[lang_ta]
அர்ஜுனன் பசுபத அஸ்திரம் பெற கடுந்தவம் புரிந்தான். பிறகு காட்டில் ஒரு பன்றியை வேட்டையாடும் பொது ….இரு வீரர்களின் நான் ஒரே சமயத்தில் பாய…. போட்டியாக வேட்டையாடும் வேடுவ தலைவன் …. கிராடன் ஒருவனுடன் அவன் சண்டை இட்டான்….வெகு நேரம் போரிட்டும் அர்ஜுனனால் அந்த வேடுவனை வெல்ல இயலவில்லை… பிறகு வந்திருப்பது ஈசன் என்று உணர்ந்தான் …..
அந்த கதை காஞ்சி கைலசனாத கோவிலில் இருக்கிறது – இது ஒரு அற்புத வடிவம். கிராட ( சிவன் வேடன் வேடத்தில் ) அர்ஜுனன் மறு பக்கம்.. இரு வீரர்களின் பாணியும் அபாரம்..எதோ இக்கால புகைப்பட விளம்பரம் போல உள்ளது ..நானேற்றிய வில்லுடன் ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் காட்சி ….இருவரின் முதிகிலும் இருப்பது அம்புகள் வைக்கும் பை … பின்னால் ( படத்தின் இடது பாகத்தில் ) அவர்கள் சண்டைக்கான பரிசு – காட்டுப்பன்றி
[/lang_ta]