புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு சிற்ப விருந்து

நண்பர்களே, இன்றைக்கு நமக்கு ஒரு சிற்ப விருந்து. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்த இரு நண்பர்கள் – இல்லை இல்லை அவர்களை அங்கு சென்று படம் எடுத்து வாருங்கள் என்று தூண்டி இப்போது அதன் பலனை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். புள்ளமங்கை ஒரு கலைப் புதையல். ஆனால் புதையல் என்றாலே புதையுண்டு பல காலம் நினைவில் இருந்து விலகி பின்னர் கண்டுபிடிக்கப்படுவது போல, இன்னும் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷம் புள்ளமங்கை. அதன் அருமைகளை இந்த தொடரின் மூலம் வெளியிடுகிறோம்.

பொதுவாக இடுகைகளில் படங்களை தொலைவில் இருந்து இட்டு மெதுவாக அருகில் செல்வோம். ஆனால் இந்த பதிவுக்கு அதை சற்றி தலைகீழாக மாற்றி, முதலிலேயே அருகில் செல்வோம். படித்து முடித்தவுடன் ஏன் என்று உங்களுக்கு புரியும்.

இன்று நாம் பார்கவிருப்பது நான்கு சிற்பங்கள். கந்தன் பிறப்பை கல்லில் காட்சியை வடிக்கும் சிற்பங்கள், மற்றும் சில யாளிகள்.

எனக்கு பிடித்தமான யாளிகளுடன் துவங்குகிறேன்.

அற்புத வடிவங்கள், இவ்வளவு திறமை கொண்டு இவற்றை வடித்தான் சிற்பி என்றால், இவை வெறும் அலங்கார மதிப்புக்காகவா என்ற ஐயம் வருகிறது?

இன்னொரு யாளி ( கொம்புடன் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் வ்யாலா என்கிறார்கள் )


என்னடா, முருகனின் பிறப்பு என்று சொல்லி மீண்டும் யாளிகளை வலம் வருகிறானே என்று எண்ண வேண்டாம். போகப் போக உங்களுக்கே புரியும் . சரி இதோ சிற்பங்கள்.


முதல் வடிவம். உமையும் ஈசனும் ஆடும் அற்புத நடனத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கும் காமன் மற்றும் ரதி. இருவர் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம். ஆடல் வல்லானின் ஆட்டத்தின் ஆண்மை கலந்த தோரணை, உமையின் வடிவத்தில் பெண்ணிற்கே உரிய நளினம்.

அடுத்த வடிவம், உமையை தன்பால் ஈர்க்கும் ஈசன்.

வெட்கப்படும் பாவையாய் உமை, கடைக்கண் பார்வையால் தலைவனை பார்க்கும் வண்ணம் – ஆஹா, ஈசன் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

அடுத்து, இன்னும் நெருங்கி விட்டனர். தனது ஆசைக்குரிய பார்வதியை அன்புடன் சிவன் அணைக்கும் காட்சி.

இந்த சிற்பம் வடித்த சிற்பிக்கு உள்ள அறிவுக்கூர்மையை பாருங்கள். முதல் பார்வையில் ஈசனுக்கு இரண்டு வலது கரங்கள் இருப்பது போல வடித்தாலும் – ஒரு கை பின்னால் அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் , இன்னொரு கரம் உமையை அன்புடன் அணைப்பது போல இருந்தாலும், சிற்பத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள்.

கல்லில் ஈசனின் கை உயிர் பெற்று, நகர்ந்து உமையைப் பற்றுவது போல காட்டவே சிற்பி அப்படி வடித்தான் போல !!

அது சரி, அந்த முதல் ஸ்பரிசத்திற்கு உமையின் பதில். அப்பப்பா, நாணம் என்றால் இது தானோ !!!

அதனுடன் நிறுத்தவில்லை சிற்பி, நந்தியை கொஞ்சம் பாருங்கள்.

மேலே இருபுறமும் கணங்கள், கிழே பணிப்பெண் என்று பின்னுகிறான் சிற்பி.

நான்காவது சிற்பம். முருகன் பிறப்பு.

புரியவில்லையா. ஈசனின் மடியில் ஒரு குழந்தை, அப்பாவை செல்லமாக கை நீட்டி ஆசையாய் கன்னத்தை தொடுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு, ஐவர் கையில் மற்ற ஐந்து குழந்தைகள்.

சிற்பங்கள் மற்றும் படங்கள் தரம் குறித்து சிலர் அதற்குள் கூறும் மறுமொழிகள் கேட்கிறது ( நல்லவை கெட்டவை இரண்டும் !!)

ஒரு நிமிடம் பொறுங்கள். காரணத்தை படங்கள் மூலமே சொல்கிறேன்.

இன்னும் முடியவில்லை

இன்னும் தொலைவில் இருந்து, இப்போது புரிகிறதா ? இந்த சிறிய சிற்ப புதையல்களை நாம் முதல் பார்வையில் விட்டு விடக் கூடும்.

நான் ” சிறு ” என்று பதிவில் சொன்னேனா ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தஞ்சை இரண்டாம் யாளி வரிசை

முந்தைய பதிவில் தஞ்சை பெரிய கோயில் முதல் யாளி வரிசையை பார்த்தோம். அவை யாளிகளா அல்லது சிம்மங்களா என்று நண்பர்கள் பலர் கேட்டனர். அவர்களை விட இன்னும் பன்மடங்கு நண்பர்கள் தஞ்சை கோயிலுக்கு பல முறை சென்றும் இந்த வரிசைகளை பார்க்கவில்லை / பார்கவில்லையே !! என்றும் வருந்தினர். அவர்களுக்காக இன்று இன்னும் ஒரு யாளி வரிசை ( முன்னர் பார்த்து மேல் வரிசை, இப்போது பார்ப்பது கீழ் வரிசை ) -நன்றி சதீஷ் – அருமையான படங்கள், மற்றும் கூர்ந்து கவனித்து படங்களின் அளவை குறிக்க அவர் கையாண்ட முறை மிக அருமை.

முதலில் படங்களை படங்களாகவே இடுகிறேன், வரிசையை கண்டு பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள்

சரி, இப்போது தெரிகிறதா பாருங்கள்.

அடுத்தது

அடுத்தது

அடுத்தது

சற்று இன்னும் அருகில் சென்று இந்த அற்புத யாளிகளை தரிசனம் செய்வோம். பலர் இவைகளை சீன டிராகண் போல உள்ளது என்று கூறுவார், எனினும் அவற்றை பார்த்தல் சற்று பயமாக இருக்கும், எனக்கு தஞ்சை யாளிகள் கொடூரமாக காட்சி அளிப்பதை விட சற்று விளையாட்டாய் சிரிப்பது போலவே உள்ளது.

யாளி வரிசையின் கொடிகள் இன்னும் அருமை. இவை ஏற்கனவே மிகவும் அளவில் சிறியவை. அந்த சிறிய அளவிலும் மேல் வரிசையை போல யாளி வாயில் இருந்து வெளி வரும் வீரர்களை போல இங்கும் செதுக்கி உள்ளனர். அதற்க்குமேல் ஒரு பொடியன் வேறு.அப்பப்பா அபாரம் .

பேனா மூடி அளவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது

இவை போதாதென்று அதே அளவில் ஒரு அருமையான யானை உரி போர்த்திய மூர்த்தி வேறு

அடுத்த முறை பெரிய கோவில் செல்லும் பொது, அதன் பிரம்மாண்டத்தை மட்டும் கண்டு வியக்காமல் இந்த சிறிய சிற்பங்களையும் கண்டு களியுங்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தஞ்சையின் யாழி வீரர்கள்

கடந்த சில மடல்கள் சற்ற ஆழ்ந்த கருத்துக்களை அலசின. இன்று சற்று ஆற அமர சிற்பங்களை மட்டும் பார்ப்போம். மற்றும் நண்பர்கள் திரு பிரசாத் சென்ற மடலில் மிகவும் குறைந்த அளவே படங்கள் இருந்தன என்றும் திரு சதீஷ் அவர்கள் என்னிடத்தே விட்டு சென்ற படங்கள் பல இருந்தும் இன்னும் வெளி வரவில்லை ( திரு சந்திரா அவர்கள் கூட ) புகார் அளித்தார். அலுவல் சம்பந்தமான பயன்களின் காரணமாக பல இழைகள் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் கொண்டு வருகிறேன். இவை அனைத்தையும் மனதில் கொண்டு இந்த இழை –

“தஞ்சை யாழி வீரர்கள். ”

யாழி பலர் கண்களில் படாமலேயே போகும் சிற்பம். பல பிரதான இடங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் யாழிகள் இருந்தும் ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் அவற்றை திரும்பிப் பார்ப்பது கூட இல்லை. அது போல இன்று தஞ்சை பெரிய கோயில் யாழி, விமானத்தை சுற்றி இரண்டு வரிசைகளாக வரும் இந்த யாழிகளின் அழகிய பவனி.

இன்று மேலே இருக்கும் யாழி வரிசையை பார்ப்போம்

இந்த வரிசைகளின் நடுவில் எனது உளம் கவர்ந்த அருள்மொழிவர்மர் அவர்களது கல்வெட்டுகள். பிரம்மாண்டமான தஞ்சை கோயிலின் முன் நிற்கும் போது பலருக்கு பல உணர்ச்சிகள் தோன்றும். பலரும் அதன் பெரிய அளவை கண்டு பிரமிப்பு , வியப்பு – ஆனால் எனக்கோ சொந்த மண்ணிற்கு திரும்பும் உணர்வே வரும்.

சரி சரி, யாழிக்கு வருவோம். மேலே இருக்கும் வரிசைகளை இன்று பார்ப்போம். ( நன்றி சதீஷ். பொருமையாக அருமையான படங்களை எடுத்து அனுப்பியதற்கு )

முதல் பார்வையில் ஒரே சீராகவும், ஒரே சிற்பம் போலவும் இருக்கும் இவை, மிக அழகு. உற்று பாருங்கள் , யாழிகள் , யாழி மேல் இருக்கும் வீரன், எல்லோருமே ஒரு வித உயிர் ஓவியமாகவே இருக்கின்றனர்.

அனைத்து சிற்பங்களும் ஒரே மாதிரி உள்ளனவா, ஒரே சிற்பத்தை மீண்டும் மீண்டும் செதுக்கி உள்ளனரா? இல்லையே !!


வாசகர்களுக்கு சிற்பங்களின் அளவை உணர்த்த சதீஷ் ஒரு தண்ணீர்க் குடுவை அருகே வைத்து படம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு யாழி வீரனும் வெவ்வேறு தோரணையில் இருப்பதை பாருங்கள்


இந்த யாழி வரிசையில் கோடியில் இருக்கும் சிற்பம் இன்னும் அருமை. ஒரு பெரும் யாழி, அதன் வாயில் இருந்து வெளியே வரும் வீரர்கள் …அப்பா , பிரமாதம். இதே போல சிற்பங்கள் பல ,சோழர் கோயில்களில் உள்ளன ( சதீஷ் மற்றும் சந்திரா – புரிகிறது , உங்கள் படங்கள் இருக்கின்றன , விரைவில் இடுகிறேன்




அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கலை புலிகள், மல்லை புலி குகை

சென்னை வாசிகள் பலருக்கு தெரியாத மூன்று கலை பெட்டகங்கள் மல்லைக்கு சற்றே முன்னர் சாளுவன்குப்பம் என்னும் இடத்தில் இருக்கிறது…மல்லை நுழைவதற்கு சுமார் இருநூறு அடி முன்னர் ASI போர்டு இருக்கிறது…ஆம் இங்கு இன்றும் புது புது கண்டு பிடிப்புகள் உண்டு…

 வெளி தோற்றத்தில் மிக எளிமையாக காட்சி அளிக்கும் இந்த இடம் …மூன்று அருமையான பல்லவ கலை பொக்கிஷங்களை கொண்டு உள்ளது.. ஒன்றொன்றாக பார்ப்போம்.

 

முதலில் புலி குகை என்று தவறாக அழைக்கப்படும் இந்த யாழி மண்டபம்…பதினோரு யாழிகள் சுற்றி இருக்க …..மேடை …இருபுறம் பாயும் சிங்கங்கள்…ராஜ சிம்ம பல்லவனின் சின்னம்…1300 வருடம் பழமை …நீங்கள் தொட்டு பார்க்கலாம்.

யாழி என்றோமே…எதனால்…உற்று பாருங்கள்…இவை பார்ப்பதற்கு சிங்கங்கள் போல இருந்தாலும் அழகிய வளைந்த கொம்புகளை உடையன..எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு எப்படி உணர்த்துவது…சரி…இதோ படத்துக்குள் நானே வருகிறேன்…குண்டாக ஆம் நூறு கிலோ எடையுடன் என்னை சிறியதாக காட்டும் சிற்பத்தின் அளவு இப்போது புரிந்ததா.


ஒரு புறமாக இருக்கும் மேடைக்கு அடுத்து இரு யானைகள்…அவற்றின் மேல் அம்பாரி…அதனுள்…ஆம் ஏறி படம் எடுத்தோம்…சரியாக தெரியவில்லை…மிகவும் சிதைந்த நிலையில் உள்ளன சிற்பங்கள்….


அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக இந்த அழகிய யாழி மண்டபத்தை கண்டு வாருங்கள்…இன்னும் இரண்டு இடங்கள் பாக்கி …..


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment