ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சித்திரங்கள்தான் ..ஆனால் !

இன்று நாம் பார்க்கவிருக்கும் வடிவங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை போல முதலில் தோன்றும். அதற்கு முன்னர் நண்பர் திரு சதீஷ் அவர்கள் போட்டிருந்த ஓவியம் ஒன்றுடன் காஞ்சிப் பயணத்தை துவங்குவோம்.


சதீஷ் அவர்களின் தளம் !

சிலர் இயற்கையாகவே நேரில் இருப்பதை விட புகைப்படங்களில் பல மடங்கு அழகாக காட்சி அளிப்பர். அவர்களை ஆங்கிலத்தில் போடோசனிக் என்று அழைப்பார்கள். அதைப்போல ராஜசிம்ஹ பல்லவரின் மல்லை கடற்க்கரை கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம், மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் – புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே கட்டி விட்டார் போலும். – அரைகுறை ஆர்வலருக்கே புகைப்படம் எடுத்து தள்ளும் வெறியைத்தரும் இவை – கைதேர்ந்த வல்லுனர்கள் பிடியில் சிக்கினால். இதோ நண்பர் ஆதி ஆர்ட்ஸ் கைவரிசை – இல்லை – கேமரா வரிசையை பாருங்கள்.



என்ன ஒரு அழகு – ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளாக இன்னமும் நின்று சிறக்கும் பொக்கிஷம்.

அடுத்து இந்த வரிசையைப் பாருங்கள். .

அஜந்தா புத்தர் , மலை தவம் மற்றும் கைலாசநாதர் சோமாஸ்கந்தர் வடிவம் – மூன்றிக்கும் என்ன சம்பந்தம் ?

முன்னர் நாம் பார்த்த காஞ்சி சோமாஸ்கந்தர் ஓவியம் நினைவில் உள்ளதல்லவா ?

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

முதலில் இந்த ஓவியம் எங்கே உள்ளது என்று பார்ப்போ

படத்தில் அம்புக்குறி போட்டிருப்பது போல நேரே சென்று இடது பக்கம் திரும்பிப் பாருங்கள். நான்கு இடங்களில் மட்டும் சிதைந்த ஓவியங்கள் தெரியும். மற்ற இடத்தில சுமார் தான் !!


ஆனால் இந்த ஒரு இடம் மிகவும் முக்கியம். உள்ளே தலையை நுழைத்து வலது பக்கம் உற்று பாருங்கள்.


முதலில் வெறும் கருப்பு சாயம் போல தோன்றும் – சிறுது நேரம் கண்கள் வெளிச்சம் இல்லாமைக்கு பழகியதும் உள்ளே இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லவ கால ஓவியம் தெரியும்

இன்னும் அருகில் சென்று பார்ப்போம். இரு அழகிய கின்னரர்கள். அந்த பெண்மணி புல்லாங்குழல் வாசிக்கும் அழகு அற்புதம். பறவை போல கால்களும் , சிறகுகளும் இருப்பதை கவனியுங்கள்.

இப்போது மல்லை தவச் சிற்பம்.


இங்கேயும் அந்த தம்பதியினர் இருப்பதை பாருங்கள். அதே பறவை போல கால்களும் , சிறகுகளும் இருக்கின்றன. தெரிகின்றதா ?

சரி, இரண்டுமே பல்லவ காலத்தவை தான். ஆனால் இதே போல ஒன்று அஜந்தா ஓவியத்தில் உள்ளது, அதுவும் நீங்கள் பல முறை பார்த்த, ஏன் இந்த பதிவின் ஆரம்பத்தில் பார்த்த புத்தர் உருவத்திலும் உள்ளது என்றால் நம்புவீர்களா ?

சரி, இப்போது பாருங்கள்

(படங்களுக்கு நன்றி – An Album of Eighty-five Reproductions in Colour, Editor: A.Ghosh; Published by Archaeological Survey of India)


இப்போது தெரிகிறார்களா ?


உண்மையான கலைக்கு ஏது வேலி , வரம்பு ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கிராதன் அர்ஜுநர்கள் – இன்றைய காமிக்ஸ் அன்றைய சிற்பம் ஒரு கலக்கல்

கலைச் செல்வங்களை ரசிக்கும் தன்மையை எப்படி நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பது. அவர்களை எப்படி இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வைப்பது. அவர்களது ரசனையை எப்படி தூண்டுவது. இவை போன்ற கேள்விகள் எங்கள் மனதில் தினமும் எழும். இன்றைய தலைமுறை சதா சர்வகாலமும் இணையம், அதில் உள்ள இணைய விளையாட்டு, காமிக்ஸ் என்றே செல்கிறது என்று பார்க்காமல், அவற்றையும் ஒரு வளரும் துறையாக பார்த்து , அவற்றை கொண்டும் இள நெஞ்சங்களிடம் நம் கருத்துக்களை எடுத்துச் செல்லலாம் என்பதே எங்கள் கருத்து. அதன் அடிப்படையில் இன்று காஞ்சி கைலாசநாதர் சிற்பம் ஒன்றையும் ( எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் ) அதை ஒட்டிய கதையை இன்றைய இணைய ஓவிய காமிக்ஸ் போலவும் சேர்த்து பார்ப்போம்.

கதை ஒன்றும் பெரியது அல்ல. மகாபாரதத்தில் வன பர்வத்தில் , அர்ஜுனன் தனியே சிவ பெருமானிடத்தில் இருந்து பாசுபத அஸ்திரத்தை பெற தவம் செய்ய இமயம் செல்கிறான். கடுந்தவம் புரியும் அவனை சோதிக்க
ஈசனே கிராதன் ( வேடன் ) உருவிலும், உமை ஒரு வேடர் குல பெண்ணாகவும் வனத்தினுள் வருகின்றனர். அப்போது முகசுரன் என்றஅசுரன் காட்டுப்பன்றி உருவம் தரித்து அர்ஜுனனை நோக்கி விரைந்து வருகிறான். வில்லுக்கு ஒரு விஜயன் ஆயிற்றே, உடனே காண்டீபத்தை எடுத்து பன்றியின் தலைக்கு நாணைத் தொடுக்கிறான் பார்த்தன். அதே வேளையில் இன்னொரு புறத்தில் இருந்து பன்றியின் பின்புறம் ஒரு அம்பு பாய்கிறது. அங்கே வில்லேந்தி நிற்கிறான் கிராதன். அர்ஜுனன் சினம் கொண்டு, பின்னால் இருந்து நாணை எய்வது வீரனுக்கு அழகா என்று கேட்க, அவனோ இது வேட்டை.. யுத்தம் அல்ல !!, காட்டு மிருகங்களுக்கு போர் நீதி செல்லாது என்கிறான் ( வாலி வதம் ? ) அப்படியே பன்றி யாருடையது என்று வாக்குவாதம் நடக்கிறது.

வாக்குவாதம் முற்ற கைக்கலப்பும் ஆரம்பம். காண்டிபதை கொண்டு அக்னி கொடுத்த தீராத பாணங்களை தரும் கூடையில் இருந்து அம்புகளை மழையென பொழிய வைத்தான் குந்தி புத்திரன். எனினும் அந்த வேடனோ சிறிதும் சிரமம் இல்லாமல் அனைத்தையும் தடுத்து விட்டான். உடனே காண்டீபத்தை ஈட்டி போல வேடன் மேல் பாய்ச்சுகிறான் அர்ஜுனன். அதை அப்படியே பிடித்து இழுத்துப் பறித்து விடிகிறான் அந்த வேடன். அர்ஜுனனுக்கு இன்னும் கோபம், உடனே மல்யுத்தம் செய்ய அவன் மேல் பாய்கிறான். ஆனாலும் வேடனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அர்ஜுனுக்கு மூச்சு வாங்கி தலை சுற்றுகிறது, வேடனோ ஒரு வியர்வை துளி கூட சிந்தாமல் நகைத்துக் கொண்டே போர்புரிகிறான். இதனை கண்ட அர்ஜுனன், சண்டையை நிறுத்தி விட்டு, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து , வேடனை வீழ்த்த மகேசனின் ஆசி கூறி, மலர்களை சமர்ப்பிக்கிறான். என்ன ஆச்சரியம், லிங்கத்திற்கு அவன் இடும் மலர்கள் வேடனை அலங்கரிக்கின்றன. உண்மை புரிந்த அர்ஜுனன் மகேசனிடம் சரண் புகுந்தான். இன்னொரு வழக்கில் சண்டை இடும்போது அர்ஜுனன் ஈசனின் காலை பிடித்தானாம், தன மலர் பதம் பிடிக்கும் பக்தரை தடுத்துத்ஆட்கொள்ளும் ஈசன், அப்போது போரை நிறுத்தி அவனை அணைத்தார் என்றும் வருகிறது. எனினும் நாம் இன்று பார்ப்பது இருவரும் சண்டை போட்டனர்.

நன்றி திரு அபிலாஷ் நாராயணன் , அவர்களுக்கு, நம்முடன் அவரது கணினி ஓவியத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு.

அவரது மற்ற படைப்புகளை காண

திரு அபிலாஷ் நாராயணன்

சரி, இப்போது நாம் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் செல்கிறோம். வெகு நாட்களுக்கு முன்னரே இந்த சிற்பத்தை ஒட்டிய பதிவை இங்கு போட்டிருக்க வேண்டும் – எனக்கு அவ்வளவு பிடிக்கும் இந்த சிற்பம். அதில் உள்ள உயி்ரோட்டம், காட்சி அமைப்பு எல்லாமே அபாரம். இது இரு கதாநாயகர்கள் நடிக்கும் படத்தின் விளம்பரம் போல இருக்கும் இந்த சிற்பத்தை திரு அபிலாஷ் அவர்களின் ஓவியத்துடன் மோத விடுவோம்.

படங்களுக்கு நன்றி: திரு அர்விந்த் மற்றும் திரு சுவாமிநாதன்

சிற்பத்தை நன்றாக பாருங்கள். இரு வீரர்கள், ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி சண்டை இட தயாராக நிற்கும் காட்சி. இருவர் கையிலும் வில், மற்றொரு கையில் அம்பு, அல்லது அம்பை எடுக்கு செல்லும் கை. முதுகில் அம்புகள் வைக்கும் கூடை ( இருபுறமும் இவை இருப்பது நேர்த்தி ) , ஒருவர் இடுப்பில் மற்றும் உடைவாள். இது கிராடார்ஜுன கதை தான் என்பதை சந்தேகம் இன்றி நிறுவ இருவரின் பின்னால் நேர்த்தியாக ஒரு காட்டுப் பன்றியை செதுக்கி உள்ளான் சிற்பி.

இப்போது ஒரு கடினமான கேள்வி, இதில் ஈசன் யார், அர்ஜுனன் யார். சற்று அருகில் சென்று பார்ப்போம்.

குறிப்பாக அவர்கள் அணிந்திருக்கும் உடை , ஆபரணம் மற்றும் தலை அலங்காரங்களை பாருங்கள்.

இருவருக்கும் உள்ள வேற்றுமை என்ன – பட்டியல் இடுவோம்.

சிற்பத்தின் இடது புறம் ( நீங்கள் பார்க்கும்போது வலது புறம்) – இருக்கும் வீரன் ஒரு நீண்ட கிரீடத்தையும், மார்பில் பூணூலையும் அணிகிறான். மற்ற வீரனோ தலையை கொண்டாய் போல கட்டிக்கொண்டு, மார்பில் சன்னவீர என்னும் குறுக்கு பட்டைகளை அணிகிரான். அவன் மட்டுமே உடைவாளை வைத்துள்ளான்.

நமக்கு தெரிந்த மட்டிலும் அர்ஜுனன் ஒரு துறவி போல தவம் செய்து ( கடைசியில் காற்றை மட்டுமே சுவாசித்து பல மாதங்கள் கடுந்தவம் புரிந்தான் என்று நினைக்கிறோம். மகாபாரத்திலும் அவன் காண்டீபம் என்னும் வில்லுடன் ஒரு அற்புத தங்க கைப்பிடி கொண்ட உடைவாளை கொண்டிருந்தான் என்ற குறிப்புகள் உள்ளன.

