Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘கைலாசம்’

ராமாயணத்தின் தாக்கம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்பதற்கு ஒரு அறிய எடுத்துக்காட்டு. …. இராவணன் கைலாயத்தை பெயர்க்க முனைதான். அப்போது உமை பயந்து சிவனின் மடியில் தாவி அமர்கிறாள். அப்போது கைலாய பர்வதத்தில் உள்ள மிருகங்கள் எல்லாம் அலறி ஓடின.

scared lions 2.jpg
scared lions.JPG

 

இந்த கதையின் சிற்ப வடிவத்தை பல இடங்களில் காணலாம். குறிப்பாக அங்கோர் பண்டேஅஸ்ரெய் சிற்பத்தை காணுங்கள். பத்து தலைகளை புது விதமாக செதுக்கி உள்ளனர், இராவணனை ஒட்டி பயந்து ஒதுங்கும் சிங்கங்களை கான முடிகிறது. உமையும் பயத்தில் ஐயனின் மடியில் அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை. சிவபெருமான் தன் வலது காலால் பர்வதத்தை கீழே அழுத்தும் வண்ணம் சிறப்பாக செதுக்கப் பட்டுள்ளது.

lovely depiction of the ten hands.JPG
ravana n scared lions.jpg
cambodiaravanuprootingkailash.jpg

 

Ganesha one among the ganas.JPG

இரண்டாம் வரிசையில் ஆணைமுகனும் கருடனையும் காணலாம்.

 

 

 

 

ஒருவளை திருமுறையின் தாக்கம் அங்கும் பரவி இருக்குமோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=2091&padhi=091&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

 

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே

 

தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவ பிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலை மகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும்.

 

Scared parvathi.jpg

உமையும் பயத்தில் ( ஆஹா மலைமகள் நடுங்க….இங்கே வருகிறான் சிற்பி )ஈசனின் மடியில் தாவி அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை.

மறுமொழி அளிக்கவும் »

 Page 3 of 3 « 1  2  3