கிளிகளின் ஏமாற்று வித்தை – திருக்குறுங்குடி

கோயில் தூண்களிலும், வாயில் கோபுரத்திலும் சிற்பங்களை செதுக்கும் பொது சிற்பிகளுக்கு ஒரு அதீத நகைச்சுவை உணர்வு வந்துவிடும் போல. ஆலயம் உட்புறத்தில் செதுக்கும்போது சில பல கோட்பாடுகளுக்குள் அடங்கி விட்ட அவர்களது கற்பனைத் திறன் வெளியில் வந்தவுடன் சிறகு முளைத்து சுதந்திரமாக பறக்கும் போது அவர்களது கலையின் வெளிப்பாடு வித்தியாசமாக இருக்கிறது. இப்படி ஒரு சிற்பக் கோர்வையை நாங்கள் திருக்குறுங்குடி ஆலயத்தின் கோபுரத்தில் பார்த்தோம்.

நேரடியாக சிற்பத்துக்கு போவதற்கு முன்னர் சமீப காலமாக, ’ஒன்றுபட்டால் உண்டு வாழு’ என்று நாம் சிறுவயதில் எருமை கூட்டம், அல்லது வயதான அப்பா சிறு குச்சிகளை ஒரு கட்டாக கட்டி மகன்களை உடைக்கச் சொல்லும் கதைகளில் கேட்ட கருவை கொண்டு அமைக்கப்பட்ட இந்த ஓவியம் பலரும் பார்த்து இருப்பீர்கள்.

சரி சிற்பம் பார்க்க செல்வோம். இவை முதல் தளத்தில் இருப்பதாலும், ஆலய கோபுரத்தின் யானை நுழையும் அளவு வாயிலை மனதில் கொண்டும், இவை இருக்கும் இடம் – பொதுவாக பலரும் பார்க்க முடியாத இடம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.

முதல் இரு சிற்ப்பங்கள் – இளம் பெண்கள் அந்த நாட்களில் கிளிகளை செல்ல பிராணியாக வைத்துக்கொள்வது வழக்கம் போல உள்ளது.

இப்படி ஒவ்வொரு பெண்ணும் ஒரு கிளியை கேட்டால் கிளிக்கு எங்கே போவது ?

காட்டுக்கு சென்று வேட்டையாடி தானே பிடிக்க வேண்டும் ! இது மூன்று வேடர்கள் கிளிகளை வேட்டையாடும் சிற்பம். சிற்பி ஒவ்வோருவர் கையிலும் வெவ்வேறு ஆயுதங்களை கொடுத்து இருப்பதை பாருங்கள். முதலில் இருப்பவன் கையில் உண்டிகோல் உள்ளது, ஒருவன் கையில் வில் – நடுவில் இருப்பவன் ஒரு கோலிகுண்டை லாவகமாக அடிக்கும் பாணி மிக அருமை. !!

இப்படி வித விதமான ஆயுதங்கள் கொண்டு தங்களை வேட்டையாடும் வேடர்களிடத்தில் இருந்த தப்பிக்க கிளிகள் என்ன செய்கின்றன ?

என்ன ஒரு ஏமாற்று வித்தை ? யானையை போலவும் குதிரையை போலவும் அவை மாறுவது போல கற்பனை செய்து செதுக்கிய கலைஞனின் கைத்திறன் அபாரம் !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் மூன்று – கங்காளர்

சர்ச்சைச் சிற்பங்கள் தொடரில் இன்று மீண்டும் ஒரு பெரிய சர்ச்சைச் சிற்பம் – கங்காள முர்த்தி. கதைக்கு செல்வதற்கு முன்னர் சிற்ப வடிவத்தின் அம்சங்களை பார்த்துவிடுவோம். வெகுவாக பிக்ஷாடனர் வடிவத்துடன் ஒத்துப்போவதால் இரு வடிவங்களுக்கு இடையே பலமுறை குழப்பம் வருவது இயல்புதான்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இரு வடிவங்களையும் பாருங்கள்.

முதல் வித்தியாசம் என்று பார்த்தல் – துணி தான். பிக்ஷாடனர் பொதுவாக பிறந்த மேனியாக ஒரு சில பாம்புகளை மட்டுமே உடுத்தி இருப்பார். கங்காளற் மேல் துணியாக குதிரை அல்லது கழுதையின் தோல் அணிந்தும், கீழுக்கு சனலாலான துணி அதுவும் முட்டிக்கு மேல் வரைக்குமே அணிய வேண்டும். இருவருமே தடிமனான மாற பாத ரக்ஷைகள் அணிவார்கள்.

அடுத்த வித்தியாசம், தலை அலங்காரம். கங்காளற் அழகிய ஜடா மகுடம் ( ஜடையை கொண்டே கிரீடம் போல பின்னி இருப்பது ) வைத்திருப்பார். பிக்ஷாடனர் ஜடா பாரம் அல்லது ஜடா மண்டலம் – பொதுவாக

இப்படங்களை பாருங்கள் – வித்தியாசம் புரியும் …நன்றி

எனினும் அங்கும் இங்கும் சில இடங்களில் பிக்ஷாடனர் ஜடா மகுடதுடனும் காணபடுகிறார். ஒரு வேலை சிற்பி இரு உருவங்களையும் சேர்த்து ஒரு கலவை செய்தாரோ என்னவோ.

நல்ல வேலையாக நமக்கு உதவ இன்னும் சில வித்தியாசங்கள் உள்ளன.

சிவன் கீழ் இடது கையை முதலில் பார்ப்போம். அங்கே கபாலம் இருந்தால் அது பிக்ஷாடனர். தக்க என்ற ஒரு வகை மேளத்தை கொண்டு இருந்தால் அவர் கங்காளற்.

மேலும், கீழ் வலது கரம் மானுக்கு புள் கொடுக்கும் படி இருந்தால் அது பிக்ஷாடனர், கங்காளற் வடிவத்தில் அந்த கை பனா என்ற ஒரு குச்சியை கொண்டு அந்த மேளத்தை கொட்டும் வகையில் இருக்க வேண்டும். அடுத்த கை தான் மானுக்கு புள் கொடுக்க வேண்டும். இப்போது கங்கை கொண்ட சோழபுறது கங்காளற் வடிவத்தில் உள்ள பிரச்சனைக்கு வருவோம்…இங்கே அவருக்கு ஆறு கைகள். அதில் முன் இரண்டும் உடைத்து விட்டன. இருந்தும் அடுத்த வலது கரம் மானுக்கு புள் கொடுப்பதை வைத்து நாம் அவரை அடையாளம் கொள்ளலாம். பின் வலது கை மேலே ஒரு பாம்பை பிடித்துள்ளது.

இரண்டு உருவங்களுமே தங்கள் மேல் இடது கையில் ஒரு தண்டத்தை வைத்துள்ளனர். எனினும் கங்காளற் விடிவதில் இது மிகவும் முக்கியம் – கங்காளம் – எலும்புக் கூடு. பிக்ஷாடனர் கையில் இருக்கும் கபாலம் நான்முகனின் ஐந்தாவது தலையின் ஓடு என்றால் இந்த கங்காளம் கதை இன்னும் சர்ச்சைக்கு உரியது. பிரவ வடிவில் சிவன் பெருமாளை சந்திக்க செல்ல வாயிலில் விஷ்வாக்செனர் அவரை தடுத்து நிறுத்த, சினந்தில் தனது திரிசூலம் கொண்டு அவரை குத்தி அவரது சடலத்தை அதில் தொங்கியவாறே செல்வதாக செல்கிறது கதை. ( இதுவே இது தொடர்பான கதைகளில் கொடூரம் கம்மியாக இருந்தது !) எனினும் முடிவில் விஷ்ணு ( சிலர் லக்ஷ்மி என்கிறார்கள்) உதவியுடன் சிவன் சரியாகி – விஷ்வாக்செனரும் உயிர் பெற்றார் என்று முடிகிறது.

திரு கோபிநாத் ராவ் அவர்களின் சிற்ப நூல் குறிப்பில் Sri Gopinath Rao’s Elements of Hindu Iconography இவ்வாறு கங்காளற் வடிவம் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

“கங்காளற் வடிவத்தில் அவரை சுற்றி நிறைய பெண்களும், பூத கணங்களும் இருக்க தண்டும். அந்த கணங்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் பல்வேறு இசைக்கருவிகளை வாசித்த வண்ணம் இருக்க வேண்டும். ஒரு கணம் தலையில் ஒரு பெரிய பாத்திரம் ஏந்தி இருக்க வேண்டும் – இதில் கங்காளற் பிச்சை எடுக்கும் உணவு போட பட வேண்டும் – இந்த கணம் அவருக்கு இடது புறம் இருக்க வேண்டும். சுற்றி இருக்கும் பெண்கள் அவர் மீது மோக மயக்கத்தில் அவரை அணைக்க துடிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். மேலும் ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள் அவரை சுற்றி அஞ்சலி முத்திரையில் இருக்க வேண்டும். வாயு தெருக்களை பெருக்க, வருணம் நீர் தெளிக்க, மேலே தேவர்கள் மலர்கள் தூவ, ரிஷிகள் மாத்திரம் ஜெபிக்க, சுர்யனும் சந்திரனும் சாமரம் பிடிக்க – நாரதரும் தும்புருவும் இசை வாசிக்க இவர் வளம் வர வேண்டும் ”

சென்ற டிசம்பர் மாதம் திருக்குறுங்குடி சென்ற பொது கோபுர பராமரிப்பு வேலை நடந்துக்கொண்டு இருந்தது – அதனால் சாரங்களில் ஏறி மேல் தலத்தில் உள்ள சிற்ப்பங்களை படம் பிடிக்க முடிந்தது. அங்கே கங்காளற் சிற்பம் இருப்பதை கண்டு வியப்பில் ஆய்ந்தோம்.

கண்டிப்பாக அந்த சிற்பிக்கு நிறைய தைரியம் இருந்திருக்க வேண்டு,.

மேலே நாம் படித்த பெரும்பாலானவை இந்த சிற்பத்திற்கு அப்படியே பொருந்துகின்றன.

அந்த தண்டத்தின் மறு பக்கத்தில் இருக்கும் அந்த பள்ளி / உடும்பு போன்ற விலங்கிற்கு தான் குறிப்பு கிடைக்க வில்லை.

ஒரு வேலை இப்படி முதிகில் ஒரு சடலத்தை சுமந்த பிச்சை கேட்டல் யார் போடுவார்கள் பாவம். அதனால் மதிய உணவை கட்டிக் கொண்டு வந்து விட்டாரோ என்னவோ.

விளையாட்டை இருந்தாலும், இந்த கதைகளை எல்லாம் நாம் அந்த காலத்துக்கு சூழலில் பார்க்க வேண்டும். நவ கண்டம் போன்ற விஷயங்கள் பற்றி படிக்கையில் இந்த குறிப்பு கிடைத்தது தன உயிரை தானே எடுப்பது ” வீரன் மற்றும் நாராயணன் என்னும் சகோதரர்கள் – இரட்டை பிறவிகள் , இருவருமே முதலாம் பராந்தக சோழர் ஆட்சியில் பணிபுரிந்தவர்கள், நெல்லோரே அரசன் விக்கலனை எப்படி கொன்றோம் என்று மன்னர் கேட்டதற்கு இப்படி தான் என்று தானே தங்கள் தலைகளை கொய்தனர் !”


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஹனுமான் எப்படி பாண்டவர்களின் கொடியில் சென்று அமர்ந்தார்!!

பொதுவாக கோவில் கோபுரங்களில் சுதை வடிவங்களையே பார்க்க முடியும் – கல் சிற்பங்களை பார்ப்பது கடினம் – அதிலும் அரிய புராண கதைகளை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட சிறு புடைப்புச் சிற்பங்களை காண்பது மிக அரியது . அதனால் தான் திருக்குறுங்குடி கோயில் கோபுரத்தில் இப்படி ஒரு அரிய மகாபாரதக் கதையை கண்டபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

இந்த முறை சென்றபோது புனரமைப்புப் பணிகளின் காரணமாக சவுக்கு சாரம் கட்டி இருந்ததால் நானும் அரவிந்தும் மேலே ஏறிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

நாம் முன்னரே அங்கு உள்ள ஒரு அரிய கருடனின் கதையை பார்த்துள்ளோம். அதே போல இதுவும் ஒரு மிக அரிய வடிவம்.

அமர்சித்ரா கதைப் புத்தங்களில் படித்த நினைவு இருந்ததால் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இது வரை இதனைக் கல்லில் இப்படிச் செதுக்கி நாங்கள் பார்த்ததில்லை.

இந்தக் கதை ஒரு பிற்சேர்க்கை என்றே நினைத்து வந்தேன்.

ஒரு சிறு குரங்கு போல அமர்ந்து இருக்கும் அனுமன், வலிமை வாய்ந்த பீமன் தனது கதாயுதத்தால் ஏதோ ஒரு சிறு குச்சியை வழியில் இருந்து ஒதுக்குவது போல அனுமனின் வாலை தள்ளி விட முயற்சி செய்கிறான்.

என்ன கதை இது ?

பீமன், திரௌபதிக்காக சௌகந்திக மலரைக் கொண்டுவரச் செல்கிறான் . அப்போது வழியில் ஒரு குரங்கு படுத்துக் கிடப்தை காண்கிறான். குரங்கின் வால் தனது பாதையில் குறுக்கே இருப்பதை கண்டு வாலை நகர்த்துமாறு குரங்கை அதட்டுகிறான். பீமனுக்கு தனது உடல் பலத்தில் இருந்த பெரும் நம்பிக்கை அங்கே ஆணவமாக மாறுகிறது. அதனை சரி செய்ய அனுமன் தன தம்பியுடன் விளையாடுகிறார்.

வயதானதால் தன வாலை தன்னால் நகர்த்திக்கொள்ள தனக்கு சக்தி போதவில்லை என்றும், முடிந்தால் பீமனை தாண்டி குதித்து செல்லச் சொல்கிறார் . மேலும் ஆத்திரம் அடைகிற பீமன் தாண்டி செல்ல மறுக்கிறான்.

நீ யார் என்று அனுமன் கேட்க, பீமன் , தான் குந்தியின் புதல்வன், சத்ரியன் என்றெல்லாம் சொல்கிறான்.

அப்போது என்னை எளிதாக நீ தாண்டி குதித்துவிட்டு போகலாமே என்று அவனை அனுமன் கிண்டல் செய்கிறார்.

அதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பீமன், கடலையே தாண்டி குதித்த அனுமன் தனது அண்ணன் என்றும், இந்த சாதாரண வாலைத் தாண்டி குதிக்க ஒரு நொடி ஆகாது என்றும் கூறுகிறான்.

அப்படியானால் தன வாலை எடுத்து ஓரமாக ஒதுக்கி விட்டு செல்லுமாறு அனுமன் கூற, பீமன் வாலை நகர்த்த முயற்சிக்கிறான். தன முழு பலத்தை கொண்டு முயற்சித்தும் அவனால் அந்த வாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

எதிரில் இருப்பது வெறும் குரங்கு அல்ல என்று உணர்த்த பீமன், தன கர்வம் அடங்கி வணங்குகிறான்.

’நான் தான் உன் அண்ணன் அனுமன்’ என்று தனது விஸ்வரூபத்தை காட்டுகிறார் அனுமன். மேலும் பீமன் தேடி வந்த மலரை அடைய எளிய வழி ஒன்றையும் கூறுகிறார். தன அண்ணன் தன்னை அணைக்கும்போது பீமன் தன உடல் புத்துணர்வு பெறுவதை உணர்கிறான். அனுமன் அவனுக்கு வரம் அளிக்கிறார். தாம் மேற்கொள்ளும் மகாபாரதப் போரில் தமதுகொவெற்றிக்கு உதவ வேண்டுகிறான் பீமன். அப்படியே அவரும் வரம் அளிக்கிறார். ”அர்ஜுனின் தேரின் மேலே பறக்கும் கொடியில் நானே அமர்ந்து உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருகிறேன்” என்று அனுமன் அபயம் அளிக்கிறார்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கருடனின் புராணம் – திருக்குறுங்குடி

புராணங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஹனுமான் மற்றும் கருடன். அமர்சித்ராகதா புத்தகம் அனைத்தையும் அழுது அடம் பிடித்து அப்பாவிடம் சண்டை போட்டு வாங்கி வரச் செய்வேன்.

அதில் வரும் கதைகள் மற்றும் படங்கள், மிக அருமையாக அப்படியே மனதில் பதியும். அப்படி பதிந்த ஒரு கதை, அண்மைய நண்பர் திரு கிரிதரன் அவர்கள் (நிறைய அற்புத படங்களை நமக்கு அனுப்பி உள்ளார் – விரைவில் அவற்றை பார்ப்போம்) திருக்குறுங்குடி சிற்பம் ஒன்றை தந்தார். பார்த்தவுடன் நினைவுக்கு வந்த கதை.

கருடனின் கதை – இந்தியாவில் மட்டும் அல்லாமல் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்னாம் , கம்போடியா என்று எங்கும் பிரபலமான ஒன்று.
3190319731993203321632373243
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக்கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்மேலாப்பின் கீழ்வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

என்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பாடியபடி எம்பெருமானுக்கு வெயில் படாதபடி தன் பரந்து விரிந்த சிறகால் காப்பவன் விநதை சிறுவன் கருடன்

மகாபாரதத்தில் அவன் பிறந்த கதை மிக அழகாக வர்ணிக்க படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர், அவருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. இதில் விநதை மிக நல்லவள், கத்ரு கொடியவள். இருவரும் கரு தரித்து – ஆனால் வினோதமாக கத்ரு ஆயிரம் முட்டைகளும், விநதை இரண்டு முட்டைகளும் இட்டனர்.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் ( அப்பப்பா !!) கத்ருவின் ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்து நாகங்கள் வெளி வந்தன. இதைக் கண்டு தன் முட்டைகள் என்னவாயிற்று என்று எண்ணி அவசரத்தில் ஒன்றை உடைத்து பார்த்தாள் விந்தை – அவசரத்தில் தன் தமக்கையின் குட்டிகள் கண்ட ஆர்வத்தில் அவள் செய்த தவறு – உள்ளே குழந்தை பாதிதான் உருவாகி இருந்தது – அவனே அருணன். எஞ்சி உள்ள தன் தமயனின் முட்டையை பொறுமையுடன் பாதுகாக்க அறிவுரை கூறிவிட்டு அவன் சூரியனின் தேரோட்டி ஆனான் .( அருணனின் மகனே ராமாயணத்தில் வரும் ஜடாயு )

அத்தருணத்தில் பொறாமையினால் கத்ரு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் யார் தோற்றுப் போகின்றார்களோ அவர் வெற்றி பெற்றவரின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை. அந்தப் போட்டி என்ன ? இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் ( பாற்கடலை கடையும் பொது வந்தது அது – அதனுடன் வந்ததே கௌஸ்துபம் – பெருமாளின் மார்பை அலங்கரிக்கும் மணி ) வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள். பின் போட்டி நடைபெற்ற போது தந்திரமாக கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து உச்சைர்வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் கூறுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சைர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. இவ்வாறு சூழ்ச்சியால் தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.

குறிப்பிட்ட காலத்தில் கருடன் முட்டையில் இருந்து வெளி வருகிறான். அவன் உருவம் வளர்ந்து மிக பிரம்மாண்டமாக அனைவரும் அஞ்சும் அளவிற்கு பெரியதாக உள்ளது. தேவர்கள் வேண்டுகோளின் படி அவன் தன் உருவத்தை சிறியது படுத்துகிறான்.

தன் அன்னை , சிற்றன்னைக்கு அடிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருடன் தன் அன்னையிடம் அவரது இந்த நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் சென்று தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான். அலட்சியமாக கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா? உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று ஆணவத்துடனும், அந்த காரியம் முடியாதது என்ற நம்பிக்கையுடனும் பதிலிறுக்கின்றாள். ( இன்னொரு வடிவில் அவள் சந்திரனை இழுத்து வருமாறும் அதில் உள்ள அமிர்தம் நிறைந்த ஓட்டைகளையும் சேர்த்து கொண்டு வருமாறும் உள்ளது )

இப்போது ஒரு கிளைக் கதை – நமது சிற்பத்துடன் தொடர்பு உள்ள இடம் . தன் தாயின் துயர் தீர்க்க யாராலும் முடியாததையும் செய்ய, தாயிடம் ஆசி பெற்று புறப்பட இருந்த கருடனுக்கு ஒரே பசி. பசியாற உணவைத் தேடும் அவனுக்கு அவன் தாய் கடலோரத்துக்கு சென்று அங்கு இருக்கும் ஜீவராசிகளை உண்டு வருமாறு கூறி ( அங்கு எந்த பிராமணனுக்கும் தீங்கு நேரிடாமல் நட என்றும் கூறுகிறார். கடற்கரைக்கு சென்ற கருடன் அங்கு ஒரு மீனவ கிராமம் ஒன்றை அப்படியே விழுங்கிவிட்டான். அப்போது அவன் வயிறு எரிகிறது – விழுங்கியவர்களுள் ஒருவர் அந்தணர் என்று அறிந்து அவரை வெளியில் உமிழ்கிறான். அவரும் தனது மனைவி – ஒரு மீனவப் பெண்மணி – அவளையும் காப்பாற்றுமாறு கூற – கருடனும் அவ்வாறே செய்கிறான் )

பின்னர் இன்னும் பசி தீராமல் இருக்கவே, தன் தந்தையை நாடிசெல்கிறான் கருடன். காஷ்யபர் அவனை அருகில் ஒரு ஏரியின் கரையில் பல காலமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு யானை மற்றும் ஒரு ஆமை – அவற்றை தின்று நீ பசியாறு என்கிறார்.

