Quantcast

தொகுப்புக்காக நவம்பர் 24th, 2009

நண்பருடன் ஒரு மின் அரட்டை ( இதை பதிவாக இடுவதற்கு அனுமதி கொடுத்ததற்கு அவருக்கு முதல் நன்றி - பெரும்பாலும் உரையாடலை அப்படியே இடுகிறேன் - சில இடங்களில் சிறிய மாற்றங்கள் - அழகு படுத்த )

N: வணக்கம் விஜய், நேற்று மல்லை சென்றேன்

Me: மிக்க மகிழ்ச்சி, இப்போது உங்கள் படங்களை தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் தளத்தை குறிப்பிட்டதற்கு நன்றி.

N: படங்களுக்கு உங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

me: கண்டிப்பாக. சரி, நீங்கள் திருமூர்த்தி குடவரை படங்களை இட்டதனால் அதை ஒட்டி ஒரு புதிரை போடுகிறேன் . விடை சொல்லுங்கள், அங்கே உள்ள மூன்று மூர்த்திகளை யார் யார் என்று அடையாளம் கண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

Trimurthi cave

N: பிரம்மா விஷ்ணு சிவன்

me: ஹஹஅஹா , நல்ல பாத்து சொல்லுங்க சார் , அவ்வளவு எளிதாக இருந்தால் புதிர் என்று சொல்லி இருப்பேனா?

N: ஹ்ம்ம்

me: சரி , பல்லவ குடைவரைகளில் உள்ளே இருக்கும் கடவுளை எப்படி அடையாளம் கொள்வீர்கள். இரண்டு முறை உண்டு, பொதுவாக உள்ளே சிலை / சிற்பம் இருந்தால் அதை ஆய்வு செய்து, அதன் அமைப்பு, கைகளில் உள்ள ஆயுதங்கள் என்று பார்ப்போம், உள்ளே சிற்பம் இல்லை என்றால் வெளியில் நிற்கும் வாயிற் காப்போன்களை கொண்டும் ஓரளவிற்கு அடையாளம் கொள்ளலாம். இங்கே உங்களுக்கு எதுவாக இரண்டுமே உள்ளன. நன்றாக பார்த்து சொல்லுங்கள்.

N: போட்டியில் நண்பனை கேட்டு பதில் சொல்வது போல இங்கே உண்டா ? நீங்களே சொல்லுங்கள்

Me: இல்லை, அப்படி எளிதானதல்ல. நீங்கள் சற்று முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் முக்கியம். பின்னாள்களில் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

N: சரி, நடுவில் இருப்பது சிவன். வலது கையில் மழு உள்ளது லிங்கம் வேறு இருக்கே.

shiva
shiva panel

me: ஆமாம், இடது கையில் இருப்பது ருத்ராட்ச மாலை மாதிரி உள்ளது - மான் கண்டிப்பாக இல்லை. எனினும் அந்த லிங்கம் பின்னாளில் வைக்கப்பட்டது.

N: வெளியிலிருப்பது மகிஷாசுரமர்த்தினி
i

durga relief sculpture
durga2

me: ஆமாம் , துர்க்கை அம்மன். மேலே அருமையான வேலைபாட்டை மறக்காமல் பார்க்க வேண்டும்.

the elaborate thorna above durga

N: வலது புறம் நீண்ட மகுடம் கொண்டது விஷ்ணு . கையில் சங்கு சக்கரம் உள்ளதே. அடுத்து இருப்பது பிரம்மா

vishnu
vishnu 3
vishnu shrine2

me: ஹ்ம்ம் , விஷ்ணு எளிது - சங்கு சக்கரம் உள்ளதே. அது சரி, எப்படி பிரம்மா என்று அடையாளம் கண்டுகொண்டீர்?.

brahma sasta shrine inside

N: மும்மூர்திகள் தானே. பிரம்மா வந்தால் தானே முழுமை பெரும். அது தானே வழக்கம்.

me: ஹஹா , மலை புதிர் இப்போது தான் வருகிறது. பிரம்மனின் சிற்பங்களில் நீங்கள் முதலில் பார்ப்பது என்ன. தனிதன்மையை தெரிவது ஏது?

N: மூன்று தலைகள்

me: நான்முகன் என்றாலும் சிற்பத்தில் மூன்று தலைகள் - இங்கே தெரிகின்றதா ?

the third shrine

N: இல்லை

me: வெளியில் இருக்கும் வலது புற வாயிற் காவலன், தனது கையில் எதை வைத்துள்ளான்.

rishi left
rishi right

N: சரியாக தெரியவில்லையே

me: சரி, உள்ளே இருக்கும் சிற்பத்தின் ஆடை அணிகலனில் எதாவது சிறப்பாக தெரிகிறதா. புதுமையாக ?

closeup

N: X வடிவத்தில் பட்டை

me: பிரம்மன் சிலையில் இது போன்று வேறெங்கும் நீங்கள் கண்டதுண்டா?

N:இல்லையே

me: மகுடம் எப்படி உள்ளது

N: நீண்டு முக்கோண வடிவில் உள்ளது

me: மகுடத்தின் அடியில் என்ன உள்ளது ? இந்த உரையாடலை அப்படியே பதிவாக போடட்டுமா

N: ஆமாம் அதன் சிறப்பு என்ன, சொல்லுங்க விஜய்

me:இதை பதிவாக போடட்டுமா ?

N: தாரளமாக போடுங்கள், என் பெயரை போடவேண்டாம்.

me: N, என்று போட்டால் பெயர் தெரியாது அல்லவா?

N: அப்படியே, எனக்கு கூடுதல் புகழ் வேண்டாம்.

me: ஹஹா , அப்போது சரி. வலது புறம் ‘இருக்கு ரிஷி’ - ஸ்ருக் என்ற ஒரு வித கரண்டியை பிடித்துள்ளார். வேத அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்ற பயன்படும். இடது புறத்து காவலன் ஒரு மலரை பிடித்துள்ளார். இதனால் நீங்கள் பிரம்மன் என்ற முதற் கோட்பாடு சரி என்றே தோன்றும். ஆனால் உள்ளே இருக்கும் கடவுளுக்கு தாடியும் இல்லை மீசையும் இல்லை. இளவட்டமாகவே உள்ளார்.

N: ஆமாம், யார் அது , சொல்லுங்கள்

me: அவர் அணிதிருக்கும் மகுடம் , நீங்கள் பார்க்கும் x பட்டை - இவை அனைத்தும் ஒரு போர்வீரனின் சின்னங்கள். பிரம்மனுக்கே வேதத்தை எடுத்துச் சொன்ன போர் வீரன்.

N:முருகன்

me: ஆமாம் முருகன் - பிரம்ம சாஸ்தா என்றழைக்கப்படும் தோற்றம். அது சரி, மேலே பறக்கும் அந்த இரு பூத கணங்களின் கைகளில் என்ன உள்ளது என்று நன்றாக பார்த்து சொல்லுங்கள் பார்ப்போம்.

N: அப்படி என்றால்?

Me: இதில் எனக்கு அவ்வளவு தேர்ச்சி இல்லை. இந்த ஆய்வாளர் பதிவை பாருங்கள்

முருகன் ஆராய்ச்சி மடல் - படங்கள் மற்றும் குறிப்பு இந்த தலத்தில் இருந்து

“இந்த சிற்பம் சிறிய முக்கோண வடிவில் கரண்ட மகுடம் அணிந்து, அதன் அடியில் மலர்களாலான ( கன்னி ) அலங்காரம் உள்ளது. தமிழ் வழக்கில் ஒரு வீரனுக்கே உரித்தான அங்கீகாரம் இந்த கன்னி. மேலும் இந்த x வடிவில் ஆன பட்டைக்கு பெயர் சன்னவீரா - இதுவும் வீரனின் அடையாளம். பல்லவர் காலத்து குறிப்புகள் இவை அனைத்தும் முருகன் ஒரு போர்/வெற்றிக் கடவுள் அதாவது தேவ சேனாதிபதி என்பதை நிலை நாட்டுகின்றன. . “

veeraraghavan-graph2
villuppuram

மேலே உள்ள தளம் முருகன் பற்றிya அருமையான பல தகவல்களை konda தளம். கண்டிப்பாக அங்கு சென்று வாசிக்கவும்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1