சென்னை வாசிகள் பலருக்கு தெரியாத மூன்று கலை பெட்டகங்கள் மல்லைக்கு சற்றே முன்னர் சாளுவன்குப்பம் என்னும் இடத்தில் இருக்கிறது…மல்லை நுழைவதற்கு சுமார் இருநூறு அடி முன்னர் ASI போர்டு இருக்கிறது…ஆம் இங்கு இன்றும் புது புது கண்டு பிடிப்புகள் உண்டு…
வெளி தோற்றத்தில் மிக எளிமையாக காட்சி அளிக்கும் இந்த இடம் …மூன்று அருமையான பல்லவ கலை பொக்கிஷங்களை கொண்டு உள்ளது.. ஒன்றொன்றாக பார்ப்போம்.
முதலில் புலி குகை என்று தவறாக அழைக்கப்படும் இந்த யாழி மண்டபம்…பதினோரு யாழிகள் சுற்றி இருக்க …..மேடை …இருபுறம் பாயும் சிங்கங்கள்…ராஜ சிம்ம பல்லவனின் சின்னம்…1300 வருடம் பழமை …நீங்கள் தொட்டு பார்க்கலாம்.
யாழி என்றோமே…எதனால்…உற்று பாருங்கள்…இவை பார்ப்பதற்கு சிங்கங்கள் போல இருந்தாலும் அழகிய வளைந்த கொம்புகளை உடையன..எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு எப்படி உணர்த்துவது…சரி…இதோ படத்துக்குள் நானே வருகிறேன்…குண்டாக ஆம் நூறு கிலோ எடையுடன் என்னை சிறியதாக காட்டும் சிற்பத்தின் அளவு இப்போது புரிந்ததா.
ஒரு புறமாக இருக்கும் மேடைக்கு அடுத்து இரு யானைகள்…அவற்றின் மேல் அம்பாரி…அதனுள்…ஆம் ஏறி படம் எடுத்தோம்…சரியாக தெரியவில்லை…மிகவும் சிதைந்த நிலையில் உள்ளன சிற்பங்கள்….
அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக இந்த அழகிய யாழி மண்டபத்தை கண்டு வாருங்கள்…இன்னும் இரண்டு இடங்கள் பாக்கி …..