கருடனும் அங்கு விரைகிறான் – அங்கே ஒரு பிரம்மாண்ட ஆமை ( எண்பது மைல் பெரியது ) , யானையோ ( நூற்றி அறுபது மைல் ) – அப்பாடா – கருடன் ஒரு கையில் ஆமையையும் ஒரு கையில் யானையும் பிடித்து, அவற்றை உண்ண சரியான இடம் தேடுகிறான் . அங்கே ஒரு பேரு மரம் அவனை வரவேற்றது ( மரம் எட்டுநூறு அடி உயரம் ) – அதன் கிளையில் அமர்ந்த கருடன் , மூவரின் பாரத்தினால் கிளை உடைவதும், அதே கிளையின் அடியில் முனிவர்கள் பலர் தலை கீழாக தவம் புரிவதும் கண்டு திடுக்கிட்டான். உடனே கிளையை வாயில் கவ்வி – அருகில் இருந்த மலையின் உச்சிக்கு சென்று முனிவர்களை இறக்கி விட்டு, தன் இரைகளை தின்று முடித்தான்.

இந்த கதையைத் தான் நான் அமர் சித்ரா கதாவில் படித்தேன் – இதோ அவை.



சரி, சிற்பம் – அதுவும் இதோ திருக்குறுங்குடி கோவில் சிற்பம். கருடனின் வலிமை, ஒரு கையில் யானை, மறு கையில் ஆமை – மூக்கில் மரம் – மரத்தில் தொங்கும் முனிவர்கள் – அருமை .



சரி, அடுத்து மீண்டும் கதை – இந்திர லோகத்தை தன் பறக்கும் சக்தியினால் சுலபமாக அடைந்து விடுகின்றான் கருடன். அமிர்த குடத்தை நெருங்கும் கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று அடுத்து உள்ளே செல்கிறான் கருடன். அங்கே ஒரு பெரிய தீ அவனை தடுக்கிறது. உடனே அவன், பூமியில் இருக்கும் பெரிய அருவிகள் மற்றும் ஆறுகளில் இருந்து நீரை குடித்து வந்து – அதை அந்த தீயின் மேல் துப்பி அணைக்கிறான். பிறகு , ஒரு இயந்திரம் – வெட்டு கத்திகள் பொருந்தியது – சுழன்று கொண்டே இருக்கிறது – தன் உருவத்தை சிறியதாய் மாற்றி அதனுள்ளே நுழைகிறான். அங்கே இரு ராட்சசப் பாம்புகள் – அவற்றை எளிதில் கடித்து நசுக்கிக் கொன்று, அமிர்தம் உள்ள குடத்தை எடுக்கிறான்.
32323188
திரும்பும் பொது மகா விஷ்ணு எதிரில் வர – இருவரும் ஒருவரை ஒரவர் புரிந்து – ஒரு சமரசத்திற்கு வருகின்றனர். விஷ்ணு கருடனுக்கு அமிர்தத்தை அருந்தாமலே அமர ஆயுளை தருகிறார், கருடனும் தன் பனி முடிந்தவுடன் அவரின் வாகனமாக இருக்க வாக்கு தருகிறான்.
32453247
அப்போது கருடனுடன் போரிட இந்திரனே வருகிறான் . ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான். இருவரும் சேர்ந்து கருடனின் தாயின் அடிமைத்தனம் போக்கவும், நாகங்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போகவும் ஒரு வழி வகுக்கின்றனர்.

இந்திரன் கருடனுக்கு ஒரு வரம் தருகிறான். கருடன் அன்று முதல் சிற்றன்னைக்கு துணை சென்ற நாகங்கள் எல்லாம் தனக்கு இயற்கையான இரைஆக வேண்டும் என்று கேட்கிறான். அவ்வாறே இன்று வரை உள்ளது.

பிறகு கருடன், ஆணவத்தால் அறிவிழந்த சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கி, தன்னைப் பெற்றவளின் வயிற்றை குளிரச் செய்கின்றான். அமிர்தத்தை தரையில் வைத்து, நாகங்களை அதை பருகும் முன் சென்று குளித்து வருமாறு கூறுகிறான் கருடன். அவர்கள் குளிக்க செல்லும் போது இந்திரன் வந்து அமிர்தத்தை எடுத்து சென்று விடுகிறான்.

