தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு விழா சிறப்பாக நடை பெற்றது. அதை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தை பலரும் கண்டு ரசித்தனர். இந்த வாயிற் காவலனை நினைவிருக்கிறதா ?
வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.
அந்த பதிவில் நாம் பார்த்த பொது இப்படி இருந்த சிலை ..
அதுவும் அதன் சிறப்பு - அதன் அடியில் உள்ள கல்வெட்டு வரிகள்
“உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.
இந்த சிலையை மக்கள் பார்வைக்கு வைக்கும் பொது நீல நிற கம்பளி இட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட சிலை, அதன் பின் என்ன நடந்தது ?
விழா முடிந்தவுடன், அதன் இருப்பிடமான தஞ்சை கலைவளாகம் சென்றது இந்த சிலை. ஆனால் அங்கே அதை அதன் இடத்தில் திரும்ப வைக்கும் பொது இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளனர் . அந்த அவல நிலையை நீங்களே பாருங்கள்.
சிலையை தரையில் புதைத்து சிமெண்ட் பூசிய கொத்தனாருக்கு அதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. எனினும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வரியே மறையும் அளவிற்கு சிதைக்க அருகில் இருந்தவர்கள் விட்டு விட்டார்களே என்பது தான் மிகவும் கவலையாக உள்ளது.
ஆவணப் படுத்தும் கூடங்களே இப்படி இருந்தால் !!!
பகுப்பு: சிற்பம்
குறிச்சொற்கள்: சாளுக்ய, சோழ, துவாரபாலகன், தஞ்சாவூர்
தொடர்புடைய இடுகைகள்:
Read this in
English


தமிழ்
இதுவரை 7 மறுமொழிகள்
மறுமொழி இடுக