Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ஹனுமான்’


நண்பர்களே, இந்த தளத்தில் சிற்பக்கலை பற்றி சாட் உரையாடல்களை நடை பெற நண்பர் ‘திரு’ அவர்கள் அமைத்துக்கொடுத்தது எதற்காக என்றால், அது பின்னூட்டம் விட தயங்கும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர உதவும் என்பதாலேயே அமைத்தோம். அதன் படி ஒரு உரையாடலை இங்கு உங்கள் பார்வைக்கு ஒரு பதிவாக மாற்றி இடுகிறேன்.

நண்பர் பெயரை வெளியிடவில்லை.

நண்பர்: உங்கள் முந்தைய பதிவின் ஒன்றில் இருந்து சோமநாதபுரம் பற்றி இன்னுமொரு தளத்திற்கு சென்றேன்

http://bp0.blogger.com/_xUJrI6cswLg/SF_jI-vYY3I/AAAAAAAAAQQ/UKpNmgOUwAY/s1600-h/DSC07354.JPG

vj: மன்னிக்கவும் , எந்த பதிவு , மற்றும் நான் யாருடன் உரையாடுகிறேன் என்று முதலில் சொல்லுங்கள்

நண்பர்: நான் @@@@@ , சிற்பக்கலை பற்றி @@@@@@ இல படிக்கிறேன். ஹனுமான் பாண லிங்கம் சிற்பம் , சோமனாத்பூர்

vj: ஓ, அப்படியா. மிக்க மகிழ்ச்சி.அந்த பதிவா ! நண்பர் திரு ஆனந்த் அவர்களது பதிவு.

Hanuman somnathpur with vishnu attributes and bana lingam


சிற்பத்தில் ஹனுமான் பாண லிங்கத்தை ஏந்தி நிற்கும் காட்சி. ராமபிரான் ஹனுமனை கைலையில் இருந்து சிவனின் லிங்கத்தை எடுத்து வருமாறு கூறுகிறார்.( ராமேஸ்வரத்தில் இராவணனை கொன்றதனால் பெற்ற ப்ரஹ்ம்மஹத்தி தோஷம் விலக பூஜை செய்ய). ஹனுமான் வர தாமதம் ஆனதால், ராமபிரானும் சீதாபிராட்டியும் மணலில் லிங்கம் பிடித்து பூஜையை ஆரம்பித்துவிட்டனர். இதை கண்டு வருத்தம் அடைந்த ஹனுமனை சமாதானம் செய்ய, அவருக்கு ஒரு வரம் அளித்தார் - ராமர். இனி அங்கு பக்தர்கள் முதலில் ஹனுமனின் பாண லிங்கத்தை வழிபட்ட பின்னரே தனது லிங்கத்தை வழிபடவேண்டும் என - இன்றுவரை அப்படியே ராமேஸ்வரத்தில் இரண்டு லிங்கங்கங்கள் உள்ளன “

நண்பர்: ஆனால் எங்கள் ஆசிரியரின் கூற்றுப் படி, இந்த சிற்பம் இன்றும் ஒரு புதிராகவே உள்ளதாமே?

vj: அப்படியா, இந்த சிற்பம் ஹனுமான் என்பதில் குழுப்பமா அல்லது அவர் கையில் வைத்திருக்கும் பாண லிங்கத்தில் சர்ச்சையும் குழப்பமுமா? சிற்பத்தை இன்னும் ஒரு முறை அருகில் சென்று பார்ப்போமே ( நன்றி திரு அர்விந்த் படங்களுக்கு )

bana lingam
face of hanuman

நண்பர்: அதுவா, சர்ச்சை அவர் கையில் வைத்திருக்கும் சங்கு மற்றும் சக்கர ஆயுதங்களால் என்று நினைக்கிறேன்.

closeup of hanuman
left hand holding the conch
right hand holding the discus

vj: அப்படியா, இதில் ஒன்றும் வினோதம் தெரியவில்லையே.

நண்பர்: அப்படியா

vj: சரி, ஒரு கேள்வி கேட்கிறேன். சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் வெண்கல சிலைகள் அணிவகுப்பு பார்த்ததுண்டா

நண்பர்: இல்லை, அடுத்து நாங்கள் அதை தான் படிக்க போகிறோம்.

vj: சரி, இப்போதைக்கு இந்த படத்தை பாருங்கள்( நன்றி ஃபிலிக்கர் நண்பர் )

http://farm3.static.flickr.com/2063/2410943558_f9be866992.jpg?v=0

nandhi chennai museum bronze sporting shiva attributes

நண்பர்: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கொஞ்சம் புரிவது போல் உள்ளது

vj: அப்படியா, இது நந்தி - ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கும் சிலை. சரி, இப்போது உங்களை இன்னும் கொஞ்சம் குழப்புகிறேன். இந்த சிற்பத்தை பாருங்கள். தஞ்சை பெரிய கோயில் சிற்பம். ( படங்களுக்கு நன்றி அர்விந்த் )

hanuman in big temple sporting shiva attributes

நண்பர்: அய்யோ , இது இன்னும் குழப்புகிறதே !

vj: இதில் என்ன குழப்பம், ஹனுமான் இங்கே ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கிறார்!!

நண்பர்: ஒரு கேள்வி கேட்டதற்கு இப்படியா ?

vj: அப்படி இல்லை, முதலில் சோமநாதபுரம் சிற்பம் ஹனுமான் தான். பாண லிங்கம் கதை மிகவும் தொன்மை வாய்ந்த கதை. அதனுள் இப்போது செல்லவில்லை. மேலும் சிவ-விஷ்ணு வாகனங்கள் தங்கள் எஜமானர்களின் ஆயுதங்களை தாங்கி நிற்கும் என்பதற்கு அந்த நந்தி ஒரு அத்தாட்சி. ஹனுமான் ஈசனின் அவதாரம் என்று பல இடங்களில் பாடல்கள் உள்ளன. அதனை குறிப்பதே இந்த தஞ்சை சிற்பம்.

நண்பர்: சரி, இதை எங்கள் ஆசிரியரிடம் சொல்லிப்பார்க்கிறேன்.
vj: நன்றி, எனினும் நாங்கள் சாமானியர்கள், முறையாக சிற்பம், கலை பயின்றவர்கள் அல்ல. ஏதோ எங்களுக்கு கிடைத்தவற்றை, படித்த நூல்களை கொண்டு விளக்குகிறோம். இதை வைத்து தங்கள் ஆசிரியருடன் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர் ??

மறுமொழி அளிக்கவும் »

நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தோம். என்னடா சிற்பத்தை பற்றி பேசும் இவன் திடீரென திரைப்படம் பற்றி பேசுகிறானே என்று அஞ்சாதீர். நான் கட்சி மாறவில்லை.

இயக்குநர் கௌதம் மேனன் “வாரணம் ஆயிரம்” என்று பெயர் வைத்ததுமே பலருக்கு அதன் விளக்கம் தேவை பட்டது. குறிப்பாக,வாரணம் என்றால் என்னவென்று தெரியாமல் பலரும் திகைத்தனர். பிறகு பல இணைய தேடல்களில் , விடைகிடைத்தது– - ‘வாரணம்’ என்றால் யானை. அதுவும் வாரணம் ஆயிரம் என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் வருகிறது.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

திருமால், ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருவதை அறிந்த ஊர் மக்கள் பொற்குடங்களில் நீர் நிரப்பி ஊரெங்கும் தோரணங்கள் கட்டி அவரை வரவேற்பதாக தான் கனவு கண்டதாக தன் தோழியிடத்தே கூறுகிறாள் ஆண்டாள்.

படத்தின் நிறைவில் ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் கணவன் கோதையின் வர்ணனைக்கு இணங்க இருப்பான் என்று முடியும்.

ஆனால் எனக்கு ஆயிரம் யானை என்றவுடன் நினைவிற்கு வந்தது பீமனே. ஆயிரம்யானை பலம் கொண்ட பீமன் தனது பெரு உருவத்தையும் வலுவையும் கொண்டு, வெல்ல முடியாத பெரும் பல வீரர்களை பாரதத்தில் வென்று குவிப்பான். வாயுபுத்திரன் என்றாலும் அவனுக்கு இந்த பலம் எப்படி வந்தது …அதற்கும் ஒரு கதை உண்டு.

ஒரு நாள் பீமனும் திரெளபதியும் தனிமையில் இருக்கையில், காற்றிலே மிக இனிமையான மணம் வந்தது. அது ஏதோ மலரின் மணம். திரெளபதி அந்த மலரை விரும்பினாள்.அதைத் தேடிப் பீமன் சென்றான் - அடர்ந்த காட்டின் ஆழத்தில் மணம் அவனை எடுத்து சென்றது. அங்கே ஒரு குரங்கு வழியை அடைத்து அலட்சியமாக படுத்திருப்பதை கண்டு அதை விரட்ட குரல் கொடுத்தான் பீமன்

ஆனால் குரங்கோ இன்னும் அலட்சியமாக உன்னால் முடிந்தால் என் வாலை நகற்றி விட்டுச் செல்லேன் என்றது. அதன் அகம்பாவம் கண்டு எரிச்சல் அடைந்த பீமன் கீழே குனிந்து அதன் வாலை பிடித்து சுழற்றி எறிய முயன்றான் . ஆனால் என்ன விந்தை - அவனால் அசைக்கவே முடியவில்லை. பலம் அனைத்தையும் கொண்டு முயன்றும் அந்த வால் தரையை விட்டுச் சிறிதுகூட நகரவில்லை. அது சாதாரண குரங்கில்லை என்று அறிந்த பீமன் தன் ஆணவத்தை நினைத்து மனம் வருந்தி -அதனிடம் பணிவுடன் தாங்கள் யார் என்று வினவினான். அப்போது அந்த குரங்கு அனுமனாக உரு மாறி, வாயு புத்திரனாக - காட்சி அளித்து அணைத்துக்கொண்டான் பீமனை . அவருடைய தமயனை ( அப்போது பீமனுக்கு தன் உடலில் ஆயிரம் யானைகளின் பலம் புகுந்தது ) - எதிரிகளை சிதற அடிக்கும் வலிமையை தந்தது அந்த அணைப்பு, அதை விட பீமனது ஆணவத்தையும் அடக்கி அருள் புரிந்தான் அனுமன்.

சரி இப்போது சிற்பம். ஹலபேடு கோவில் சிற்பம். ( படத்தை நன்றாக பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள் )

Bhima panel halebid.jpg

நடுவில் இருப்பது பீமன் - எதிரில் வரும் யானையை எதிர்கொண்டு அதன் துதிக்கையை பிடித்து தன் கதையால் அடிக்கிறான். பின்னால் இரு எதிர் வீரர்கள் - கத்தி கேடயம் வைத்துக்கொண்டு நிற்கின்றனர். யானையையே அடித்து நொறுக்கும் பீமனை கண்டு நிற்கலாமா ஓடிவிடலாமா என்று யோசனை போல ?

Kaurava soldiers.JPG
bhima takes on another elephant.JPG

சிற்பத்தின் மிக அருமையான பகுதி - அடுத்து பீமன் கொன்று குவித்தயானை மற்றும் யானை பாகர்களின் சடலங்களை - மலை போல குவிந்ததுஇருப்பதை காட்டி இருக்கும் வண்ணம் அருமை.

pile of dead elephants another angle.jpg
pile of dead elephants.JPG

மறுமொழி அளிக்கவும் »

 Page 3 of 4 « 1  2  3  4 »