சென்ற மடலை பார்த்தவுடன் நண்பர் சீனு விழிஞ்சம் குடவரை திரிபுரான்தாக வடிவம் அப்படியே மல்லை தவம் ஈசனை போல உள்ளது என்று கூறினார். அபாரமான திறன் அவருக்கு. ஆம், நீங்களே பாருங்கள் - முக அமைப்பு, காதணிகள் - என்ன ஒரு ஒற்றுமை.
அது மட்டும் அல்ல, சென்ற மடலில் இணைத்திருந்த தளத்தில் இருந்து இந்த படத்தை எடுத்தேன். கல்லில் கூரான பொருளை வைத்து கீறியது போல உள்ளது. இதே போல மல்லையில் பார்த்த நினைவு - ஆம்,மல்லை கோவர்தன சிற்பம் - வலது புறம் சற்று மேல் இருக்கும் அமர்திருக்கும் காளையின் பின்னால் - சிற்பி குடவரை சுவரை குடையவும் - சமமாக அமைக்கவும் இவ்வாறு செய்தனர். இரு இடங்களிலும் உள்ள ஒற்றுமை இதோ.
இதனால் நமக்கு தெரிவது என்ன ?
மறுமொழி அளிக்கவும் »
பகுப்பு: சிற்பம்
குறிச்சொற்கள்: இந்தியா, தவம், குடவரை, சிவ, சுற்றுலா, விழிஞ்சம்
தொடர்புடைய இடுகைகள்:
நண்பர்களுடன் நேற்று முழு தினத்தையும் கழித்தேன். அப்போது கேரளா நண்பர் ஒருவரிடத்தில் இந்த தளத்தை கட்டிக்கொண்டு இருக்கையில், அவர் பல்லவ குடைவரைகள் போலவே திருவனந்தபுரத்திற்கு அருகில் விழிஞ்சம் குடவரை பற்றி ஒரு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் சற்று தேடினேன். படங்கள் சிக்கின, எனினும் ஒரு புதிரும் வந்தது.
இந்த குடவரை பற்றி விளக்கும் ஒரு சில இணைய தளங்களும் இது ஒரு பதினெட்டாம் நூற்றாண்டு அமைப்பு என்று கூறுகின்றனர். எனினும் சிற்பங்களை பார்த்தல் பல்லவ பாணி மிகுதியாக உள்ளது. எனக்கு தெரிந்த மட்டில் பல்லவ அரசன் ராஜ சிம்மன் கட்டுமானக் கோவில்களை நிறுவ ஆரம்பித்தவுடன் தமிழகத்தில் குடைவரைகள் நின்று விட்டன என்று நினைத்தேன். வாசகர்களுக்கு மேலும் விவரம் தெரிந்தால் பகிருங்கள்.
இப்போதைக்கு படங்களை இணைக்கிறேன். அருமையான பாறை ( மல்லை புலி குகை நினைவுக்கு வருகிறது ) - உள் இருப்பவர் வினதாரி தக்ஷினாமுர்த்தி.
ஆனால் பல்லவ, பாண்டிய குடைவரைகள் போல வெளியே த்வாரபாலகர்கள் இல்லை - ஒரு பக்கம் வில்லுடன் ஈசன் - திரிபுராந்தகன் ? மறு பக்கம் உமையுடன் ஈசன் ( மிகவும் சிதைந்த நிலை )
குகையின் இந்த அருமையான படக்காட்சியையும் பாருங்கள்
குகையின் விளக்க படம்
படங்களுக்கு நன்றி : திரு . ஹரி
http://picasaweb.google.com/vihar7/TemplesOfVizhinjam#5225771479151879650
மறுமொழி அளிக்கவும் »
பகுப்பு: சிற்பம்
குறிச்சொற்கள்: தக்ஷிணா மூர்த்தி, இந்தியா, பல்லவ, குடவரை, சிவ, சுற்றுலா, விழிஞ்சம்
தொடர்புடைய இடுகைகள்:
அண்மைய மறுமொழிகள்