வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். மூன்று வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடைவெளியில் பல அற்புத இடங்கள் சென்றோம், பல பிரமிக்க வைக்கும் படங்களை எடுத்தோம், நண்பர்கள் , ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் பலரை சந்தித்தோம்.
இந்த பதிவை துவங்கும் போதே இதை நடக்க செய்த வள்ளல்கள் அனைவரையும் வணங்கி துவங்குகிறோம். .
நீங்கள் இந்த பழைய பதிவை பார்த்திருப்பீர்கள், இல்லையெனில் ஒரு முறை பார்த்துவிட்டு தொடருங்கள். 2008 வருடம் ஜூன் மாதம் ஆலயச் சீரமைப்புக்கான இந்த சவாலை ‘ரீச்’ அமைப்பு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.
ஆயிரம் ஆண்டு தவம்
அரக்க பறக்க எங்கள் பயணத்தில் முதல் இடமாக வேலை எவ்வாறு வந்துள்ளது என்று பள்ளி தேர்வு எழுதிய மாணவர்கள் போல ஆர்வத்துடன் – கொஞ்சம் பயத்துடன் ( ஏனெனில் பல இடங்களில் – இதை பற்றி கொஞ்சம் கூட சிற்ப அறிவோ, அதைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலோ இல்லாத ஞானசூனியங்கள் ஆலயச் சீரமைப்பு என்ற பெயரில் சுவரில் டைல்ஸ் ஒட்டி, சிற்பங்களுக்கு நீல வண்ணம் அப்பி ஏற்கனவே இருந்த அழகைச் சிதைக்கும் நவீன ‘மாலிக்காபூர்கள்’ செய்யும் அட்டகாசங்களை பார்த்து கலங்கி ) – இதை எப்படி சரியாகச் செய்ய வேண்டும், அதுவும் தனியார் – சாமானியர்கள் பங்கேற்று இந்த தொழிலில் தேர்ச்சி பெற்ற பெரியவர்கள் வழி நடத்த – ஒரு எடுத்துக்காட்டாக இது அமைய வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
நீங்களே பார்த்துவிட்டு எங்கள் பணியை மதிப்பீடு செய்யுங்கள்.
59045881
இன்னும் வருகிறது.
58845860
சுதை சிற்பங்கள் பாரம்பரிய முறையில் செப்பனிடப்பட்டுளன.
58875864
வேலைப்பாடு மிகுந்த விமானம் என்பதால் நமக்கு விருந்து.
58905867
உபயோகம் செய்யும் வண்ணங்கள் ( தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற புராதன முறையை தொடர்ந்துள்ளன ) கண்ணுக்கு குளிர்ச்சியாய்
58935869
பூத ரேகை
58965872
புராதன பாணி துளியும் மாறாமல்
58755899
எப்படியாவது செய்யவேண்டும் என்றில்லாமல் ‘இப்படி தான் செய்ய வேண்டும்’ என்று செய்துள்ள குழுவுக்கு பாராட்டுக்கள்.
59025878
நெஞ்சைக் கொள்ளை கொண்டது கைலாசநாதர் ஆலயம். நல்ல சகுனம், மேகம் கருத்தது, புறப்படும் வேலைவரை தூறல் போடாமல், வாகனத்தில் ஏறிய பிறகே பிளந்தது வானம். இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் காண தன் எழிலை மீண்டும் திரும்பப் பெற்ற விமானம் ஜொலித்தது. ஆஹா!!

இந்த பதிவு இத்துடன் முடியவில்லை. இன்னும் இங்கே சீரமைப்பு பணிகளின் பொது கிடைத்த அற்புத சிற்பங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த முயற்சி உங்களை இது போல இன்னும் பல முயற்சிகளுக்கு உதவ தூண்டும், அழிவின் விளிம்பில் இருக்கும் இது போன்ற கலை செல்வங்கள், நமது புராதன குல தனங்களை மீட்டுத்தரும் முயற்சியில் ரீச்சுக்கு இது ஒரு துவக்க கொடு – பயணம் தொடரும். நீங்களும் சேர்த்து வழிநடந்தால் வேகம் கூடும்.
( இந்த பதிவு மற்றும் மூன்று வார கால பயணத்தில் நான் எடுத்த படங்கள் அனைத்தும் எனது நண்பர் திரு தினேஷ் சுந்தரேசன் அவர்களின் அதி நவீன கேமரா கொண்டு எடுத்தவை . மிகவும் நல்ல உள்ளம் படைத்தவர், கேட்டவுடன் கேமரா மட்டும் தர மாட்டேன், அதனுடன் சேர்த்து அணைத்துவித உதவிக் கருவிகளையும் எடுத்து சென்றால் தான் தருவேன் என்று கூறி என்னை அசத்திய பெரிய மனம் படைத்தவர். டிசம்பர் 23rd அன்று மாலை ஒரு சாலை விபத்தில் எங்களை விட்டு பிரிந்த அவருக்கு இந்த பதிவின் மூலம் அஞ்சலி செலுத்துகிறேன்)