Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ குடவரை’

நண்பர் திரு. ஷங்கர் பல மாதங்களுக்கு முன் தான் குடைவரையில் பார்த்த ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் பெரிய அளவு படத்தை நேர்த்தியாக எடுத்து அனுப்பி வைத்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அதை எடுத்துப் பார்க்க நேரம் அமையவே இல்லை. ஆனால் அதற்கு இப்படி ஒரு வேளை வரும் என்று நான் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.

நண்பர் திரு. ராமன் அவர்கள் பழைய புத்தகக் கடை ஒன்றில் பழைய புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்த்தால் எனக்கு உதவும் போல தெரிகிறது என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் அதில் ஒன்றிரண்டை வருடி (ஸ்கான்) செய்தும் அனுப்பிவைத்தார். அதிலே ஒன்று அழகிய செப்புத் திருமேனி, மற்றொன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ஓவியப் படம், இரண்டுமே சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை!! இவற்றைப் பார்த்தவுடன் நிச்சயம் நமக்கு தேவை என்று அவரிடம் தெரிவித்தேன்.

சென்னை சென்ற சமயம் நானும், நண்பர் அரவிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வந்த பொழுது, சில படங்களின் பின்புறத்தில் திரு நந்திக்கரை என்று பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

thirunandikkarai2

உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு சமீபத்தில் அவர் சென்ற பொழுது அவர் எடுத்து வந்த அத்தனைப் படங்களையும் கேட்டேன். அவரும் உடனே அனுப்பிவைத்தார். ( திரு நந்திக்கரை - கன்னியாக்குமரி மாவட்டம் - திருவட்டாரில் இருந்த சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு - நாகர்கோயிலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் )

cave+facade

குடைவரையில் தற்போதைய உட்புறத் தோற்றம். (முதல் முறை அவர் படம் அனுப்பிய பொழுது பார்க்க முடியாததன் காரணம் இனி உங்களுக்கு புரியும்)

faint+lines
inside+of+the+cave

குடைவரையின் காலம் 8th CE ( அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பைக் கொண்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படுகிறது )

provision+abolution+water
sanctum

கைவசம் இருந்தும் நான் முதல் முறை காணத்தவறிய சுவர் ஓவியம்

faint+lines
faint+relief
Ganesha+painting+outline

பழைய புத்தகக் கடையில் கிடைத்தப் படங்களை பார்த்தவுடன் திறந்தன என் விழிகள்

thirunandikkarai3
thirunandikkarai7
thirunandikkarai9

அழகான விநாயகர் ஓவியம், மேலே ஒரு அருமையான கணம் ( பார்த்தால் காஞ்சி கைலாசநாதர் ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது ) இருந்தும் சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் நாம் இழந்திருப்பது …

மற்றுமொரு ஓவியம் இருந்தது, அதற்கான பொருத்தத்தையும் தேட கிடைத்தது…

inside+of+the+cave
lost+portions
closeup
compare1
outlines

இப்பொழுது படங்களை பாருங்கள்..

thirunandikkarai5
thirunandikkarai8

என்ன அழகான அருமையான ஓவியங்கள். இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!

மேலும் இரண்டு ஓவியங்கள் படங்களில் உள்ளன. அனால் தற்போது குடைவரையில் காணக் கிடைக்கவில்லை.

thirunandikkarai1
thirunandikkarai6

இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி என்னவென்று தெரியவில்லை.

இந்த குடைவரையில் மேலும் ஒரு சரித்திர நிகழ்வின் முக்கிய தடயமும் உள்ளது.

inscription+left
inscription+leftside
inscription+right
inscription+rightside

உடையார் ஸ்ரீ இராஜ ராஜ சோழர் பிறந்தது ஐப்பசி சதயமா அல்லது சித்திரை சதயமா என்ற விவாதம் சில காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், தங்கள் திருவாரூர் நூலில் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டைக் கொண்டு இதனை தெளிவு படுத்தி உள்ளார். அது திரு இராஜேந்திர சோழரின் கல்வெட்டு, அதில்

” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யன் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”

inscription
kbsir+article

என்று வருகிறது.

இந்த திரு நந்திக்கரை குடவரையில் உள்ள திரு ராஜ ராஜரின் கல்வெட்டு


185. On the east wall of the rock-cut iva shrine. Belongs to
the eighteenth year of Rajaraja I and records grant to the temple
for the celebration of a festival in Aippasi, Satabhisha, the birth-
day of the king. See Trav. Arch. Ser. t Vol. I, pp. 291-2.”

தான் பிறந்தது ஐப்பசி தான் என்று தெளிவு பட எடுத்துக் கூறுகிறது.

இந்த ஓவியத்தின் புகைப்படங்களுக்கு உரியவர் யார்? அவை எப்படி பழைய புத்தகக் கடைக்கு சென்றன என்பது தெரியவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்ளவும்.

மறுமொழி அளிக்கவும் »

தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சி மாறியதுமே முந்தைய ஆட்சியின் பொது அமலாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தடு ( தடம்) மாறும் ஏளனத்தை தினம் தினம் நாம் பார்க்கின்றோம். ஆனால் அந்தக் காலத்து மன்னர் ஆட்சியில் இது எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகிறது ..இன்றோ மக்கள் ஆட்சி. மக்கள் பிரதி நிதி நடைமுறை பற்றிய திட்டங்களே இவை என்ற கருதும் பொது அன்றைய மன்னர் ஆட்சியில் மன்னன் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று இருந்திருக்க வேண்டும். அவர் கூறினால் எதிர் மறை விவாதம் கிடையாது. எனினும் அவர்கள் எப்படி நடந்துக்கொண்டனர் என்பதை தெரிந்துக்கொள்ள மீண்டும் திருகழுகுன்றம் செல்ல வேண்டும். பலரும் சென்ற இடம் என்றாலும் அங்கு பலருக்கு தெரியாத ஒரு அற்புதம் இருக்கிறது. நாம் முன்னரே பார்த்த மலை மேல் உள்ள ஆலயத்துக்கு செல்லும் வழியில் உள்ள பல்லவர் காலத்து குடவரைக் கோயில்.

பாதி வழி ஏறியபின் மூச்சிரைக்க மேலே போகலாமா வேண்டாமா என்று சற்று நம்மை ஆசுவாசப் படுத்த நிற்கும் இடம் - மேலே செங்குத்தான அடுத்த வரிசை புதிய வழியில் படிக்கட்டு கண்ணை கட்ட, மலையை சுற்றி பழைய பாதை ஒன்றும் இருக்கிறது. அதில் சென்று திரும்பியதும் இடது புறம் மலையில் குடையப்பட்ட அற்புத ஒரு கல் மண்டபம் தெரிகிறது.

cave
grill+doors
view+from+top

தொல்லியல் துறை பாதுகாப்பில் இருக்கிறது என்றாலும் எப்போதுமே பூட்டப்பட்டே இருக்கிறது - இது நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியவில்லை.

குடைவரை தூண்கள் மற்றும் சில அம்சங்களை வைத்து இது மகேந்திர பல்லவரின் காலத்திற்கு அடுத்து என்று கருதப்படுகிறது. ( 630 CE பின்னர் ) . குடைவரை அமைப்பு இதோ.

tirukalukundram+layout

உள்ளே கருவறையில் அருமையான லிங்கம் உள்ளது. ( பின் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் இல்லை )

linga+central shrine

அடுத்து இருபுறமும் கருவறை காவலர்கள் ( புடைப்புச் சிற்பம் )
.

central+shrine
doorguardian+left
doorguardian+right

தூண்கள் நாம் இதுவரை கண்ட மகேந்திர குடைவரைகளை விட சற்றே மெலிந்து காட்சி அளிக்கின்றன. மேலும் கருவறைக்கு இருபுறமும் நான்முகன் மற்றும் பெருமாளின் சிற்ப்பங்கள் வருகின்றன.

Brahma
vishnu
brahma+closeup
vishnu+closeup

முக மண்டபத்தில் இரு பக்கமும் தேவர்கள் இருவர் உள்ளனர். இவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

celestial+left
celestial+left+closeup
celestial+right
celestial+right+closeup (5)

சரி இப்போது கல்வெட்டுக்கு வருவோம் ( Epigraphica Indica Vol 3 )
363 பக்கம்

ஸ்வஸ்திஸ்ரீ கோவி ராஜகேஸரிபரம்மர்க்கு யாண்டு இருபத்தி ஏழாவது
களத்தூர் கோட்டத்துட்டன் கூற்று திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகளுக்கு இறையிலியாக ஸ்கந்தசிஷ்யன் குடுத்தமையப்படியே பாதாவிகொண்ட நரசிங்கப்பொட்டரையரும் அப்பரிசே ரக்‌ஷித்தமையில் ஆண்டுரையான் குணவான் மகன் புட்டன் (புத்தன்) விண்ணப்பித்தினால் பூர்வராஜாக்கள் வைத்தபடியே வைத்தேன் இராஜகேசரிபரம்மன் இத்தர்மம் ரக்‌ஷித்தான் அடி என் முடி மேலினே

அதாவது ” போற்றி! வளம் பெருகட்டும்!! அரசர் ராஜகேசரிவர்மரின் 27ஆம் ஆண்டுக் காலம், ஸ்கந்தசிஷ்யன் இந்த நிலங்களை கொடையாகவும், களத்தூர் கோட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் உள்ள மூலத்தானவருக்கு பாத காணிக்கையாக அளிக்கப்பட்டதால் புனிதமான இந்த நிலத்துக்கு வரிப்பணம் செலுத்த தேவையின்றியும் ஏற்கனவே பூர்வ ராஜாக்களாலும், வாதாபியை வென்ற நரசிங்க பொட்டரையர் உறுதி செய்ததாலும், ராஜகேசரி வர்மனாகிய நானும் ஆந்துரையைச் சேர்ந்த குணவான் மகனாகிய புத்தன் வேண்டுகோளுக்கிணங்க உறுதி செய்கிறேன்.இந்தக் கொடையை பாதுகாக்கும் ஒவ்வொருவர் பாதமும் என் சிரத்திலும் பதியட்டும்.

ஸ்கந்தசிஷ்யன் கொடுத்த கொடையை , நரசிம்ம பல்லவர் உறுதி செய்ய ( 630 CE) , இருநூற்றி அறுபத்தி எழு ஆண்டுகள் பின்னர் வந்த சோழ அரசன் 897 CE யில் என்ன ஒரு பெருந்தன்மையுடன் முன்னர்வர்களை மதிப்புடன் வாதாபி கொண்டான் என்ற அடைமொழியை கூட விடாமல் கல்வெட்டாக செதுக்கி உறுதி செய்கிறான் !!! அதுவும் இத்தர்மத்தை பாதுகாப்போர் கால் பாதங்களை தன் தலையினில் பதித்துக் கொள்வதாக கல்வெட்டில் எழுதியுள்ள பணிவும்.. ஆகா.. ! அரசர் போற்றி! ஆண்டான் போற்றி!!

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 12  1  2  3  4  5 » ...  Last »