சரி, அது அப்படி நிற்க , நாம் கிராட உருவத்தை பற்றி படிப்போம்.கிராதன் ஒரு வேடன், அதுவும் ஈசனை பொதுவாக ஜடா மகுடத்துடனே நாம் காண்கிறோம். மேலும் திரு நாகசுவாமி அவர்களின் குறிப்புகளில் , சோழ வடிவத்தில் கிராட உருவம் ஒரு வேடன், அதுவும் உருண்டை தொப்பையுடனும், மார்பில் சன்னவீர கொண்டும், தலையை கொண்டாய் போட்டுக் கொண்டு இருக்க காண்கிறோம் என்கிறார்.

Kirata or Tripurantaka


However in many Chola sculptures and also Bronzes (Melapperumpallam image) Kirata will be shown like a hunter with round bellied body , beard and cannavira. His hair would be tied as a bun-like knot and not the jata-makuta one sees in the Tripurari form.

இவை அனைத்தும் கொண்டு பார்க்கையில் கிரீடம் அணிந்திருப்பது அர்ஜுனன் என்றும் மற்றவர் ஈசன் என்றும் நான் நினைக்கிறேன், உங்கள் எண்ணம் என்ன.

என்ன, கலக்கல் பிடித்தா ?

ஒரு ஊசியைத் தேடி – சிற்பத்தின் நுணுக்கம் – பேரூர்

பேரூரில் பல அற்புத பிரம்மாண்ட சிற்பங்கள் இருந்தாலும், சென்ற பதிவில் பார்த்தது போல், சில சிறிய அளவிலான சிற்பங்களும் உள்ளன. முதல் பார்வையில் பெரிதாக ஒன்றும் இல்லை என்று கருதத் தோன்றும் சிற்பம்தான், ஆனால் திரு. பத்மவாசன் போன்றவர்கள் நமக்கு எடுத்துச் சொன்னால் தான் புரியும் அதன் அருமை!

பலரும் இந்த வழிச் சென்றும் ஒரு விநாடிக் கூட இந்த சிற்பங்களை பார்க்காமல் போகின்றனரே என்று சொல்லும் எங்களுடைய கண்களுக்குமே எடு படாத சிற்பம். நல்லதொரு பாடமாக எங்களுக்கு இது அமைய வேண்டும் என்பதனாலோ என்னவோ, விட்ட படங்களை மீண்டும் எடுக்க பட்ட பாடு!!! இனி எந்த சிற்பத்தையும் குறைவாக எடை போடக் கூடாது என்ற பாடம் மண்டையில் ஆணி அடித்தாற்போல உறைத்து விட்டது.

திரு. பத்மவாசன் அவர்கள் தான் வரைந்த ஓவியத்தை கொண்டு சிற்பத்தின் உன்னதங்களை விளக்கினார்.

முதலில் எளிதாக தெரியும் அடையாளங்களை பார்ப்போம்.

ஒரு யோகியின் தவம். ஒரு காலை மடித்துப் புரிகிறார் கடுந்தவம். ஒரு சில தடயங்களை வைத்து அது யார் என்பதை நாம் எளிதாக அறியலாம்.


தோள்களில் ஒரு வில், பின்னால் ஒரு காட்டுப் பன்றி, ஆம் இது அர்ஜுனன்தான், ஈசனின் பாசுபத அஸ்திரம் பெற அவன் கடுந்தவம் புரிந்த காட்சி.

புடைப்புச் சிற்பத்தின் மிகவும் குறுகிய அமைப்பினுள் சிற்பி வில்லை வடித்துள்ள விதம் மிகவும் அருமை. பக்க வாட்டில் நின்று பார்த்தால் தெளிவாகத் தெரியும்.

ஆனால் இதையும் விட நுணுக்கமாக, சிற்பத்தில் ஒரு உன்னத அமைப்பு உள்ளது. அர்ஜுனனின் கடுந்தவத்தை குழப்பமின்றி விளக்க சிற்பி செய்த யுக்தி. அது என்ன?கீழுள்ள படத்தைப் பாருங்கள்.

