Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘தசாவதாரம்’

ஆயிரம் ஆலயங்களை கொண்ட ஊர் என்ற பெயர் கொண்ட ஊர் எது தெரியுமா. காஞ்சி தான். அது வெறும் பகட்டு அல்ல - காஞ்சியில் எந்த தெருவில், எந்த இடத்தில நின்று பார்த்தாலும் குறைந்தது மூன்று ஆலயங்களாவது தெரியும். இப்படி குவியும் எண்ணிக்கையில் தனியாக நிற்கும் ஆலயம் ராஜ சிம்ம பல்லவனது காஞ்சி கைலாசநாதர் - காலத்தால் மிகவும் பழமையான கட்டுமானக் கோயில் என்ற முறையில் மட்டும் அல்ல, சிற்பக்கலை பல்லவ சிற்பிகளின் கைத்திறத்தின் மகிமையில் அடைந்த உன்னத நிலையின் பிரதிபலிப்பு இந்த கலைக் கூடம். அந்த தனித் தன்மையை ஆலயத்தினுள் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்திலும் நாம் காணலாம். நாம் இன்று பார்க்கும் பாற்கடல் காட்சியும் அதை போலவே வேறு எங்கும் காண இயலாத ஒரு காட்சி.

Kailasantha+sculpture

பொதுவாகவே பாற்கடல் கடையும் காட்சியை விளக்கும் சிற்பங்களை இந்தியாவில் பார்ப்பது அரிது. கம்போடியா அங்கோர் வாட்டில் மிக அருமையான ஒரு சிற்பம் இருக்கிறது. அதே போல அதனை ஒட்டிய காலத்தில் அருகில் சில இடங்களில் இந்த காட்சி உள்ளது. பொதுவாககம்போடியா வடிவங்களில் பெருமாளை முழு உருவமாகவும் அவதார ரூபமான கூர்ம வடிவமாகவும் இரு வடிவங்களாக இருக்கின்றன. ( பாங்காக் விமான நிலைய நவீன சிற்பம் கூட இது போல தான் உள்ளது ) மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும் அசுரகளும் இரு புறம் நின்று கடையும் காட்சி அற்புதம்.

எனினும் இந்த காஞ்சி கைலாசநாதர் வடிவம் மிகவும் விசித்திரமாக உள்ளது. இங்கே கூர்ம வடிவம் சித்தரிக்கப்படவில்லை.

churning+kanchi

நடுவில் இருக்கும் எட்டு கைகளை கொண்ட பெருமாள் உருவம் - ஒரு கையில் சங்கு மற்றொரு கையில் சக்கரம் என்று கம்பீரமாக உள்ளது.

discus+conch
discus+conch+offset

எனினும் பெருமாள் சிற்பத்தின் நடு இடத்தை வகிக்காமல் ஒரு பக்கமாகவே இருப்பதால் , அவர் சாய்ந்து அல்லது சாயாமல் பிடித்து நிற்கும் இடத்தை நாம் ஆராய வேண்டும்.

main+act
vishnu

அவர் நிற்கும் பாணியும் முக்கியம். சாதித்து விட்டு நிற்கும் ஒரு வெற்றி பரவசம் தெரிகிறது.

notice+4+hands
notice+posture

அடியில் நாக அரசன் - மந்தார மலையை மத்தாக கொண்டு கடைய உதவிய கயிறாக வாசுகி.

vasuki

அப்படி என்றால் பெருமாள் தூக்கிப் பிடிக்கும் தூண் போன்ற வஸ்து தான் மந்தார மலையாக இருக்க வேண்டும். மத்து போன்றே இருக்கிறதே !

mount+madhara

மந்தார மலையில் ஒரு பறக்கும் உருவம் கையில் எதையோ ஏந்தி வருகிறது.

dhanvantari+nectar+pot

அருகில் சென்று பார்ப்போம்.

closeup+dhanvatari+nectar+pot

ஆஹா, அமிர்த கலசத்தை ஏந்தி வரும் தன்வந்தரி. காரியம் முடிந்து விட்டது. இதனுடன் பல அற்புத வஸ்துகள் வெளியில் வந்தன என்று நாம் அறிகிறோம். கௌஸ்துபம் என்ற கல் பெருமாளின் நெஞ்சை அலங்கரிக்கும் நகையாக மாறியது, காமதேனு, கல்பவிருக்ஷம்,ஐராவதம் என்ற வெள்ளை யானை, சில குறிப்புகள் படி பெருமாளின் சங்கு, சக்கரம் மற்றும் உச்சைஷ்ராவாஸ் என்ற ஏழு தலை வெள்​ளைப் புரவியும் வந்ததாம்.
கைலாசநாதர் சிற்பங்கள் இப்போதே அழகு, அவை வடித்தபோது மேலே அழகாக பூசப்பட்டு வண்ணம் தீட்டி இருக்கக் கூடும். இன்றோ அவை மிகவும் சிதைந்து இருக்கின்றன - நம்மால் பல குறிப்புகளை பார்க்க இயலவில்லை. எனினும் ஒரு பக்கத்தில் ஒரு புரவி உள்ளது. இந்த புரவியின் வெள்ளை நிறத்துக்கும் அதன் வாலுக்கும் இன்னொரு கதை உண்டு. அதை வேறொரு தினம் பார்ப்போம்.

notice+horse+in+corner
ucchaishravas

இப்போது புரிகிறது - வேலை முடிந்து விட்டது. அதனால் தான் பெருமாள் தன் சுய ரூபத்தில் அழகாக நின்று அனைவரின் புகழாரத்தை வாங்கிக் கொண்டு சிரிக்கிறார் போல.

படங்களுக்கு நன்றி : திரு அசோக் கிருஷ்ணசுவாமி

மறுமொழி அளிக்கவும் »

சென்ற மடலின் தாக்கம் அப்பப்பா , கார சார விவாதம் நடைபெறுகிறது. அதன் இரண்டாம் பாகம். மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்கு உரிய சிற்பத்தை பார்ப்போமே.

Hanuman somnathpur with vishnu attributes and bana lingam
bana lingam
closeup of hanuman
face of hanuman
left hand holding the conch
right hand holding the discus

இது ஹனுமான் பாண லிங்கத்தை கொண்டு வந்ததை குறிக்கிறதா?.

ஆம் என்பதற்கு

ராமேஸ்வரம் தல புராணம், சிற்பத்தின் முக தோற்றங்கள்.

இல்லை என்பதற்கு

ஹனுமனின் வால் எங்கே , அருகில் இருக்கும் இரு மாந்தர்கள் யார், சங்கு மற்றும் சக்கரம் எதற்கு ( இதை விளக்க சீனு அவர்களது நல்ல வாதங்கள் )

சரி, இது வேறென்ன சிற்பமாக இருக்கலாம்.

மச்ச அவதாரமாக இருக்குமோ

ஆனால் அங்கேயே மச்ச அவதார சிற்பமும் உள்ளதே.

somnathpur1
Somnathpur - Matsya

இதை பற்றயும் நாம் விவாதம் செய்தோம், முடிவில் சிற்பத்தின் கண்களை கொண்டு இந்த சிற்பம் மச்ச அவதாரம் என்ற முறையில் எடுத்துக்கொண்டோம்.

மீண்டும் ஒருமுறை அருகில் சென்று அதையும் பார்ப்போம் ( நன்றி அர்விந்த் )

face of fish, notice the eyes
macha avatar closeup

இந்த சிற்பத்தையும் முந்தைய சிற்பத்யும் ஒப்பிடுபோது இரண்டும் கண்டிப்பாக ஒரே உருவம் இல்லை என்று தான் கூறவேண்டும்

வராஹ அவதாரமாக இருக்குமோ

இருக்கலாம். எனினும் வராஹம் முக தோற்றம் வேறு விதமாக இருக்குமே. ( இந்த அஹோபிலம் சிற்பத்தை பாருங்கள் )

ahobilam varaha side
ahobilam varaham

புவியை உருண்டையாக இந்த சிற்பத்தின் காலத்தில் காட்ட வில்லை (புவி உருண்டை என்பது அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பது வேறு விஷயம்), அப்படியே இருந்தாலும் சங்கையும் சக்கரத்தையும் அற்புதமாக வடித்த சிற்பி அதை மட்டும் முட்டையை போல வடிவத்தில் ஏன் வடித்தான் என்பது சரியாக வரவில்லை.

bana lingam
left hand holding the conch
right hand holding the discus

அருகில் இருக்கும் இரு மாந்தர், பொதுவாக எல்லா சிற்பங்களிலும் அவர்கள் வருவர் போல உள்ளது. இதோ இந்த ப்ரஹ்மா சிற்பம் பாருங்கள்.

brahma somnathpur

சரி, அடுத்து இன்னும் ஒரு சிற்பம் நம் ஆய்வுக்கு - கூர்ம அவதாரம்.

Somnathpur - could be kurma

அருகில் சென்று பார்ப்போம்.

Kurma avatar
kurma avatar closeup
kurma face

கச்சபேசுவரர் வடிவில் சைவ ஆகமங்களில் இந்த கதை வந்தாலும் - ஒருமுறை சிற்பத்தை ஒப்பிடுவோம்.

face comparison

எதுவுமே பொருந்தவில்லையே. இதனால் எனது கணிப்பு ஹனுமனையே ஒட்டி செல்கிறது. ( கண்டிப்பாக கண்கள் முக்கிய ஆவணம் )

சிதைவடைந்த சிற்பங்கள் பல நேரங்களில் நம்மை குழப்புவது உண்டு. அது போல இதோ ஒரு சிற்பம்.

another mystery image

யாரப்பா , இது என்ன சிற்பம் என்று சொல்லுங்களேன். உடல் கணபதி , தலை ??

அருகில் செல்வோம்.

closeup of mystery image showing all atrributes of ganesha

ரொம்ப குழம்ப வேண்டாம். இது ஒன்றும் நவீன கணபதி அல்ல. அருகில் சென்று தடயங்களை தேடுங்கள்.

its our Ganesha only

மேலே - இடது புறம் பாருங்கள்.

the piece of the trunk holding a modhakam

உடைந்த துதிக்கையின் மிச்சம் - அவனுக்கு பிடித்த மோதகத்தை இன்னும் பிடித்துள்ளதே . இது நமது கணபதி தான்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »