
யானை என்றாலே நமது சிற்பிக்கு அதித ப்ரியம்…அதிலும் வெள்ளை யானை என்றால் கேட்க வேண்டுமா… அதிலும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் வெள்ளை யானை என்றால்..அப்பப்பா ….ஐராவதம் ….வஜ்ராயுதம் கொண்ட இந்திரனின் யானைக்கு முப்பத்தி மூன்று தலைகள்…ஒவ்வொரு தலைக்கும் ஏழு தந்தங்கல்…இதை எப்படி சிற்பம் / ஓவியத்தில் சித்தரிப்பது ….இங்கே ஒரு ஓவிய முயற்சி பாருங்கள்…

இதில் என்ன வியப்பு என்றால் ஐராவதம் தாய்லாந்து மற்றும் கம்போடியா , விஎத்னம் போன்ற இடங்களில் மக்கள் இன்றும் மிக நேர்த்தியாக வழிபடுகின்றனர் …அங்கே இராவடி என்று ஒரு ஆறு உள்ளது…இங்கே பாருங்கள் தாய்லாந்தில் இராவடி என்னும் ஒரு அருங்காட்சியகத்தில் மிக பிரம்மாண்டமான சிலை..சிலையில் ஐராவதத்திர்க்கு மூன்று தலைகள் வைத்து கம்போடியா சிற்பி செதுக்கிய வண்ணம் மிகவும் அருமை…இம்மாதிரி வடிவங்கள் அங்கு நிறைய உண்டு…
இதோ சிலவற்றை பாருங்கள்…
இந்தியாவிலும் பல இடங்களில் இந்திரனின் ஐராவதத்திர்க்கு சிலை இருந்தும் ஒரு தலை கொண்ட சிற்பங்களே அதிகம்…இதோ சோமநாதபுரம் மற்றும் மும்பை அருகே உள்ள பாஜா குடவரை சிற்ப்பங்கள்..
தஞ்சை பெரிய கோவில் புகழ் பெற்ற ஓவியங்களிலும் ஐராவதம் வரும்….அதை வேறொரு இழையில் பார்ப்போம்