Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘சங்கிலி’


இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நமது வாசகர் கவிதா அவர்கள் ஆவுடையார் கோயில் சிற்பங்களை காண வேண்டும் என்று கூறினார். நண்பர் திரு சிவராம் கண்ணன் அவர்கள் தன் பணியின் காரணமாக அமெரிக்கா சென்றிருந்த போதும் அங்கிருந்து படங்களை அனுப்பி நம்மை ஆவுடையார் கோயிலின் அருமையான சிற்பங்களை ரசிக்க ஒரு வாய்ப்பை தந்துள்ளார்.

சிற்பங்களை காணும் முன்னர், நாம் இந்த கோயில் உருப்பெற்ற ஒரு அதிசய கதையை கேட்க வேண்டும். இந்தியா மற்றும், உலகையே சென்ற வாரம் உலுக்கிய சத்யம் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் போல, ஆயிரத்தி இருநூற்று ஆண்டுகளுக்கு முன்னரே நடந்த ஒரு மோசடி - ஆவுடையார் கோயில் உருவான கதை. கதையை படித்த பின்னர் அது மோசடியா இல்லை இறைவன் இட்ட விதியா என்று நீங்களே முடிவு செய்யுங்கள் .

சரி, இதோ கதை - மதுரையை அடுத்து திருவாதவூர் - அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் - சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை , இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ் பரவியது - பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு , தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது.

அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன், தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் நல்ல பரிகளை வாங்கி வர அனுப்பி வைத்தான். அவ்வாறே வதவுரார் சோழ நட்டு துறைமுக நகரம் செல்ல பயணித்தார்.

வழியில் திருபெருந்துறை அடைந்த வதவுரார், சற்று இளைப்பாரினார். அப்போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது - ஒரு மரத்தடியில் ஈசன் போதனை செய்து கொண்டு அவருக்கு காட்சி தந்தார். மற்றது சரித்திரம்

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்,
.. மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்,
பந்தணை விரலியும் நீயும், நின் அடியார்
.. பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே,
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்,
.. திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி வந் தாண்டாய்,
.. ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே.

முதல் திருவாசகம் அங்கே உயிர்பெற்றது

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பொழிப்புரை:

தலைவனது பெருமையை உண்ர்த்தும் நாமமாகிய நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தானது என்றும் நிலைபெருகுக, தலைவனது திருவருட்சக்தியானது என்றும் விளங்குக கண்ணைமூடி விளிக்கும் நேரமளவுகூட அடியேனது உள்ளத்தை விட்டு நீங்காதவன் தாள்வாழ்க திருவாவடுதுரையில் எழுந்தருளி அடியார்க்கு மெய்
உணர்த்தி ஆட்கொண்டருளிய முதல்வனின் திருவடிகள் வாழ்க தன் நிலையில் ஒருவனாய் அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய் உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக

ஈசன் அவரது அமுத மொழியை கேட்டு அவருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டி அங்கே ஒரு கற்றளி எழுப்பிக்க ஆணையிட்டு மறைந்தார்.

ஆண்டவன் ஆணை இட்ட பின் அரசன் ஆணையை மறந்து - பரிகளை வாங்க வைத்திருந்த பொன் அனைத்தையும் திருபெருந்துறை கோயிலை கட்ட செலவிட்டார் ..அதனால் என்ன நடந்தது - நரியை பரியாய் மாற்றிய கதை - அதை பின்னர் பார்ப்போம்.

இந்த கோயிலில் லிங்கம் இல்லை - வெறும் ஆவுடை மட்டும் தான் - அதனால் தான் இத்தலத்திற்கு ஆவுடையார் கோயில் என்று பெயர். இங்கே பரம்மனுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லி கொடுக்கும் ஈசன் ( ஆத்மநாதர் ) - அதில் இருந்து நான்கு வேதங்களும் பிறந்ததாகவும் - அதனால் இந்த நகரம் சதுர்வேதபுரம் மற்றும் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது.

இப்போது அவ்வளவு பொன் கொடுத்து கட்டிய கோயிலின் அழகை கொஞ்சம் பார்ப்போம்.( சத்யம் பற்றி இங்கே இட்டது வாசகர் கவனத்தை ஈர்க்கவே - தவறாக இருந்தால் மன்னிக்கவும் )

சிற்பங்களை பார்க்கும் முன், எனக்கு மிகவும் பிடித்த - பலரும் பார்க்க மறக்கும் - தூண்கள், மேற்கூறை - இந்த கோயிலில் மிக அபூர்வமாக இவை வடிக்கப்பட்டுள்ளன. சிற்பி தனது முழு திறனையும் வெளி கொண்டுவர ஒவ்வொரு கல்லையும் கலை பொக்கிஷமாக மாற்றி உள்ளான்.

ceiling innocuous
the corner snake - watch its coils
the snake carved into the ceiling
the snakes coil
corner of ceiling snake

முதலில் மேற்கூறை, தொலைவில் இருந்து பாருங்கள் -தெரியவில்லையா ? அருகில் செல்வோம். எங்கோ பார்த்த மாதிரி உள்ளதா ? ஆம் நாம் முன்னர் இதே பாம்பை தாளக்காடு கோயிலில் பார்த்தோம். அற்புதமாக வளைந்து படம் எடுக்கும் பாம்பு - கல்லில்.

Check the stone rod - 4 sided
anther view of the stone rods ( a bit damaged)
check the stone rod - 8 sided
how on earth
see the diff kinds of rods - stone mind it
the diff rods
twisted rod of stone
wow rods again

சரி, இதைத்தான் நாம் முன்னரே பார்த்தோமே என்கிறீர்களா ? சரி இதைக் கொஞ்சம் பாருங்கள் - அலங்காரத் தூண்கள், மேற்கூறை, அதில் வெவ்வேறு கம்பிகள் - நான்கு, எட்டு பக்கங்கள் கொண்ட கம்பிகள், முறுக்கு கம்பி - எல்லாம் கல்லில். என்னே சிற்பியின் திறன்

a long shot of this magnificent work
another ceiling
ceiling decorations
check out the ceiling decoration
closeup of celing
lintel decoration
pillar decoration

இதை அனைத்தையும் விட , நம்மை ஈர்க்கும் சிற்ப வேலை பாடு - இதோ,

stone chain part of ceiling
stone chains from ceiling
the masterpiece
wow, no words
a long shot of this magnificent work
how on earth did they sculpt this

இதை பற்றி வர்ணிக்க வார்த்தை இல்லை. விடை பெறுகிறேன்

மறுமொழி அளிக்கவும் »



நண்பர் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் அரிய புகைப்படம் ஒன்று இந்த கலை சங்கிலி கல் சங்கிலி தொடரின் இரண்டாவது பாகம் எழுத தூண்டியது .

Thalakkadu linked to the ceiling.jpg
stone ring thallakadu.JPG
thalakkadu single stone.jpg

நாம் முன்னரே காஞ்சியில் பார்த்த சங்கிலிகளை போலவே கன்னட தாளகாடு கோயிலிலும் உண்டு. அங்கே பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் சிற்பங்கள் உண்டு, எனினும் நாம் இன்று சங்கிலியை மட்டும் பார்ப்போம். இதை வடிப்பது எவ்வளவு கடினம், அதிலும் மேல் தள கல்லில் இருந்து தொங்கும் படி வடிப்பது, அதிலும் வளைந்து நெளிந்து செல்லும் நான்கு தலை படம் எடுக்கும் பாம்பின் ஒரு வளைவிலிருந்து தொங்குமாறு வடிப்பது, அப்பப்பா, அபாரம், அருமை.

kanchipuram devarajaswami no words.jpg

ஆனால் நாம் முன்னர் காஞ்சி வரதராஜ சுவாமி கோயில் கலை சங்கிலியை முழுவதுமாய் பார்க்கவில்லை. கல்லில் சங்கிலி அமைக்கும் அபார திறன் படைத்த சிற்பி, தன்னுடைய கலை திறனை நமக்கு காட்ட, அதை இன்னும் கடினமாக்கி, ( தங்க பதக்கம் பெற்ற பின் உலக சாதனைக்கு தாவும் வீரனை போல ) அந்த சங்கிலியின் கடைசி வளைவை எப்படி முடித்துள்ளான் பாருங்கள் - ஒரு பூவின் மொட்டு , அதில் நான்கு கொஞ்சும் கிளிகள் தொங்குமாறு செதுக்கி

kanchipuram last link.jpg

….மேலும் வாரத்தைகள் வர வில்லை.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »