சிலைத் திருட்டு – பாகம் ஏழு. எத்தனை சிலைகள் திருடு போயின?

நமது கலைச்செல்வங்கள் திருடு போவதை தடுப்பதிலும் திருடு போனவற்றை மீட்டு வருவதிலும் நாம் எவ்வளவு அக்கறை காட்டுகின்றோம் என்பதை பல மாதங்களுக்கு முன்னர் இந்த பதிவில் பார்த்தோம்.

இந்த அவல நிலை தான் தற்போது கபூர் சிலை திருட்டு வழக்கிலும் நீடிக்கும் போல உள்ளது. முதலில் இந்த திருட்டை பற்றிய குறிப்புகள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதை காவல் து​றையின் இணைய பக்கத்தில்காண மனம் வருத்தப்படுகிறது.


Present Stage of the Case :

There were two temple burglaries in Sripuranthan Village and Suthamally Village during 2006 and 2008 which 28 antique idols of Hindu Deities of immeasurable value were stolen and subsequently smuggled out of India and illegally exported to USA”

குற்றப் பத்திரிகையில் உள்ள குறிப்புகள்

“It was during interrogation of those persons, it transpired that 18 Antique Metallic idols were stolen from Sri Varadaraja Perumal Temple at Suthamalli village by the three of them”…..” theft of eight idols in an another Sivan Temple at Sri Puranthan Village in Ariyalur District”

“…….18 Antique metallic idols from Sri Varadaraja Perumal Temple at Suthamalli village. A Non Bailable Warrant was issued to the petitioner and for recovery of stolen idols. Blue notices were sent for extradition of the petitioner to CBI, Interpol, New Delhi. It was further found that the same gang was also involved in the theft of eight Antique metallic idols stolen from Sri Pragdeeswarar Temple at Sri Purandan village in Ariyalur District. They were also exported to the U.S.”

அப்போது 18+8 = 26 சிலைகள் பற்றிய தரவே உள்ளது.

மேலும் இந்த வழக்கில் 18 மட்டுமே உள்ளது.

“On 13.04.2008, in a famous temple viz., M/s.Arulmigu Sundareswarar and Varadharaja Perumal Thirukovil, Suthamalli Village, Udayarpalayam Taluk, Ariyalur District, as many as 18 idols, made of panchalohas were stolen away.”

இப்படி இருக்க சிலைகள் எந்த வருடம் திருடு போயின என்று கூட தெளிவான குறிப்புகள் இல்லை. மேலும் திருடு போன சிலைகளின் பு​கைப்படங்கள் வெளியிட்ட காவல் துறை சற்று கவனம் எடுத்துக்கொண்டு சரியான பெயர்கள் கூட போட முயற்சி எடுக்கவில்லை இனைய தலத்தில் :நீங்களே பெயர்களை பாருங்கள் தீப லக்ஷ்மி என்று அம்மன் சிலைக்கும், சம்பந்தர் என்று மாணிக்கவாசகர் சிலைக்கும், கிருஷ்ணன் என்று சம்பந்தர் சிலைக்கும் பெயர் இட்டு பட்டியலை வெளியிட்டால் எப்படி? மேலும் அடுத்த பட்டியலில்தீபலட்சுமி என்று அஸ்திர தேவர் சிலை, முருகன் என்று சண்டிகேஸ்வரர் சிலையை தப்புத் தப்பாக பெயர் இட்டு உள்ளனர்.

தரவிறக்கம் செய்ய அவர்கள் தலத்தில் உள்ள Pdf ஏதோ கொஞ்சம் பரவாயில்லை. எனினும் இணைய தளத்தில் இருந்த சண்டிகேஸ்வரர் சிலை இங்கே காணவில்லை. அதற்கு பதில் சுப்பிரமணியர் சிலை வந்துள்ளது. எல்லாவற்றையும் சேர்த்து எண்ணிப் பார்த்தால்…

சுத்தமல்லி – 8 சிலைகள். , ஸ்ரிபுரந்தன் 8 சிலைகள் (நடராஜர் மற்றும் சிவகாமி இரண்டாக எண்ணிக்கை)
மேலும் சண்டிகேஸ்வரர் சிலை சுத்தமல்லி படங்களை ஒற்றி இருப்பதால் அதுவும் அந்த சிலைகளுடன் சேர்த்துக்கொண்டால் கூட 17 சிலைகளின் படங்கள் தான் உள்ளன.

முந்தைய பதிவுகளில் பல சிலைகளை பற்றிய குறிப்புகள் தந்துவிட்டோம். இன்று மேலும் இரண்டு சிலைகள் பச்சை நிறத்தில் கோடிட்டு இருப்பதை பாருங்கள். இவற்றை நாங்கள் முன்னரே அடையாளம் கண்டு இவை தற்போது இருக்கும் அயல் நாட்டு அருங்காட்சியகங்கள் குறிப்புகளுடன் அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டோம் இவற்றை அவர்கள் 2006 ஆண்டு வாங்கி உள்ளதாக தெரிய வருகிறது. இவற்றை கொண்டு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


idol_wing

இவை எவ்வளவு முக்கியம் என்பதை மேலும் வலியுறுத்த சென்ற வாரம்தி ஆஸ்திரேலியன் நாளிதழ் மேலும் 21 சிலைகள் கபூர் இடம் இருந்து வாங்கியவை என்று ஒரு பட்டியலை வெயிட்டு உள்ளது. அவற்றில் மிகவும் முக்கியாமான சோழர் காலத்து சிலை நர்த்தன சம்பந்தர்



இந்த சிலை பற்றி மேலும் குறிப்புகள் இல்லை. காவல் துறை வெளியிட்ட படங்களுடன் ஒப்பிட முடியவில்லை. (அவர்கள் தான் வேறொரு சம்பந்தர் சிலையை நர்த்தன கண்ணன் என்றும் மாணிக்கவாசகரை சம்பந்தர் என்றும் பெயர் மாற்றிவிட்டனரே!!)

இவ்வளவு பெரிய சிலை திருட்டு வழக்கில் இன்று வரை சரியான புகைப்படங்கள் கூட வெளி வரவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. பாண்டிச்சேரி IFP இடத்தில மேலும் படங்கள் உள்ளனவா? முழுவதுமாக முயற்சி செய்தால் ஒழிய இந்த சிலைகளை மீட்டு வர இயலாது.

கபூர் நடத்திய ஆர்ட் ஒப் தி பாஸ்ட் பட்டியல்களில் மேலும் பல செப்புத் திருமேனிகள் உள்ளன. படங்கள் இல்லாமல் இவற்றை மீட்க முடியாது.

நர்த்தன கிருஷ்ணன் / நவநீத கண்ணன் – பட்டியல் செப்டம்பர் 2008


இந்த கண்ணன் சிற்பம் ஆஸ்திரேலியா சம்பந்தர் சிலையுடன் ஒத்த காலம் என்று சொல்ல முடியும்.

முருகன் – சோழ சிலை – செப்டம்பர் 2008 பட்டியல்



மிகவும் முக்கியமான முருகன் சிலை இது (நாம் முன்னர் பார்த்த முரகன் சிலை பிற்கால சோழ காலம் – அதனை விட இது பழையது)

விநாயகர் – சோழர் சிலை – September 2009 பட்டியல்

சிலையில் பீடம் இல்லை. சுத்தமல்லி நடராஜர் மற்றும் உமை சிலைகளின் பீடங்களில் “சுத்தவல்லி” என்று செதுக்கப்பட்டுள்ளது. ஒரு வே​ளை எல்லா சுத்தமல்லி சிலைகளிலும் இதே போல எழுத்து இருந்தமையால் பீடத்தை விலக்கி உள்ளார்களோ என்ற ஐயம் எழுகிறது. அப்படி என்றால் இந்த சிலை சுத்தமல்லி கோவிலில் இருந்த திருடப்ப்பட்டதா? இங்கே நாம் ஒரு விஷயம் தெரிந்துக்கொள்ள வேண்டும் – பாண்டி IFP நிறுவனத்தின் பட்டியலில் சுத்தமல்லி கோயிலின் ஒரு விநாயகர் சிலை இந்தக் குறிப்பில் உள்ளது 02235. அவர்கள் இந்தப் படத்​தைக் கொடுத்தால் மேலும் ஒரு திருட்டை நிரூபனம் செய்யலாம்.


உமை – சோழ சிலை – செப்டம்பர் 2011 பட்டியல்


அருமையான சிலை. இந்த சிலை இன்னும் அமெரிக்காவில் தான் உள்ளது என்று நினைக்கிறோம் சமீபத்திய செய்திகளில் வந்த சிலை இதுவோ?

நடராஜர் – சோழ சிலை – மார்ச் 2011 பட்டியல்



மேலும் ஒரு அருமையான நடராஜர் சிலை. இது வரை காவல் துறை வெளியிட்ட படங்களில் இது இல்லை
இங்கே மீண்டும் பாண்டி IFP குறிப்பில் பதிவு எண் 11207 ஸ்ரிபுரந்தன் கோவிலில் இரண்டு நடராஜர் உள்ளன. படங்கள்?

மேலும் நமது குழுமத்தின் தோழி ஒருவர் ஆர்ட் ஒப் தி பாஸ்ட் ஆர்ட் ஒப் ஆசியா என்ற ஒரு பத்திரிகையில் வெவ்வேறு தருணங்களில் வெளியிட்ட விளம்பரங்களை வெட்டி அனுப்பி உள்ளார். இதை கொண்டு தான் ஒரு மிக முக்கிய குறிப்பு கிடைத்துள்ளது. அதனை ஏற்கனவே காவல் துறைக்கு அனுப்பிவிட்டோம். எனினும் மேலும் சில திருமேனிகள் அடையாளம் காண முடியவில்லை. அவற்றை இங்கே பதிவேற்றி மேலும் பலரின் உதவியை நாடுகின்றோம். இவற்றை பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் கண்டிப்பாக எங்களுக்கு அனுப்புங்கள்.

சோமஸ்கந்தர்.


இது காவல் துறை பதிவில் உள்ள சுத்தமல்லி சோமஸ்கந்தர் இல்லை.

ஜைன மஹா யக்ஷர் – சோழர் சிலை

மிக முக்கிய சிலை

பார்வதி – சோழர் காலம்?

DSC_6720

மேலே உள்ள குறிப்புகளை கொண்டு நமது காவல் துறை தங்கள் பணியை முடுக்கி விடும் என்ற நம்பிக்கையுடன்…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

புலிக்காலர்

இன்றைக்கு நாம் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒரு அற்புத தூண் சிற்பம் பார்க்கிறோம். யார் இவர்?

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=127

கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர்.

அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்கு மானால் அது அதனுடைய மிக்க உயர்வைக்குறிக்கும்.

அங்ஙனம் உயர்வுபற்றிய காரணத்தால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.

இத்தலத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள்:

– பெரும்பற்றப் புலியூர் – பெரும்பற்றினால் புலிப்பாதன் பூசித்த ஊராதலால் இப்பெயர் பெற்றது – ஆம் இதுவே தில்லை / சிதம்பரம்

பெரிய புராணத்தில் :

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1200&padhi=72&startLimit=41&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று
ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.

ஒப்பற்ற தவத்தையுடைய புலிக்காலர் (வியாக்கிர பாதர்) எனும் என் தந்தையாரால் வழிபடப் பெற்றதும், பெருமை மிகுந்த பெரும்பற்றப் புலியூர் என்று அழைத்தற்குரியதும், பெருமை கள் பலவும் வந்தடைதற்குரியதுமான தில்லைப்பதி, ஒருநெறிய மனம் வைத்து உணர்வோர்க்குச் சேமவைப்பாக இருப்பதாம்.
வியாக்கிரம் – புலி; பாதர் – காலினையுடையவர். இவர் மத்தியந்தன முனிவரின் மகனார் ஆவர். சிவவழிபாட்டைத் தவறாது செய்த இவருக்குச் சிவபெருமான் நேரில் தோன்ற, அவரிடம் சிவ வழிபாட்டிற்குப் பழுதற்ற மலர் எடுக்க நகங்களில் கண்களும், மலர் பறித்தற்கென மரங்களில் ஏறுங்கால் வழுக்காமல் இருப்பதற்கெனப் புலிக்காலும் கையும் பெற்றவர். இவர் திருமகனார் உபமன்னியு முனிவராவார். பெரும்பற்றப் புலியூர் – பெரும்பற்றை உடைய புலி யூர். அஃதாவது எல்லாப் பற்றும் அற்றாரது உள்ளத்துப் பற்றுடையதாய்ப் பற்றப்படுவது. ஒருமையாளர் – ஒருநெறிய மனம் வைத்தவர்.

தேவாரத்தில் :

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=6001&padhi=001

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
.. அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
.. திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
.. கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனை யும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.

ஆம், இவர் தான் புலிக்கால் முனி. பார்த்து மகிழுங்கள் .

2137214421512155
214121492153


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கம்போடியாவில் காரைக்கால் அம்மை

கம்போடியா ( Khao Preah Vihear) கோவில் சிற்பம் சிலவற்றை நாம் முன்பு பார்த்தோம். அவ்வாறே இன்றும் ஒரு அறிய சிற்பம்.

தொலைவில் இருந்து பார்க்கும் போது நடராஜர் மட்டுமே தெரிந்தார். அழகிய ஆடும் கோலம் – பத்து கைகளும் ஒரே கை வேகமாய் ஆடுவது போல அழகே உள்ளது.


கொஞ்சம் கீழே பார்த்தால் அனந்தசயனன், காலை அன்பாய் பிடித்து விடும் லக்ஷ்மி ( சிற்பம் சிதைந்து விட்டது ) நாபிக்கமலத்தின் மேல் பிரம்மன். அவர்களை அடுத்து இரு கிளிகள் – அதற்கு மேல் ஒரு யாழி – யாழியின் மேல் இருப்பவர் யார் என்று தெரியவில்லை – அதை அடுத்து இரு குரங்குகள் !!

சரி அத்துடன் விட்டு விடலாம் என்று பார்த்தால் ஆடல் வல்லானின் அற்புத நடனத்தை ரசிக்கும் இருவர் ( தலைகள் சிதைந்து விட்டன ) – ஆனால் வலது புறம் இருப்பது ஒரு பெண்மணி – அவர்களின் அங்க குறிப்புகளை சோழர் கால காரைக்கால் அமையின் சிலையுடன் ஒப்பிடும் போது அப்படியே ஒத்து உள்ளது. (சுருங்கிய மார்பகம்) ஒருவேளை தன்னை பேய் போல ஆக்குக என அம்மை இறைவனை வேண்டிக்கொண்டதால் இளமை மாறியதோ. அம்மையின் முழு கதையை வரும் மடல்களில் பார்ப்போம்

(அம்மை தாம் அருளிய அந்தாதியில்)

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியுமேனும் – சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்

எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.




காரைக்கால் அம்மை பெரும் பாலும் தென் இந்திய இலக்கியங்களிலேயே வருபவர், பல தமிழருக்கே தெரியாத ஒருவர். அவர் எங்கே அங்கே சென்றார் ? தமிழக சிற்பிகள் அல்லது அவர்களது வழி தோன்றல்கள் இல்லை அவர்களிடம் கலை பயின்றவர்கள் இதை வடித்து இருக்கலாம். ஏனெனில் சிலையில் தமிழ் / சோழ கலை தெரிய வில்லை , பெரும்பாலும் தென் கிழக்கு ஆசிய சாயலே தெரிகிறது.

images courtesy
http://www.sundial.thai-isan-lao.com/phanom_rung.html


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஆடல் வல்லானின் ஆனந்த கூத்து

சோழ சிற்பியின் அபார திறமையை போற்றி ஆதியும் அந்தமும் இல்லா அருள் பெரும் ஜோதி ரூபமான அவனின் ஆடல் உருவம் இந்த சட்டங்களுக்குள் வந்து ஆடுவது போலவே உள்ளது …..ஆடல் வல்லானின் ஆனந்த கூத்து …. தஞ்சை பெரிய கோவில் சிற்பம்.. பல கோணங்கள்…

 

சுயன்று ஆடும் அவனின் சுயர்சியை காட்ட கழுத்தில் இருக்கும் பாம்பு நழுவி கையில் தொங்கிக்கொண்டு இருப்பதை பாருங்கள் ..அந்த பாம்பின் சுயல்களில் தான் என்ன ஒரு உயிரோட்டம் ….இடையில் இருக்கும் உடுப்பும் அது போலவே பறந்து அவன் சுயன்று சுயன்று ஆடுவதை வெளி கொணர்கின்றன … அந்த .உடைகளில் தான் என்ன அழகிய வண்ணங்கள்.. ஒரு காலில் நின்று ஆடும் போதும் என்ன ஒரு வலிமை என்ன ஒரு ஒரு நளினம் ..சிற்பியின் வேலைப்பாடு ஒவ்வொரு அங்க அசைவையும் காட்டும் விதத்தில் உள்ளது

