மல்லை தவம், எது அசல் எது நகல்

மல்லை பகிரத ப்ரயதினத்தை வடிப்பதற்கு முன் அருகில் இருக்கும் மலையில் பல்லவ சிற்பிகள்  ஒரு முறை கதையை சோதித்து பார்த்து உள்ளனர்.
779787
இதோ படங்கள். ( புதிய கலங்கரைவிளக்கம் அதன் இருப்பிடத்தை காட்டுகிறது.)

இங்கும் பிளந்த பாறையை தேர்ந்து எடுத்து உள்ளனர் – ஆனால் இங்கு பாறை இரண்டாகவே பிளந்து இருக்கிறது.
785791
வரம் கேட்பவனும் வரம் அளிப்பவரும் இடம் மாறி உள்ளனர். ( இடமிருந்து வலம் ). சோதனை என்பதால் சற்று சிறிய அளவில் செதுக்கி உள்ளனர் (in low relief)
774795
கம்பீர யானைகள் இல்லை ( ஒன்று இரண்டு யானை தலை தெரிகிறது ), பறக்கும் கந்தர்வர்கள், சிவ பூதகணங்கள் உள்ளனர்.

771782789793
சிவனின் கையில் அஸ்தரம் இல்லை.
777806
வரம் அளிக்கும் செதுக்கல் இங்கே இறங்கும் கங்கையின் இடத்தை விட கொஞ்சம் நகர்ந்து இருப்பதால் – விண்ணவரும் மன்னவரும், அனைத்து ஜீவராசிகளும் கங்கை இறங்கும் காட்சியை காணவே விரைகின்றனர்….. எனவே இங்கு அவர்கள் முதலில் விண்ணகர கங்கை புவி இறங்கும் காட்சியை மாட்டும் செதுக்க எத்தனித்து ..பின்னர் மறுமுறை அசலில் செதுக்கும் பொது இதில் அர்ஜுனன் பசுபத அஸ்திரம் பெரும் காட்சியை பிணைத்து செதுக்கி உள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *