
the left outside door guardian

இன்னும் உன்னிப்பாக மாதங்கேசுவரர் ஆலயம் வாயிற்காப்போன்களை பார்ப்போம்.

இடது புறம்

mathangeshwara left door guardian
the left door guardian's horns
mace + snake - right side door guardian

இங்கே கொம்பு போல தான் உள்ளன ( சூல வடிவத்தின் நடு கம்பி கண்ணுக்கு தெரியவில்லை )

வலது புறம்

mathangeshwara right door guardian
the right door guardian's head dress
mace + snake - right side door guardian
is it an axe blade on the crown
is it an axe blade on the crown ( see box)

இங்கே ஒரு மாற்றம் காண்கிறோமா? மழு முன்னர் செங்குத்தாக நெடுக்க இருந்தது - எங்கோ மாறி குறுக்காக உள்ளதே?. இது மழு தானா?

முக்கியமான வேறுபாடு -இருவருக்கும் மேலும் இரண்டு கைகள் -மொத்தம் நான்கு கைகள்.
இப்போது தான் கடினமான புதிர் வருகிறது. சாளுக்கிய இரண்டாம் விக்ரமாதித்யன் காஞ்சியை 745 இல் வென்றான், கைலாசநாதர் ஆலயத்தை கண்டு பிரமிப்பு அடைந்து, அதன் சிற்பிகளை கையேடு கூட்டிச்சென்று பட்டடக்கல் ஆலயங்கள் அமைத்தான். சூலம் அல்லது கொம்பு உள்ள வாயிற்காப்போன்கள் பல்லவர் சிற்பங்களில் முன்னவே இருந்தன. ஆனால் இந்த கூடுதல் கைகள் யாரால் ஏற்பட்ட மாற்றம். அதற்கு நாம் இதே காலத்தை ஒட்டிய காஞ்சி வைகுந்த பெருமாள் ஆலயத்தை ஒப்பிட வேண்டும். செய்வோமா?

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1