எங்கள் சோகக் கதையை கேளுங்கள் – குப்பையில் எறியப்பட்ட பேரூர் கோயில் தூண்கள்

மீண்டும் ஒரு பயனுள்ள டிசம்பர் இந்திய பயணம். நண்பர்கள் பலரின் உதவியுடன் இன்னும் பல பதிவுகள் இட மூலங்கள் கிடைத்தன. வழக்கம் போல சில கசப்பான காட்சிகள். எனினும் இதுவரை இல்லா வண்ணம் ஒரு திடுக்கிடும் காட்சி. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தூண்கள் படும் அவமானம். முன்னர் ஒரு பதிவில் ஹனுமான் முதலை வயிற்றில் இருந்து வரும் சிற்பம் பற்றி எழுதினேன்.

Hanuman escapes from a crocodile -perur

அப்போதே அந்த பழைய புகைப்படத்தில் உள்ள தூண் இருக்கும் இடம் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. இம்முறை சென்று பார்த்தபோது புரிந்தது. அதில் இருப்பது இப்போது சிதைந்த நிலையில் ஆலயத்தினுள் இருக்கும் சிறு நந்தவனத்தில் இருந்த தூண்.

உடையாத தூண் ஆலய கோபுரம் அருகில் உள்ள கடையின் கதவில் மறைந்து உள்ளது.

இந்தப் படங்கள் சென்ற டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை ( 2009) . அப்போது அந்த சிறு நந்தவனத்தில் இன்னும் பல சிதைந்த தூண்கள் இருந்தன.


இம்முறை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்றதும் ( சற்று பயத்தோடுதான் ) அங்கே சென்றோம். அங்கே இருக்கும் தூண்களை பார்க்காமல் திரும்ப முடியுமா ?

வாகனத்தை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள சிற்பக் கூடத்தில் உள்ள சிற்பிகளுக்கு வணக்கம் சொல்லி விட்டு திரும்பியது தான் தெரியும் – எதிரில் அப்படி ஒரு கோரக் காட்சி



குப்பையும் சாக்கடையும் நிரம்பி வழிய வெளியே எறியப்பட்டுள தூண்கள். அருகில் சென்று பார்த்தேன் – பயத்துடன் தேடினேன். கண்கள் பார்ப்பதை மனது ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றது – அதே ஹனுமான் தூண்.

தங்க நகையும் வைர ஆபரணங்களுமே பொக்கிஷம் என்று இருக்கும் இந்நாளில், அவற்றையே பாதுகாக்க முடியாமல் இருக்கும் நிர்வாகம், இந்த சொற்ப கல்லில் என்ன இருக்கிறது என்று குப்பையில் எரிந்து விட்டது போலும். சோகம் பொல்லாதது.. யாரிடம் போய் முறையிடுவது..


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கதை சொல்லும் தூண்கள் – பேரூர்

தூண் சிற்பங்கள் என்றாலே ஒரு தனி அழகு தான் – அதுவும் கதை சொல்லும் தூண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பல புராண கதைகள் இன்று நாம் மறந்தே பொய் விட்டோம். அதனால் பல சிற்பங்களை அவற்றின் கதையை அறிந்து ரசிக்க முடிவதில்லை. இதுபோல மறந்த கதையை சொல்லும் பேரூர் தூண் சிற்பத்தை இன்று நாம் பார்க்கிறோம்.

கடைகள் மறைத்து நிற்கும் இந்த தூணைத் தேடி செல்ல வேண்டும். இல்லையேல் அகப்படாது. நமக்கென்று உதவ பிரிட்டிஷ் பட களஞ்சியம் உள்ளது.

கண்டுபிடிக்க இயலவில்லையா. இதோ

கனக சபை படிகளை கொண்டு தூண் எங்கே உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இன்றோ கடைகளுக்கு நடுவில் கயிறு கட்டி…

எனினும் இந்த உடைந்த தூண் கண்ணில் பட்டது.

ஏன் என்று தெரிகிறதா.

ஓவியர் பத்மவாசன் அவர்களுடன் பேசும்போது, தான் அந்த தூணை கூட வரைந்து வைத்துள்ளேன் என்றார். இதோ அவரது ஓவியம்.

சரி, இது என்ன கதை? முழு கதையை ஸ்ரீரங்கம் சேஷ ராயார் மண்டப தூணில் பார்த்தோம். படிக்க இங்கே சொடுக்கவும்.

முதலை வாயில் சென்றது மீளுமா ?

இந்த தூண் எப்படி உடைந்தது. இப்போது நாம் பார்ப்பது மாற்று தூணோ ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

முதலையின் வாயினுள் சென்றது மீளுமா?

ஹனுமான் முதலையின் வயிற்றில் இருந்து வெளி வந்ததை முன்னர் பார்த்தோம். இப்பொது அதேபோல இன்னொன்று.

தாராசுரம் கோவில் சிற்பம் – பெரியபுராண கதைகளில் ஒன்று – அவினாஷியில் சுந்தரர் முதலையால் விழுங்க பட்ட சிறுவனை உயிர் பித்த கதை,
1640
சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை உண்ட பாலகனை அவினாசி சிவபிரானை வேண்டிப் பதிகம் பாடி மீட்டுத்தந்த அற்புதம் – சிற்பத்தில்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70920&padhi=092&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

7.92.4

உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

அவர் பாடிய திருப்பதிகத்தில், `கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே` என வேண்டிப்பாடுவதைக் காணலாம்.

முதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற அந்தணச் சிறுவர் இருவர், இங்குள்ள நீர் நிலையில் குளித்தபோது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று. மற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்து, நிகழ்ந்ததை அச்சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான். அவனின் பெற்றோர் மிக்க துயருற்றனர். இது நிகழ்ந்து சில ஆண்டுகளான நிலையில் உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர். அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் கவன்றனர். அவர்களின் நற்காலம் சுந்தரர் அத்தலத்துக்கு எழுந்தருளினார்.

சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்கத் திருவுளம் கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார். அவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார்.

நிகழ்ந்ததை அவ்வூர் வேதியர்கள் உரைத்தனர். அவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார். சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.

அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.
16371642

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=213

Thanks to Mr. V. Subramanian, for his valuable guidance with regard to the verse references.
http://www.geocities.com/nayanmars

முதலை வாயில் போனது மீண்டும் வெளி வருமா ?

இந்த தூணில் இருக்கும் அரிய சிற்பம் ( ஸ்ரீரங்கம் கோயில் தூண் ) நான் இதுவரை வேறு எங்கும் கண்டதில்லை – இதை விளக்க நாம் ராமயாணதினுள் செல்ல வேண்டும்.

இராவணனின் மகனான மாயை அனைத்தும் அறிந்த இந்த்ரஜித் ஏவிய பானத்தில் வீழ்ந்த இலக்குமணன் உயிர் பிழைக்க சஞ்சிவினி தேவை என்று மருத்துவர் கூற – ஹனுமான் சென்று பர்வதத்தை பெயர்த்து கொணர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவன் அங்கு செல்லும் காரியம் நிறைவேறாமல் இருக்க ராவணன் தனது மாமன் காலமேணி என்கிற அசுரனை அங்கு அனுப்புகிறான். அவன் அங்கு ஒரு ரிஷி வேடம் பூண்டு, ஹனுமான் வரும் போது அவனை ஆசி புரியும் பாணியில் அருகில் இருக்கும் குளத்தில் நீறாடி விட்டு வருமாறு கூற, அனுமனும் அவ்வாறே அங்கு செல்கிறான் – குளத்தில் கால் வைத்துமே ஒரு பெரிய முதலை அவனை விழுங்கியது – ஹனுமான் அதன் வயிற்றை கிழித்து வெளி வந்தான். அப்போது முதலை மடிந்து ஒரு தேவதை உரு பெற்றது – தக்ஷன் சாபத்தினால் தான் முதலை வடிவம் பெற்றதாகவும் – தன் இயற் பெயர் தண்யமாலி என்றும் – விமோசனம் தந்த ஹனுமனை வணங்கி ஆசிபெற்றால் – உள்ளே இருப்பது ரிஷி அல்ல அசுரன் என்ற உண்மையை அறிந்த ஹனுமான், தன் தலையாய பணி தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்து , அசுரனின் காலை பிடித்து தலைக்கு மேல் சுற்றி விசினான் – அசுரன் அங்கிருந்த இலங்கை ராவணனின் சபையில் வந்து விழுந்து மாண்டான்.

இந்த கதையை தான் இந்த தூண் சிற்பம் விளக்குகிறது – உற்று கவனியுங்கள் – படத்தின் வலது புறம் மேல் பாதி – முனிவர் வேடத்தில் அசுரன் விரல் நீட்டி குளத்தை காட்டும் காட்சி, இடது புறத்தில் ஹனுமான் முதலை வயிற்றை கிழித்து வெளி வரும் காட்சி, அதே காட்சியில் தேவதை ரூபம், வலது புறம் கீழே – பொலி சாமியாரை உதைக்கும் ஹனுமான்..



என்ன அருமையான வேலைப்பாடு, முதலையின் உடம்பின் அமைப்பு, அதில் இருந்து வெளிவரும் அனுமனின் கம்பீர தோரணை – இவை நாம் முன்னர் ஸ்ரீரங்கம் அலசிய குதிரை சவாரி தூண்களில் பின்புறம் என்பதை மனதில் கொண்டு பாருங்கள் (குதிரையின் பின்னங்கால் தெரிகிறது )

இதே போல முதலை வாயில் இருந்த மீண்ட இன்னும் ஒரு கதை உண்டு – அதற்கும் சிற்பம் இருக்கிறது, அவற்றை வரும் மடல்களில் பார்போம்.