Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ஹனுமான்’

ராமாயணத்தில் மிகவும் பிடித்த பாத்திரங்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஹனுமார் தான். அதுவும் அவரது அற்புத சாகசங்கள் மிகுந்த குழந்தை பருவக் கதைகள் அருமையாக இருக்கும். அப்படியே வாய் பிளந்து பாட்டி கதை சொல்லுவதை கேட்ட பசுமையான நினைவுகள். ஒவ்வொரு கதையிலும் ஒரு அடிக்கருத்து இருக்கும். அபூர்வ சக்திகள் கூர்மையான மூளையுடன் இணையும் அவரது பாத்திர சித்தரிப்பு அருமை.

அப்படி ஒரு கதையை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். திரு KK மாமா அவர்கள் தம்மல் வரா​ஹேஸ்வரர் ​ஆலயத்தின் உள்ள ஒரு தூண் சிற்பத்தை அற்புதமாக படமெடுத்து தந்தார். மேலும் திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களது முன்சிறை சிவன் கோயில் (கன்யாகுமாரி) படமும் இணைய தேடலில் கிடைத்தது.

கதை சிறியது தான். பெரும் ஆபத்து எதிரில் வரும்போது, கத்தியை மட்டும் தீட்டினால் போதாது, புத்தியையும் தீட்டிய அனுமனின் அற்புத செயல்.

hanuman
munchirai+sivantemple+kanyakumari

கடல் தாவு படலத்தில் அனுமனை எதிர்க்கொண்ட ஸுரஸை

depiction+in+ack
hanuman+ack

சீதையை தேடி இலங்கையை நோக்கி தாவும் அனுமனின் ஆற்றலை சோதிக்க விண்ணவர் கூடி, நாகர் குல அரசியான ஸுரஸையை ஏவுகிறார்கள். அவளும் பயங்கர அரக்கி வேடம் பூண்டு அனுமனை எதிர்க்கொண்டு , நீ என் வாயினுள் நுழையவேண்டும் என்கிறாள். வந்திருப்பது அரக்கி அல்ல, தனக்கு விண்ணவர் வைக்கும் போட்டி என்றெல்லாம் அவருக்கு தெரிந்ததோ இல்லையோ, போரிட்டு நேரத்தை வீணாக்காமல் அனுமன், தன் உருவத்தை பெரியதாக ஆக்குகிறார். ஸுரஸையும் தனது வாயை அதற்கேற்ப பெரிதாக்குகிறாள். திடீரென தன் உருவத்தை கொசு அளவிற்கு குறைத்து அவளது வாயினுள் சென்று வெளிவருகிறார் ஹனுமார்.

மேலும் விரிவாக படிக்க விரும்புவோர் கீழே சொடுக்கவும்..

ஸுரஸை தோன்றுதலும், அனுமன் அவளை வென்று விரைதலும்

மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ ‘ என்று,
ஆன்றுற்ற வானோர் குறை நேர, அரக்கி ஆகித்
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள். 53

பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு, பெட்பின் ஓங்கி,
‘கோள் வாய் அரியின் குலத்தாய்! கொடுங் கூற்றும் உட்க
வாழ்வாய்! எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்கொல்?’ என்னா,
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள். 54

‘தீயே எனல் ஆய பசிப்பிணி தீர்த்தல் செய்வாய்
ஆயே, விரைவுற்று எனை அண்மினை, வண்மையாள!
நீயே இனி வந்து, என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்; வழி மற்று இலை, வானின்’ என்றாள். 55

‘பெண்பால் ஒரு நீ; பசிப் பீழை ஒறுக்க நொந்தாய்;
உண்பாய் எனது ஆக்கையை; யான் உதவற்கு நேர்வல்-
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால்,
நண்பால்’ எனச் சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள், 56

‘காய்ந்து, ஏழ் உலகங்களும் காண, நின் யாக்கைதன்னை,
ஆர்ந்தே பசி தீர்வென்; இது ஆணை’ என்று அன்னள் சொன்னாள்;
ஓர்ந்தானும், உவந்து, ‘ஒருவேன்; நினது ஊழ் இல் பேழ் வாய்
சேர்ந்து ஏகுகின்றேன்; வலையாம்எனின் தின்றிடு’ என்றான். 57

அக்காலை, அரக்கியும், அண்டம் அனந்தம் ஆகப்
புக்கால் நிறையாத புழைப் பெரு வாய் திறந்து,
விக்காது விழுங்க நின்றாள்; அது நோக்கி வீரன்,
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான். 58

நீண்டான் உடனே சுருங்கா, நிமிர் வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று, ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர்,
மீண்டான்; அது கண்டனர் விண் உறைவோர்கள்; ‘எம்மை
ஆண்டான் வலன்’ என்று அலர் தூஉய், நெடிது ஆசி சொன்னார். 59

சரி இப்போது, சிற்பத்திற்கு வருவோம். முதலில் தம்மல்

hanuman

மிகவும் அருமையான சிற்பம். வாயினுள் நுழையும் ஹனுமானின் கால்கள் மட்டுமே தெரிந்தாலும், நேர்த்தியாக வளையும்படி செதுக்கி உள்ள சிற்பியின் ஆற்றல் அருமை. இந்த கதை தெரியாதவர்கள் யாரையோ விழுங்குகிறாள் அரக்கி ! பாவம் ! என்று பார்த்து விட்டு சென்றுவிடுவார்கள்.

அடுத்து முன்சிறையில் உள்ள சிற்பம்.

munchirai+sivantemple+kanyakumari

இங்கே வர்ணனைக்கு சற்று மாறாக வாயினுள் நுழையும் அனுமன் காது வழி வெளிவருவது போல உள்ளது. இது கதையை ஒட்டி அல்ல, ஏனெனில் இவ்வாறு வெளிவந்தால் செவியின் ” ஜவ்வு ” கிழிந்து விடும். சிற்பி கதையை சற்று மாற்றி விட்டானோ?

( இதே போல சுசீந்தரம் கோயிலிலும் ஒரு தூண் சிற்பம் இருக்கிறதாம். வெகு நாட்காளாக தேடி வருகிறேன். வாசகர்கள் முடிந்தால் தேடி அனுப்புங்கள் )

இணையத்தில் இந்தக் கதையின் மேலும் சில வடிவங்கள்.

hanuman-coming-out-of-surasas-mouth
hanuman_and_surasa
sursa
varied+depictions
varied+depictions2

http://www.kidsgen.com/fables_and_fairytales/indian_mythology_stories/hanuman_meets_surasa.htm
http://www.hinducounciluk.org/newsite/circulardet.asp?rec=84

மறுமொழி அளிக்கவும் »

மீண்டும் ஒரு பயனுள்ள டிசம்பர் இந்திய பயணம். நண்பர்கள் பலரின் உதவியுடன் இன்னும் பல பதிவுகள் இட மூலங்கள் கிடைத்தன. வழக்கம் போல சில கசப்பான காட்சிகள். எனினும் இதுவரை இல்லா வண்ணம் ஒரு திடுக்கிடும் காட்சி. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தூண்கள் படும் அவமானம். முன்னர் ஒரு பதிவில் ஹனுமான் முதலை வயிற்றில் இருந்து வரும் சிற்பம் பற்றி எழுதினேன்.

Hanuman escapes from a crocodile -perur

அப்போதே அந்த பழைய புகைப்படத்தில் உள்ள தூண் இருக்கும் இடம் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. இம்முறை சென்று பார்த்தபோது புரிந்தது. அதில் இருப்பது இப்போது சிதைந்த நிலையில் ஆலயத்தினுள் இருக்கும் சிறு நந்தவனத்தில் இருந்த தூண்.

the+earlier+location

உடையாத தூண் ஆலய கோபுரம் அருகில் உள்ள கடையின் கதவில் மறைந்து உள்ளது.

the+pillar+in+the+temple

இந்தப் படங்கள் சென்ற டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை ( 2009) . அப்போது அந்த சிறு நந்தவனத்தில் இன்னும் பல சிதைந்த தூண்கள் இருந்தன.

earlier+location2
earlier+location3
earlier+location4
hanuman+crocodile+earlier
hanuman+fight+missing
the+earlier+location
wrestling+hold

இம்முறை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்றதும் ( சற்று பயத்தோடுதான் ) அங்கே சென்றோம். அங்கே இருக்கும் தூண்களை பார்க்காமல் திரும்ப முடியுமா ?

வாகனத்தை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள சிற்பக் கூடத்தில் உள்ள சிற்பிகளுக்கு வணக்கம் சொல்லி விட்டு திரும்பியது தான் தெரியும் - எதிரில் அப்படி ஒரு கோரக் காட்சி

broken+pillars+dumped+in+sewage
garbage+dump
heritage+treasure
massive+pillar
no+words
sad+state+ganesha
shant+respect
shocking+sight
turtle+motiff+pillar+amman+shrine
what+a+waste
what+to+say
what+to+say+of+this

குப்பையும் சாக்கடையும் நிரம்பி வழிய வெளியே எறியப்பட்டுள தூண்கள். அருகில் சென்று பார்த்தேன் - பயத்துடன் தேடினேன். கண்கள் பார்ப்பதை மனது ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றது - அதே ஹனுமான் தூண்.

familiar+sculpture
hanuman+crocodile

தங்க நகையும் வைர ஆபரணங்களுமே பொக்கிஷம் என்று இருக்கும் இந்நாளில், அவற்றையே பாதுகாக்க முடியாமல் இருக்கும் நிர்வாகம், இந்த சொற்ப கல்லில் என்ன இருக்கிறது என்று குப்பையில் எரிந்து விட்டது போலும். சோகம் பொல்லாதது.. யாரிடம் போய் முறையிடுவது..

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 4  1  2  3  4 »