திருக்குறுங்குடி படங்கள் : திரு அசோக் மற்றும் கிரிதரன்
திருகொயிலூர் கருடன் படம் : திரு. சத்தியன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருக்குறுங்குடி – ஒரு முதல் பார்வை , திரு கண்ணன்

பல காலம் என் தாயகத்தில் வெட்டியாக கழித்த பின்னர், என் தாய்மொழின் அருமையை அறியாமல் இருந்த பொது ( கலை தாகம் அப்போதும் கொஞ்சம் இருந்தது ), திரு திவாகர் அவர்கள் என்னை மின்தமிழ் என்னும் ஒரு அரிய குழுமத்திற்கு அழைத்தார். அங்கே நான் என் தாய் மொழியை மீண்டும் கற்றேன், சிறுக சிறுக நடை பயிலும் குழந்தை போல முதலில் ஒரு சில வரிகள் மட்டும் சிற்பங்களை விளக்க இட்டு, பலரின் ஊக்குவிப்பால் பின்னர் சிற்பம், பக்தி இலக்கியம் என்று பலவிதமான துறைகளின் ஒற்றுமையை பற்றி எழுதினேன். அப்போது திரு கண்ணன் அவர்களை சந்தித்தேன், தமிழ் இணைய தளங்களில் மிகவும் பிரபலமானவர், எனினும் நான் எழுதும் சிறிய மடல்களை ரசித்தார், திருத்தினார், பல அரிய பாடல்களை தந்து உதவினார். நண்பர் அசோக் அவர்கள் திருக்குறுங்குடி சிற்பங்களின் படங்களை எனக்கு அனுப்பியவுடன், இந்த அருமையான சிற்பங்களை பற்றி எழுத திரு கண்ணன் அவர்களே சரி என பட்டது. கேட்டவுடன் ஒரே நாளில் இந்த அருமையான மடலை தந்தார் திரு கண்ணன்.

கல்லிலே சிலையை எல்லோரும் காண்கிறோம். ஆயினும் அதைக் கல்லிலே “கலை” என்று சிலராலேயே சொல்ல முடிகிறது. கலை என்பது மனோபாவம். ஒரு பட்டுப்பூச்சி மலரின் மீது நின்றது. அதைப்படமெடுத்தேன். அதன் அழகைக் கண்டவுடன் கவிதையாக ஒரு தலைப்புத் தோன்றியது, “பட்டாம்பூச்சி,பூவின் ஹைக்கூ” என்று. அதை வெறும் புகைப்படம் என்றும் சொல்லலாம், அல்லது அதன் அழகைக் கண்டு அது “கவிதை” என்றும் சொல்லலாம். எனவே கல்லிலே கலை வண்ணம் என்று காண்பது ஒரு மனோபாவம். கவிதா மனோபாவம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் புண்ணியவான்கள். இப்பதிவு காண்போர் புண்ணியவான்கள். இன்னொரு காரணத்திற்காகவும்!.

உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை
வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,
உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே?

என்று பேசுகிறது திருவாய்மொழி! இங்கும் மனோநிலை பற்றிய பேச்சுத்தான். உலகில் தற்பெருமை பேசாதோர் உண்டோ? சிலர் அடக்கம் காரணமாக அதிகம் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளாதிருந்தாலும் “தான்” உளன் எனும் அகந்தை என்றும் உண்டு. இறைவன் மனிதனைக் கேட்டானாம், “பிள்ளாய்! நீ என்னைச் சேர்ந்தவன்!” என்று. அதற்கு மனிதன் சொன்னானாம் “யார் சொன்னது? நான் “என்னைச்” சேர்ந்தவன்” என்று. அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த இழுபறி. நாம் நம்மைச் சேர்ந்தோரா? இல்லை பரம்பொருளைச் சேர்ந்தோரா? கோடானகோடி ஜென்மங்களின் நினைவாக நம்மை ஒரு “ஆளாக” கருதிவருகிறோம். அப்படியொன்று இல்லவே இல்லை என்கிறார் நம்மாழ்வார். இருப்பதெல்லாம் அவனே! என்கிறார்.
உண்மை என்பதும், மெய்ம்மை என்பதும் வேறெங்கும் இல்லை, “திருக்குறுங்குடியில்” குடிகொண்டு இருக்கிறது என்கிறார். அந்த மெய்மையைக் காணவாவது நாம் திருக்குறுங்குடி செல்ல வேண்டாமா?

நாரணனின் அவதாரங்கள் பத்து என்பது பிரபலம். ஆனால் உண்மையில் அவை எண்ணற்றவை. இருப்பினும், ஆழ்வார்களின் மனத்தைக்கவர்ந்த அவதாரங்கள் என்று சில உள. அதில் வாமனனாய், குறளுருவாய் வந்து பின் திருவிக்கிரமனாகி ஏழுலகும் அளந்த கதை திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது!

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா
 மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
 அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில்
 வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று
 மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே

166016571666
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த “திருநெடுந்தாண்டகம்” எனும் கிரந்தத்தில் மூவுலகும் கடந்து, அதற்கு அப்பாலும் நிற்கும் முதல்வா! என்று நாரணனைப் போற்றுகின்றார். கஜேந்திர மோட்சத்தில் யானை “ஆதிமூலமே” என்று கூவுகிறது. கடவுள் வருவதற்கு முன் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், கிங்கரர்களும், மும்மூர்த்திகளும் வந்து விடுகின்றனர். ஏன்?
எல்லோருக்கும் தான் ஆதிமுதல் அல்ல என்பது தெரியும். எனவே, யார் அந்த “ஆதிமூலம்”? முதல் வித்து? என்று அறிய ஆவல். அப்போது தோன்றுகிறான் எம்பெருமான் கருட வாகனனாக! தனது வில்லும், வாளும், தண்டும், சக்கரமும், சங்கும் தரிக்க! இதை நம்மாழ்வாரும் கண்டு ரசிக்கிறார். இந்த அழகை சிற்பியும் கண்டு ஆனந்திக்க மிக, மிக அழகான சிலைகளை வடித்துத்
தந்துவிடுகிறான். இச்சிலைகளைக் காணும்போது கஜேந்திரனின் மனோநிலை நமக்கு வரவேண்டும். பணிவுடன் வணங்கும் பக்குவம் வரவேண்டும். தான் எனும் ஆணவம் நிற்கும் போது இரணியனுக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் நிகழும். அப்படிப்பட்ட மானிடரை சிறு கவிதை கொண்டு கூட பாட மாட்டேன் என்று கோபமுடன் சொல்கிறார் நம்மாழ்வார்.

நின்றிடும் திசைக்கும் நையுமென்று
 அன்னைய ரும்முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி
 நம்பியை நான்கண்டபின்,
வென்றி வில்லும் தண்டும்
 வாளும் சக்கரமும்சங்கமும்,
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா
 நெஞ்சுள்ளும் நீங்காவே

அந்த ஆதீமூலத்தைக் கண்ணாறக்கண்டபின் அது நம் நெஞ்சை விட்டுக்கூட நீங்குமோ? நீங்கக்கூடாது என்பதில் நம் சிற்பியும் கவனமாக இருக்கிறார். தெய்வீக அழகை தெய்வீக சிற்பமாக வடித்துவிட்டால்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாயினும் கண்டு, ரசித்து, உள்ளத்தில் கொள்ள முடியுமே!

திருக்குறுங்குடி நம்பி திருவிக்கிரமன் மட்டுமா? அப்பாலுக்கு அப்பாலாய் உள்ள பரமூர்த்தி மட்டுமா? நம்மைப் போன்ற ஏழை எளியோருக்கு அது எட்டுமா? எட்டும் என்கிறான் சிற்பி. அந்த பரவாசுதேவனே பூவுலகில் கண்ணனாய்
1647165116691672
வந்துள்ளான். வெண்ணெய் திருடும் குள்ளனாய், கோபாலனாய், நவநீத சோரனாக!!

உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
 உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
 கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
 சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
 ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே

இக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஆனந்தக் கூத்தாடுகிறார் பெரியாழ்வார். இதைக் கண்டவர் மகிழ்கின்றனர். கற்றவர் இதன் தத்துவம் அறிந்து தெளிவுறுகின்றனர். அத்தெய்வம் திருகுறுங்குடியாய் நிற்பதாகச் சொல்கிறது பெரியாழ்வார் திருமொழி.

165416751663
அப்படியெனில்? இங்கு நீங்கள் காண்பது சிற்பமல்ல. தெய்வம். கண்ணுறும் இக்காட்சியே தெய்வ தரிசனம்! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? தெய்வ தரிசனம் இவ்வளவு எளிதா? எளிதுதான். விண்ணிருந்து மண்ணிற்கு வரும் நீர்மையே அதற்கு அத்தாட்சி. அவன் இப்படிச் சிலையாய் நிற்பதும் ஓர் அத்தாட்சி! வாழ்க.