 

பிரமனுக்கு இரவாகும்பொழுது இயற்கை சலிக்காது. சிவபெருமான் அருளினால் ஒழிய இயக்கம் இல்லை. அவன் கழிப்பேருவகை கொண்டு ஆடும்போது சடப் பொருள்கள் மூலம் துயில் நீங்கி எழும் ஒலி அலைகளை வாரி இறைக்கிறான். அசையாத பொருள்களும் அசைந்து அவனை சுற்றி ஒளிக்கற்றைகளை பரப்புகின்றன. ஆடிக்கொண்டே அவன் பல்வேறு தொழில்களை நடத்துகிறான். முடிவு காலம் நெருங்கியதும் எல்லாவற்றையும், உருவங்களையும் நாமங்களையும் – தீயால் சுட்டெரித்து, அவைகட்கு ஓய்வு கொடுக்கிறான். இது கவிதை. இம்மி குறைவின்றி விஞ்ஞானமும் கூட.

– ஆனந்த குமாரசுவாமி.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

எங்கும் சாந்தி நிலவ வேண்டும்

ஈசனின் பல தாண்டவ கோலங்கள் உண்டு – பொதுவாக அழிவை கொண்டே இத்தண்டவம் என்ற கருத்து உலாவி வருகிறது – ஆனால் அது தவறு …ஆடல் வல்லானின் ஆனந்த கூத்தே அது. எந்த ஒரு ஆரம்பதிர்க்கும் ஒரு முடிவு வேண்டும் – அம்முற்றுப்புள்ளியே அடுத்த ஆரம்பத்தின் அறிகுறி

ஓர் அரிய எல்லோரா சிற்பம்…. சிதைந்த நிலையிலும் சிற்பத்தினுள் இருக்கும் உணர்வு இன்னும் நமக்கு தெரிகிறது – கலை அழகும் தெய்வீகமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன ….இங்கே மானிட அறிவும் கலைவண்ணமும் ஒரு உன்னத நிலையை அடைகின்றன… நாம் உடலை வளைத்து உழைக்கும் போது முகத்தில் வருவது சலிப்பு – ஆனால் இந்த சிலையில் தெரிவதோ ஒரு பரவச நிலை. அதை உணர்த்த ….தன்னை சுற்றிலும் இருக்கும் அழிவையும் தாண்டி வையகத்தில் என்றும் ஆனந்தம் நிலவுவதை உணர்த்தும் வண்ணம் இருக்கும் இந்த சிலை கண்டு கண்கள் கண்ணீர் வடிகின்றன ..


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நாதர் முடி மேல் இருக்கும் நல்லபாம்பே

நாதர் முடி மேல் இருக்கும் நல்லபாம்பே ….எளிபண்டா நடராஜர். .. ஆனால் இந்த பாம்பு இப்போது தான் தனது இடத்திற்கு போகிறது – என்ன அழகு -நெளிந்து வளைந்து தனது உடலை நிஜ பாம்பு எப்படி காட்டில் ஒரு மர கிலையில் இருந்து இன்னொரு கிலைக்கு தொங்கி தாவுமோ அதே போல … ஆனால் கல்லில்..( அருகில் நான்முகன் தாமரை ஆசனத்தில்)

 

 

ஆடும் அரசனின் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம்.. பல கைகளுடன் அவன் அடுவது …ஒரே கையின் மிக வேகமான சுயற்சி போல உள்ளது.. சிதைந்த நிலையிலும் அந்த நடனம்….தோள்களின் அமைப்பு…சிதைந்த அவன் முகத்தில் தான் என்ன ஒரு சாந்தம்…ஒரு தேஜஸ்

 

என்ன அபாரமான வேலைப்பாடு, சரி இவை எப்படி சிதைந்தன, குறி பார்த்து சுடும் பயிற்சிக்காக யாராவது இந்த அருமையான் சிற்பத்தை தேர்ந்தெடுப்பார்களா, ஆனால் போர்த்துகீசியர் தேர்ந்தெடுத்தார்களே, சிதைத்துவிட்ட மாபாவிகள்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment