குகைக்குள் மறைந்திருக்கும் பல்லவர் சிற்பம்

சென்ற வருடம் டிசம்பர் மாதம் நண்பர் அர்விந்த் அவர்களுடன் ஐந்து நாட்கள் பாண்டிய நாட்டு பக்கம் பயணம் மேற்கொண்ட​போது பல இனிய அனுபவங்கள். டீ ஷர்ட், அரை டிரௌசர், கேமரா என்று எங்களைப் பார்த்தவுடனே அந்தக் கார் டிரைவருக்கு சந்தோஷம் தான். அதைவிட ஐந்து நாட்கள் புக்கிங் என்றவுடன் அவருக்கு ஒரே எதிர்ப்பார்ப்பு, நல்ல சவாரி என்று. “சார், நான் பன்னிரண்டு வருடங்கள் இங்கே தான் ஓட்டறேன். நீங்க எங்க போகணும் சொல்லுங்க” என்று முதல் நாள் விறுவிறுப்பாக கிளம்பியவர், ஐந்தாவது நாள் இரவு எங்களை நெல்லை ரயில்வே நிலையத்தில் டாட்டா கட்டி விடை அனுப்பும்​போது விட்ட பெருமூச்சு…அந்த ஐந்து நாட்கள் அவர் நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள இடங்களுக்கு வழி கேட்டு கேட்டு சலித்துவிட்டார் !! அதைவிட அவருக்கு பெரிய குறை – ஒரு சின்ன குகையை வளைத்து வளைத்து ஐந்து மணி நேரம் படம் எடுக்கும் நாங்கள் பெரிய ஆலயங்களில் வாசலில் விட்டுவிட்டு டீ சாப்பிட்டுவிட்டு வருவதற்குள்ளே வெளியில் வந்து விடுகிறோமே என்ற குழப்பம் தான்!! எங்களது ரசனை என்னவென்பது பாவம் அவருக்கு கடைசி வரை புரியவேயில்லை.

அந்த மாதிரி செய்தால் தானே இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கும் அற்புத வடிவங்களை உங்களுக்கு எடுத்துத் தர இயலும். பனைமலை – நாம் ஏற்கனவே அங்குள்ள அற்புத உமை பல்லவ ஓவியத்தை பார்த்து விட்டோம். அங்குள்ள சிதைந்த சிவபெருமானின் ஆடல் காட்சியை ஓவியமாக உயிர்ப்பிக்கும் முயற்சி இன்னும் நிறைபெறவில்லை. எனினும் அங்கேயே இன்னும் ஒரு பொக்கிஷம் உள்ளது.

மலை மேலே இருக்கும் கோவிலுக்கே யாரும் செல்வதில்லை. அப்படியிருக்க நாம் இன்று பார்க்கப் போகும் அதிசயம் – மலையடிவாரத்தில் உள்ளது. எங்களுக்கு இது தெரியாது. மலை ஏறிய களைப்பில் நிறைய தண்ணீர் குடித்துவிட்டோம் – அதனால் இறங்கியதும் இயற்கை வேலையை காட்டியது – மரம் வளர்க்க அருகில் சென்றபோது – ஒரு பக்கம் ஒரு ஆட்டுப் பாதை… அதில் ஒரு இயற்கை குகை. நண்பர் அசோக் அவர்கள் ஒரு புகைப்பட வித்துவான் என்றே சொல்ல வேண்டும். எப்படியோ உள்ளே புகுந்து எங்களுக்கு படங்களை அருமையாக எடுத்து விடுவார்.

மகிஷாசுரமர்தினி சிலை – தாய் பாறையில் ராஜசிம்ம பல்லவனின் சிற்பிகளின் கைவண்ணம்.

ராஜசிம்மனுக்கு சிம்மம் என்றால் ஒரு தனி ஈர்ப்பு. அந்த சிங்கத்தின் வலிமையை எப்படி செதுக்கி உள்ளனர்!

எட்டுக் கைகளுடன் அவளின் அழகு அருமை, ஒரு காலை மடித்து சிங்கத்தின் முதுகில் ஊன்றி, அந்த வில்லை கையில் பிடித்து நிற்கும் பாணியில் ஒரு யதார்த்தம் !! அருமை. அவள் அணிந்திருக்கும் உடை, ஆபரணங்கள் – பல்லவர் பாணியில் பிரயோக சக்கரம், கனமான வாள். கவனிக்க வேண்டிய ஒன்று வலது கையில் மூன்று தலை நாகம் ஒன்று உள்ளது. இதுவரை நாம் கண்ட பல்லவ துர்க்கை வடிவங்களில் இதை நாம் பார்த்தில்லை. அதே போல பல்லவர் சிற்பங்களில் வாளை இடுப்பில் வைக்காமல் முதுகில் வைப்பது வழக்கம் போல உள்ளதே? முதுகில் இருபக்கம் கூடு உள்ளது. ஒரு பக்கம் அம்புக்கூடு என கருதலாம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து கிராட அர்ஜுனம் சிற்பத்திலும் இதே போல இருப்பதை நாம் காணலாம்.

ராஜசிம்மன் நம்மை போல கலை ஆர்வலர்களுக்கு மட்டும் அல்லாமல் வரலாற்று ஆர்வலர்களுக்கும் மிகவும் நல்லவன் போல. பிற்காலத்தில் யார் இவற்றை எடுப்பித்தனர் என்ற சர்ச்சை வர வாய்ப்பே கொடுக்காமல் (காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய் நான்கு முறை தனது 244 பெயர்களை பிருடா பட்டப்பெயர்களை – செதுக்கிய அரசன் அல்லவோ!) இந்த சிறு சிற்பத்தையும் விட்டுவைக்கவில்லை – ஸ்ரீபர மற்றும் ரணஜெயா என்ற தனது பெயர்களை செதுக்கி விட்டு இது என்னுடையதே என்று சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் செதுக்கி விட்டான்.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி. மேலே பார்த்தப் படங்களில் ஒன்றை விட்டு விட்டோம். என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

படங்களுக்கு நன்றி : திரு அசோக் கிருஷ்ணசுவாமி மற்றும் திரு சாஸ்வத்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மல்லை திருமூர்த்தி குடவரை – ஒரு புதிர்

நண்பருடன் ஒரு மின் அரட்டை ( இதை பதிவாக இடுவதற்கு அனுமதி கொடுத்ததற்கு அவருக்கு முதல் நன்றி – பெரும்பாலும் உரையாடலை அப்படியே இடுகிறேன் – சில இடங்களில் சிறிய மாற்றங்கள் – அழகு படுத்த )

N: வணக்கம் விஜய், நேற்று மல்லை சென்றேன்

Me: மிக்க மகிழ்ச்சி, இப்போது உங்கள் படங்களை தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் தளத்தை குறிப்பிட்டதற்கு நன்றி.

N: படங்களுக்கு உங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

me: கண்டிப்பாக. சரி, நீங்கள் திருமூர்த்தி குடவரை படங்களை இட்டதனால் அதை ஒட்டி ஒரு புதிரை போடுகிறேன் . விடை சொல்லுங்கள், அங்கே உள்ள மூன்று மூர்த்திகளை யார் யார் என்று அடையாளம் கண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

N: பிரம்மா விஷ்ணு சிவன்

me: ஹஹஅஹா , நல்ல பாத்து சொல்லுங்க சார் , அவ்வளவு எளிதாக இருந்தால் புதிர் என்று சொல்லி இருப்பேனா?

N: ஹ்ம்ம்

me: சரி , பல்லவ குடைவரைகளில் உள்ளே இருக்கும் கடவுளை எப்படி அடையாளம் கொள்வீர்கள். இரண்டு முறை உண்டு, பொதுவாக உள்ளே சிலை / சிற்பம் இருந்தால் அதை ஆய்வு செய்து, அதன் அமைப்பு, கைகளில் உள்ள ஆயுதங்கள் என்று பார்ப்போம், உள்ளே சிற்பம் இல்லை என்றால் வெளியில் நிற்கும் வாயிற் காப்போன்களை கொண்டும் ஓரளவிற்கு அடையாளம் கொள்ளலாம். இங்கே உங்களுக்கு எதுவாக இரண்டுமே உள்ளன. நன்றாக பார்த்து சொல்லுங்கள்.

N: போட்டியில் நண்பனை கேட்டு பதில் சொல்வது போல இங்கே உண்டா ? நீங்களே சொல்லுங்கள்

Me: இல்லை, அப்படி எளிதானதல்ல. நீங்கள் சற்று முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் முக்கியம். பின்னாள்களில் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

N: சரி, நடுவில் இருப்பது சிவன். வலது கையில் மழு உள்ளது லிங்கம் வேறு இருக்கே.

me: ஆமாம், இடது கையில் இருப்பது ருத்ராட்ச மாலை மாதிரி உள்ளது – மான் கண்டிப்பாக இல்லை. எனினும் அந்த லிங்கம் பின்னாளில் வைக்கப்பட்டது.

N: வெளியிலிருப்பது மகிஷாசுரமர்த்தினி
i

me: ஆமாம் , துர்க்கை அம்மன். மேலே அருமையான வேலைபாட்டை மறக்காமல் பார்க்க வேண்டும்.

N: வலது புறம் நீண்ட மகுடம் கொண்டது விஷ்ணு . கையில் சங்கு சக்கரம் உள்ளதே. அடுத்து இருப்பது பிரம்மா


me: ஹ்ம்ம் , விஷ்ணு எளிது – சங்கு சக்கரம் உள்ளதே. அது சரி, எப்படி பிரம்மா என்று அடையாளம் கண்டுகொண்டீர்?.


N: மும்மூர்திகள் தானே. பிரம்மா வந்தால் தானே முழுமை பெரும். அது தானே வழக்கம்.

me: ஹஹா , மலை புதிர் இப்போது தான் வருகிறது. பிரம்மனின் சிற்பங்களில் நீங்கள் முதலில் பார்ப்பது என்ன. தனிதன்மையை தெரிவது ஏது?

N: மூன்று தலைகள்

me: நான்முகன் என்றாலும் சிற்பத்தில் மூன்று தலைகள் – இங்கே தெரிகின்றதா ?

N: இல்லை

me: வெளியில் இருக்கும் வலது புற வாயிற் காவலன், தனது கையில் எதை வைத்துள்ளான்.

N: சரியாக தெரியவில்லையே

me: சரி, உள்ளே இருக்கும் சிற்பத்தின் ஆடை அணிகலனில் எதாவது சிறப்பாக தெரிகிறதா. புதுமையாக ?

N: X வடிவத்தில் பட்டை

me: பிரம்மன் சிலையில் இது போன்று வேறெங்கும் நீங்கள் கண்டதுண்டா?

N:இல்லையே

me: மகுடம் எப்படி உள்ளது

N: நீண்டு முக்கோண வடிவில் உள்ளது

me: மகுடத்தின் அடியில் என்ன உள்ளது ? இந்த உரையாடலை அப்படியே பதிவாக போடட்டுமா

N: ஆமாம் அதன் சிறப்பு என்ன, சொல்லுங்க விஜய்

me:இதை பதிவாக போடட்டுமா ?

N: தாரளமாக போடுங்கள், என் பெயரை போடவேண்டாம்.

me: N, என்று போட்டால் பெயர் தெரியாது அல்லவா?

N: அப்படியே, எனக்கு கூடுதல் புகழ் வேண்டாம்.

me: ஹஹா , அப்போது சரி. வலது புறம் ‘இருக்கு ரிஷி’ – ஸ்ருக் என்ற ஒரு வித கரண்டியை பிடித்துள்ளார். வேத அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்ற பயன்படும். இடது புறத்து காவலன் ஒரு மலரை பிடித்துள்ளார். இதனால் நீங்கள் பிரம்மன் என்ற முதற் கோட்பாடு சரி என்றே தோன்றும். ஆனால் உள்ளே இருக்கும் கடவுளுக்கு தாடியும் இல்லை மீசையும் இல்லை. இளவட்டமாகவே உள்ளார்.

N: ஆமாம், யார் அது , சொல்லுங்கள்

me: அவர் அணிதிருக்கும் மகுடம் , நீங்கள் பார்க்கும் x பட்டை – இவை அனைத்தும் ஒரு போர்வீரனின் சின்னங்கள். பிரம்மனுக்கே வேதத்தை எடுத்துச் சொன்ன போர் வீரன்.

N:முருகன்

me: ஆமாம் முருகன் – பிரம்ம சாஸ்தா என்றழைக்கப்படும் தோற்றம். அது சரி, மேலே பறக்கும் அந்த இரு பூத கணங்களின் கைகளில் என்ன உள்ளது என்று நன்றாக பார்த்து சொல்லுங்கள் பார்ப்போம்.

N: அப்படி என்றால்?

Me: இதில் எனக்கு அவ்வளவு தேர்ச்சி இல்லை. இந்த ஆய்வாளர் பதிவை பாருங்கள்

முருகன் ஆராய்ச்சி மடல் – படங்கள் மற்றும் குறிப்பு இந்த தலத்தில் இருந்து

“இந்த சிற்பம் சிறிய முக்கோண வடிவில் கரண்ட மகுடம் அணிந்து, அதன் அடியில் மலர்களாலான ( கன்னி ) அலங்காரம் உள்ளது. தமிழ் வழக்கில் ஒரு வீரனுக்கே உரித்தான அங்கீகாரம் இந்த கன்னி. மேலும் இந்த x வடிவில் ஆன பட்டைக்கு பெயர் சன்னவீரா – இதுவும் வீரனின் அடையாளம். பல்லவர் காலத்து குறிப்புகள் இவை அனைத்தும் முருகன் ஒரு போர்/வெற்றிக் கடவுள் அதாவது தேவ சேனாதிபதி என்பதை நிலை நாட்டுகின்றன. . “

மேலே உள்ள தளம் முருகன் பற்றிya அருமையான பல தகவல்களை konda தளம். கண்டிப்பாக அங்கு சென்று வாசிக்கவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தேவிக்கு யமனின் பரிசு

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் மீண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான மல்லைக்கு பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத படைப்பு இந்தச் சிற்பம். நாம் முன்னரே பார்த்தது தான் , ஆனால் வேறு ஒரு கண்ணோட்டத்தில். ( இந்தக்கால கட்டுடல் அந்தக்காலத்தில் )

ஆம்!. மகிஷாசுரமர்தினி சிற்பம் தான். இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க மூன்று நான்கு பதிவுகள் தேவை. எனவே இதோ முதல் பதிவு. தேவியை பார்ப்போமா…

‘சித்திரம் பேசுதடி. சிந்தை மயங்குதடி’ என்பது போல பேசாமலேயே நம்மை மயக்கும் சிற்பம் இது. தனது கை இல்லை கல் வண்ணத்தால் நம்மை கிறங்க வைக்கிறான் சிற்பி. அவற்றை பார்க்கும் முன்னர் முதலில் கதையை பார்ப்போம்.

வழக்கம் போல ஒரு அசுரன். மகிஷன். வரம் கேட்டு கடுந்தவம் புரிந்து பிரம்மனை வரவழைத்து அழியா வரம் கேட்கிறான். பிறப்பு என்றால் இறப்பும் நியதி. அதனால் சாகாவரம் தர இயலாது என்று நான்முகன் மறுக்க, தனது வரத்தை சற்று மாற்றிக் கொள்கிறான் மகிஷன். தனது வலிமையின் மீது இருந்த ஆணவத்தால், தன்னை எந்த ஆணாலும் எதிர்க்க முடியாது என்று இருக்க, மிகவும் புத்திசாலித்தனம் என்று நினைத்து தான் மடித்தால் ஒரு பெண்ணின் கையாலேயே மடிய வேண்டும் என்று வரம் கேட்கிறான். நான்முகனும் அவ்வாறே கொடுத்து விட, தவத்தின் பலத்தாலும் தனது அசுர குணத்தாலும் உலகை வென்று அடுத்து தேவலோகத்தின் மேல் படை எடுக்கிறான் மகிஷன். அவனது செயலை முறியடிக்க அனைத்து தெய்வங்களும் ஒன்று கூடி ஒரு தேவியை உருவாக்கி அவளுக்கு தங்கள் சக்திகளை கொடுக்கிறார்கள். எவ்வாறு… ( நன்றி கீதா அம்மா ) தேவி மகாத்தியத்தில் இருந்து வரிகளை எடுத்து அதற்க்கு தமிழில் விளக்கங்களும் தந்தார்.

ஷூலம்ஷூலாத் விநிஷ்க்ருஷ்ய ததெள தஸ்யை பிநாகத்ருக்

பிநாகபாணியான ஈசன் தனது சூலத்திலிருந்து ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அவளுக்குக் கொடுத்தார்.

சக்ரஞ் ச தத்தவான் க்ருஷ்ண: ஸமுத்பாத்ய ஸ்வசக்ரத:
கரிய திருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி அளித்தார்.

சங்கஞ் ச வருண: சக்திம் ததெள தஸ்யை ஹுதாஸன:

வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுதத்தையும் கொடுத்தனர்.

மாருதோ தத்தவாம்ச்சாபம் பாணபூர்ணே ததேஷுதீ

வாயு பகவான் வில்லையும் அம்பையும் பாணங்கள் நிறைந்த அம்பறாத்தூணியையும் அளித்தார்.

வஜ்ர-மிந்த்ர: ஸமுத்பாத்ய குலிசா-தமராதிப:

இந்திரன் தனது குலிசத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வஜ்ராயுதத்தையும் யானையாகிய ஐராவதத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட மணியையும் கொடுத்தான்.

குலிசம் இங்கே இடி என்ற பொருளில் வரும் என எடுத்துக் கொள்ளலாம்

ததெள தஸ்யை ஸஹஸ்ராக்ஷோ கண்டா-மைராவதாத் கஜாத்

காலதண்டாத்-யமோ தண்டம் பாசஞ் சாம்புபதிர்ததெள

யமன் காலதண்டத்தில் இருந்து தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர்.

ப்ரஜாபதிச் சாக்ஷமாலாம் ததெள் ப்ரஹ்மா கமண்டலும்

பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.

ஸமஸ்த-ரோம-கூபேஷு நிஜரச்மீன் திவாகர:

அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படியான கிரணங்களைச் சூரியன் அளித்தான்.
காலச்ச தத்தவான் கட்கம் தஸ்யாச் சர்ம ச நிர்மலம்!

காலன் கத்தியையும் நிர்மலமான கேடயத்தையும் அளித்தான்.

சரி, சிற்பத்திற்கு வருவோம். போருக்கு செல்லும் தேவியின் அழகோ அழகு. எட்டு கைகளுடன், சிங்கத்தின் மீது அமர்ந்து, ஒரு கம்பீரத்துடன் பார்க்கும் அந்த முகம்

நாணை வில்லில் ஏற்றி நிற்கும் பாணி, வில்லை பிடித்திருக்கும் கரத்தை பாருங்கள். கட்டை விரல் வில்லின் மீது படர, மற்ற விரல்கள் பலத்துடன் பற்றி இருக்கும் காட்சி, வில்லை வளைத்து இழுத்து கயிற்றை பிடித்திருக்கும் கரமோ இன்னும் அற்புதம். அதற்க்கு ஏற்றார்போல உடலை சற்று விறைப்பாக செதுக்கி இருப்பது .. உயிரோட்டம்

அடுத்து நம் கண்ணுக்கு சட்டென படுவது – தண்டம். யமனின் கால தண்டம். இது தண்டமோ அல்லது (G)கதையோ என்ற கேள்வி வராமல் இருக்க, சற்று படத்தை உற்று பார்ப்போம்.


கைப்பிடி கதை போல இருந்தாலும், உருண்டையாகவே இருக்கிறது. மேலும் தண்டத்தின் மேல் பாகம் நன்கு உருண்டு உள்ளதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. தண்டம் சிங்கத்தின் பிடரி பக்கம் முடிவதாலும், அதை அடுத்து சிங்கத்தின் பிடரி ரோமங்களின் வேலைப்பாடு இருப்பதால், சிதைந்த கூரிய கத்தி அல்ல என்று நாம் தெளிவாகவே சொல்லலாம்.

மேலும் மற்ற கரங்களில் உள்ள ஆயுதங்கள் என்ன என்னவென்பதை படங்களை கொண்டு பட்டியலுடன் ஒப்பிட்டு கூறுங்கள் பார்க்கலாம்.

ஆமாம், ஈசனிடம் பெற்ற சூலம் எங்கே?. ஒருவேளை வில்லையும் நாணையும் பிடிக்க இரு கரங்கள் தேவைப்பட்டதால் சிற்பி சூலத்தை விட்டு விட்டாரோ?

சிற்பத்தின் அழகை ரசிக்க இன்னும் ஒரு படம். படைப்பு சிற்பம், அதிலும் இப்படிப்பட்ட சிற்பத்தை வடித்த சிற்பி, தேவியை சிங்கத்தின் மீது சவாரி செய்வது போல காட்ட வேண்டும். இங்கே பாருங்கள், வலது கால் எப்படி முழுமையாக வெளியில் நீட்டி செதுக்கி உள்ளான் என்று.

இப்போது நீங்கள் மனதில் இந்த சிற்பத்தை ஒரு தனி படைப்பாக பார்க்காமல், ஒரு குடைவரையின் ஒரு பக்க சுவர் ( மறு பக்கம் இருப்பது நாம் முன்னர் பார்த்த சேஷ சயன பெருமாள் ),

ஒரு மலையினுள் குடைந்த அதிசயம் இது. புரிகிறதா.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

இன்றைய கதாநாயகன் காட்டும் உடல் கட்டு – பல்லவ கால சிற்பம்

பல காலமாக தமிழ் படங்களில் தொப்பையை இறுக கட்டி, அதன் மேல் சட்டை அதற்க்கு மேல் கோட் அணிந்து , சொட்டை தலையை மறைக்க விக் அணிந்து, முகத்திற்கு வெள்ளை அடித்து …அப்ப்பா, பேரப்பிள்ளைகளுடன் விளையாடும் வயதில் தனது பெண் வயது நடிகைகளுடன் மரங்களை சுற்றியும் வயிற்றில் பம்பரம் விட்டும் நம்மை அருவருப்பில் ஆழ்த்தி வந்த கோடம்பாக்கம் , மும்பை மற்றும் அமெரிக்க படங்களை பார்த்து கடைசியில் கொஞ்சம் திருந்தி தங்கள் இடையை கட்டுப்பாட்டில் ( சில நடிகைகளும் கூட ) கொண்டு வந்துள்ளனர். மிக நல்ல விஷயம் .

ஆனால் இவர்களுக்கு சென்னைக்கு மிக அருகில் இருக்கும் மல்லை மகிஷா சுரமர்தினி மண்டபத்தில் ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகளுக்கு முன்னர் வடித்த சிற்பத்தில் வரும் ஒரு வீரப்பெண் காட்டும் உதாரணம் ஏனோ முன்னரே எடுபடவில்லை.

புரியவில்லையா,படங்களை பாருங்கள். பல கோணங்களில் இடுகிறேன். தேவியை பார்காதீர்கள்.
2729270527082714271627312720
சரி சற்று அருகில் செல்வோம். இப்போது தெரிகிறதே. இடுகையின் அர்த்தம் புரிகிறதா ??

அப்பப்பா – என்ன ஒரு கட்டுடல், கையில் பெரிய கத்தி, மகிஷன் காலை வெட்டும் அந்த அற்புத சுந்தரியின் கட்டுடல் கண்ணை பறிக்கிறது. கச்சை கட்டி அவளது முறுக்கேறிய உடலை அழகே வடித்த சிற்பி வாழ்க.

இன்னும் உடற் பயிற்சி செய்யாமல் கணினி முன்னரும் தொலைக்காட்சி பெட்டி முன்னரும் அமைந்திருக்கும் என்னை போல் குண்டர்கள் முதலில் எழுந்து ஓடுங்கள். இடையை குறையுங்கள். சுவரை வைத்து தானே சித்திரம் ( சிற்பம்) எழுத ( செதுக்க ) முடியும்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment