ஒன்றா , இரண்டா …புலித்தொப்பை நண்பர்களின் லூட்டி – திருமால்புரம்

புள்ளலூர் பற்றிய சென்றைய பதிவினை இதற்கு முந்தைய பதிவு போல நினைத்துப் படிக்கவும்

கதிரவன் தலைக்கு மேலே வந்ததும் சங்கருக்கு தெரியவில்லை. நல்ல பசி. சில மாதம் பழக்கம் தான் அவருடன் பழக்கம் – மடல் மற்றும் அவ்வப்போது தொலை பேசியில் பேசிய தொடர்பு மட்டுமே . எனினும் அந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் திங்கள் வந்ததுமே ஒரு எதிர்பார்ப்பு, சங்கர் இந்த வாரம் எந்தக் கோயிலுக்கு சென்று அதில் உள்ள அற்புத வடிவங்களை பற்றி கூறுவார் என்று. சனி ஞாயிறு என்றாலே இந்த ஆர்வலர் அடிக்கும் லூட்டி , அப்பப்பா ? எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறாரோ ! சென்னை பயணம் என்றவுடன் அவருடன் ஒரு ஞாயிறு முழுவதும் இல்லை – அரை ஞாயிறு தான், காஞ்சி அருகில் உள்ள திருமால்புரம் செல்வோம் என்று பேசிக்கொண்டோம். இன்னும் நன்றாக அவரது ஆர்வம் தெரிந்திருந்தால் காஞ்சியிலே ஒரு கட்டு ஃபுல் மீல்ஸ் முடித்துவிட்டு வந்திருப்பேன்.

இடம் மட்டுமே தெரியும், அதுவும் அந்த ஊரில் உள்ள ரயில் நிலையம் தான் தெரியும். அதன் அருகில் சந்தித்தோம். பிறகு ரோடு என்ற பேரில் ஒரு கோடு கூட இல்லாத தடத்தில் உருண்டு சென்றோம். இதை விட சாலை மோசமாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்ற வைத்த பாதை, அருகில் பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் வரத்துவங்கின. அப்போது திடீரென ASI பச்சை வேலி கண்ணில் பட்டது. கதவில் பெரிய பூட்டு வேறு தொங்கியது. வேலியை சோதித்துப் பார்த்தோம். யாரோ நல்ல கான்ட்ராக்டர் போல இருந்தது. ஒரு இடத்தில கூட புகுந்து செல்ல முடியவில்லை ( அது சரி – நாம புகுந்து செல்ல நகர வாயில் வேண்டுமே !!) . உள்ளே சிறு கற்றளி – அப்படி ஒன்றும் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. விமானம் கூட இல்லை.

அருகில் இருந்த ஊர் வாசிகளிடம் கேட்டுப் பார்த்தோம் – பொதுவாக அவர்களிடத்தில் சாவி இருக்கும் . இங்கே அதுவும் இல்லை. சரி, இவ்வளவு செய்துவிட்டோம், இது கூடவா செய்ய மாட்டோம். இரும்புக் கதவை ஏறி குதித்தேன். ஒரு கூட்டமே கூடி விட்டது ( இலவச சர்க்கஸ்??) . சங்கர் முயற்சிக்கும்போது எங்கள் மீது கருணை பிறந்து ஒருவர் தனது சைக்கிள் தந்து உதவினார். ( உடனே சென்று விட்டார் – அதன் மீது ஏறிய சங்கர் உள்ளே குதித்த பின்னர் திரும்பும்போது வெளியே எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.. சார், வாங்க முதல்லே வேலையை முடிப்போம் – வி கிராஸ் தி பிரிட்ஜ் வென் வி கம் டு இட் !

அருகில் சென்றோம். அழகிய புல்வெளி தரை நடுவில் சிறு கோவில். பின்புறமாக பாதை சென்றது

தொலைவில் இருந்து பார்த்துவிட்டு ரொம்ப சின்ன கோயில், இங்கே அப்படி என்ன இருக்கப் போகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம்.

இப்படி ஒரு சிறு கோவிலுக்கு பராந்தகர் (907 – 955 CE) முதல் பொன்னியின் செல்வர் உட்பட பலரும் கொடை கொடுத்துள்ளனரே ? சரியான இடத்திற்கு தான் வந்துள்ளோமா ?

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/parantaka.html
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/rajaraja_1.html

அருகில் சென்று பார்த்ததும், எங்கும் எதிலும் கல்வெட்டுகள். இன்னும் பல புதையல்கள் அதனுள் அடக்கி உள்ள இந்த கோயிலை புதிய மதிப்புடன் அணுகினோம்.

பல நுண்ணிய சிற்பங்கள், தோரணம் மற்றும் மேலே பூத வரி என்று பல கண்களில் பட துவங்கின. அவை அனைத்தும் அடுத்த சில பதிவுகளில் பார்ப்போம். முதலில் பூத வரி என்றவுடன் மனதில் ஒரு ஆசை, நமது நண்பர் புலித்தொப்பை இருப்பாரோ என்று ஒரு முதல் தேடுதல் பணியை மேற்கொண்டோம்.

அருமையான பூத வரி. ஆனால் நம் நண்பர் ?

அதோ அங்கே, இருப்பது அவரா ?

இல்லை , தலை கீழாக நின்று சிறக்கும் ஒரு கணம் தான் அது !!

இன்னும் சற்று தேடிய பொது., ஆஹா, நம் நண்பர் தான்,

ஆனால் ஒன்றில்லை , இரண்டு பேர்.


இதுவரை நாம் ஒரு கோயிலில் ஒரு புலித்தொப்பை பார்ப்பதே அரிது. இங்கோ இருவரை பார்த்த ஆசை, பேராசையாக மாறி இன்னும் கிடைக்குமா என்று தேடினோம்.

ஆஹா, இங்கே இன்னும் ஒன்று.

மூன்று , ஒரே இடத்தில. இன்னொன்று இருக்குமோ ? இதோ.

புலித்தொப்பை தாகம் அடங்கி விட்டது. நால்வரை பார்த்த பெருமிதம். சரி அடுத்த பதிவில் அங்கே இருக்கும் மற்ற சிற்பங்களை பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மீண்டும் நம் நண்பர் புலித்தொப்பை – கொடும்பாளூர் மூவர் கோயில்

பொதுவாக புகழ் பெற்ற கலைச் சின்னங்களை பலரும் பார்க்க வருவர். அவைகளைப் பற்றி தேடினால், பக்கம் பக்கமாக பல பதிவுகள், ஆராய்ச்சிகள், புத்தங்கங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே கூகுளார் எடுத்துப் போடுவார். அப்படி இருக்க, இன்னும் வெளி வராதவை ஏராளம். சிற்பம் என்றால் மல்லை, ஓவியம் என்றால் அஜந்தா, கோயில் என்றால் தஞ்சை, மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கம் என்று இன்று முடிவு ஆகிவிட்டது. அப்படி இல்லமால், இன்றும் தங்கள் அழகை பொத்தி மறைத்து, மறைந்து நிற்கும் பொக்கிஷங்களை நாம் வெளிக் கொண்டு வர வேண்டும். அவற்றை பார்க்கும் போதே, எனது குலம் ஒரு மகத்தான குலம், எனது நாடு ஒரு வாழும் வரலாறு என்று நாம் மார்தட்டி, ஆழ் மனதில் ஒரு பெருமிதத்தோடு, ரோமங்களில் ஒரு மயிர் கூச்சலோடு, தலை தானாக நிமிர்ந்து பார்க்கும் ஆனந்தம் இருக்கிறதே, அதுவே பரம சுகம்!

அப்படி ஒரு உணர்வு, மூவர் கோயில் செல்லும் பொழுது எங்களுக்கு ஏற்பட்டது. சுற்றிலும் அமைதி ததும்பும், பச்சை பசேல் என்ற வயல் வெளி நிறம்பிய, ரம்மியமான கிராமத்தை தாண்டிச் சென்றோம். நெடு நெடு என்று கான்க்ரீட்டும் கண்ணாடியும் தினமும் பார்த்து சலித்த எங்களுக்கு இப்படி ஒரு அற்புதமான மாறுபட்ட சூழலில், தொலைவில் ஒரு விமானம் தென்பட்டது.

அதோ மூவர் கோயில், என்னடா இது மூவர் கோவில் என்று சொல்கிறீர்கள் ஆனால் இரண்டு கோபுரம்தான் தெரியுது என்கிறீர்களா! ஆமாம், இன்றைக்கு எஞ்சியது இரண்டு தான். மூன்றாவது அடிமட்டம் மட்டுமே உள்ளது. இந்த அற்புத கோயில் கட்டிய வள்ளல், கொடும்பாளூர் அரசர் இருக்குவேளாண் பூதி விக்கிரம கேசரி, அவரும் அவரது இரு தேவியரும், காளாமுக துறவிகளுடன் சேர்ந்து நிறுவினர் என்று கிரந்த லிபியில் கல்வெட்டு உள்ளது. கொடும்பாளூர் அரசர்கள் சோழர்களுக்கு துணைபுரியும் சிற்றரசர்களாக இருந்து வந்தனர். பூதி விக்கிரம கேசரி, இரண்டாம் பராந்தகர் (ஆமாம், உடனே பொன்னியின் செல்வன் நண்பர்கள் விழித்துக் கொள்வது தெரிகிறது. நமது ராஜ ராஜரின் தந்தையார் சுந்தர சோழர் தான்) காலத்தில் அவருக்கு கீழ்படிந்த சிற்றரசராக இருந்தார்.

தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது, சற்று சிறியதாக உள்ளதே, இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று நினைக்கத் தோன்றும். பொறுமை, இது சிறு கோயில் ஆனால் ஒரு அழகிய சிற்பக் கூடம்.

ஒருவேளை இந்த வாக்கியத்தை சுட்டிக்காட்டவே, இன்று மூவர் கோயிலில் இருக்கும் பல சிற்பங்களை விட்டு விட்டு, ஒரு சிறிய, எனினும் அரிய வடிவத்தை எடுத்துக் காட்டுகிறேன். இதில் எனக்கு ஒரு தனி லாபமும் உண்டு, காரணம் இது எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் !!

முதலில், அது எங்கே இருக்கிறது என்பதை பாருங்கள், பூத ரேகையில் தென்படுகிறதா?

இன்னும் அருகில் சென்று தேடுவோமா.

என்ன இன்னும் தெரியவில்லையா? பரவாயில்லை இதோ உங்களுக்கு சற்று உதவுகிறேன்.

என்ன அழகு இந்த குட்டி பூதம், அதுவும் அதன் தொப்பை! ஆமாம், நமது புலித்தொப்பை தான்.


இன்னுமா கண்டு பிடிக்க முடியவில்லை?


இன்றைக்கு குட்டி பூதம் சற்று கோபமாகவே இருக்கிறது!

விளையாட்டில்லை, பூத ரேகை விமானத்தை சுற்றிலும் இருக்கிறது. இரண்டாவது விமானத்தில் அவ்வாறே உள்ளது. எங்கும் குட்டி பூதங்கள் தான், ஒரே சேஷ்டை, லூட்டி அடிக்கின்றன. அப்படி இருக்க, ஒரே ஒரு முறை மட்டும் வரும் இந்த புலித்தொப்பை பூதத்தின் தனித்தன்மையின் காரணம் என்ன? அதுவும் நாம் இவரை முதன் முதலில் பகீரத பிரயத்தன சிற்பத்தில் மல்லையில் பார்த்தோம், பிறகு புள்ளமங்கை, ஸ்ரீனிவாச நல்லூர், இப்போது மூவர் கோயில். இப்படி அணைத்து இடங்களில் ஒரே ஒரு முறை மட்டும் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த பூதம் யார்?

அடுத்த பதிவில் மற்ற அற்புத வடிவங்களையும் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

குட்டி செய்யும் லூட்டி – புள்ளமங்கை புலி தொப்பை

நாம் இதற்க்கு முன்னர் இரு இடங்களில் நம் நண்பர் புலி தொப்பையை சந்தித்தோம். மல்லை மற்றும் ஸ்ரீநிவாசநல்லூர் சிற்பங்களில் நம்மை மகிழ்வித்த இவர் இன்று புள்ளமங்கை பிரம்மபுரீர்ஸ்வரர் கோயிலில் தன் கூட்டாளிகளுடன் நம்மை அசர வைக்கிறார்.

சரி, உங்கள் கவனிப்பு திறனை சோதிக்கலாம். இந்த படத்தில் நம் நண்பரை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

முடியவில்லையா ? சரி இந்த படத்தில் முயற்சி செய்யுங்கள்

என்ன ! இன்னும் முடியலையா ? இப்போது

சரி விடுங்க – இப்போ பாருங்க நம் குட்டி செய்யும் லூட்டி – அதுவும் என்ன அருமையான புலி தொப்பை – இருந்தும் சற்று சோகமாகவே உள்ளார் நம் நண்பர்

இந்த காலத்தில் கட்டும் கோயில்களிலும் வெளி சுவரில் பூத கணங்களை வைகிறார்கள் – ஆனால் அவை அனைத்தும் ஒரே முக பாவத்துடன், பெரும்பாலும் வருவோரை முறைத்து கொண்டு இருக்கும். சோழர் கால பூத கணங்களை கொஞ்சம் பாருங்கள் – ஒவ்வொன்றின் உடல் அமைப்பு என்னமோ குள்ளனாக ( அதில் கூட சிற்பியின் திறமையை பாருங்கள் – கை , கால் என குள்ளர்களையும் தத்ரூபமாக செதுக்கி உள்ளான் ) இருந்தாலும் , அவற்றின் முக பாவம் – அவை நிற்கும் அலட்சிய தோரணை, உண்மையிலேயே நம்மை நக்கல் அடிப்பது போல உள்ளது.

ஒன்று பாருங்கள் – நம் புலி தொப்பை அனைவருக்கும் இல்லை – அது ஒரு பூத கணத்தின் அமைப்பு – அவர் பெயர் என்ன – ஆராய வேண்டும். அடுத்து முறை நீங்கள் புராதன இடங்களுக்கு செல்லும் பொது இது போல புலி தொப்பை சிற்பங்கள் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். அதே போல மற்ற பூத கணம் சிற்பங்களையும் பார்த்து மகிழுங்கள்.

படங்களுக்கு உதவி – காத்தி மற்றும் வரலாறு . காம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மீண்டும் நமது நண்பர் – புலி தொப்பை, ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில்

நாம் முன்னர் மல்லையில் தவம் சிற்பத்தில் பூத கணத்தின் வயிற்றில் புலி முகத்தை பார்த்தோம். இவரை பற்றி தோழி காத்தி உடன் பேசினேன் , அவர் உடனே இதே போல இன்னொரு சிற்பம் ஒரு சோழர் கோயிலில் பார்த்தேன் என்றும் அதன் படத்தையும் அனுப்பி வைத்தார். திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், அளவில் சிறியது என்றாலும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்த்து விளங்கும் ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில் சிற்பம்

அங்கே பல அற்புத சிற்பங்கள் இருந்தும் இன்று சிற்ப வேலைபாடுகள் மிகுதியாக இருக்கும் ஒரு மகர தோரணம், அதில் நம் நண்பர் புலி தொப்பையை மீண்டும் சந்திப்போம்.

அருமையான இரு கன்னியர் சிற்பம் – ( அவர்களை அடுத்து வரும் மடல்களில் பார்ப்போம் ) – நடுவில் சற்று மேலே மகர தோரணம். படத்தை பாருங்கள்.

எங்கெங்கும் சிற்பங்கள் – அப்பப்பா, இந்த சிறிய இடத்தில் எவ்வளவு நுண்ணிய வேலைப்பாடு! மகர யாளிகள் – அவற்றின் வாயில் இருந்து வெளி வரும் சிங்க யாளிகள், அவற்றின் மேல் வாளேந்திய போர் வீரர்கள் , ஒருவருடன் ஒருவர் போர் புரிந்து கொண்டு உள்ளவாறு செதுக்கப்பட்ட விதம் அருமை .

சிற்பத்தின் நடுவில் பூமாதேவியை காப்பாற்றிய வெற்றி பரவசத்தில் வராஹ மூர்த்தி, நான்கு கரங்கள் – மேல் இரண்டில் சங்கு , சக்கரம் , பூமாதேவியின் பக்தி நிலை – இரு கரம் கூப்பி , அவர்களை ஆசை அன்புடன் மடியில் சுமந்திருக்கும் வராஹ மூர்த்தி, அத்துடன் நிறுத்தவில்லை சிற்பி ( மல்லை மற்றும் உதயகிரி வடிவங்கள் பார்த்தோம் அல்லவா ) – அவற்றை போலே இந்த சிறு சிற்பத்திலும் அவன் வராஹ மூர்த்தியின் கீழே நாகராஜன் மற்றும் நாகராணியை செதுக்கி உள்ளான்.

அவரைச் சுற்றி பூத கணங்கள் – எருமைத்தலையுடன் ஒரு பூதம் – அடுத்து நம் நண்பர் புலி தொப்பை – ஆள்காட்டி விரலால் வாயை இழுத்து முகம் காட்டும் வண்ணம் மிக அருமை. இங்கு புலி தொப்பை கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. இவர் புள்ளமங்கை கோயிலிலும் வருவார். இது போல வேறு இடங்களில் பார்த்தீர்கள் என்றால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் இவர், யார் அந்த எருமை தலை – இவர்களுக்கு பெயர் உண்டா?

ஒரு அற்புத சிற்பத்தை நமக்கு தந்த காத்தி மற்றும் படங்கள் தந்து உதவிய ஸ்ரீராம் – இருவருக்கும் நன்றி


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பெரிய கோவில் – சிறிய சிற்பம்

நாம் மல்லை அர்ஜுன தவம் முன்னர் பார்த்தோம். அதே போல காஞ்சி கைலசனாத கோவில் சிற்பமும் பார்த்தோம்.அங்கே பல்லவ சிற்பியின் கலை பார்த்த நாம் – இப்போது அங்கிருந்து சுமார் முன்னூறு ஆண்டுகள் பின்னர் சோழ சிற்பி இதே கதையை கையாண்ட முறையை பார்போம்.

சோழ பேரரசன் ராஜ ராஜன் கட்டிய கற்றளி – தஞ்சை பெரிய கோவில் (எனினும் அவனே பெரிய கற்றளி என்று அழைத்த கோவில் காஞ்சி கைலசனாத கோவில். )

சரி, பெரிய கோவில் என்றதும் அங்கு இருக்கும் அனைத்தும் பெரியது என்று இல்லாமல் – நாம் அங்கே இருக்கும் சிறு சிற்பங்களை பார்போம். முன்பு நாம் பார்த்த சண்டேச அணுகிறஹ முர்த்தி போல, அடுத்து நாம் பார்ப்பது பசுபதஅஸ்த்ரதான முர்த்தி. சிறு சிற்பம் என்றாலும் மிக அழகான வடிவம். முதலில் முழு சிற்பத்தையும் கொஞ்சம் பாருங்கள்.
1173
நிறைய நபர்கள் – புரிய கொஞ்சம் கடினமாக இருக்கிறதா ?. சரி ஒவ்வொன்றாக பார்போம். முதலில் கீழ் இருந்து மேல்

முதல் வரிசை
1165
இங்கே சிவ பூத கணங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக ஒரு காட்டுப்பன்றி போல மாறுவது போல வடித்து உள்ளனர். சரி கதையை மீண்டும் பார்போம். ***

அர்ஜுனன் மகாபாரத போருக்கு தன்னை தயார் படுத்து ஈசனிடம் இருந்து பசுபத அஸ்திரத்தை பெற முயல்கிறான். கடுந்தவம் புரிகிறான். அப்போது ஈசன் அவனை விளையாட்டாய் பரிசோதிக்க வேடுவன் போல வேடம் இட்டு – ஒரு பன்றியாயை இருவரும் வேட்டை ஆடுவது போல நிகழ்வு, அப்புறம் இருவருக்கும் யுத்தம் – கடைசியில் அர்ஜுனன் வந்தது ஈசன் என்று உணர்த்து அவன் தாள் பணிய, அஸ்திரத்தை பெறுகிறான்.

இப்போது மீண்டும் சிற்பத்திற்கு வருவோம் – இரண்டாம் தளம் – இங்கே அர்ஜுனன் ஒரு காலில் நின்று தவம் புரிகிறான் ( கடுந்தவம் போல இல்லை – மல்லையில் எலும்பும் தோலுமாய் இருந்த துறவி போல இல்லாமல் சற்று நன்றாகத்தான் உள்ளான் )
11631169
806
அடுத்த காட்சி – இருவருக்கும் யுத்தம் – அருகில் உமை, தனது மடியில் குழந்தை முருகனை வைத்து இருக்கும் கோலம் அருமை
11761178
இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் கோலம் ( நாம் முன்பு காஞ்சி கைலாசநாத கோவிலில் பார்த்த வடிவம் ) அருமை. 1192
1167
அருகில் நான்முகன், மஹாவிஷ்ணு மற்றும் லெட்சுமி . மல்லையில் விஷ்ணு மட்டும் கோவிலினுள் இருப்பது போல இருக்குமே ??
1196
அடுத்த மேலும் சில தெய்வங்கள் – இந்த அறிய காட்சியை கண்டு நிற்கின்றனர்.

அடுத்த தளம் – இங்கே அருமையாக அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் ஈசன் – அடுத்து உமை – அவர்களுக்கு முன் கை கூப்பி நிற்க்கும் அர்ஜுனன் – அர்ஜுனனுக்கு அஸ்திரத்தை அளிக்கும் குள்ள பூத கணம்…இதை காணும் விண்ணவர்கள் அவர்களை போற்றுகின்றனர்.
11711182
அடுத்து – அம்மையும் அப்பனும், மடியில் முருகனும் மீண்டும் கைலைக்கு செல்கின்றனர். அந்த குழந்தையின் மடி சவாரி – என்ன உயிரோட்டம்.
1180
கடை தளம் – இங்கேயும் விண்ணவர். ஒரு முனிவர் தன் சீடனுக்கு ஏதோ உபதேசம் செய்வது போல உள்ளது – வியாசர் விருந்தோ ? 11601307

***

இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி

ஒரு அருமையான நம் ஐயம் தீர்க்கும் பாடல் ( இதற்க்கு சரியான விளக்கம் தந்த திரு வி. சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.)

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.48.6

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ(டு) எய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழும் சேய்ஞலூர் மேயவனே.

கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுன னோடு போர் புரிந்தது ஏனோ?

குறிப்புரை:
பன்றியைத் துரத்திவந்து வேடனாகி விசயனோடு சண்டையிட்டது ஏன் என்கின்றது. ஏனம் – பன்றி. இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி. இதனைத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான் பன்றியைக்கொன்று விசயனைக் காத்தனர் என்பது வரலாறு. கோடு – கொம்பு. மால் – பெரிய; மயக்கமுமாம். கோச்செங்கண்ணான் செய்த கோயில்களில் ஒன்றாதலின் அவற்கு அருள்செய் சேய்ஞலூர் மேயவனே என்றார். சேடு – பெருமை.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment