Quantcast

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

pallava+somaskanda+remananets.jpg
pallava+somaskanda+remanents2.jpg
pallava+somaskanda+remanents3.jpg

நம்மால் முடிந்தது - இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.

faintpanel+netsourcejpg
from+ravages.jpg

இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

first+cut

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

hero+jagadesh

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

brahma+closeup
brahma+outline
brahma+test

உமை

umai+high+resolution

விஷ்ணு

vishnu+high+resolution

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

gana+lady+attendant+below
lady+attendant+below+umai

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

somaskanda+mahishasuramardhini+mandabam+detail
the+lion+legs

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

second+cut
third+cut

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், செப்டம்பர் 23rd, 2010 அன்று 12:17 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 23 மறுமொழிகள்

  1  

Very good attempt, I wish you and your team a success in your endeavor.

செப்டம்பர் 23rd, 2010 at 12:57
Parvadha Vardhini
  2  

மிக அற்புதம்!!! இப்பதிவின் தொடர்ச்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்!

செப்டம்பர் 23rd, 2010 at 13:28
annapoorna
  3  

cant wait to see the next post!! Thanks Vijay for your efforts to make us feel what you experienced….

செப்டம்பர் 23rd, 2010 at 16:23
Dr.Ravishankar
  4  

Superb work go on I nam eger as all of the rest to view the past treasures

செப்டம்பர் 23rd, 2010 at 16:24
Dhivakar
  5  

Yes Vijay! Students who have interest in heritage and our culture should be encouraged. My wishes to Rajakesari.

செப்டம்பர் 23rd, 2010 at 16:31
sree
  6  

thank you all for the great attempt to restore the ancient heritage of us. I expect that you will colour the whole as its original.

செப்டம்பர் 23rd, 2010 at 17:37
venkata rao
  7  

good work artist manian is again helping us trough his desendent wish u r team &gadesh all the best

செப்டம்பர் 23rd, 2010 at 18:56
PRASANNA
  8  

Wow.. wonderful. Cant wait for next post

செப்டம்பர் 23rd, 2010 at 21:46
  9  

மிக சிறப்பான பணி அனைவருக்கும் வாழ்த்துகள்

செப்டம்பர் 23rd, 2010 at 23:16
V.Jeevananthan
  10  

The legacy continues!!! A really great work by Mrs. Subashini!!!! Keep it up madam!!!
A special kudos to Jagadesh too!

செப்டம்பர் 24th, 2010 at 7:37
  11  

Great Going !!! .. ASI Should use the genius for restoration at Kailasanatha

செப்டம்பர் 24th, 2010 at 8:03
  12  

சிலர் உதவுவதற்காக பிறக்கின்றார்கள். தக்க நேரத்தில் புகைப்படம் தந்து எங்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் ஓவியங்களை கொண்டு செல்ல உதவியது. ஈசனின் சித்தமாக தெரிகிறது.

ஈசன் உடனிருப்பான் நண்பரே!

செப்டம்பர் 24th, 2010 at 8:21
  13  

எனக்கு இப்போதே அழகுடன் இருக்கும் முழுமையான படம் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய தோன்றுகிறது. சீக்கிரம் இடுங்கள்.

செப்டம்பர் 24th, 2010 at 8:24
rhoda
  14  

Fantastic!

செப்டம்பர் 24th, 2010 at 8:54
  15  

Thank you very much for your comments. Actually the credit goes to Mr Vijay for being able to provde all the necessary images and to give exact references for the lost part. I have learnt a lot through this effort.

And definitely should thank Jagadesh for sending the hi res images at the right time.

செப்டம்பர் 24th, 2010 at 10:53
dev
  16  

Fantastic !!!!

dev

செப்டம்பர் 24th, 2010 at 11:12
  17  

Good effort by Vijay and Subashini.

Vijay, have you seen the stone carvings in the sanctum behind the Lingam in Thirukazhunkuntram Hill temple. If I remember correctly Somaskanthar as as Arthanari, Inthiran Vishnu and some more. Dont exactly remember. They are all huge cave carvings.

செப்டம்பர் 24th, 2010 at 13:29
  18  

A special kudos to the boy

செப்டம்பர் 24th, 2010 at 13:30
  19  

Here is the post containing the photos of tirukazhugukundram

http://www.poetryinstone.in/lang/en/2010/01/20/tracking-the-evolution-of-the-somaskanda-part-4.html

செப்டம்பர் 24th, 2010 at 13:36
pravin
  20  

excellent work VJ. best wishes and prayers for successful completion of the re-edification.

செப்டம்பர் 24th, 2010 at 17:22
  21  

It is very amazing work which would help future generations to appreciate art.

செப்டம்பர் 27th, 2010 at 13:16
  22  

அருமையான முயற்சி . . மிகவும் பொறுப்பான செயல் . . வாழ்த்துக்கள்!

செப்டம்பர் 28th, 2010 at 23:08
nallasivam
  23  

really superb.only a man truly passionate about art can recreate such ancient masterpieces.excellent work.

அக்டோபர் 2nd, 2010 at 13:19

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி