Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ பீமன்’

பொதுவாக கோவில் கோபுரங்களில் சுதை வடிவங்களையே பார்க்க முடியும் - கல் சிற்பங்களை பார்ப்பது கடினம் - அதிலும் அரிய புராண கதைகளை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட சிறு புடைப்புச் சிற்பங்களை காண்பது மிக அரியது . அதனால் தான் திருக்குறுங்குடி கோயில் கோபுரத்தில் இப்படி ஒரு அரிய மகாபாரதக் கதையை கண்டபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

Thirukurungudi.jpg

இந்த முறை சென்றபோது புனரமைப்புப் பணிகளின் காரணமாக சவுக்கு சாரம் கட்டி இருந்ததால் நானும் அரவிந்தும் மேலே ஏறிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

Thirukarunkudi268

நாம் முன்னரே அங்கு உள்ள ஒரு அரிய கருடனின் கதையை பார்த்துள்ளோம். அதே போல இதுவும் ஒரு மிக அரிய வடிவம்.

அமர்சித்ரா கதைப் புத்தங்களில் படித்த நினைவு இருந்ததால் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இது வரை இதனைக் கல்லில் இப்படிச் செதுக்கி நாங்கள் பார்த்ததில்லை.

IMG-20120208-00111
IMG-20120208-00113
IMG-20120208-00114
IMG-20120208-00115
IMG-20120208-00116

இந்தக் கதை ஒரு பிற்சேர்க்கை என்றே நினைத்து வந்தேன்.

bhima+hanuman+tirukkurungudi

ஒரு சிறு குரங்கு போல அமர்ந்து இருக்கும் அனுமன், வலிமை வாய்ந்த பீமன் தனது கதாயுதத்தால் ஏதோ ஒரு சிறு குச்சியை வழியில் இருந்து ஒதுக்குவது போல அனுமனின் வாலை தள்ளி விட முயற்சி செய்கிறான்.

என்ன கதை இது ?

பீமன், திரௌபதிக்காக சௌகந்திக மலரைக் கொண்டுவரச் செல்கிறான் . அப்போது வழியில் ஒரு குரங்கு படுத்துக் கிடப்தை காண்கிறான். குரங்கின் வால் தனது பாதையில் குறுக்கே இருப்பதை கண்டு வாலை நகர்த்துமாறு குரங்கை அதட்டுகிறான். பீமனுக்கு தனது உடல் பலத்தில் இருந்த பெரும் நம்பிக்கை அங்கே ஆணவமாக மாறுகிறது. அதனை சரி செய்ய அனுமன் தன தம்பியுடன் விளையாடுகிறார்.

வயதானதால் தன வாலை தன்னால் நகர்த்திக்கொள்ள தனக்கு சக்தி போதவில்லை என்றும், முடிந்தால் பீமனை தாண்டி குதித்து செல்லச் சொல்கிறார் . மேலும் ஆத்திரம் அடைகிற பீமன் தாண்டி செல்ல மறுக்கிறான்.

நீ யார் என்று அனுமன் கேட்க, பீமன் , தான் குந்தியின் புதல்வன், சத்ரியன் என்றெல்லாம் சொல்கிறான்.

அப்போது என்னை எளிதாக நீ தாண்டி குதித்துவிட்டு போகலாமே என்று அவனை அனுமன் கிண்டல் செய்கிறார்.

அதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பீமன், கடலையே தாண்டி குதித்த அனுமன் தனது அண்ணன் என்றும், இந்த சாதாரண வாலைத் தாண்டி குதிக்க ஒரு நொடி ஆகாது என்றும் கூறுகிறான்.

அப்படியானால் தன வாலை எடுத்து ஓரமாக ஒதுக்கி விட்டு செல்லுமாறு அனுமன் கூற, பீமன் வாலை நகர்த்த முயற்சிக்கிறான். தன முழு பலத்தை கொண்டு முயற்சித்தும் அவனால் அந்த வாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

எதிரில் இருப்பது வெறும் குரங்கு அல்ல என்று உணர்த்த பீமன், தன கர்வம் அடங்கி வணங்குகிறான்.

’நான் தான் உன் அண்ணன் அனுமன்’ என்று தனது விஸ்வரூபத்தை காட்டுகிறார் அனுமன். மேலும் பீமன் தேடி வந்த மலரை அடைய எளிய வழி ஒன்றையும் கூறுகிறார். தன அண்ணன் தன்னை அணைக்கும்போது பீமன் தன உடல் புத்துணர்வு பெறுவதை உணர்கிறான். அனுமன் அவனுக்கு வரம் அளிக்கிறார். தாம் மேற்கொள்ளும் மகாபாரதப் போரில் தமதுகொவெற்றிக்கு உதவ வேண்டுகிறான் பீமன். அப்படியே அவரும் வரம் அளிக்கிறார். ”அர்ஜுனின் தேரின் மேலே பறக்கும் கொடியில் நானே அமர்ந்து உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருகிறேன்” என்று அனுமன் அபயம் அளிக்கிறார்.

மறுமொழி அளிக்கவும் »

தஞ்சை பெரிய கோயிலை பற்றி எழுதும்போதெல்லாம், சோழர் கலையில் அப்படியே சொக்கி நின்று விடுவோம். எனினும் அங்கு சில மற்ற கலைச்சிற்பங்கள், காலத்தில் பிந்தைய படைப்புகளையும், நாம் பார்க்க வேண்டும். பொதுவாக பல்லவர் சோழர் கலையையே நான் மிகையாக வர்ணிக்கிறேன் என்ற (உண்மை) கூற்று இருந்தாலும், அவ்வப்போது இங்கொன்றும் அங்கொன்றுமாய் - ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டபம், பேரூர் கனக சபை சிற்பங்கள் என்று நாயக்கர் காலத்து நல்ல சிற்பங்களை எடுத்துக் காட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். அதே போல இன்று பெரிய கோயில் வளாகத்தில் நாயக்கர் கால பணிகளை பற்றி ஒரு பதிவு. சுப்பிரமணியர் ஆலயத்தில் இருக்கும் ஒரு சிறு தொட்டி பற்றிய பதிவே இது.

பெரிய கோயில் வளாகத்தில் சுப்ரமணியர் ஆலயத்தை கண்டுபிடிப்பது வெகு சுலபம். விமானத்தை சுற்றி வரும்போது, மூன்றில் ஒரு பங்கு கடந்தால் பின்னர் தெரியும் அழகிய ஆலயமே அது. பெரிய கோயில் கட்டி சு்மார் அறுநூறு ஆண்டுகளுக்கு பின்னர் எடுப்பிக்கப் பட்டாலும் அப்படியே கலை அம்சம் பொருந்த ஒத்து நிற்கும். பிரிட்டிஷ் லைப்ரரி படங்களை கொண்டும் இணையத்தில் உள்ள படங்களை கொண்டும் அதன் அழகை ஒரு முறை பார்ப்போம்.

subramanya+temple+go+around+it

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது இந்த சுப்பிரமணியர் ஆலயத்தை சுற்றி வரும்போது தெரியும்

look+to+your+left

கருப்பு வெள்ளை புகைப் படம் என்றாலே அதற்கு ஒரு தனி அழகு தான்.

anitque+photo2
antique+photo
antique+photo3

இப்போது, கண்ணில் படுகிறதா , நாம் இன்றைக்கு பார்க்கப் போகும் தொட்டி. இதை தான் ’மெனக்கெடுவது’ என்று பெரியவர்கள் சொல்வார்களோ? அபிஷேக நீர் வெளி வந்து சொட்டுவதற்கு இப்படி ஒரு படைப்பா. அருகில் சென்று பார்ப்போம்.

just+a+sink
take+a+closer+look
take+another+look

அந்த கோமுஹத்தில் - இல்லை இல்லை யாளி முகத்தில் தான் என்ன ஒரு வேலைப் பாடு. அந்த வளைவு, வளைவை இன்னும் நேர்த்தியாக வெளிக்காட்டும் கோடுகள்.

what+a+beauty
what+a+spout

அது சரி, கீழே உள்ள தொட்டியை பாருங்கள்.

the+sink
the+sink+front
the+sink+otherside

கம்பீர சிங்கங்களை கால்களாக கொண்டு, ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த அற்புதத் தொட்டி ஒரு கதையை வேறு சொல்கிறது.

purushamrigam
bheema
purushamrigam+catching+bheema

என்ன கதை. நம் பதிவுகளை விடாமல் படித்திருந்தால் இந்நேரம் கண்டு பிடித்து இருப்பீர்கள்.

பாதி பீமனை நீ சாப்பிடலாம் ..

படித்துவிட்டீர்களா ? பீமனின் கையில் இருப்பது என்ன

bheema
whats+bheema+having+in+his+hand

பிடி படும்போது கையில் ஒன்றுமே இல்லையே..அதனால்தானே பிடி பட்டான்.

purushamrigam+catching+bheema
bheema+hand+is=empty

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 3  1  2  3 »