படத்தில் ஏதாவது வித்தியாசமாக தெரிகிறதா? பொதுவாக சிற்பி காட்சிகளை சிற்பத்தின் சட்டத்திற்குள் சமமாக சித்தரிப்பான். ஆனால் இங்கு ஒரு காலின் பாதம் மட்டும் சற்று சட்டத்தை விட்டு வெளியே வருமாறு உள்ளது!. ஏன்? விரல்களையும், நகங்களையும் கனக்கச்சிதமாக வடித்துள்ளானே அதன் அழகைக் காட்டவா? சற்றே கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

காலின் கட்டைவிரலுக்கு அடியில் ஏதேனும் தெரிகிறதா? இன்னும் பிடிபடவில்லையா! இதோ திரு. பத்மவாசன் தெளிவாகத் தருகிறார் பாருங்கள்…

ஆஹா! அர்ஜுனன் ஊசி முனையில்தவம் செய்யும் காட்சி!

நம் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த அழகை சரியான கோணத்தில் ரசிக்க படங்களை எடுத்து அனுப்பி உதவிய திரு ப்ரவீனுக்கு மிக்க நன்றி. விளக்க இப்படி அழகான படங்கள் இருக்க வார்த்தைகள் எதற்கு?!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

விழிஞ்சம் குடவரை – மல்லையுடன் தொடர்பு உண்டா ?

சென்ற மடலை பார்த்தவுடன் நண்பர் சீனு விழிஞ்சம் குடவரை திரிபுரான்தாக வடிவம் அப்படியே மல்லை தவம் ஈசனை போல உள்ளது என்று கூறினார். அபாரமான திறன் அவருக்கு. ஆம், நீங்களே பாருங்கள் – முக அமைப்பு, காதணிகள் – என்ன ஒரு ஒற்றுமை.
2855284928522857
28642862


அது மட்டும் அல்ல, சென்ற மடலில் இணைத்திருந்த தளத்தில் இருந்து இந்த படத்தை எடுத்தேன். கல்லில் கூரான பொருளை வைத்து கீறியது போல உள்ளது. இதே போல மல்லையில் பார்த்த நினைவு – ஆம்,மல்லை கோவர்தன சிற்பம் – வலது புறம் சற்று மேல் இருக்கும் அமர்திருக்கும் காளையின் பின்னால் – சிற்பி குடவரை சுவரை குடையவும் – சமமாக அமைக்கவும் இவ்வாறு செய்தனர். இரு இடங்களிலும் உள்ள ஒற்றுமை இதோ.
284228462860
இதனால் நமக்கு தெரிவது என்ன ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிவாஜி படத்தின் பாட்டில் பல்லவ சிற்பத்தின் சாயல் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படம் வெளி வந்து ஒரு கலக்கு கலக்கிவிட்டு சென்று விட்டது

http://www.youtube.com/watch?v=xjVm1sYuESc

எனினும் அந்த படத்தின் துவக்க பாட்டில் ஒரு விஷயத்தை நான் பார்த்தேன். ( மீண்டும் நான் எங்கும் செல்லவில்லை – இன்னும் சிற்பத்தில் தான் உள்ளேன் ) இதை அப்படியே விட்டு சிற்பத்திற்கு செல்வோம்.

சரி நாம் மல்லை சென்று பல வாரங்கள் ஆகிவிட்டன. இதோ இன்று சென்றுவிடுவோம், ஒரு மிக விநூதமான சிற்பம். அனைவரின் கண் முன்னரே இருந்தும் பலரும் கவனிக்காமல் செல்லும் சிற்பம். ஆம், உலகிலேயே மிக பெரிய மல்லை தவம் சிற்பம். ( சரி, வாடிக்கையாளர்கள் பலரும் நாம் தான் ஏற்கனவே பலமுறை அந்த தவத்தை பார்த்துவிட்டோமே – என்று சொல்வது கேட்கிறது ) எனினும் – இந்த இடுகையை படித்து பார்த்து முடித்த பின் இத்தனை முறை அங்கு சென்றும் இதை நாம் எப்படி விட்டோம் என்று சொல்வீர்கள், பின்னர் முதலில் சிவாஜி படத்தை இதனுள் கொண்டு வந்ததற்கும் விடை கிடைக்கும். .

சரி, படங்களை பாருங்கள் – தொலைவில் இருந்து மெல்ல நகிர்ந்து நாம் அருகே செல்கிறோம். முக்கிய நபர்கள் – இருவர். இல்லை , அவர்களுக்கு நடுவில் இருக்கும் ….யார் அது






குட்டி பூத கணம் – அதன் வயிற்றில் சிங்க முகம். அற்புத வேலை பாடு.இப்போது பாட்டை இங்கே கொண்டு வந்ததன் அர்த்தம் புரிந்ததா.

27942797

இதை சிற்பி என் செதுக்கினான். பல்லவ சிற்பியின் விளையாட்டு தனமா இது ? இல்லை வேறெங்கும் இது போல சிங்க தொப்பை கொண்ட பூத கணம் உண்டா? ஆம் உண்டு, நம் அமெரிக்க தோழி காதி அவர்கள் உதவியால் – ஆனால் அது அடுத்த இடுகையில்.

மீண்டும் ஒரு முறை வினோத தொப்பையை ரசியுங்கள்.
2780278527822788

இத்தனை முறை மல்லை சென்றும் இதை எப்படி பார்க்கவில்லை என்று தினருங்கள், அடுத்த முறை எங்கு சென்றாலும் உர்த்வ முகம் என்று அழைக்கப்படும் இந்த வினோத பூத கனத்தை தேடுங்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

உத்திரமேரூர் சுந்தர வரத கோவில் சிற்பம்

சில மாதங்களாகவே இந்த சிற்பத்தை பற்றி எழுதவேண்டும் என்று ஆசை. எனினும் அதன் பின் இருக்கும் கதை விளங்காததால் பல இடங்களில் தேடிப்பார்த்தேன். கடைசியில் உங்களிடமே அதை விடுகிறேன். முயன்று பாருங்கள் – விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

உத்திரமேரூர் சுந்தர வரத பெருமாள் கோவில்.வெளி ப்ரஹாரம்… மூன்று சிற்பங்கள் ஒவ்வொன்றாக பார்போம்.

முதலில் சற்று தொலைவில் இருந்து சிற்பத்தை பாருங்கள்.

அருமையான பிருகு முனிவர் சிலை . ( நான் முதலில் தவறாக எழுதிவிட்டேன் )


ஆனால் இன்று நாம் பார்க்க வேண்டியது சிலையின் மேல் உள்ள மிகவும் அருமையான சிறு சிற்பம் ( நாம் எப்போதும் முக்கிய சிலைகளை பற்றி பேசுவது இல்லையே !!)

தொலைவில் இருந்து பார்க்கையிலேயே சற்று வினோதமாக இருந்தது, படங்களை
பாருங்கள்.

மூன்று தபசிகள் – ஒவ்வொருவரும் ஒரு கோலத்தில்… வலது புறம் இருப்பவர் – ஒரு சிங்கத்தின் மேலே ( ஆஹா , என்ன ஒரு அருமையான சிங்கம்.)- ஒரு கால் மீது மற்றொரு காலை மடித்து தபஸ் செய்கிறார்
26832685
இடது புறம் இருப்பவர் கால் மாறி மடித்து உள்ளார்.

நடுவில் அமர்ந்து இருக்கும் தபாசியின் தவ கோலம் – மிக அருமை. அரியணையின் மேல் மிக அழகாக ஒரு காலை இன்னொரு காலின் மேல் சப்பலாங்கால் போட்டு அமர்ந்துள்ளார் (அரியணையின் ஒரு கால் சிங்க முக யாளி , மற்ற கால் யானை முகம் கொண்ட யாளி ),மேல குடை, இருபுறமும் வெண் சாமரம்.

மூன்று பாம்புகள் வேறு உள்ளன.

இது என்ன கதை என்று இதுவரை தெரியவில்லை, எனினும் நுண்ணிய வேலைப்பாடு, மிக அழகிய சிற்பங்கள் ….அபாரம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மல்லை பூனை, சைவ பூனையோ

மல்லை பகிரத பிரயத்தனம் காட்சியில் அடி புறத்தில் வரும் ஒரு சுவாரசியமான காட்சி
921934
– ஒரு கால் தூக்கி தபஸ் செய்யும் பகிரதன் ( அல்லது அர்ஜுனணன்) – அவனை பின் தொடரும் ஒரு பூனையும் அவனை போல் தபஸில் உள்ளது –
926929
அந்த பூனை செய்யும் பொய் தபஸில் ஏமார்ந்து தனது ஜென்ம எதிரியை துதிக்கும் எலி….. பூனையின் தவம் கலைந்தந்தும் என்ன ஆகும்…. அது சைவ #######பிள்ளை##### மன்னிக்கவும்
பூனையோ.
924932


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மல்லை தவம் – யானைகள் ஒரு பார்வை

863841
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் தங்கள் எழில் குறையாமல் இருக்கும் இவை அருமை. இவை அப்போது ( வடிவமைக்க பட்டவுடன் ) என்ன அழகுடன் இருந்திருக்கும் – இல்லையேல் ஆயிரம் ஆண்டுகள் ஆனதால் இவற்றுக்கு அழகு கூடுகிறதா??
855857859861
839
யானைகளின் மடிந்த காது, பின்னால் செல்லும் ( பெரிய) யானையின் வளைந்த துதிக்கை, ஒரு படத்தில் ( யானைகளின் முன்னால் இருந்து ) பாருங்கள் – யானை தலை மண்டை அமைப்பு ( குறிப்பாக இரண்டாம் யானையின் மண்டை – அழகாக இரு பிளவுகளுடன் ) – என்ன கம்பீரம் , இரு பெரிய யானைகளின் கால்களுக்குள், மற்றும் பின்னால் விளையாடும் குட்டி யானைகளின் அங்க அசைவுகள்…படத்தில் சூரிய வெளிச்சம் மற்றும் சிலையின் நிழல் செய்யும் விளையாட்டு – உயிரோட்டம்.
859865

இருக்கும் சிலை மிருகங்கள் போதாதென்று உயிர் ஆடுகள் வேறு. ( சிலையின் அளவை குறிக்க உதவுகிறது )
846849
( this picture is from a friend)
மல்லை சிற்பிகள் எந்த அளவிற்கு கலை வல்லுனர்களாய் இருந்தார்கள் என்பதற்கு இணைத்துள்ள யானை படத்துடன் சிர்ர்பங்களை ஒப்பிடுங்கள்
836859
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

என்னும் சீர்காழியின் வெங்கலக் குரலில் பாட்டு காதிலே ஒலிக்கிறது ( நன்றி திரு தமிழ்த்தேனீ ஐயா )


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மல்லை தவம், எது அசல் எது நகல்

மல்லை பகிரத ப்ரயதினத்தை வடிப்பதற்கு முன் அருகில் இருக்கும் மலையில் பல்லவ சிற்பிகள்  ஒரு முறை கதையை சோதித்து பார்த்து உள்ளனர்.
779787
இதோ படங்கள். ( புதிய கலங்கரைவிளக்கம் அதன் இருப்பிடத்தை காட்டுகிறது.)

இங்கும் பிளந்த பாறையை தேர்ந்து எடுத்து உள்ளனர் – ஆனால் இங்கு பாறை இரண்டாகவே பிளந்து இருக்கிறது.
785791
வரம் கேட்பவனும் வரம் அளிப்பவரும் இடம் மாறி உள்ளனர். ( இடமிருந்து வலம் ). சோதனை என்பதால் சற்று சிறிய அளவில் செதுக்கி உள்ளனர் (in low relief)
774795
கம்பீர யானைகள் இல்லை ( ஒன்று இரண்டு யானை தலை தெரிகிறது ), பறக்கும் கந்தர்வர்கள், சிவ பூதகணங்கள் உள்ளனர்.

771782789793
சிவனின் கையில் அஸ்தரம் இல்லை.
777806
வரம் அளிக்கும் செதுக்கல் இங்கே இறங்கும் கங்கையின் இடத்தை விட கொஞ்சம் நகர்ந்து இருப்பதால் – விண்ணவரும் மன்னவரும், அனைத்து ஜீவராசிகளும் கங்கை இறங்கும் காட்சியை காணவே விரைகின்றனர்….. எனவே இங்கு அவர்கள் முதலில் விண்ணகர கங்கை புவி இறங்கும் காட்சியை மாட்டும் செதுக்க எத்தனித்து ..பின்னர் மறுமுறை அசலில் செதுக்கும் பொது இதில் அர்ஜுனன் பசுபத அஸ்திரம் பெரும் காட்சியை பிணைத்து செதுக்கி உள்ளனர்….


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மல்லை தவம் ..முதல் பார்வை

எங்களை பற்றி என்ற மடலில் நாங்கள் இட்ட படத்தை பற்றி விமர்சனங்கள் பல வந்துள்ளன…இங்கே இதை விட சிற்ப கலையை போற்றும் படம் இட்டு இருக்கலாம் என்று, எனினும் அந்த படம் இட்டதின் நோக்கம் அறிய பொக்கிஷங்களை அவற்றின் மதிப்பை அறியாமல் உள்ளோம் என்பதை உணர்த்தவே.

பின்னால் இருக்கும் மல்லை தவம் ….சரி அதற்கு ஈடு கட்ட ஒரு முழு தொடரையும் அற்பனிக்கிறோம்

இதோ மல்லை தவம் – ஒரு முதல் பார்வை.

பல்லவ சிற்பிகளின் சிந்தனை சிறகடித்து பறக்க, அவர்கள் கண்ட இந்த மலை அவர்களின் கைவண்ணத்தின் கீழ், நூறு அடி நீளம் நாற்பது அடி உயரமும் உள்ள கற்பாறை கலை பாறையாக மாறி , தமிழக சிற்பக்கலையின் விஸ்வரூபமாக உருபெற்று அதன் மனிமகுடாமாக திகழ்வதை பாருங்கள். இதை போல, இந்த அளவில், அதுவரை எவரும் சிந்தித்ததில்லை, அதன் பின்னரும் எத்தநித்ததில்லை. ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் கழிந்தும் நம்மை அசரவைக்கும் படைப்பு

முனிவரின் சாபத்தினால் சாம்பலான தனது முன்னோர்கள் உயிர் பிக்க கடுந்தவம் புரிந்து, விண்ணகர கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகிரதனின் உன்னத முயற்சி. இதை சித்தரிக்க இயற்கையாகவே பிளந்த பாறையை தேர்தெடுத்த சிற்பி, அதில் விண்ணவர், நாகர், பூலோகவாசிகள் , மிருகங்கள் என்று ஒரு உலகத்தையே செதுக்கி (அனைத்தையும் விளக்க இதை ஒரு தொடராக இட வேண்டும் ) …அதில் பல புதிர்களை வைத்து …முதல் புதிர் அர்ஜுனன் ஈசனின் பசுபத அஸ்திரத்தை தவம் செய்து பெரும் காட்சியை பிணைத்து ( இதை விளக்க அடுத்து வரும் சோதனை தவம் மடல் படியுங்கள் ) அதில் பூனை, எலி , யானை, வேடன் , சிவா பூதகனத்தின் வயிற்றில் புலி முகம் என்று பல சுவாரசியமான சிற்பங்களையும் உலவ விட்ட கற்பனை அருமை.

முதல் காணல் என்பதால் – நிறைய விளக்கம் இல்லை – நீங்கள் பார்க்கும் பிளவு முன்காலங்களில் மழை பெய்யும் பொது அருவி போல மழை நீர் கங்கை இறங்கும் கோலத்தை நடித்து காட்டும் வண்ணம் செதுக்க பட்டுள்ளது. கங்கையின் வலது புறம் ஒரு காடு .. இடது புறம் விண்ணவர்கள் இந்த அறிய காட்சியை காண விரைகின்றனர். வரம் அளிக்கும் ஈசனின் அதிகார தோரணை, மற்றும் வரம் பெறுபவரின் கடுந்தவத்தினால் எலும்பும் தோலுமாய் காட்சி ( அணு ஆயுதம் பெற தவம் …இப்போது இந்தியாவின் நிலை ??)

தொடரும்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment