அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள். சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார். இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம். தமிழகத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம். மல்லை ஒரு புரியாத புதிர். அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் - பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன. மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்க்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்.
இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை.ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. ?
சரி படங்களை பாருங்கள்…
முதலில் தொலைவில் இருந்து.. சரி தனித்தனியே பார்போம்…..
இந்த பக்கம்…
சரி அந்த பக்கம்……
கொஞ்சம் அருகில் சென்று
இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரதத்தினை பாருங்கள்.
சகாதேவ ரதம் கஜ ப்ரிஷ்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கஜ - யானை , ப்ரிஷ்டம் - முதுகு) இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரதத்தின் மேல் பாகமும் யானையின் முதுகும் ஒத்து இருப்பதை உணரலாம். இதனை காண்போருக்கு உணர்த்தவே யானை சிற்பம் அங்கு உள்ளது … இங்கே இருக்கும் இன்னும் இரண்டு பிராணிகளின் சிற்பம்…ஒன்று சிங்கம் மற்றொன்று காளை…இவற்றை பின்னர் பார்போம்…
மறுமொழி அளிக்கவும் »
கல்யாண சாப்பாடு என்றாலே நமக்கு நினைவில் வரும் பாட்டு ….மாயா பஜார் …ரங்கா ராவ் அருமையான நடிப்பில் …கல்யாண சமையல் சாதம் பாட்டு …அதில் அவருடைய கதை …..கதை என்றவுடன்…பீமன், துரியோதனன் மற்றும் யமதர்மனின் கதைகளும் நினைவுக்கு வரும்..பல படங்களில் பார்த்துள்ளோம். அப்போதெல்லாம் இவ்வளவு பெரிய கதை உண்மையிலே இருக்குமா , அதை ஒருவனால் எடுத்து சுயற்ற முடுயுமோ …இல்லை இவை கற்பனையோ என்று வியந்ததுண்டு… இதற்க்கு சிற்பத்தில் விடை காண முற்பட்டபோது சென்னை நண்பர், புகை பட வல்லுநர் அசோக் கிருஷ்ணசாமி அவர்கள் நேற்று அனுப்பிய மாங்காடபத்து குடவரை கோவில் படங்கள் உதவின…இது விசித்ர சித்தன் என்ற பெயர் கொண்ட மஹேந்திர பல்லவனின் வேலை….
பார்ப்பதற்கு தண்டால் எடுக்கும் கட்டை போல இருக்கும் இவை அப்பப்பா… இதில் ஒரு போடு போட்டால் கபால மோட்சம் தான் ……இந்த அசுர கதையை அசால்டாக ( assaulta ) மன்னிக்கவும் அலட்சியமாக கொண்டு, வாய் பிளந்து பார்க்கும் நம்மை கண்டு ‘"போடி பயலே" என்று சிரிக்கும் இவ்விரு மஹா வீரர்கள் என்ன கம்பிரமாக நிற்கின்றனர்
.அந்த கதையை ஒரு படம் எடுக்கும் நாகம் வேறு சுற்றயுள்ளது…. இவர்கள் இப்போது எங்கே போனார்கள்… இப்போது இருந்தால் ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் கண்டிப்பாக தங்கம் இவர்களுக்கே….. ( திரு திவாகர் சார் …. அவர் எழுதிய விசித்திரச் சித்தன் சரித்திர புதினம்…அருமை…அவர் இந்த படத்தை பார்த்தவுடன் எழுதிய குறிப்பு. .. விசித்திரச் சித்தன் பாறையைக் குடைந்து மும்மூர்த்திகளுக்கான சிவ-விஷ்ணு-ப்ரம்மாவுக்காக எழுப்பப்பட்ட கோயில் இது. அற்புதமான கலைப் படைப்பு. பல்லவ அரசனின் கல்வெட்டு சமுஸ்கிருதத்தில், பல்லவ கிரந்த எழுத்தில் ‘பிரம்ம,ஈஸ்வர விஷ்ணுவுக்காக செங்கல். மரம், உலோகம், சுதையில்லாமல் நிமாணிக்கப்பட்ட லக்ஷிதாயனம்’ என்று சொல்கிறது. தனக்குட்பட்ட பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் மேற்கண்ட பொருள்களை பயன்படுத்தாமல் வெறும் மலைப் பாறையும், கற்றுளியை மட்டுமே நம்பி கட்டப்பட்ட கோயில் இது. இந்தப் புதுமையைத் தான் செய்ததற்காகவே மகேந்திரபல்லவன் தன்னை விசித்திரசித்தனாக எதிர்கால உலகுக்கு அடையாளம் காட்டிக் கொண்ட கோயில் இது. விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்தில் இருந்து 20 கி.மீ. துர்ரத்தில் பிரியும் மண்சாலையில் ஒரு கி.மீ. சென்றால் இந்த குகைக் கோயிலை அடையலாம். நான் இரண்டு வருடங்கள் முன் சென்றபோது வழி சரியில்லை. )
மறுமொழி அளிக்கவும் »
அண்மைய மறுமொழிகள்