Quantcast

தொகுப்புக்காக ஜூலை 23rd, 2010

தஞ்சை பெரிய கோயிலை பற்றி எழுதும்போதெல்லாம், சோழர் கலையில் அப்படியே சொக்கி நின்று விடுவோம். எனினும் அங்கு சில மற்ற கலைச்சிற்பங்கள், காலத்தில் பிந்தைய படைப்புகளையும், நாம் பார்க்க வேண்டும். பொதுவாக பல்லவர் சோழர் கலையையே நான் மிகையாக வர்ணிக்கிறேன் என்ற (உண்மை) கூற்று இருந்தாலும், அவ்வப்போது இங்கொன்றும் அங்கொன்றுமாய் - ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டபம், பேரூர் கனக சபை சிற்பங்கள் என்று நாயக்கர் காலத்து நல்ல சிற்பங்களை எடுத்துக் காட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். அதே போல இன்று பெரிய கோயில் வளாகத்தில் நாயக்கர் கால பணிகளை பற்றி ஒரு பதிவு. சுப்பிரமணியர் ஆலயத்தில் இருக்கும் ஒரு சிறு தொட்டி பற்றிய பதிவே இது.

பெரிய கோயில் வளாகத்தில் சுப்ரமணியர் ஆலயத்தை கண்டுபிடிப்பது வெகு சுலபம். விமானத்தை சுற்றி வரும்போது, மூன்றில் ஒரு பங்கு கடந்தால் பின்னர் தெரியும் அழகிய ஆலயமே அது. பெரிய கோயில் கட்டி சு்மார் அறுநூறு ஆண்டுகளுக்கு பின்னர் எடுப்பிக்கப் பட்டாலும் அப்படியே கலை அம்சம் பொருந்த ஒத்து நிற்கும். பிரிட்டிஷ் லைப்ரரி படங்களை கொண்டும் இணையத்தில் உள்ள படங்களை கொண்டும் அதன் அழகை ஒரு முறை பார்ப்போம்.

subramanya+temple+go+around+it

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது இந்த சுப்பிரமணியர் ஆலயத்தை சுற்றி வரும்போது தெரியும்

look+to+your+left

கருப்பு வெள்ளை புகைப் படம் என்றாலே அதற்கு ஒரு தனி அழகு தான்.

anitque+photo2
antique+photo
antique+photo3

இப்போது, கண்ணில் படுகிறதா , நாம் இன்றைக்கு பார்க்கப் போகும் தொட்டி. இதை தான் ’மெனக்கெடுவது’ என்று பெரியவர்கள் சொல்வார்களோ? அபிஷேக நீர் வெளி வந்து சொட்டுவதற்கு இப்படி ஒரு படைப்பா. அருகில் சென்று பார்ப்போம்.

just+a+sink
take+a+closer+look
take+another+look

அந்த கோமுஹத்தில் - இல்லை இல்லை யாளி முகத்தில் தான் என்ன ஒரு வேலைப் பாடு. அந்த வளைவு, வளைவை இன்னும் நேர்த்தியாக வெளிக்காட்டும் கோடுகள்.

what+a+beauty
what+a+spout

அது சரி, கீழே உள்ள தொட்டியை பாருங்கள்.

the+sink
the+sink+front
the+sink+otherside

கம்பீர சிங்கங்களை கால்களாக கொண்டு, ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த அற்புதத் தொட்டி ஒரு கதையை வேறு சொல்கிறது.

purushamrigam
bheema
purushamrigam+catching+bheema

என்ன கதை. நம் பதிவுகளை விடாமல் படித்திருந்தால் இந்நேரம் கண்டு பிடித்து இருப்பீர்கள்.

பாதி பீமனை நீ சாப்பிடலாம் ..

படித்துவிட்டீர்களா ? பீமனின் கையில் இருப்பது என்ன

bheema
whats+bheema+having+in+his+hand

பிடி படும்போது கையில் ஒன்றுமே இல்லையே..அதனால்தானே பிடி பட்டான்.

purushamrigam+catching+bheema
bheema+hand+is=empty

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1