சிலைத் திருட்டு – பாகம் ஒன்பது. டோலேடோ விநாயகர்

இந்த சிலைத் திருட்டு வழக்கு குறித்து இன்னும் பல முக்கிய தகவல் / துப்புகளைத் தர இருக்கிறோம் என்று சொன்னோம் அல்லவா. இதோ …

மீண்டும் ஒரு முறை காவல் துறையின் படங்களை பாருங்கள்.

இரண்டு சிலைகளுக்கு பச்சை பார்டர் கொடுத்துள்ளோம். அவற்றில் இன்று நாம் காணப்போவது – ஸ்ரிபுரந்தன் யானைமுகன்.

இந்த திருட்டு பற்றி தகவல் வெளியானது முதல் இந்த திருட்டு சிலைகளை பற்பல அருங்காட்சியங்கள் வாங்கி இருக்கலாம் என்று தெரிந்தது – அதனால் 2005 பின்னர் உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியங்களின் சேகரிப்பு குறிப்புகள் ஆராய்ந்து வந்துள்ளோம். அப்படி ஒரு தேடலில் சிக்கியகுறிப்பு தான் அமெரிக்க டோலேடோ அருங்காட்சியம் 2006 வாங்கிய விநாயகர்.

மேலும் தேடிய பொது இந்த அருங்காட்சியகம் கபூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது. அவர்களது 2007 வருடாந்திர அறிக்கை மூலம் அந்த தொடர்புகள் என்ன என்ன என்பதை இந்த பதிவின் முடிவில் இணைக்கிறோம். 2006 அறிக்கை இணையத்தில் கிடைக்கவில்லை.

ஆனால் இந்த விநாயகர் சிலையில் உள்ள தடயங்கள் கொண்டு இது ஸ்ரிபுரந்தன் கோயிலில் திருடப்பட்ட சிலை என்று எளிதில் நிரூபிக்கலாம்.

யானைமுகனின் தும்பிக்கையில் தான் முக்கிய குறிப்பு உள்ளது. அதில் தழும்புகளை இருப்பது தெரிகிறதா? . ( இன்னும் நல்ல படங்கள் அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம்)


நண்பர் ஒருவர் உதவியுடன் ( நமக்கென்றே அவர் டோலேடோ அருங்காட்சியகம் சென்று படங்களை எடுத்து கொடுத்தார்) – அதிலும் அதே தழும்பு இருப்பதை காணலாம்.

கைகள், சிலை இருக்கும் பீடம், இடுப்பு கோமணம் என்று எல்லாம் அச்சு அசல் அதே…



waist now

இவற்றைக் கொண்டு இந்த சிலையையும் நமது அதிகாரிகள் மீட்டு வருவார்கள் என்று நம்புவோம்.

குறிப்பு:

Annual report 2007 of the Toledo Museum ( extract):

Burmese, Buddhist Votive Plaque, 12th–13th century, terra cotta,
Gift of Subhash Kapoor, 2007.113
Burmese, Buddhist Votive Plaque, 12th–13th century, terra cotta,
Gift of Subhash Kapoor, 2007.114
Indian, Gupta Period, Seated Mother, 5th century, terra cotta, terra
cotta, Gift of Subhash Kapoor, 2007.107
Indian, Gupta Period, Standing Monkey, 6th century, terra cotta,
Gift of Subhash Kapoor, 2007.108
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.109
Indian (Chandraketugarh), Kubera Rattle, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.110
Indian, Gupta Period, Durga Killing Buffalo Demon, 5th century,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.111
Indian, Mauryan, Bird with Wheels, 1st century B.C.–1st century A.D.,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.112
Indian (Chandraketugarh), Kubera Rattle, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.115
Indian (Chandraketugarh), Fertility Goddess Sitting with Star, 1st
century B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor,
2007.116
Indian (Chandraketugarh), Square Plaque with Horse, 1st century
B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.117
Indian (Chandraketugarh), Fertility Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.118
Indian (Chandraketugarh), Man Riding Animal, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.119
Indian (Chandraketugarh), Torso of a Woman, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.120
Indian (Chandraketugarh), Monkey Figure, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.121
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.122
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.123
Indian (Chandraketugarh), Plaque with Two Figures, 1st century
B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.124
Indian (Chandraketugarh), Plaque with Figures, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.125
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.126
Indian (Chandraketugarh), Rattle of Kubera, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.127
Indian (Chandraketugarh), Plaque of Yakshi, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.128
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.129
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.130
Indian (Chandraketugarh), Plaque of Standing Figure, 1st century
B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.131
Indian (Chandraketugarh), Plaque of a Horse, 1st century B.C.-1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.132
Indian (Chandraketugarh), Plaque of Two Figures, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.133
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.134
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.135
Indian (Chandraketugarh), Circular Plaque Fertility Goddess, 1st
century B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor,
2007.136
Indian (Chandraketugarh), Figure on Crocodile, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.137
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.138
Indian (Chandraketugarh), Fragment of Yakshi Head, 1st century
B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.139
Indian (Chandraketugarh), Standing Yakshi, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.140
Indian (Chandraketugarh), Fragment of Yakshi Plaque, 1st century
B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.141
Indian (Chandraketugarh), Fragment of Yakshi and Bird, 1st century
B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.142
Indian (Uttar Pradesh), Ram, 1st –2nd century A.D., terra cotta, Gift
of Subhash Kapoor, 2007.143
Indian (Chandraketugarh), Mithuna Plaque, 1st century B.C.–1st
century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.144
Indian (Chandraketugarh), Plaque of Water Buffalo and Tiger, 1st
century B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor,
2007.145
Indian (Chandraketugarh), Fertility Goddess Figure, 1st century
B.C.–1st century A.D., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.146
Indian (Uttar Pradesh), Gupta Period, Head, 5th century, terra cotta,
Gift of Subhash Kapoor, 2007.147
Indian (Uttar Pradesh), Gupta Period, Head, 6th century, terra cotta,
Gift of Subhash Kapoor, 2007.148
Indian (Uttar Pradesh), Gupta Period, Head, 7th century, terra cotta,
Gift of Subhash Kapoor, 2007.149
Indian (Uttar Pradesh), Gupta Period, Head, 8th century, terra cotta,
Gift of Subhash Kapoor, 2007.150
Indian (Western India), Female Head, Gupta period, 5th century,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.158
Indian, Gupta Period, Head, 4th century, terra cotta, Gift of Subhash
Kapoor, 2007.159

seems he was also into Pakistani

Pakistani (Mehrgarh; Ancient India), Bull with Two Humps, 5000–
2000 B.C., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.151
Pakistani (Mehrgarh; Ancient India), Cow, 5000–2000 B.C., terra
cotta, Gift of Subhash Kapoor, 2007.152
Pakistani (Mehrgarh; Ancient India), Cow on Base, 5000–2000 B.C.,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.153
Pakistani (Mehrgarh; Ancient India), Two Cows, 5000–2000 B.C.,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.154
Pakistani, Cross Plaque, 5th–7th century, terra cotta, Gift of Subhash
Kapoor, 2007.155
Pakistani (Mehrgarh; Ancient India), Bowl, 4th–3rd century B.C.,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.156
Pakistani (Mehrgarh; Ancient India), Female Doll, 5th–3rd century
B.C., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.160
Pakistani (Mehrgarh; Ancient India), Female Doll, 6th–3rdcentury
B.C., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.161
Pakistani (Mohenjo-daro; Ancient India), Weight, 3000–1000 B.C.,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.162
Pakistani (Mehrgarh; Ancient India), Bull with Two Humps, 5000–
2000 B.C., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.151
Pakistani (Mehrgarh; Ancient India), Cow, 5000–2000 B.C., terra
cotta, Gift of Subhash Kapoor, 2007.152
Pakistani (Mehrgarh; Ancient India), Cow on Base, 5000–2000 B.C.,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.153
Pakistani (Mehrgarh; Ancient India), Two Cows, 5000–2000 B.C.,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.154
Pakistani, Cross Plaque, 5th–7th century, terra cotta, Gift of Subhash
Kapoor, 2007.155
Pakistani (Mehrgarh; Ancient India), Bowl, 4th–3rd century B.C.,
terra cotta, Gift of Subhash Kapoor, 2007.156
Pakistani (Mehrgarh; Ancient India), Female Doll, 5th–3rd century
B.C., terra cotta, Gift of Subhash Kapoor, 2007.160

Iranian

Iranian, Pitcher, 9th–10th century, terra cotta, Gift of Subhash
Kapoor, 2007.157

The Museum recognizes and thanks the
following organizations, businesses, and
individuals who made gifts during 2008
in support of art acquisitions, capital
projects, and special programs.
$100,000+ – Subhash Kapoor: gift of art

CUMULATIVE GIVING
The Toledo Museum of Art salutes the
following donors for their generosity and
continuing support during its second
century:
Key:
I. Founding Benefactors
II. $10 million and higher
III. $5 million to $9.999 million
IV. $1 million to $4.999 million
V. $500,000 to $999,999
VI. $250,000 to $499,999 – Mr. Subhash Kapoor
VII. $100,000 to $249,999


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிவப்புரம் ​சோமாஸ்கந்தர் – ​சொல்லப்படாதக் கதை

இந்தத் தலைப்​பு பலருக்கும் ஆச்சரியத்தைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. ஏ​னெனில்​ சிவப்புரத்தின் பிரசித்தி பெற்ற தலைப்பு சிவப்புரம் நடராஜர் – ஒரு வே​ளை தலைப்பைத் தவறாக இட்டிருக்கிறேனோ என்று தோன்றக்கூடும். இல்லை, இன்று நீங்கள் காணப்போவது அதேக் கோவிலின் மற்ற ​வெண்கலச்சிலைகள் பற்றிய கதை – யாருக்கும் சொல்லப்படாதக் கதை. ​தொன்மையான பொருட்களைத் திருப்பித் தருவது பற்றிய முக்கியத் தீர்ப்பின் இருண்ட பக்கங்கள் அவை.

புகழ் வாய்ந்த சிவப்புரம் நடராஜர் வழக்கைப் பற்றி கூகிள் மூலம் சுலபமாக அறியலாம். அதன் சாராம்சம் இ​தோ:

1951: சிவப்புரம் கோவிலின் புனரமைப்புப் பணிகளின்போது நடராஜருடன் கூட மேலும் 5 ​வெண்கலச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்திய டி​​​ரெஷர் ட்​ரோவ் ஆக்டின்படி (Indian Treasure Trove Act) அவை அக்கோவிலுக்குத் திருப்பியளிக்கப்பட்டன. (அதன் உரி​மை மாநில அரசிடம்)

“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”

தஞ்சாவூரின் மாவட்ட ஆட்சியாளர் அந்த ஆறு சிலைகளையும் சிவப்புரம் ஸ்ரீ சிவகுருநாதசுவாமி​ கோவிலில் ஒப்ப​டைத்தார் (G.O. Ms. No. 2987/Revenue Department dated 29-10-1953)”

1954-56: ​அந்தச் சிலைகளை சீர் செய்ய அ​வை உள்ளூர் ஸ்தபதியிடம் அளிக்கப்பட்டன. அங்​கே​போலிகள் உருவாக்கப்பட்டு, கண்​டெடுக்கப்பட்ட தொன்மையான சிலைகள் திருடப்பட்டன.

கோவிலின் தர்மகர்த்தாக்கள் அந்தச் சிலைகளைப் பழுது பார்க்க விரும்பி அந்தப் பணியை கும்பகோணத்தைச் சேர்ந்த ராமசாமி ஸ்தபதியிடம் 1954 ஜூன் மாதத்தில் ஒப்புவித்தனர். 1956ஆம் ஆண்டு குத்தாலத்தைச் சேர்ந்த திலகர் மற்றும் அவனது சகோதரன் தாஸ் இருவரும் தொன்மை வாய்ந்த நடராஜர் மற்றும் 5 சிலைக​ளையும் தங்கள் வசம் தந்துவிடும்படியும் அவற்றிற்குப் பதிலாக ​போலியான சிலைகளை​ செய்துவிடும்படியும் தூண்டினர். திலகர் அந்த உண்மையான நடராஜர் சி​லை​யை தாஸின் ஏற்பாட்டின்படி பம்பாயைச் சேர்ந்த லான்ஸ் ​டேன் எனும் க​லைப்​பொருள் ​சேகரிப்பானிடம் அளித்தான். அவர் அச்சிலையை 10 ஆண்டுகள் தன்னிடம் வைத்திருந்தார்.

1963: ஒரு முக்கிய குறிப்பு மற்றும் நிகழ்ச்சி – அதைப் பற்றி பிறகு காண்போம்.

1965: பிரிட்டிஷ் மியூசியத்தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் ​கோவிலுக்கு வருகைத் தருகிறார். அந்தச் சி​லைப் ​போலியானது என்று குற்றஞ்சாட்டி தனது புத்தகத்திலும் பதிவு செய்கிறார். மேலும் அசலான சி​லை பம்பா​யைச்​ சேர்ந்த வணிகரிடம் இருந்த​தையும்​ வெளிப்படுத்துகிறார்.

பிரிட்டிஷ் மியூசியத்​தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் தனது ​தென்னிந்திய வெண்கலச் சிலைகள் எனும் புத்தகத்தில் சிவப்புரத்திலுள்ள நடராஜர் சி​லை​ ​போலியானது என்றும் அசல் சிலை ஒரு தனியார் க​லைப்​பொருள் ​சேகரிப்பானிடம் உள்ளது என்றும் கூறுகிறார். Tr.P.R. ஸ்ரீனிவாசன் (மியூசியத்தின் மேற்பார்வையாளர்) உட​னே மியூசியத்தின் இயக்குநருக்கும் தமிழக அரசிற்கும் எச்சரிக்​கை​ செய்தார். இதன்​பேரில் நடந்த விசாரணையின் விளைவாக நாச்சியார் ​கோவிலில் ஒரு வழக்கு பதிவு ​செய்யப்பட்டது.

P.S.Cr.No.109/69 U/S 406 IPC. குற்றப் புலனாய்வுத் து​றை தனது புலனாய்​வை மேற்கொண்டது.

1967: நடராஜர் சிலை போமன் ​பெஹ்ரம் எனும் பம்பாயைச் சேர்ந்த கலைப்​பொருள் சேகரிப்பாளரின் வசம் வந்தது. அவர் அதனை நியூயார்க்​கைச் ​சேர்ந்த க​லைப்​பொருள் வணிகர் பென் ஹெல்லருக்கு விற்றார்.

லான்ஸ் டேன் 10 ஆண்டுகள் சிலையைத் தன்னிடம் வைத்திருந்து பின் பம்பாயைச் சேர்ந்த​போமன் பெஹ்ரமிற்கு விற்றார். அவர் அதனை மெனு நரங்கிடம் விற்றார். பிறகு 1969இல் நியூயார்க்​கைச் சேர்ந்த பென் ஹெல்லர் 6 லட்சம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கி நார்டன் ​சைமன் ஃபவுண்​டேஷனுக்கு 9 லட்சம் அ​மெரிக்க டாலருக்கு விற்றார்.

1973: பென் ஹெல்லர் அந்தச் சிலையை நார்டன் ​சைமன் ஃபவுண்டேஷனுக்கு 9 லட்சம் அ​மெரிக்க டாலருக்கு விற்றார்.

1973: நியூயார்க்கில் உள்ள ​மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (MET) எனும் கலைப்பொருள் அருங்காட்சியகம், நார்டன் சைமன் ஃபவுண்டேஷனுடைய இந்தியக் க​லைப் ​பொருட்க​ளைக்​ கொண்டு ஒரு கண்காட்சி நடத்தத் திட்டமிட்டது. அதையொட்டிய விளம்பரத்தின் மூலமாக இந்திய அரசு அச்சி​லை அ​மெரிக்காவில் இருப்பது குறித்து அறிந்து ​கொண்டது. கடத்தப்பட்ட தொன்பொருளை இந்திய அரசு முதன்மு​றையாகக் கண்டுபிடித்தது. உடனே அந்த மியூசியத்திற்கு இந்திய அரசு ஆட்​சேபம்​தெரிவித்து ஒரு கடிதம் எழுதியது. மேலும், அ​மெரிக்காவின் மாநிலத்துறையின் உதவியுடன் அந்தக் கண்காட்சி​யைத் தடை செய்தது.

1973: ​மேலும் சீர் ​செய்ய நடராஜர் சிலை ​பிரிட்டிஷ் மியூசியத்திற்கு அனுப்பப்பட்டது.

1973: இந்திய அரசு அச்சிலையை திருப்பிக் கொடுக்கக் கோரி லாஸ் ஏஞ்சல்சிலும் (நார்டன் சைமன் ஃபவுண்டேஷனின் இருப்பிடம்) நியூயார்க்கிலும் (பென் ஹெல்லரின் இருப்பிடம்) வழக்குப் பதிவு செய்தது. மேலும் இந்திய அரசு இங்கிலாந்து அரசிற்கு அரசியல்​ நெருக்கடி தரவும், அச்சிலையை ஸ்காட்லேண்டு யார்டு தன் வசம் கொணர்ந்தது. நார்டன் சைமன் ஃபவுண்டேஷன் இந்தியாவிற்கு நடராஜர் சிலையின் மீது எந்த உரி​மையும் இல்​லை​யெனக் கூறிஅத​னைத் திருப்பித் தர மறுத்தது.

1975: நீதிமன்றத்தின் ​வெளியே ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஏதுவாக ஒரு வருடகாலத்திற்கு இந்தியா தானாக​வே இந்த வழக்கி​னை நிறுத்தி ​வைத்தது.

1976: நார்டன் சைமன் ஃபவுண்டேஷனும் இந்திய அரசாங்கமும் நீதிமன்றத்திற்கு ​வெளியே மத்யஸ்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு தீர்மானத்திற்கு வந்தன.

இந்தியாவில் ​வெளியான ​செய்திகள் இங்​கே தடிமனான எழுத்துகளில் உள்ளன:

லான்ஸ் ​டேன், திலகர், தாஸ், ராமசாமி ஸ்தபதி ஆகி​யோ​ரை ஒரு பிரத்​யேகக் குழு ​கைது ​செய்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்​பொழு​தைய DIG திரு. Tr.S. கிருஷ்ணராஜ் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் ​சென்று சி​லை கடத்தலுக்கான ஆதாரங்க​ளை ​சேகரித்தார். ஸ்காட்லாண்டு யார்டு நடராஜர் சி​லை​யை நார்டன் ​சைமன்ஃபவுண்டேஷன் லண்டனில் உள்ள திருமதி. ஆனா ப்லெளடனுக்கு பழுது பார்க்க அனுப்பிய​தை அறிந்து அத​னைக் ​கைப்பற்றியது.

இந்திய அரசாங்கம் நடராஜர் சி​லை​யைத் திரும்பப் ​பெற நார்டன்​ ​சைமன் ஃபவுண்டேஷனுக்கு எதிராக இங்கிலாந்து, நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் வழக்குப் பதிவு ​செய்தது. ​சென்​னை​யைச் ​சேர்ந்த திரு. KK ராஜ​சேகரன் நாயர் IPS, IGP (Crime), சி​லை​யைத் திரும்பப் ​பெற​ வெளியுறவு அ​மைச்சகத்​திடம் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதினார். புது தில்லியில் உள்ள​ இந்தியத் தொல்​பொருள் ஆய்வகத்தின் ​டைரக்டர் ​ஜெனரல் டாக்டர் MS நாகராஜ ராவ் வாஷிங்கடனில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து அச்சி​லை​யைப் ​பெற்றுக்​கொண்டார். தற்​போது அந்த நடராஜர் சி​லை ​சென்​னை, மயிலாப்பூர் கபாலீசுவரர்​ ​கோவிலின் பாதுகாப்பான ​பெட்டகத்தில் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்​டோர் அ​னைவரும் ​கைது ​செய்யப்பட்டு தண்ட​னையளிக்கப்பட்டது.

மற்ற சி​லைக​ளைப் பற்றி தகவல் ஏதும் இல்​லை.

இங்கு தான் சுவாரசியமான விஷய​மே உள்ளது. மற்ற 5 ​வெண்கலச் சி​லைகள் என்னவாயின?

“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”

​மே​லே குறிப்பிட்டுள்ள 1963ஆம் ஆண்டு நி​னைவிலுள்ளதா? இந்த வருடத்தில்தான் திரு. PR ஸ்ரீநிவாசன் அவர்கள் தனது​ “தென்னிந்திய ​வெண்கலச் சி​லைகள்” எனும் மிகச் சிறந்த புத்தகத்​தை ​ வெளியிட்டார். (Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994)

அதிர்ஷ்டவசமாக அவர் நடராஜர் சி​லை​யை மட்டுமில்லாமல் ​சோமாஸ்கந்தர் சிலையையும் புகைப்படம் எடுத்திருந்தார். ​மேலும் அந்தச் சி​லைகள் சிவப்புரம் ​கோவிலில் வழிபடப்படுப​வை என்று இடத்​தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இ​தோ இங்குள்ள படத்​தைப் பாருங்கள். நார்டன் ​சைமன் மியூசியத்தின் ஒரு காட்சிப்பொருள் – இது 20 டிசம்பர் 2008 ​தேதியிட்ட flickr படமாகும்.

இக்க​லைப் ப​டைப்பின் பிறப்பிடத்​தை கீழுள்ள தகடு அறிவிப்பது மிக சுவாரசியமானது.

ஒரு சாதாரண மனிதனுக்குக்கூட இந்த ஒப்பீடு எளிதில் விளங்கும்.

​மேலும் சற்று கூகிளாரின் உதவி​யைப் ​பெற்​றோமானால் அ​தே அருங்காட்சியகத்தில் 1972 மற்றும் 1973 ஆண்டுகளில் ​சேர்க்கப்பட்ட க​லைப்​பொருட்கள் எ​வையெவை என்பது நம் கவனத்​தை ஈர்க்கக்கூடிய​வை.

அதே சோமாஸ்கந்தர் ஆனால் பெயர் பலகை இல்லை.

மேலும் சில திருமேனிகள் அங்கே உள்ளன

திருஞானசம்பந்தர்

பார்வதி

பிள்ளையார்

“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”

இந்த வழக்​கைப் பற்றியத் தகவல்கள் மாநிலத்தின் வலைத்தளத்தில் இவ்வாறு முடிகிறது – “குற்றஞ்சாட்டப்பட்​டோர் அ​னைவரும் ​கைது ​செய்யப்பட்டு தண்ட​னையளிக்கப்பட்டது. மற்ற சி​லைக​ளைப் பற்றி தகவல் ஏதும் இல்​லை.”

நீதிமன்றத்தின் ​வெளி​யே ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்த​னைகள் என்ன? அதிலும் இவ்வாறு கூறிய ஒருவருடன்:

நியூயார்க் ​டைம்ஸ் பத்திரிக்​கையில் நடராஜர் சி​லை குறித்து ​சைமன் கூறியதாவது: “ஆமாம்! அது கடத்தப்பட்டதுதான். கடந்த 2 ஆண்டுகளில் ஆசிய க​லைப்​பொருட்க​ளைப் ​பெற 15 முதல் 16 மில்லியன் டாலர் வ​ரை ​செலவழித்திருக்கி​றேன். அவற்றில் அ​நேகப் ​பொருட்கள் கடத்தப்பட்டவையே.”

தனது து​ணை​யையும், மக​னையும், பக்த​னையும் தனி​யே விட்டுச் ​சென்றா​ரோ நடராஜர்!!!

வாசகர்களின் கவன ஈர்ப்புக்கு கீழ்க்கண்டதைக் கொண்டு வருகிறோம். பொதுவாகவே இந்த தொல்சிற்பங்கள், அதை வாங்கி ஏலம் போடும் உலகளாவிய நிறுவனங்கள், அவைகளை பொருட்காட்சியாக்கும் மியூசியங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் எச்சரிக்கையாகக் கையாளவேண்டும். தவறான போக்கு எனத் தெரியும்போது இவர்கள் மீது நாம் எளிதாக குற்றம் சாட்டிவிடலாம். அதேசமயத்தில் இந்த விஷயத்தில் உள்ள உணர்ச்சிமயமான விஷயங்களைக் கூட கவனிக்கவேண்டும். ஆகையினால் இந்தப் பதிவு மிகக் கவனமாகக் கவனிக்கப்படவேண்டும். இங்கு நாம் யாரையும் குற்றம் குறை சொல்ல வரவில்லை. அது நம் நோக்கமும் அல்ல. அதே சமயத்தில் உண்மை என்பது எங்கு மறைத்துவைக்கப்பட்டாலும் அது தெரியப்படும்போது, அதனை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். மேலே சொன்னபடி இந்த சிற்பங்கள் மிகத் தொன்மையானவைதான். மிகுந்த செல்வச் சிறப்பு பெற்றது கூட. அதே சமயத்தில் தெய்வத்தின் மறு உருவாகப் பார்க்கப்பட்டு வணங்கப்பட்டது கூட என்பதையும் நினைவில் நிறுத்திப் பார்க்கவேண்டும். தற்சமயம் நூற்றுக்கணக்கில் இந்த தொல் சிற்பங்கள் நமது ஊரிலேயே மியூசியத்து கோடவுனில் கிடத்தப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அவைகளை உரிய இடத்தில் ஒப்படைத்தால் அவைகளின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படலாம் என்ற அச்சம் இருக்கிறது என்பது உண்மையும் கூட. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைத்து இதற்கு சரியான தீர்வு காண்பதே வழியாகும் என்பதே எம் கூற்று.

Ref:

https://plone.unige.ch/art-adr/cases-affaires/nataraja-idol-2013-india-and-norton-simon-foundation-1/case-note-2013-nataraja-idol-2013-india-and-norton-simon-foundation/view

http://www.forbes.com/2004/05/25/cx_0525conn.html|Forbes

http://www.tneow.gov.in/IDOL/judgement.html


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சம்பா ( வியட்நாம்) சிற்பங்கள் – பாகம் 1

சம்பா அல்லது சாம் என்றால் நம்முள் பலருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்நாளைய வியட்நாமில் ஏழாம் நூற்றாண்டில் ஒரு அற்புத நாகரீகம் தழைத்தது. இவர்கள் வியத்நாமின் நடுப்பகுதியில் தற்போது தனாங் என்று விளங்கும் நகரின் அருகில் ஆரம்பித்து முதலில் பெரும்பாலும் சைவ சமயத்தை பின்பற்றினர். இந்திரபுரம் , அமராவதி , பாண்டுரங்க , விஜய என்ற நகரங்கள் அங்கே இருந்தன.

சாம் ஹிந்து கலைச்சின்னங்கள் மிகவும் அரியவகை கலை பொக்கிஷங்கள். பெரும்பாலும் வியட்நாமின் வெளியில் இவற்றை பார்க்க இயலாது. அங்கே கூட பெரும்பாலான சிற்பங்கள் மற்றும் ஆலயங்கள் அங்கே நடந்த போர்களில் மிகவும் சிதைந்து விட்டன. தற்போது தனாங் மற்றும் சைகோன் அருங்காட்சியங்கங்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் தனாங் அருகே உள்ள சில செங்கல் கட்டுமான கோயில்களே எஞ்சியவை. அங்கே பல லிங்க ரூபங்கள், முகலிங்கங்கள், கருடன், சயன பெருமாள் உருவங்கள் மற்றும் விநாயகர் உருவங்கள் உள்ளன.

இன்று நாம் பார்க்கவிருக்கும் சிற்பம் தொன்மையான சாம் விநாயகர் உருவம் – 8th C CE.

சாம் கலை அட்டவணை இவ்வாறாக பிரிக்கப்படுகிறது. ( அவை கண்டெடுக்கப்பட்ட இடங்களின் பெயர்களை ஒட்டி )

மை சொன் E1 (7th – 8th நூற்றாண்டு CE)
டாங் டுஒங் (9th – 10th நூற்றாண்டு CE)
மை சொன் A1 (10th நூற்றாண்டு CE)
க்ஹுஒங் மை (10th நூற்றாண்டு CE முதல் பாகம் )
டிரா கியு ( 10th நூற்றாண்டு CE இரண்டாம் பாகம் )
சான் லோ ( 10th நூற்றாண்டு இறுதி முதல் 11th நூற்றாண்டு CE நடு பாதி )
தாப் மாம் (11th முதல் 14th நூற்றாண்டு CE)

நாம் பார்க்கும் விநாயகர் சிலை ஒருவகை மணற் கற்பாறையில் ( sandstone) செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் தொன்மையான இந்த வடிவத்திலும் விநாயகர் வழிபாட்டின் கோட்பாடுகள் கடைபிடிப்பது வியக்க வைக்கிறது. மிகவும் சிதைந்த நிலையில் இருக்கும் இந்த சிலையில் ஒரே ஒரு கை மட்டுமே எஞ்சி இருந்தாலும் அது பிடிதிருக்க்ம் வஸ்து நம்மை திகைக்க வைக்கிறது.

அப்படி என்ன அவர் கையில் ? ஆமாம், ஒரு உரித்த சோழ கதிர் ஒன்றை கையில் பிடித்துள்ளார். அதன் வெளித் தோல் உரித்து இருக்கும் படி காட்சி இருப்பது மிக அருமை.

தொழில் ஒரு நாகம் பூணூலாக – நாக யக்நோபவீதமாக இருக்கிறது.

கையில் அணிகலன்கள் மற்றும் தலையில் கிரீடம் தெரிகிறது. அவரது கால் விரல்கள் மற்றும் இடுப்பில் வெட்டி மிக அழகு. கண்களை தனியாக பொருத்துவார்கள் போல உள்ளது. ஒருவேளை விலை உயர்ந்த மாணிக்க கற்களை வைப்பார்களோ?

நண்பர் ஓவியர் திரு ஸ்ரீநிவாஸ் க்ரோமா அகாடமி , உதவியுடன் இந்த சிலையின் முழு வடிவத்தையும் காண ஒரு முயற்சி.


இந்த சாம் சிற்பம் அதே சம காலத்து தெனிந்திய விநாயகர் சிலைகளில் இருந்து மிகவும் வேறுபடுகிறது.

இதை பற்றி இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். ஆர்வம் இருப்பவர்களுக்கு ஒரு தகவல். தென்னாட்டில் மிக தொன்மையான விநாயகர் வடிவங்களில் இந்த வீராபுரம் (குர்நூல் – ஆந்திரா ) களிமண் சிலையும் ஒன்று.
( நன்றி – Ganesh: studies of an Asian god By Robert L. Brown) – காலம் சுமார் 2nd C BCE !!

அடுத்து நாம் பார்க்க இருப்பது ஒரு அற்புத சிற்பம்

படங்கள் : திரு வசந்தா பெர்னாண்டோ
Vietnam History Museum Address:
Nguyen Binh Khiem Street, District 1, Ho Chi Minh City.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு குடைவரை – அதில் சிதைந்த ஓவியமும் உடையார் ராஜ ராஜ சோழர் பிறந்த நட்சத்திரமும் – திரு நந்திக்கரை

நண்பர் திரு. ஷங்கர் பல மாதங்களுக்கு முன் தான் குடைவரையில் பார்த்த ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் பெரிய அளவு படத்தை நேர்த்தியாக எடுத்து அனுப்பி வைத்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அதை எடுத்துப் பார்க்க நேரம் அமையவே இல்லை. ஆனால் அதற்கு இப்படி ஒரு வேளை வரும் என்று நான் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.

நண்பர் திரு. ராமன் அவர்கள் பழைய புத்தகக் கடை ஒன்றில் பழைய புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்த்தால் எனக்கு உதவும் போல தெரிகிறது என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் அதில் ஒன்றிரண்டை வருடி (ஸ்கான்) செய்தும் அனுப்பிவைத்தார். அதிலே ஒன்று அழகிய செப்புத் திருமேனி, மற்றொன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ஓவியப் படம், இரண்டுமே சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை!! இவற்றைப் பார்த்தவுடன் நிச்சயம் நமக்கு தேவை என்று அவரிடம் தெரிவித்தேன்.

சென்னை சென்ற சமயம் நானும், நண்பர் அரவிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வந்த பொழுது, சில படங்களின் பின்புறத்தில் திரு நந்திக்கரை என்று பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு சமீபத்தில் அவர் சென்ற பொழுது அவர் எடுத்து வந்த அத்தனைப் படங்களையும் கேட்டேன். அவரும் உடனே அனுப்பிவைத்தார். ( திரு நந்திக்கரை – கன்னியாக்குமரி மாவட்டம் – திருவட்டாரில் இருந்த சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு – நாகர்கோயிலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் )

குடைவரையில் தற்போதைய உட்புறத் தோற்றம். (முதல் முறை அவர் படம் அனுப்பிய பொழுது பார்க்க முடியாததன் காரணம் இனி உங்களுக்கு புரியும்)

குடைவரையின் காலம் 8th CE ( அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பைக் கொண்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படுகிறது )

கைவசம் இருந்தும் நான் முதல் முறை காணத்தவறிய சுவர் ஓவியம்

பழைய புத்தகக் கடையில் கிடைத்தப் படங்களை பார்த்தவுடன் திறந்தன என் விழிகள்

அழகான விநாயகர் ஓவியம், மேலே ஒரு அருமையான கணம் ( பார்த்தால் காஞ்சி கைலாசநாதர் ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது ) இருந்தும் சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் நாம் இழந்திருப்பது …

மற்றுமொரு ஓவியம் இருந்தது, அதற்கான பொருத்தத்தையும் தேட கிடைத்தது…

இப்பொழுது படங்களை பாருங்கள்..

என்ன அழகான அருமையான ஓவியங்கள். இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!

மேலும் இரண்டு ஓவியங்கள் படங்களில் உள்ளன. அனால் தற்போது குடைவரையில் காணக் கிடைக்கவில்லை.

இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி என்னவென்று தெரியவில்லை.

இந்த குடைவரையில் மேலும் ஒரு சரித்திர நிகழ்வின் முக்கிய தடயமும் உள்ளது.

உடையார் ஸ்ரீ இராஜ ராஜ சோழர் பிறந்தது ஐப்பசி சதயமா அல்லது சித்திரை சதயமா என்ற விவாதம் சில காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், தங்கள் திருவாரூர் நூலில் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டைக் கொண்டு இதனை தெளிவு படுத்தி உள்ளார். அது திரு இராஜேந்திர சோழரின் கல்வெட்டு, அதில்

” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யன் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”

10034
10031

என்று வருகிறது.

இந்த திரு நந்திக்கரை குடவரையில் உள்ள திரு ராஜ ராஜரின் கல்வெட்டு


185. On the east wall of the rock-cut iva shrine. Belongs to
the eighteenth year of Rajaraja I and records grant to the temple
for the celebration of a festival in Aippasi, Satabhisha, the birth-
day of the king. See Trav. Arch. Ser. t Vol. I, pp. 291-2.”

தான் பிறந்தது ஐப்பசி தான் என்று தெளிவு பட எடுத்துக் கூறுகிறது.

இந்த ஓவியத்தின் புகைப்படங்களுக்கு உரியவர் யார்? அவை எப்படி பழைய புத்தகக் கடைக்கு சென்றன என்பது தெரியவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்ளவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

குடுமியான்மலை – ஒரு சிற்ப அற்புதம் – திரு மோகன்தாஸ் இளங்கோவன்

குடுமியான்மலை – ஒரு சிற்ப அற்புதம், அத்தை பற்றி ஒரு கட்டுரை எழுத சரியான ஒருவரை வெகுநாளாய் தேடி வந்தேன். அண்மையில் நண்பர் திரு மோகன்தாஸ் இளங்கோவன் அவர்களின் தளத்தில் பார்த்தேன்.

http://blog.mohandoss.com/2008/01/blog-post_23.html?showComment=1201100100000

உடனே அவருடன் தொடர்பு கொண்டு அந்த பதிவை இங்கே இடலாமா என்று கேட்டேன். தாராளமாக என்று கூறினார். பிறகே அவர் ஒரு ஓவியர் என்பதும் தெரிந்தது

3256
3259

அவரை பற்றி : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mohandoss
படித்து பார்த்து மகிழுங்கள் :


சித்தன்னவாசலைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததற்கும் காதலர் தின ‘என்ன விலை அழகே’ பாடலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன், காதல் அதுவும் முதற்காதல் தந்த மிகச்சில நினைவுப்பொருட்களின் ஒன்று காதலர் தினம் படப்பாடல்களின் பொழுது இளகும் நினைவுகள்.

அப்பாவிடம் சித்தன்னவாசலுக்குப் போகவேண்டும் காருக்கு சொல்லிவிடுங்கள் என்றதும் காருக்குச் சொன்னாரா இல்லையோ அங்க வர்ற பொண்ணுங்களை ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்று சொன்னதுதான் முதலில். அப்பா சொல்லித்தான் தெரியவந்தது கல்லணை, முக்கொம்பு மலைக்கோட்டை எல்லாம் விடுத்து இப்ப சித்தன்னவாசல் தான் காதலர் ஸ்பாட் ஆகயிருக்கிறது, அதைப்பற்றிய வரிகள் தேவையில்லாதவை. சித்தன்னவாசலுக்குச் சென்றிருந்த பொழுது அங்கிருந்த தொல்பொருள்துறை ஊழியர் சொல்லித்தான் குடுமியான்மலை பற்றித் தெரிந்துகொண்டோம். நானும் ஓட்டுநர் நண்பரும் குடுமியான்மலைக்குச் சென்று பார்த்த பின் பார்க்காமல் வந்திருந்தால் மிகச்சிறந்த கோயில் ஒன்றை பார்க்காமல் விட்டிருப்போம் என்றுதான் நினைத்தேன்.(சித்தன்னவாசல் பற்றி இன்னொரு தரம் எழுதுறேன்.)

அங்கிருந்த அர்ச்சகர்களுக்கு சரியான விளக்கங்கள் தெரியாததால் தவறுதலாய் நிறைய விவரங்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்க முடியாது என்று குறைந்த விவரம் கொண்டவர்களாலேயே உணர முடியும். அந்தக் கோவில் இரண்டாயிரம் வருடம் புராதனம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் மிக அற்புதமான கலைத்தன்மை உடைய “finishing” கொண்ட சிலைகளைப் பற்றியும் சரியான விவரங்களை அவர்கள் சொல்லவில்லை. அதைப்போலவே அங்கேயே இருந்த தொல்பொருள்துறை ஊழியரை அறிமுகம் செய்துவைக்காதது மட்டுமல்லாமல் அவர் அங்கேயில்லை என்றும் சொன்னார்கள். நாங்கள் பிறகு வெளியில் சிலரிடம் கேட்டு அவரை அறிமுகம் செய்து கொண்டு பழங்கால ‘சங்கீத கல்வெட்டு’ ‘குடைவரைக் கோயில்’ போன்றவற்றைப் பார்த்தோம்.

அர்ச்சகர்களின் வேலை அது இல்லை தான் மறுக்கவில்லை. ஆனால் சாதாரண விவரங்களைக் கூட அவர்கள் சொல்லவில்லை, ஆனாலும் அதனாலுமே கூட இந்தக் கோவிலைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள அதிகம் விரும்பினேன். அதற்காகவாவது அவர்களுக்கு என் நன்றிகள், இன்னொருமுறை விவரங்களுடன் சென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன். அதற்கு காரணம் அங்கேயிருக்கும் சிற்பங்கள், கங்கை கொண்ட சோழபுரம், பெரிய கோவில் ஒருமுறைக்கு மேல் பார்த்தவன் என்ற முறையில் குடுமியான் மலைச் சிற்பங்கள் அற்புதமான “Finishing” கொண்டவை. ஆனால் காலத்தால் பின் தங்கியவை இவை என்ற விஷயம் இருக்கிறது.

ஆனால் குடுமியான்மலை எத்தனை தூரம் மக்களைச் சென்றடைந்தது என்பது தெரியவில்லை, ஆனால் இங்கிருக்கும் கோவில் திருச்சியில் நல்ல ஃபேமஸ் என்று அப்பா சொல்லி தெரிந்துகொண்டேன். கோவிலைப் பற்றி தேடிய பொழுது “புதுக்கோட்டை மாவட்ட வரலாறு – டாக்டர் ஜெ. ராஜாமுகமது”வில் கொஞ்சம் விவரம் கிடைத்தது கொடுத்திருக்கிறேன். புகைப்படங்கள் என்னுடையவை.

குடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு குடுமியான் மலை என்று அழைக்கப்படுகிறது. சிகா என்பது குடுமி என்னும் பொருளில் குடுமியுள்ள இறைவன் என்று வரும். இங்குள்ள இறைவனுக்கு குடுமி வந்தது பற்றி இக்கோயில் ஸ்தலபுராணம் கூறும் கதை சுவையானதாகும் முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது ஆசைநாயகிக்கு கொடுத்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது ஆசைநாயகியின் தலையிலிருந்த பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க அதில் தலைமுடி ஒட்டியிருந்ததைக் கண்ட மன்னர் அதன் காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் சமயோதிதமாக கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவருக்கு குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார். வியப்பு மேலிட்ட மன்னர் இறைவனின் குடுமியைக் காட்டும்படி கேட்க, தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இக்கதையின் மூலம் அறிகிறோம். இக்கோயிலில் குடுகொண்டுள்ள லிங்கத்திற்கு குடுமியிருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் குடுமி – முடிச்சு போன்ற பகுதி இருப்பதை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.

கி.பி 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும் 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும் கடவுளின் பெயர் குடுமியார் என்றும் 17 – 18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது. திருநலக்குன்றம் என்றால் புனிதமான மங்களமான மலை என்றும் பொருள். நல என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘நள’ என சமஸ்கிருத வடிவம் கொடுக்கப்பட்டு இக்கோயிலை புராண கதாநாயகன் நளனுடன் தொடர்புபடித்திக் கூறும் ஒரு கர்ண பரம்பரைக் கதையும் உண்டு. 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் மூலவரை “தென்கோநாட்டு சிகாநல்லூர் குடுமியார்” எனக் குறிப்பிடுகின்றன. சில கல்வெட்டுக்களில் குடுமிநாதர் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சிகாநல்லூர் என்பது “சிகரநல்லூர்” என்றே இருந்திருக்க வேண்டும். சிகரம் என்பது சிகரமுயர்ந்த மலை எனவாகும். நெடிதுயர்ந்த குன்று – மலை – ஒன்று இங்குள்ளதை நாம் இன்றும் காணமுடியும். ஆகவே குடுமியார் என்பதற்கு சிகரமுயர்ந்த நெடிய எனப் பொருள் கொள்ளலாம். குடுமி என்றால் தலைமுடிக் கற்றை என்று மட்டும் பொருளல்ல மலையுச்சி, உயர்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும். உதாரணத்திற்கு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி கண்ணப்ப நாயனார் காளஹஸ்தியில் வழிபட்ட இறைவனின் பெயர் குடுமித்தேவர்.

குடுமியார் என்னும் தமிழ்ச்சொல் காலப்போக்கில் சிகாநாதசாமி என சமஸ்கிருத சொல்லாக மருவிவிட்டது. அதற்கேற்ப கி.பி. 17 – 18ம் நூற்றாண்டில் மேலே சொன்ன புராணக்கதையும் எழுந்திருக்க வேண்டும். தற்போது இவ்வூர் பெயர் குடுமியான் மலை என்றே நின்று நிலவ இறைவன் பெயர் மட்டும் சிகாநாதா என வழங்கப்படுகிறது. இதே போன்றே மயிலாடுதுறை, மாயூரம் எனவும், குரங்காடுதுறை கபிஸ்தலம் எனவும், திருமறைக்காடு வேதாரண்யம் எனவும், சிற்றம்பலம் சிதம்பரம் எனவும் சமஸ்கிருத வடிவம் பெற்று மருவி வழங்குதல் காண்க.

அக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந்திருந்தன. குன்றின் மீது ஏறிச் செல்லும் போது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குன்றுதோரோடும் குமரன்கோயில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோயில் உள்ளது.

புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள மேலக்கோயில் என்னும் குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள கர்நாடக சங்கீதம் பற்றிய கல்வெட்டும் பல்லவ மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபகால ஆய்வுகளின்படி இவை மகேந்திரவர்ம பல்லவனுடன் தொடர்புடையவை அல்ல என்று தெரியவந்துள்ளது. சிகாநாதசாமியின் கருவறை கி.பி. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கொள்ளலாம். அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல்லவராயர்களைத் தொடர்ந்து தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ரகுநாதராயத் தொண்டைமான்(1686 – 1730) குகைக் கோயிலின் முன் உள்ள மண்டபத்தைக் கட்டியிருக்கிறார். 1730ல் ராஜா விஜயரகுநாத ராயத் தொண்டைமான் இக்கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார். அம்மன் கோயிலிலுள்ள 1872ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் இக்கோயிலின் திருக்குடமுழுக்குத் திருவிழா நடைபெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது.

குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோயில் என்னும் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும் இதைத் தொடர்ந்துள்ள மண்டபம் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும் குகையில் வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் – வாயிற்காப்போர் – சிற்பங்கள் உள்ளன.

33013303

கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்தச் சிற்பங்கள் கலையழகு மிக்கவை. கருவறையில் லிங்கம் ஒன்று காணப்படுகிறது. குகையின் தென்பகுதியில் மலையிலேயே செதுக்கப்பட்ட வலம்புரி விநாயகர் ஒன்று உள்ளது.

குகைக்கோயிலின் தென்பகுதியில் குன்றின் கிழக்குச் சரிவில் 13’x14′ அளவில் கர்நாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்த்த கல்வெட்டு உள்ளது. இதுபோன்ற கல்வெட்டு இந்தியாவில் இது ஒன்றேயாகும். மேலும் கி.பி. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரதரின் நாட்டிய சாஸ்திரம் என்ற நூலுக்கும் சாரங்கதேவரின் சங்கீதரத்னகாரா என்னும் நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சங்கீதம் பற்றிய குறிப்பு இதுவேயாகும். ருத்ராச்சார்யா என்பவரது சீடனாக விளங்கிய மன்னன் ஒருவனால் இக்கல்வெட்டு எடுக்கப்பட்டது என இக்கல்வெட்டே தெரிவிக்கிறது. ஆனால் இவர்கள் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை இருப்பினும் எழுத்தமைதியைக் கொண்டு இது மகேந்திர பல்லவனது காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என டாக்டர் சி.மீனாட்சி போன்ற ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் இக்கருத்து சரியானதல்ல என்று தற்போது நிறுவப்பட்டுள்ளது.

‘சித்தம் நமஹ சிவாய’ என்று தொடங்கும் சங்கீதம் பற்றிய இந்தக் கல்வெட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சங்கீர்த்தனஜதி என்னும் ராகம் பற்றிய விதிகளை இக்கல்வெட்டு விளக்குகிறது. இறுதியில் ருத்ராச்சார்யாரின் சீடனான பரம மகேஸ்வரன் என்னும் மன்னன் இந்த ராகங்களை பாடி வைத்தானென்றும் கண்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டிற்குப் பக்கத்திலேயே ‘பரிவாதினி’ என்று ஒரு கல்வெட்டு வாசகம் உள்ளது. இது ஒரு யாழ் வகையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது கல்வெட்டில் காணப்படும் ராகங்கள் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பண்களிலும் காணப்படுகிறது தற்காலத்தில் வழங்கிவரும் ராகங்களிலும் இதன் கூறுகளைக் காணமுடிகிறது. முதல் பகுதியில் – மத்யம் – சொல்லப்படும் ராகம் ஹரிகாம்போஜிக்கும், இரண்டாவது – சட்ஜக்ரம – கரஹரப்பிரியாவுக்கும், மூன்றாவது – ஷடப – நடனமாக்ரிய ராகத்திற்கும், நான்காவது – சதாரி – பந்துவாரளி ராகத்திற்கும், ஐந்தாவது – பஞ்சமம் – அஹிரி ராகத்திற்கும் ஆறாவது சங்கராபரண ராகத்திற்கும், ஏழாவது மெச்ச கல்யாணி ராகத்திற்கும் உரிய விதிகளைத் தெரிவிக்கின்றன. இதில் சொல்லப்பட்டிருக்கும் ராகங்கள் ‘பரிவாதினி’ என்னும் யாழில் வாசிக்க ஏற்றதாகும் எனவும் கருதப்படுகிறது. ஆகவே தான் பரிவாதினி என்னும் பெயர் இந்தக் கல்வெட்டிற்கு அருகில் காணப்படுவதாகவும் கருதப்படுகிறது.

மேலும் பரிவாதினி என்னும் வாசகம் திருமயம், திருக்கோகர்ணம், மலையக்கோயில் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருமயம் விஷ்ணு குகைக் கோயிலின் பின்புறத்தில் உள்ள சிற்பத் தொகுதியிலும் கிள்ளுக்கோட்டை மகிஷாசுரமர்த்தினி கோயிலிலும் காணப்படும் வகை பரிவாதினியாக இருக்கலாம். “சுருதியும், சுவரங்களும் இணைந்த புதிய ராகங்கள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதற்கும், யாழ் மறைந்து வீணை கண்டுபிடிக்கப்பட்டு, புதிய ராகங்கள் அதில் வாசிக்கலானதும் இந்தக் கல்வெட்டு, சங்கீத உலகத்திற்கு அளித்த பரிசுகளாகும். (டாக்டர் வி.பிரேமலதா – குடுமியான் மலை, சங்கீதக் கல்வெட்டு – கல்வெட்டுக் கருத்தரங்கு சென்னை 1966).

குகைக்கோயிலுக்கு மேலே உள்ள பாறையின் உச்சிப் பகுதியில் கிழக்கு நோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.


சிகாநாதர் – அகிலாண்டேஸ்வரி கோயில், சமஸ்தான காலத்தில் சீரும் சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கியிருக்கும் கோயிலில் கோபுரவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் இருமருங்கிலும் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.

இம்மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன.



இதன் இருமருங்கிலும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்ட உணர்வு நமக்கு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்கப்பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.


இச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும் (கி.பி. 16 – 17ம் நூற்றாண்டு) இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாத் திகழ்பவையாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற ஹிரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே, என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகர, அருகிலிருந்த தூணை எட்டி உதைத்தான் ஹிரண்யகசிபு. தூண் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. ஹிரண்யனைப் பற்றிப் பிடித்து தனது கால்களுக்குக் குறுக்கே கிடத்தி ஆவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. ஆணவம் வீழ்ந்தது! இதுவே நரசிம்ம அவதாரம். இக்கதையைச் சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதாரக் காட்சியினை நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காண்கிறோம்.

காதலுக்குக் கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல் விழியினை கனவுலகிற்கு அழைத்துச் செல்கின்றன. உலகத்து அழகையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கும் மோகினி(மோகினி உருவில் விஷ்ணு).

வினை தீர்க்கும் விநாயகர், பக்தர்களைக் காக்க அண்டத்தையும் ஆட்டிப்படைக்கும் பலம் பெற்ற பத்துத் தலையுடன் கூடிய இராவணன்.









தீய சக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரர் – இன்னும் இதுபோன்ற பல சிற்பங்கள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. குதிரைப்படை வீரர்களும் காலாட்படை வீரர்களும் உபயோகீத்த ஆயுதங்களையும் குதிரைப்படை தாக்குதல்களைக் காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ளச் சித்திரங்களில் காணலாம்.

இந்த மண்டபத்திலிருந்து கோயிலினுள் செல்லும் வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு(கங்கையரைய குறுநில மன்னர்களால் எடுக்கப்பட்டது) என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் எடுப்பிக்கப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகா மண்டபம் கோயிலின் கருவறையும் விமானமும் முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டு, தனது பழமையை இழந்துவிட்டது. குகைக்கோயிலில் காணப்படும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம் திருமேற்றளி என இரண்டு கோயில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோயிலையே குறிப்பதாக இருக்க வேண்டும். ஆகவே இக்கோயில் 8ம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்டு பிற்காலத்தில் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிய வருகிறது. தற்போது நாம் காண்பது பிற்காலப் பாண்டியர் காலத்து கட்டுமானமாகும். கி.பி. 1215லிருந்து 1265 வரை பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய மண்டபங்கள் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. கோனாட்டில் இருந்த நாடு, நகரம், படைப்பற்று தனி நபர்கள் அனைவரும் இதற்காகக் கொடையளித்துள்ளனர். விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்ரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் காணப்படும் வியாகரபாதர்(மனித உருவம் புலியின் கால்கள்) பதஞ்சலி(மனித உடலும் பாம்பு கால்கள் போன்றும்) சிற்பங்கள் காணத்தக்கவையாகும்.

அம்மன் அகிலாண்டேஸ்வரி ஆகும், அம்மன் கோயில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் 12’x18′ அளவுள்ள(அறுபட்டை வடிவாக அமைந்த) கருங்கல் பலகை ஒன்று உள்ளது. இக் கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர். உமையாள்நாச்சி என்னும் தேவதாசி குகைக்கோயிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோயிலைக் கட்டுவித்து அங்கு மலையமங்கை அல்ல சௌந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள். இப்பெண்மணி குடுமியான்மலைக் கோயிலுக்கு மேலும் பல கொடைகள் அளித்துள்ளாள்.

குடுமியான்மலை, குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீத கல்வெட்டும் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வரலாற்றுச் சான்றுகளின்படி இது சரியல்ல என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1. பல்லவ மகேந்திரனின் ஆட்சிப் பகுதி காவிரிக்குத் தெற்கே பரவி இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

2. குடுமியான்மலைக்குக் கோயிலில் இப்பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரையின் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

இவற்றுள் ஒன்றுகூட பல்லவர் பரம்பரையைச் சேர்ந்தது அல்ல. திருமேற்றளி, மேலக்கோயில் என்னும் குடவரைக்கோயிலில் காணப்படும் காலத்தால் முந்தியக் கல்வெட்டு பாண்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்ததாகும். இவை முறையே மாறவர்மன் ராஜசிம்மன் என்னும் முதலாம் சடையன் மாறன் கிபி 730 – 765 காலத்தையும் இரண்டாவது ஜடிலபராந்தக வரகுணன் மாறன் சடையன் கி.பி 765 – 815 காலத்தையும் சேர்ந்ததாகும்.

3. குகையின் தூண்களும் மகேந்திரவர்மன் கால தூண்களின் அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன.

4. நரசிம்ம பல்லவன் கி.பி 630 – 668 மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிம்மன் கி.பி 680 – 720 ஆகியோரது காலத்து குகை கோயில்களில் காணப்படுவதுபோல கருவறையின் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி இல்லை.

5. குகையினுள் உள்ள லிங்கம், பல்லவ ராஜசிம்மன் காலத்து லிங்க அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. குகையில் காணப்படும் கி.பி 8ம் நூற்றாண்டு கல்வெட்டைக் கொண்டு மேற்றளி என்னும் மேலைக்கோயில் இக்காலத்தில் எடுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டியுள்ளது.

6. குகைக் கோயிலின் காலம் கி.பி 8ம் நூற்றாண்டு என வரையறுக்கும் போது, அருகிலுள்ள சங்கீத கல்வெட்டின் காலமும் இதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு மகேந்திரவர்ம பல்லவன் காலத்தது எனச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இங்கு காணப்படும் கிரந்த எழுத்துக்களைப் போன்ற எழுத்துகள் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி மற்றும் சென்னை அருங்காட்சியக செப்பேடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

7. குணசேனா என்கிற புனைப்பெயரைக் கொண்டும் இக்கல்வெட்டு மகேந்திரபல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கூறுகின்றனர். குணசேனா என்பது குணபாரா என்னும் மகேந்திரபல்லவனின் புனைப் பெயரின் திரிபே என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் குணசேனா என்னும் பெயர் குடுமியான்மலைக் கல்வெட்டில் காணப்படவில்லை. திருமயம் மற்றும் மலையடிப்பட்டி கல்வெட்டுகளிலேயே காணப்படுகிறது.

8. சங்கீத கல்வெட்டின் இறுதியில் காணப்படும் பரம மகேஸ்வரா என்னும் சொல் மகேந்திரவர்மனை குறிப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மகேந்திரவர்ம பல்லவனுக்கு இருந்த அனேக புனைப் பெயர்களில் மகேஸ்வரன் என்னும் பெயர் இல்லை. மேலும் மகேஸ்வரர் என்று தங்களை அழைத்துக் கொண்ட காளமுக, பசுபத சைவர்களை மகேந்திரவர்மன் தனது மத்தவிலாச பிரஹசனம் என்னும் நூலில் கேலி செய்கிறான். ஆகவே கேலிக்குரிய பெயராக அவன் கருதியதையே அவன் தன் புனைப் பெயராகக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

கொடும்பாளூர் ஒரு காலத்தில் கோனாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூரில் காளமுக சைவப்பிரிவினர் வாழ்ந்து வந்த செய்தியையும் அவர்களுக்கு கொடும்பாளூர் வேளிர் மன்னன் மடங்கள் கட்டி நிவந்தங்கள் அளித்த செய்தியின் படி குடுமியான்மலையும் இக்காலத்தில் கொடும்பாளூரின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தது. கொடும்பாளூர் வேளிர் மன்னன் ஒருவன் தன்னை மகேஸ்வரன் என்று அழைத்துக் கொண்டிருப்பானோ எனக் கொள்ளலாம்.

ஆகவே குடுமியான்மலை குகைகோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீதக் கல்வெட்டும் மகேந்திர பல்லவன் காலத்தைச் சேர்ந்தது அல்ல என்னும் முடிவுக்கு வரலாம்.

இங்கு மொத்தம் 120 கல்வெட்டுகள் உள்ளன, இவை இப்பகுதியின் அரசியல் பொருளாதார வரலாற்றினையும் இக்கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட விபரங்களையும் தெரிவிக்கின்றன. இக்கோயிலுக்கு உரிய நிலங்கள் கோனாட்டில் பல இடங்களில் இருந்தன. பிற்கால பாண்டியர் காலத்தில் இப்பகுதியை கங்கையரையர், வாணாதரையர் ஆகியோர் ஆண்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் வீரகம்பண்ண உடையார், கோப திம்மா ஆகியோரது பெயர்கள் இக்கால கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மதுரை நாயக்கர்கள் காலத்தில் இப்பகுதி மருங்காபுரி சிற்றரசர்களின் கீழ் இருந்தது. பின்பு வைத்தூர் பல்லவராயர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர் சிவத்தெழுந்த பல்லவராயர் இக்கோயிலுக்கு சில மண்டபங்களும் கட்டியுள்ளார். மேலும் நந்தவனம் தோட்டங்கள் தேர் ஆகியவற்றின் பராமரிப்பிற்கும் கொடையளித்துள்ளனர். ரகுநாதராயத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தைக் கட்ட உயரமான இந்த மண்டபத்திற்கு விஜரகுநாதராய தொண்டைமான் 1730 – 1769 படிக்கட்டுகள் அமைத்தார் இக்கோயிலுக்கான கொடைகள் பற்றிய செய்திகள் இன்னும் ஏராளமாக உள்ளன.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மல்லையில் பிள்ளையார் சிற்பங்கள் இல்லை , இங்கு தவிர …

அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நண்பர் ஒருவர் நூறு இடுகைகள் ஆகியும் பிள்ளையார் பற்றி இன்னும் ஒன்று கூட இல்லையே என்றார். சரி, இன்று பிள்ளையார் பற்றி பார்ப்போம். வெறும் சிற்பம் மட்டும் அல்ல – தமிழ் நாட்டில் குறிப்பாக பல்லவ காலத்தில் பிள்ளையார் வழி பாடு பற்றி ஒரு அலசல்.

இது மல்லையின் பல புதிர்களில் ஒன்று – ஐம்பதுக்கும் மேலான சோமாஸ்கந்தர் ( உமா ஸ்கந்தா சகிதர் ) சிற்பங்கள் மல்லையில் இருந்தும் ( சரி அதை பற்றியும் ஒரு தனி மடல் எழுத வேண்டும் ) – எங்கும் ஆனை முகனைக் காணவில்லையே?

ஒரு நிமிடம் – அதற்குள் உங்களில் பலர் கணேஷ ரதத்தை பற்றி மறுமொழி அளிக்க சென்றுவிடாதீர்கள். சற்று பொறுங்கள் – அந்த ரதம் செதுக்கப்பட்ட போது அது சிவ ஆலயம் – எப்படி அது மகனுக்கு வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். ஒன்றொன்றாய் பார்ப்போம்.

பிள்ளையார் பட்டி குடவரை கோயில்களை விட்டு விட்டு ( அவை பற்றி பின்னர் பார்ப்போம் ) – தென்னகத்தில் முதல் முதல் பிள்ளையார் வழிபாடு பல்லவர் காலத்தில் துவங்குகிறது. அமரர் கல்கியின் சிவகாமியின் சபதத்தை படித்த அனைவருக்கும் இது நினைவிற்கு வரும். நரசிம்ம பல்லவன் பன்னிரண்டு ஆண்டுகள் படை திரட்டி தன் தந்தையை தோற்கடித்த புலிகேசியின் வாதாபி மீது படை எடுக்கிறான் – அதில் அவன் தளபதி பரஞ்சோதி அபாரமாக போர் புரிந்து ( 642 AD) புலிகேசியை வென்று வாதாபியை எரிக்கின்றனர். அப்போது வாதாபி நகரின் வாயிலில் இருந்த பிள்ளையார் சிலையை கண்டு பரஞ்சோதி அவரிடத்தில் வெற்றிக்கு வேண்டி – வெற்றி கண்ட பின் – அச்சிலைய எடுத்துக்கொண்டு தென்னகம் திரும்பி சிறுத்தொண்டராக மாறி – சிறுத்தொண்டர் என்ற நாயன்மார் ஆகிறார். அப்படி தென்னகம் வந்தவர் தான் வாதாபி பிள்ளையார் என்று ஒரு கருத்து உள்ளது.. .

ஆனால் இப்போது ஞானசம்பந்தர் பாடல் ஒன்றை பார்ப்போம்

சம்பந்தர் பாடல்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

குறிப்புரை :
உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் தாம்கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம்பற்றிய இறைவன் வலிவலநகரான் என்கின்றது. பிடி – பெண்யானை. கரி – ஆண்யானை. வடிகொடு – வடிவத்தைக் கொண்டு. கடி கணபதி – தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் – வள்ளற் பெருமக்கள்.

அப்பர் பாடல்

பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

பொழிப்புரை :
பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும், இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும், மேம்பட்ட கயிலை மலையையும், நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.

அப்படி என்றால் அவர்கள் காலத்திலேயே ஆனைமுகனின் வழிபாடு மற்றும் அவன் உமை ஈசனின் மைந்தன் என்றவை நிலை பெற்று விட்டன என்பதை அறிகிறோம். அப்படி என்றால் ?

சரி, மீண்டும் கணேஷ ரதம் வருவோம். ஆம், அதில் இருப்பது பிள்ளையார் விக்ரகம் தான். ஆனால் ( திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் உதவிக்கு நன்றி ) . செம்பெர்ஸ் என்று ஆங்கிலேயர் மல்லை பற்றி விட்டு சென்ற குறிப்பு 1788 AD.

முதலில் கணேஷ ரதத்தில் ஒரு சிவ லிங்கமே இருந்தது, அதை மெட்ராஸ் ஆளுனர் ஹோபெர்ட் பிரபு எடுத்து சென்று விட்டார். அப்போது அதற்காக இருபது பாகொட மானியம் கிராமவாசிகளுக்கு அளித்தார். அவருக்கு அடுத்து வந்த ஆளுனர் கிளைவ் பிரபு நந்தியை எடுத்து சென்றார்

சரி, அப்போது பிள்ளையார் எப்படி வந்தார். அதற்க்கு திரு லக்ஸ்மையா அவர்களது குறிப்பு 1803 AD.

லிங்கத்தை XXXXX எடுத்து சென்றதால் , மக்கள் அருகில் இருந்த பிள்ளையாரை இந்த கோயிலினுள் வைத்தனர்

சரி, இன்னும் சிலருக்கு சந்தேகம் இருந்தால் – கணேஷ ரதத்தில் உள்ள கல்வெட்டை படிப்போம்.

நிறைய வரிகளைக் கொண்ட இந்த சமஸ்க்ருத கல்வெட்டின் ஐந்தாவது வரி ” சாம்பு (ஈசன் )னின் கோயிலான இதை நிறுவியவன் அத்யந்தகாமன் என்ற பட்டம் உள்ள அரசன், அவன் தனது எதிர் நாடுகளின் அரசர்களை வெற்றி கண்டு ரணஜெயன் என்ற பெயர் எடுத்தவன் “ அதிலேயே அந்த ஆலயத்தின் பெயரும் உள்ளது : “அத்யந்தகாம பள்ளவேஷ்வர க்ரஹ்ம்” (“பல்லவ அரசன் அத்யந்தகாமனின் சிவ ஆலயம் “).

அப்படி என்றால் இது நம்மை எங்கு இட்டு செல்கிறது – மல்லையில் உள்ள அனைத்து குடவரை கோயில்கள், ரதங்கள் , தனி சிற்பங்கள் – எதிலும் விநாயகர் வடிவம் இல்லை.

சரி, மல்லையை நிறுவிய பல்லவ மன்னன் யார் என்றே பல அறிஞர்களிடத்தில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. எனினும் மல்லை கடற்கரை கோயில் ராஜசிம்ம பல்லவனுடையது. நாம் முன்னரே மல்லை கடற்கரை கோயில் பற்றி பார்த்தோம்

மல்லை கடற்கரை கோயில்

இப்போது உங்கள் கவனிப்புத் திறனுக்கு மீண்டும் ஒரு போட்டி – இந்த படங்களில் ஆனை முகனைத் தேடுங்கள்

கண்டு பிடித்தீர்களா – அவருடன் பல பூத கணங்களும் உள்ளனர் – அதாவது பிள்ளையார் என்று தனி இடம் அவருக்கு இல்லை – இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது ?

சிற்பம், வரலாறு என்ற துறைகளில் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுதலே இந்த தளத்தின் நோக்கம்- எனவே உங்கள் தேடலை துவக்கி – விடை அளிக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

புதிய வருடம் துவங்கும் இந்த நல்ல தினத்தில் மல்லை கடற்கரைக் கோயில் விநாயகனின் சிற்பங்களுடன் உங்களை வாழ்த்தி விடை பெறுகிறோம். இந்த வருடம் உங்களுக்கு ஒரு நிறைவைத் தர அவனை வேண்டுகிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment