பரங்குன்றம் உமை ஆண்டார் குடைவரை – பல கேள்விகள் – ஒரு ஆய்வு – பாகம் 1

நமது பண்டைய கலைச்செல்வங்களை புரிந்துக்கொள்ள அறிதலும் புரிதலும் பகிர்தலும் மிகவும் முக்கியம். பல விஷயங்கள் நமக்கு முதல் கண்ணோட்டத்தில் பல கேள்விகளை எழுப்பி குழப்பினாலோ – அவை அனைத்தும் நமது அறிவுப் பயணத்தில் படிகள் என்றே உணர்ந்து மேலும் நம்மை நம் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அப்போது முடிச்சுகள் தானே அவிழும் ! அப்படி ஒரு முடிச்சு பரங்குன்றம் உமை ஆண்டார் குடைவரை. முருகனை மட்டுமே தரிசித்து திரும்பும் பக்தர்கள் மலைக்கு பின்புறம் ஒரு குடைவரை இருப்பதையே மறந்துவிடுகின்றனர்.

குடைவரையின் முகப்பை பார்க்கும் போதே – அந்தத் தூண்களில் உள்ள வேலைப்பாடு அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை என்பதை உணரலாம். இந்த கலை வேலைப்பாடு அதிகம் இல்லாத தடியான தூண்களை கொண்டு இந்த குடைவரையின் காலம் எட்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னர் என்று நாம் சொல்லமுடியும். இந்த குடைவரையின் வெளியிலேயே பல புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றை அடுத்த பதிவில் காண்போம். உள்ளேயும் பல சிற்பங்கள் இருக்க நேரே உள்ளே கருவறைக்கு செல்வோம். இங்கே தான் முதல் முடிச்சு. புடைப்புச் சிற்பங்களில் உள்ள கலைத் திறன் வடிவம் ( ஒரு அழகிய நடராஜ வடிவமும் உள்ளது இதைக் கொண்டு இவை கண்டிப்பாக பன்னிரெண்டாம் / பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதாக இருக்க முடியாது என்று சொல்லிவிடலாம்.

இவற்றைக் கொண்டு பரவலாக இந்த குடைவரை சமணர் குடைவரையாக இருந்து சைவர்களால் மாற்றி அமைக்கப்பட்டது என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இந்த முடிச்சை அவிழ்க்க – கருவறையில் உள்ள சிற்பத்தை ஆராய்ந்து ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

உள்ளே சிவனுடைய அர்த்தநாரி வடிவம் உள்ளது.

நான்கு கரங்கள் கொண்ட அர்த்தநாரிவடிவம் – உமை , மகேசன் இருவரின் பாகங்களும் சிறப்பாக வேற்றுமை காட்டப்பட்டு செதுக்கப்பட்டுள்ளது.

இங்கே தான் குழப்பம் ஆரம்பிக்கிறது. பொதுவாக கருவறையில் நாம் அர்த்தனாரி வடிவத்தை பார்ப்பதில்லை – சோமாஸ்கந்தர் வடிவம் நிறைய இடங்களில் வரும். அடுத்து இந்த புடைப்புச் சிற்ப்பத்தின் அளவு கருவற்றின் அளவை வைத்துப் பார்க்கும் பொது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் பீடத்தின் அமைப்பு – அகலமான அளவு மற்றும் தரையில் இருந்து உயரம் – இவற்றை வைத்து பார்த்தல் அது அமர்ந்திருக்கும் வடிவம் ஒன்றுக்காக வடித்து போலவே உள்ளது. ரிஷப வாஹனம் இருக்கும் பக்கமும் விநோதமாக உள்ளது. நாம் முன்னரே அர்தனாரி வடிவத்தின் தோற்ற வளர்ச்சியை ” சிற்பிக்கு “விடை”யே விடை” என்ற பதிவில் பார்த்தோம்.

மீண்டும் ஒரு முறை பாருங்கள்.

தர்மராஜா ரதம்.

அகஸ்தீஸ்வர

திரிபங்க வளைவை ஈடு கொடுக்க ரிஷபம் வருவதை பாருங்கள்.

விருத்தாசலம்.

எலிபண்டா


இப்போது பரங்குன்றம் வடிவத்தில் உள்ள ரிஷபம் இடம் மாறி இருப்பது தெரிகிறதா. இப்படி ஒரு தவறை இவ்வளவு பெரிய குடைவரையை வடித்த சிற்பி செய்ய வாய்ப்பில்லை.

மேலும் அர்தனாரி வடிவத்தின் மேல் புறம் சற்று பார்க்கும் போது இன்னும் ஒரு துப்பு கிடைக்கிறது. எதோ சுருள் சுருளாக மற கிளை போலவும் இல்லாமால் கொடி போன்ற வடிவங்கள் உள்ளன.


பொதுவாக குரு வடிவத்தின் மேலே மட்டுமே மரம் வரும். இந்த சுருள் வடிவம் நமக்கு ஒரு முக்கிய ஆதாரம். கீழ் வரும் சமணர் வடிவங்களை பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.

தேடல் தொடரும்.

படங்கள் நன்றி : உதயன், அரவிந்த், மற்றும் ஹிந்து பேப்பர்

http://www.hindu.com/2003/05/22/stories/2003052203230500.htm
http://www.hindu.com/2006/02/06/stories/2006020602410200.htm
http://www.herenow4u.net/index.php?id=76895


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

லிங்கோத்பவர் தோற்றமும், அதன் வடிவமைப்பின் வளர்ச்சியும்…

எந்த ஒரு சிற்பத்தைப் பார்க்கும் பொழுதும் நமக்கு மனதில் எழும் முதல் வினா, ’இது எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருக்கும்?’. அது கற்சிலைகளாக இருந்தால் நன்று, ஏனெனில் பெரும்பான்மையான் சிற்பங்கள் அது ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே அதே இடத்திலேயே இருப்பதால் கல்வெட்டுக்களை வைத்தோ அல்லது வரலாற்றைத் தேடியோ நம்மால் அதன் பூர்வீகத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது உலோகச் சிற்பங்களுக்கு சாத்தியமில்லை. காரணாம் ஏனைய உலோகச் சிற்பங்கள் அதன் இடங்களில் இருந்து பெயர்க்கப்பட்டு உலகின் வெவ்வேறு மூலைகளில், காட்சியகங்களில் வைக்கப் பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அதே இடத்தில் இருக்கும் சிற்பங்களைப் பற்றி அறிய நம் வழிபாட்டு முறை கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஆகவே, நாம் இங்கு கல்லில் வடிக்கப்பட்ட லிங்கோத்பவரின் கலைப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கியச் சிற்பம் லிங்கோத்பவராகத்தான் இருக்கும். பெரும்பான்மையான ஆலயங்கள் கிழக்குப் பார்த்த நிலையில், கருவறையின் மேற்குப் பகுதியில் வீற்றிருப்பார் நம் கட்டுரையின் நாயகர். பல்லவர் காலம் தொட்டு, முற்கால மற்றும் பிற்காலச் சோழர்களின் கலையையும் எடுத்துக் காட்டும் விதமாக ஆறு சிற்பங்களை எடுத்துக் கொள்வோம்.

இது காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலிருந்து – ராஜசிம்ம பல்லவன் (700-728CE)

இந்தச் சிற்பம் பிற்காலப் பல்லவர் கலையைச் சார்ந்தது, அதாவது குடைவரைகளிலிருந்து மாறுபட்டு தனிக்கோயில்களாக கட்டத் தொடங்கிய பின்பு உருவானது. உற்று நோக்கினால், பல்லவர்களுக்கே உரித்தான மிகவும் கனமான யக்னோபவிதம் மற்றும் ஆபரண அலங்காரங்கள் தெரியும். கட்டு மஸ்தான உருவமாக அல்லாமல சிவன் ஒரு சாதாரண இளைஞன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அக்னி லிங்கத்தைப் பிளந்து காட்சியளிப்பது போல் அல்லாமல், தனியாக ஒரு சாய்ந்த சதுரவடிவத்திற்குள்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரிசூலம், பிறைச் சந்திரன், பக்கவாட்டில் உள்ள பிரம்மாவையும், விஷ்ணுவையும் போல் நீண்ட மேல் பாகத்து உடல், வட்ட வடிவ முகம், தடித்த மூக்கு, அலங்காரத் தோரணங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

என்ன அழகு! அது சரி இந்தச் சிற்பம் அந்த ஆலயத்தில் எங்குள்ளது என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

திருமயம் சத்யகிரி சிவ குகையிலிருந்து…

ஏறக்குறைய முன் கண்ட சிற்பத்தின் காலக்கட்டமே இதுவும், ஆனால் இதனை வடிவமைத்தவர் பல்லவர்கள் என்றும், பாண்டியர்கள் என்றும், முத்தரையர்கள் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அற்புதமான சிற்பம். அக்னி பிழம்புகள் தூணின் பக்கவாட்டில் இருந்து கிளம்பி, இயற்கையாய் மேல் நோக்கி வளர்வதைப் போல் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகள் மட்டும் கொண்டு சாம பங்கத்தில் நிற்கும் சிவன், இடக்கையை இடுப்பின் மீது வைத்து கதி ஹஸ்த முத்திரையையும், வலது கையில் வரத ஹஸ்த முத்திரையையும் காட்டி வரமளிக்கும் தோற்றத்தில் உள்ளார். நீள்வட்டத்தில் சிவபெருமானை அழாய் வெளிப்படுத்துகிறது அந்தத் தூண்.

தூணின் தடிமனை பயன்படுத்தி, வலது கையை மடித்து வைத்து அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறான் சிற்பி. தடித்த நாசிகளும், உதடுகளும், அழகிய வதனமும் அமைதியைக் காட்டுகிறது. சில்பசாஸ்திரங்கள் சொல்வதைப் போல், முகத்தின் உயரத்திற்கும் மேல் வளர்ந்த சடாமுடியின் கட்டமைப்பு சிறப்பு. ஆபரண அணிகலன்கள் குறைவு, அதே சமயம் தொப்புளுக்கு மேலே உள்ள் மிகவும் தடித்த உதர பந்தனம் குறிப்பிடத்தக்கது. அழகாய் வடிக்கப்பட்ட கீழாடையிலும் கற்கள் பதிக்கப்பட்ட அல்லது சிங்க முத்திரை இடுப்புக் கச்சையும் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.

வலது கையின் மேல் ஒற்றை நூலாலான மிகவும் தடித்த யக்னோபவிதம், சுவாரசியம் கூட்டுகிறது. பல்லவருக்கு உரித்தான வடிவமைப்பு அல்லவா! இயற்கையான ஒரு சாதுவைப் போன்றதொரு உருவமைப்பு, கட்டுமஸ்தாக இல்லைதான் ஆனாலும் வலிமையான் தோள்கள். குறைந்த ஆபரணங்களும், இந்த வடிவமைப்பும் சிற்ப சாஸ்திர நூல்களின் குறிப்புகள் படி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக காட்டுகிறது. அங்கே கிடைக்கும் சிதைந்த கிரந்த கல்வெட்டுகளும் உறுதிப் படுத்தும் ஆனாலும் ப்ரம்மனையும், விஷ்ணுவையும் ஏன் அன்னமாகவும், பன்றியாகவும் கூட அந்த சிற்பி இங்கு காட்டவில்லை?!

சோழம் மீண்டும் துளிர்த்ததும், ஆலயங்கள் கட்டுவது மிகுந்தது. அதனால் சிற்பிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அந்தக் கலையை வளர்த்தனர். ஆகவே, இனிவரும் உருவங்களைப் படித்தல் சற்று கடினமான வேலைதான். பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த புஞ்சை நல்துணை ஈஸ்வரம் மற்றும் புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் சிற்பங்களைக் காண்போம்.

புள்ளமங்கை – முதலாம் பராந்தகச் சோழன் ( 907 – 955 CE)

சிவனின் முகம் சிதைந்துள்ளது. மாபெரும் லிங்கோத்பவர், விஸ்ணுவும், ப்ரம்மாவும் இரண்டு பக்கமும். இதைத் தவிர வேறு சிற்பங்கள் இங்கு தனித்துவம் பெறவில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் வளர்ச்சி, தேவைக்கு அதிமானவை நீக்கப்பட்டு லிங்கோத்பவர் மட்டும் தனித்துவம் பெறுகிறார். அதோடு ப்ரம்மா மேலே பறந்து செல்வது போலும், விஸ்ணு பூமியை வராகமாகி துளைத்துச் செல்வது போன்ற காட்சி தத்ரூபம். இந்தத் தூண் மொத்தமும் இன்னும் சிற்பத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை, தூணில் இருந்து அக்னி வெளிப்படுவது போன்ற காட்சிதான் இன்னமும் தெரிகிறது.


சிவனைத் தவிர மற்ற இரு உருவங்களிம் அளவில் சிறியதாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய ஆனால் தெளிவான முத்திரைகளாக மானும், மழுவும் கொண்ட கைகள் தூணிற்குள்ளே மற்றும் இடையளவு யக்னோபவிதம் கொண்ட மெலிதான ஒல்லி உருவம், அழகிய நீள்வட்ட முகம். பல்லவர் கால நேர்கோட்டிலிருந்து சற்றே வளைந்த வடிவத்திற்குள் இருந்து கால்கள் தெரியும் அளவிற்கு வடிக்கப் பட்ட உருவம். என்ன கலையின் வளர்ச்சி தெரிகிறதா?

புஞ்சை – 955 CE

கல்வெட்டுகளில் புஞ்சைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் ஆதித்தர் காலத்தைக் ( 965-969 CE) குறித்தாலும் சிற்பங்களின் வடிவமைப்பு முதலாம் பராந்தகர் காலத்தையே காட்டுகிறது.

ஆஹா! லிங்கோத்பவருக்கென்றே சிறந்த தோரணம், லிங்கத்திற்கு தொப்பி போன்ற உருவமைப்பு மலர் வளையத்துடன், அன்னமாக ப்ரம்மனும், வராகமாக விஸ்ணுவும் கொள்ளையழகு. இங்கு தனியாக சிற்பங்கள் ப்ரம்மனுக்கும், விஸ்ணுவுக்கும் இங்கு இல்லை. மற்றும், அக்னி சுவாலைகள் தூணின் பக்கவாட்டிலிருந்தே இன்னமும் கிளம்புகின்றன.

பல்லவர் காலம், பல்லவர் காலத்திற்கும் சோழர்களுக்கும் இடைப்பட்ட மற்றும் முந்திய சோழர் காலம், இந்த காலகட்டத்தில் லிங்கோத்பவரின் கலை வளர்ச்சி இரண்டு நூற்றாண்டுகளில் அபரிமிதம்! நன்கு தெளிவான, வலிமையான மார்பு, வட்ட வடிவ முகம், சிம்ம முகம் பதாகை, லிங்கத்தின் திறப்பு குறிப்பிடத்தக்கவை.

தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் – ஸ்ரீ ராஜ ராஜ சோழர் ( 985 -1014 CE)

மற்றுமொரு நூற்றாண்டில் ஏராளமான மாற்றங்கள், முழுமையான லிங்கம், அளவில் மிகவும் குறைந்த ப்ரம்மாவும், விஸ்ணுவும், துல்லியமான முக வடிவமைப்பு, நன்கு விரிந்த மார்புகள், மெலிந்த இடை, அக்னி தூண் முதலியன குறிப்பிடத்தக்கவை.

திருபுவனம் – மூன்றாம் குலோத்துங்க சோழன்( 1178 -1218CE)

மேலும் ஒரு நூற்றாண்டு, சிற்பக்கலை அதன் சிகரத்தில்! விதிகள் வளர்ந்து, தன்னிஷ்டம் போல் வடிக்கும் அலங்காரங்கள் குறைக்கப்பட்டு, முழு லிங்கமும் சிவ பெருமானால் ஆக்கிரமிக்கப் பட்டு, அளவில் குறைந்த, மேலே பார்த்ததை விட சற்று பெரியதான ப்ரம்மாவும், விஸ்ணுவும் கொண்டு, சிவனைச் சுற்றிய நீள்வட்ட வெளிப்பாடு துல்லியமாக விதிகளுக்குட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடைசி சோழ மன்னன் குலோத்துங்கன் காலச் சிற்பம்.

படங்கள்: நண்பர்கள் அசோக், சௌரப், அர்விந்த், சதீஷ் , சாஸ்வத் மற்றும் ஸ்ரீராம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

யானை பிரசவம் – சிற்பத்தில்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டை ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள சிவன் ஆலயத்தில் உள்ள ஒரு அற்புத வடிவத்துடன் துவங்குவோம்.

நண்பர் திரு பிரதீப் சக்ரவர்த்தி புண்ணியத்தில் இந்த வருடப்பிறப்புக்கு ஸ்ரீமுஷ்ணம் சென்றோம் – அதுவும் கல்வெட்டு கலைஞர் முனைவர் திருமதி மார்க்ஸ்யா காந்தி அவர்களுடன் செல்லும் பாக்கியம் கிடைத்தது. பல அற்புத சிலைகள் பார்த்தோம் – அதில் எனக்கு மிகவும் பிடித்ததை இன்று பார்ப்போம்.

பூவராஹா சுவாமி ஆலயத்தை பார்த்துவிட்டு அதை ஒட்டி இருக்கும் சிவன் கோயிலுக்கு நடக்கும் போதே பெரிய செங்கல் மதில் சுவர் தென்பட்டது. நான் இவ்வளவு பெரிய ப்ரஹாரட்தை எதிர்பார்க்கவில்லை.

( இரண்டாவது படம் திரு ராஜேந்திரன் அவர்களது – Raju’s temple visits)

உள்ளே செல்லும் வரை சற்று அசதியாகவே இருந்தது. ஆனால் எதிரில் கண்ட சோழர் கலை உடனே உற்சாகம் ஊட்டி துள்ள வைத்தது.

நிறைய சொல்லவேண்டும், காட்டவேண்டும் – எனினும் இன்று நாம் பார்க்க இருப்பது…அதற்கு முன்னர் இந்த வடிவம் – நான் வரலாறு டாட் கம வலைத்தளத்தில் இந்த பதிவை பார்க்கும் போதே ஆவலை தூஒண்டி மனதில் பதிந்துவிட்டது

மூன்று யானைகள் சேர்ந்து யானைக்கு பிரசவம் பார்க்கும் காட்சி. இதே போல எங்காவது நம் கண்ணிலும் படுமா என்று தேடிக்கொண்டே இருந்தேன். இந்த கோயிலில் அந்த தேடலுக்கு விடை கிடைத்தது. தேவ கொஷ்டங்களின் நடுவில் ஒரு அலங்கார தூண். அதில்…


நடுவில் உள்ள சிறு சிற்பம் கண்ணில் பட்டது.

என்னடா – ஏதாவது யானைகள் ஏடாகூடமாக இருக்கும் சிற்பமோ என்ற பயம் ஒரு புறம் இருக்க – ஒரு முறைக்கு இருமுறை அருகில் சென்று உறுதி செய்து கொண்டேன்.



நண்பர் திரு ராகவேந்திர பிரசாத் அவர்கள் கேட்டவுடன் உடனே படமாக வரைந்துக் கொடுத்தார். என்ன அழகாக தாய் யானை அலங்கார வளைவை தனது தும்பிக்கையால்
சுற்றி பிடித்து முயற்சி செய்கிறது…

இரு வடிவங்களை பார்த்த பின்னர் – அவற்றில் உள்ள ஒற்றுமைகளை காணமுடிகிறது. முன் பக்கம் இருக்கும் யானை பிரசவிக்கும் யானையின் கழுத்தையும், நடுவில் இருக்கும் யானை இடுப்பை இறுக்கி பிடித்தும், பின்பக்கம் இருக்கும் யானை வாலைத் தூக்கி பிடித்தும் இருக்கின்றன. இயற்கையிலும் இது போல தான் யானைகள் பிரசவம் பார்க்குமோ ??


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment