இந்தியாவில் நாம் பல குடவரை கோவில் மற்றும் சிற்பங்கள் கண்டோம். இப்போது சீனா பயணிப்போம்.அங்கு உள்ள லேஷான் என்னும் இடத்தில் உள்ள உலகிலேய பெரிய புத்தர் சிலை சுமார் இருநூற்றி முப்பத்தி மூன்று அடி உயரம் உள்ள சிலை - சிழுஅன் என்னும் மலையை குடைந்த சிலை.
மைத்ரேய புத்தர் வடிவம் - இவரின் ஒரு கால் நகம் ஒரு மனிதனை விட பெரியது - தலை பத்து அடி அகலம், மூக்கு ஆறு அடி, காதுகள் ஏழு அடி , கண்களின் அழகிய புருவங்கள் ஆறு அடி, மூன்று அடி வாய் , கழுத்து, தோள்கள் இருபத்தி எட்டு அடி, கை விரல்கள் எட்டு அடி. தலை முடியில் உள்ள சுயல்கள் ஆயிரத்தி இருபத்து ஒன்று.
மலையின் முன்னே பாயும் அருவியின் ஆபத்தான சுயல்களில் இருந்து கலங்களை காக்க துறவி ஹைடோங் ஒருவர் AD 713 பணியை ஆரம்பித்தார் - சுமார் ஆண்டு பனி முடிந்தது - பணியின் பொது குடைந்த கற்கள் ஆற்றில் விழுந்து ஆற்றின் சுழல்களை நிற்க செய்தனவாம்
இந்த சிலையின் உன்னதம் அதன் பிரம்மாண்டம் மட்டும் அல்ல, அதில் உள்ள அறிய தொழில் நுட்பம் - மழை நீர் சிலையின் மேல் ஓடி சிதைக்கா வண்ணம், பல கால்வாய்களை சிலையிலே பினைதுள்ளனர் - அதுவும் பார்போர் கண்ணுக்கு பாடாமல். தலை சுருள்களில் விழும் நீர் அங்கே உள்ள கால்வைகளின் மூலம் காது மடல் வழியாக காதில் உள்ள துவாரம் வழியாக சிலையின் பின்புறம் எடுத்து சென்று கிழே கொண்டு செல்ல படுகிறது.அதே போல உடலில் விழும் மழை நீர் புத்தரின் மேலாடையின் முடிவுகளின் மூலம் வடிகிறது. அதனாலே தான் இந்த சிலை இன்றும் நிலைத்து நிற்கிறது.
புத்தரின் அமர்த்த கோலத்தை பார்க்கும் பொது - இதே போல எகிப்து மன்னர் ரம்சீஸ் அவர்களது கோவில் - அபு சிம்பெல் என்ற இடம் நினைவிற்கு வருகிறது. அங்கே ஒரு மனிதன் தான் வென்ற நாடு மற்றும் செல்வதினால் தன்னை தானே கடவுள் என்றான் - இங்கோ அனைத்தையும் துறந்து ஒரு மனிதன் கடவுள் ஆனான்.


English
தமிழ்
அண்மைய மறுமொழிகள்