எல்லோரா ஒரு மேலோட்டம் சென்ற மடலில் பார்த்தோம். அப்போது அஜந்தா, இதோ வருகிறது
அடர்ந்த காடுகளின் நடுவில் குதிரையின் குளம்பு போன்ற வடிவம் கொண்ட மலை சரிவில் - ஒரு பக்கம் அழகிய நீர்வீழ்ச்சியின் வனப்பு … அந்த ரம்மியமான இயற்கை கொஞ்சும் எழில் வனத்தில் தங்களது மடத்தை அமைத்தனர் அந்த பெளத்தர்கள்…. இயற்கையின் அழகுக்கு போட்டியாக கல்லில் தங்களது கலையை குடைந்தனர், அதனுள் எண்ணில் அடங்க எழில் கொஞ்சும் சிற்பங்கள்
அது போதாதென்று பல் வேறு வண்ணங்களில் அழியா ஓவியங்களை தீட்டி … இந்த ஒப்பற்ற பொக்கிஷத்தை - காலத்தினால் அழியாப் புகழை நம் மண்ணுக்கு தந்த விட்டு சென்ற அந்த அன்பு உள்ளங்களுக்கு நாம் என்ன கை மாறு செய்யப்போகிறோம். ???
ஆயனர் ( சிவகாமியின் சபதம் ) இதனை பார்க்க எவ்வளவு இன்னல்களை சந்தித்தார் …….இதனுள் அப்படி என்ன இருக்கிறது…. வரும் மடல்களில்….
மறுமொழி அளிக்கவும் »
[lang_ta]
கழுகுமலை …. இது எங்கே உள்ளது - தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம். அங்கே அப்படி என்ன விநோதம். எல்லோரா படம் பார்த்தீர்கள் அல்லவா … இப்போது வெட்டுவான்கோவில் படங்களை பாருங்கள்…
இப்போதைக்கு மேலோட்ட பார்வை தான்….. மலையில் பல ஜீன சிற்பங்கள் உள்ளன. அடிவாரத்தில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட வேட்டுவன்கொவில்..
பார்த்து நெகிழுங்கள்.. பாண்டிய குடவரை கோவில் …ஒரு சாதாரன மலையை குடைந்து ஒரு கலை பெட்டகத்தை நிறுவிய இந்த கலைஞர்கள் அமரர்கள் ….. இந்த அறிய பொக்கிஷம் நமது சரித்திரத்தில் இருந்து மறைந்து விட்டது…பல தமிழிருக்கே தெரியாத அவல நிலை….மாண்டவர் மீண்டும் வருவாரோ… அது போல இதுவும் ஒரு அழிந்த கலை ….இந்த திறமைகள் அழிந்து விட்டன …. இனி சிற்ப கலை மீலாது…..இது போன்று இன்னொன்று கட்ட இயலாது.
மறுமொழி அளிக்கவும் »
அண்மைய மறுமொழிகள்