நாதர் முடி மேல் இருக்கும் நல்லபாம்பே ….எளிபண்டா நடராஜர். .. ஆனால் இந்த பாம்பு இப்போது தான் தனது இடத்திற்கு போகிறது – என்ன அழகு -நெளிந்து வளைந்து தனது உடலை நிஜ பாம்பு எப்படி காட்டில் ஒரு மர கிலையில் இருந்து இன்னொரு கிலைக்கு தொங்கி தாவுமோ அதே போல … ஆனால் கல்லில்..( அருகில் நான்முகன் தாமரை ஆசனத்தில்)
ஆடும் அரசனின் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம்.. பல கைகளுடன் அவன் அடுவது …ஒரே கையின் மிக வேகமான சுயற்சி போல உள்ளது.. சிதைந்த நிலையிலும் அந்த நடனம்….தோள்களின் அமைப்பு…சிதைந்த அவன் முகத்தில் தான் என்ன ஒரு சாந்தம்…ஒரு தேஜஸ்
என்ன அபாரமான வேலைப்பாடு, சரி இவை எப்படி சிதைந்தன, குறி பார்த்து சுடும் பயிற்சிக்காக யாராவது இந்த அருமையான் சிற்பத்தை தேர்ந்தெடுப்பார்களா, ஆனால் போர்த்துகீசியர் தேர்ந்தெடுத்தார்களே, சிதைத்துவிட்ட மாபாவிகள்