ஸ்ரீரங்கம் அழகிய தூண்கள் பற்றிய மடல்களை அனைவரும் கண்டு ரசித்து இருப்பீர்கள். அதை தொடர்ந்து ஒரு விந்தை நடந்தது. புதிய நண்பர்கள் இருவர் - ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாதவர், உலகில் இரு கோடியில் இருப்பவர். இருவரும் இதே தூண் சிற்பத்தை வரைந்துள்ளனர். இது தான் கலையின் வெற்றி, எங்கோ உறங்கிக்கொண்டு இருக்கும் நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பி, விட்ட கொறை தொட்ட கொறை என்று சொல்வது போல, நம்மையும் ஒரு கலை ரசிகனாக மட்டும் அல்லாமல் கலைஞனாகவே மாற்றும்.
ஒரு கலைஞனுக்கு தன் படைப்பில் உள்ள அழகை தான் மட்டும் இல்லாமல் பலரும் ரசிக்க காண்பதே ஊதியம் ….இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்த சிற்பிக்கு இவ்விருவர் மட்டும் அல்லாமல் நாம் அனைவரும் தரும் கூலி - அவனின் உன்னத கலையை ரசித்து நெகிழ்வது.
திரு ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஓவியம்
http://raga-artblog.blogspot.com/2008/09/srirangam.html
திரு ஸ்ரீராம் ராஜாராம் அவர்களின் ஓவியம்
http://album-photo.geo.fr/ap/album/6945/?pos=1&order=InsertDate


English
தமிழ்
அண்மைய மறுமொழிகள்