தந்தையும் மகனும் சிற்பிகளாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்திருக்கும் போல – திருமலைப்புரம்

அந்த காலத்தில் தந்தையும் மகனும் சிற்பிகளாய் இருப்பது பலருக்கு கண்ணுறுத்தலாக இருந்திருக்கும் போல ! தந்தை செய்த சிற்பத்தில் மகன் குறை கண்டுபிடிப்பதும் அதனால் தந்தை தன கையை தானே வெட்டி எறிவது போல பல ( கட்டுக்) கதைகள் எதோ ஒரு ஒற்றில் கேட்டால் பரவாயில்லை – ஊருக்கு ஊர் இதே கதையை அந்த ஊரில் உடந்தை சிற்ப்பத்துடன் ( உள்ளே தேரை இருந்தது தான் அந்த குறையாம் !) இந்த கதையை சொல்லி சொல்லி பரப்பி விடுகிறார்கள். ஆனால் நல்ல வேலையாக இந்த முறை புதிதாக ஒரு கதையை கேட்டோம் !

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழி கேட்டுக்கொண்டு – அதற்க்கு ஊர்காரர்களுக்கு வழி தெரியவேண்டுமே ! தட்டி தடவி, திருமலாபுரம் என்று இன்று அழைக்கப்படும் திருமலைப்புரம் ( திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றடையும் போதே பொழுது சாய்ந்துக் கொண்டு இருந்தது.

பெரிய குன்றில் ஒரு புறம் உள்ள பாறை முகத்தில் வெட்டிய குடவரை பளிச்சென்று தெரிகிறது. அதன் முன்னே அந்த சிற்பி / மன்னன் நின்று பார்க்கும் பொது தங்கள் மனக்கண்ணில் அவர்கள் கைவண்ணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இருப்பார்களா ?

சின்ன குடவரை தான். இரு தூண்கள் – இரு அரை தூண்கள் ( வட திசை நோக்கி ஒரு முடிவுற்ற குடவரை உள்ள்ளது – தெற்கு நோக்கி ஒன்று முடிவு பெறாத நிலையிலும் உள்ளது. அந்த முடிவு பெறாத குடைவரையை வைத்து தான் இந்த கதை வளர்கிறது – அதை பின்னர் பார்ப்போம் )

முதல்லில் வடக்கு குடைவரையை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

அருமையான குடவரையில் நடு நாயகமாக தாய்ப்பாறையில்f செதுக்கிய நந்தி இருந்திருக்க வேண்டும். பாவம், அதன் கால்கள் மட்டுமே நமக்கு எஞ்சி உள்ளன. எவ்வளவு கடினமான வேலைப்படாக அது இருந்திருக்கவேண்டும் ! அடுத்த குடைவரையை பார்க்கும் பொது இது பற்றி நமக்கு மேலும் புரியும்.

இந்த குடைவரையின் காலம் சுமார் ஏழாம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு கணக்கிடப் படுகிறது. இது பாண்டியர் பாணியில் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் தாய்பாரையில் செதுக்கப்பட்டிருப்பது, விநாயகர் சிற்பம் இருப்பது மற்றும் உள்ளே இருக்கும் மற்ற சிற்ப்பங்களின் பாணியை கொண்டும் இவற்றை நாம் அறியலாம்.

இரு வாயிற் காவலர்களில் இடது புறம் இருப்பவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார்.




உட்சுவர்களில் நான்முகன் , பெருமாள் மற்றும் சிவபெருமானின் அருமையான ஆடல் சிற்பம் உள்ளது.


ஆடல் சிற்பம் என்றால் புகழ் பெற்ற நடராஜர் வடிவம் அல்ல – ஆனால் சதுர கோணத்தில், கையில் நடன நூலை பிடித்து அவர் ஆடும் அழகு மிக அருமை. அவருக்கு இருபுறமும் பூத கணங்கள் உள்ளது – வலது புறம் உள்ள கணம் சிதைந்து விட்டது – இடது புறம் இருப்பவர் சங்கீதம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானவர். இந்த ஆடல் காட்சி மற்றும் பூதகணத்தை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இங்கே குறிப்பிட வேண்டியது இந்த சிற்பங்களின் அளவு – மேல் பாகம், முகம் – அணிகலன் எல்லாம் அழகாக இருந்தாலும் – இடுப்பு மற்றும் கால்கள் சற்றே அளவில் குறைவாக இருப்பது சற்று அழகு குறைவாக காட்சி அளிக்கின்றன.

சுவர்களில் ஒரு சில இடங்களில் ஓவியங்கள் இருந்த தடயங்கள் தெரிகின்றன. இந்த குடைவரைகள் முழுவதும் அந்த நாளில் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்திருக்கும் !! இன்னும் ஒரு புதமை இங்கே மும்மூர்த்திகளின் வடிவங்களின் நடுவில் இடத்தை பிரிக்க தூண்களை போலவே கல்லில் செதுக்கி இருப்பது.


பொழுது சாயும் நேரம் ஆகா, விடு விடு என்று அடுத்த குடைவரையை காண சென்றோம். அதற்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. எதோ பாரதிராஜா போல நாங்களும் படம் எடுக்கு வந்திருக்கிறோம் என்று நினைத்தார்களோ என்னமோ ! அந்த குடவரையில் பார்ப்பதுக்கு ஒன்றுமே இல்லை. அதை பூட்டி வைத்துள்ளனர் – சாவி இங்கே இல்லை, என்றெல்லாம் சொன்னார்கள்.



வெளியில் உள்ள அரைகுறை சிற்பத்தை ( விநாயகரா??) பார்க்கும் பொது அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை என்று தான் தோன்றியது. நாங்கள் அந்த பூட்டிய கதவின் கம்பிகளுக்குள் தலையை திருப்பி திருப்பி உள்ளே பார்க்க முயற்சி செய்த எங்களை பார்த்து அவர்களுக்கு கருணை பிறக்கு – தொல்லியல் துறை தொலைபேசி என்னை தந்தார்கள். உடனே போன் செய்து வழக்கம் போல ” எனக்கு ஆசி இல் @#@#@#@#@# சாரை தெரியும் ” என்று ஒரு இரு பிரமுகர்களின் பெயரை சொல்லியவுடன் அவர் ” இதோ வருகிறேன் என்றார் !”

அப்படி அவர் வருவதற்கு காற்று நிற்கும் பொது தான் அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த ” கதையை” சொன்னார்கள். முதல் குடைவரையை செதுக்கிய சிறப்பிக்கு மிகவும் சுட்டியான மகன் ஒருவன் இருந்தானாம். அவன் தன தந்தைக்கு தினமும் வீட்டிலிருந்து ” காபி ” எடுத்து வருவானாம். அவனுக்கு தந்தையின் கலையை கற்க பெரும் ஆசை. அதன்படி அவன் அப்பாவுக்கு காபி வைத்துவிட்டு அவர் செதுக்குவதை பார்த்து மனதில் பதிந்து – மலையின் அடுத்த பக்கம் சென்று அதே போல செதுக்க துவங்கினானாம். தந்தைக்கு இது தெரியாமல் இருக்க தந்தை சுத்தியால் உலையை அடிக்கும் அதே தருணத்தில் தானும் அடிப்பானாம். அப்படியே பல காலம் செல்ல – ஒரு நாள் தந்தை திடீரேனே செதுக்குவதை நிறுத்த – மகனின் உளியின் ஓசை அவருக்கு கேட்டு விட்டது. என்ன கடக்கிறது என்று பாக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி அவர் செல்ல – அங்கே தனது வேலையை யாரோ காப்பி அடிப்பதை கண்டு கோபம் கொண்டார். கோபம் கண்ணை மறைக்க கல்லின் மேலே குடிந்து வேலை செய்வது தன மகன் என்று தெரியாமல் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுவிட்டாராம் !!

அப்போது சாவி வந்துவிட்டது, உள்ளே சென்று நிறை பெறாத அந்த குடவரையில் ” ஒன்றுமே இல்லாத ” சுவர்களில் அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை குடைந்தார்கள் என்று அறிய உதவுகிறது. குறிப்பாக அந்த தாய்பாரை நந்தி …இங்கே அதற்க்கு நடுவில் எப்படி கல்லை விட்டு சுற்றி குடைந்து வருவது தெரிகிறது.

குடவரையில் எப்படி கல்லை குடைந்து இன்னும் ஆழம் செல்கிறார்கள் என்றும் அறியலாம். ஒன்று நாம் கவனிக்க வேண்டும் – இங்கே கல்லில் உள்ள உளி பட்ட மார்க்குகள் மல்லை குடைவரைகளில் நாம் முன்னர் நாம் கண்ட மார்க்குகளை விட சற்று வேறுபட்டு காட்சி அளிக்கின்றன.

படங்கள்: அர்விந்த் வெங்கட்ராமன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தந்தையும் மகனும் சிற்பிகளாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்திருக்கும் போல – திருமலைப்புரம்

அந்த காலத்தில் தந்தையும் மகனும் சிற்பிகளாய் இருப்பது பலருக்கு கண்ணுறுத்தலாக இருந்திருக்கும் போல ! தந்தை செய்த சிற்பத்தில் மகன் குறை கண்டுபிடிப்பதும் அதனால் தந்தை தன கையை தானே வெட்டி எறிவது போல பல ( கட்டுக்) கதைகள் எதோ ஒரு ஒற்றில் கேட்டால் பரவாயில்லை – ஊருக்கு ஊர் இதே கதையை அந்த ஊரில் உடந்தை சிற்ப்பத்துடன் ( உள்ளே தேரை இருந்தது தான் அந்த குறையாம் !) இந்த கதையை சொல்லி சொல்லி பரப்பி விடுகிறார்கள். ஆனால் நல்ல வேலையாக இந்த முறை புதிதாக ஒரு கதையை கேட்டோம் !

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழி கேட்டுக்கொண்டு – அதற்க்கு ஊர்காரர்களுக்கு வழி தெரியவேண்டுமே ! தட்டி தடவி, திருமலாபுரம் என்று இன்று அழைக்கப்படும் திருமலைப்புரம் ( திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றடையும் போதே பொழுது சாய்ந்துக் கொண்டு இருந்தது.

பெரிய குன்றில் ஒரு புறம் உள்ள பாறை முகத்தில் வெட்டிய குடவரை பளிச்சென்று தெரிகிறது. அதன் முன்னே அந்த சிற்பி / மன்னன் நின்று பார்க்கும் பொது தங்கள் மனக்கண்ணில் அவர்கள் கைவண்ணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இருப்பார்களா ?

சின்ன குடவரை தான். இரு தூண்கள் – இரு அரை தூண்கள் ( வட திசை நோக்கி ஒரு முடிவுற்ற குடவரை உள்ள்ளது – தெற்கு நோக்கி ஒன்று முடிவு பெறாத நிலையிலும் உள்ளது. அந்த முடிவு பெறாத குடைவரையை வைத்து தான் இந்த கதை வளர்கிறது – அதை பின்னர் பார்ப்போம் )

முதல்லில் வடக்கு குடைவரையை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

அருமையான குடவரையில் நடு நாயகமாக தாய்ப்பாறையில்f செதுக்கிய நந்தி இருந்திருக்க வேண்டும். பாவம், அதன் கால்கள் மட்டுமே நமக்கு எஞ்சி உள்ளன. எவ்வளவு கடினமான வேலைப்படாக அது இருந்திருக்கவேண்டும் ! அடுத்த குடைவரையை பார்க்கும் பொது இது பற்றி நமக்கு மேலும் புரியும்.

இந்த குடைவரையின் காலம் சுமார் ஏழாம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு கணக்கிடப் படுகிறது. இது பாண்டியர் பாணியில் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் தாய்பாரையில் செதுக்கப்பட்டிருப்பது, விநாயகர் சிற்பம் இருப்பது மற்றும் உள்ளே இருக்கும் மற்ற சிற்ப்பங்களின் பாணியை கொண்டும் இவற்றை நாம் அறியலாம்.

இரு வாயிற் காவலர்களில் இடது புறம் இருப்பவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார்.




உட்சுவர்களில் நான்முகன் , பெருமாள் மற்றும் சிவபெருமானின் அருமையான ஆடல் சிற்பம் உள்ளது.


ஆடல் சிற்பம் என்றால் புகழ் பெற்ற நடராஜர் வடிவம் அல்ல – ஆனால் சதுர கோணத்தில், கையில் நடன நூலை பிடித்து அவர் ஆடும் அழகு மிக அருமை. அவருக்கு இருபுறமும் பூத கணங்கள் உள்ளது – வலது புறம் உள்ள கணம் சிதைந்து விட்டது – இடது புறம் இருப்பவர் சங்கீதம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானவர். இந்த ஆடல் காட்சி மற்றும் பூதகணத்தை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இங்கே குறிப்பிட வேண்டியது இந்த சிற்பங்களின் அளவு – மேல் பாகம், முகம் – அணிகலன் எல்லாம் அழகாக இருந்தாலும் – இடுப்பு மற்றும் கால்கள் சற்றே அளவில் குறைவாக இருப்பது சற்று அழகு குறைவாக காட்சி அளிக்கின்றன.

சுவர்களில் ஒரு சில இடங்களில் ஓவியங்கள் இருந்த தடயங்கள் தெரிகின்றன. இந்த குடைவரைகள் முழுவதும் அந்த நாளில் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்திருக்கும் !! இன்னும் ஒரு புதமை இங்கே மும்மூர்த்திகளின் வடிவங்களின் நடுவில் இடத்தை பிரிக்க தூண்களை போலவே கல்லில் செதுக்கி இருப்பது.


பொழுது சாயும் நேரம் ஆகா, விடு விடு என்று அடுத்த குடைவரையை காண சென்றோம். அதற்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. எதோ பாரதிராஜா போல நாங்களும் படம் எடுக்கு வந்திருக்கிறோம் என்று நினைத்தார்களோ என்னமோ ! அந்த குடவரையில் பார்ப்பதுக்கு ஒன்றுமே இல்லை. அதை பூட்டி வைத்துள்ளனர் – சாவி இங்கே இல்லை, என்றெல்லாம் சொன்னார்கள்.



வெளியில் உள்ள அரைகுறை சிற்பத்தை ( விநாயகரா??) பார்க்கும் பொது அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை என்று தான் தோன்றியது. நாங்கள் அந்த பூட்டிய கதவின் கம்பிகளுக்குள் தலையை திருப்பி திருப்பி உள்ளே பார்க்க முயற்சி செய்த எங்களை பார்த்து அவர்களுக்கு கருணை பிறக்கு – தொல்லியல் துறை தொலைபேசி என்னை தந்தார்கள். உடனே போன் செய்து வழக்கம் போல ” எனக்கு ஆசி இல் @#@#@#@#@# சாரை தெரியும் ” என்று ஒரு இரு பிரமுகர்களின் பெயரை சொல்லியவுடன் அவர் ” இதோ வருகிறேன் என்றார் !”

அப்படி அவர் வருவதற்கு காற்று நிற்கும் பொது தான் அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த ” கதையை” சொன்னார்கள். முதல் குடைவரையை செதுக்கிய சிறப்பிக்கு மிகவும் சுட்டியான மகன் ஒருவன் இருந்தானாம். அவன் தன தந்தைக்கு தினமும் வீட்டிலிருந்து ” காபி ” எடுத்து வருவானாம். அவனுக்கு தந்தையின் கலையை கற்க பெரும் ஆசை. அதன்படி அவன் அப்பாவுக்கு காபி வைத்துவிட்டு அவர் செதுக்குவதை பார்த்து மனதில் பதிந்து – மலையின் அடுத்த பக்கம் சென்று அதே போல செதுக்க துவங்கினானாம். தந்தைக்கு இது தெரியாமல் இருக்க தந்தை சுத்தியால் உலையை அடிக்கும் அதே தருணத்தில் தானும் அடிப்பானாம். அப்படியே பல காலம் செல்ல – ஒரு நாள் தந்தை திடீரேனே செதுக்குவதை நிறுத்த – மகனின் உளியின் ஓசை அவருக்கு கேட்டு விட்டது. என்ன கடக்கிறது என்று பாக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி அவர் செல்ல – அங்கே தனது வேலையை யாரோ காப்பி அடிப்பதை கண்டு கோபம் கொண்டார். கோபம் கண்ணை மறைக்க கல்லின் மேலே குடிந்து வேலை செய்வது தன மகன் என்று தெரியாமல் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுவிட்டாராம் !!

அப்போது சாவி வந்துவிட்டது, உள்ளே சென்று நிறை பெறாத அந்த குடவரையில் ” ஒன்றுமே இல்லாத ” சுவர்களில் அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை குடைந்தார்கள் என்று அறிய உதவுகிறது. குறிப்பாக அந்த தாய்பாரை நந்தி …இங்கே அதற்க்கு நடுவில் எப்படி கல்லை விட்டு சுற்றி குடைந்து வருவது தெரிகிறது.

குடவரையில் எப்படி கல்லை குடைந்து இன்னும் ஆழம் செல்கிறார்கள் என்றும் அறியலாம். ஒன்று நாம் கவனிக்க வேண்டும் – இங்கே கல்லில் உள்ள உளி பட்ட மார்க்குகள் மல்லை குடைவரைகளில் நாம் முன்னர் நாம் கண்ட மார்க்குகளை விட சற்று வேறுபட்டு காட்சி அளிக்கின்றன.

படங்கள்: அர்விந்த் வெங்கட்ராமன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சில வினோத ஆயுதங்கள் !

இந்து மதம் என்பது இந்து மகா சமுத்திரத்தை விட மிகவும் ஆழமானது. அதனாலேயே பலரும் அதனை புரிந்துக்கொள்ள எத்தனிப்பதில்லை. அப்படியே முயற்சிக்கும் பலரும் அதன் தோற்றம் எழுத்து வரலாறு ஏன் கேள்வி வழி வரலாற்றையும் கடந்து நீடிப்பதால் தோல்வியுற்றே திரும்புகின்றனர். அப்படி இருக்கையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மேலை நாடுகளின் கலை வல்லுனர்கள் இந்திய இந்து மதக் கலைசின்னங்களைப் பற்றி சற்று தாழ்வாகவே பார்த்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதன் பின்னர் மெதுவாக நமது கலையை பற்றி புரிதல் வளர்ந்து இன்று ஒரு நல்ல மதிப்பை பெற்று இருந்தாலும், பொதுவாக அவர்கள் மனதில் அவற்றைப் பற்றிய கேள்விகளே அதிகம். அதை நாம் குற்றம் சொல்லக் கூடாது. இந்தியக் கலையானது அதை ஒட்டிய கதைகளை பிரதிபலித்தது. அதை புரிந்துக்கொள்ள அந்த கதைகளை மட்டும் அல்லாமல் அவற்றை சார்ந்து ஓடிய தத்துவங்களின் புரிதலும் தேவை படுகிறது. அப்படி இல்லாமால் வெறுமனே வந்து கோரை பற்களுடன், கொய்த தலைகளை ஏந்திய கைகளையும், மண்டையோட்டு மாலைகளையும், பூத கணங்கள் சூழ , பத்து கரங்களில் கொடிய ஆயுதங்கள் கொண்ட உருவங்களையெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம் தவறாக இருந்ததில் தப்பில்லைதானே !

அதே மண்ணில் பிறந்து வளர்ந்த நமக்கே, முத்தொழில்களில் அழிக்கும் கடவுள் என்று சிவனை பார்க்கும்போது, இடுகாட்டில் , உடல் முழுவதும் சாம்பலை பூசி, பேய்களுடன் ஆடும் அவனது கோலத்தை ரசிப்பது சற்று கடினமே. அவனது லிங்க ரூபம் அதனை ஒட்டிய கருத்துக்கள் பக்கம் போகவே தேவையில்லை. அதுவும் இந்த காளாமுகர், காபாலிகர் , பாசுபதர், பைரவர் வழிபாடு என்று இப்படிஅடுக்கிக் கொண்டே போகலாம்.

எனினும் எப்படி இருந்திருக்கலாம் என்ற கேள்வி கிளம்புவதை ஆதரிக்கும் இந்த மதத்தின் தத்துவார்த்த பின்புலம் அழகு.

சிற்பக்கலையில் ஒரு சில இடங்களில் பழைய கோட்பாடுகள் அங்காங்கே தென்படுகின்றன. திரு கணபதி ஸ்தபதி அவர்களின் அருமையான நூலை கொண்டு சிலவற்றை ஆராயாலாம் Indian Sculpture and Iconography .

ஹளபேடு கோயிலில் எங்கும் சிற்பம் தான். அதில் ஒரு சிவ பைரவர் ரூபம் நமது ஆராய்ச்சிக்கு இன்று உதவுகிறது.

ஹோய்சலர்களின் கலை – ஒரு சிறு இடம் கூட விடாமல் எங்கு பார்த்தாலும் ஏதாவது இருக்கும். அரக்க பரக்க வரும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று பார்க்க கூட நேரம் இல்லாமல் வெளியே ஆம்னி பஸ் ஹார்ன் சத்தம் கேட்டு ஓடி ஓடிப் பார்ப்பதே அதிகம். அப்படி இருக்கையில் இந்த சிலையை நின்று பார்ப்பவர் சற்று அதிர்ச்சி அடைவது சிவனின் இடது கையில் இருக்கும் ஆயுதத்தை கண்டு.

என்ன இது என்று யோசித்துக்கொண்டே , இதெல்லாம் இந்த நூலில் இருக்குமா என்ற சந்தேகத்துடனேயே புரட்டினேன்.

அங்கே


” கட்வங்கம் : இந்த தடி கால் துடை எலும்பினால் செய்யப்பட்டது. அதன் மேலே ஒரு மண்டையோடு பொருத்தப்பட்டு இருக்கும். தடியை சுற்றி ஒரு பாம்பு மண்டையோட்டின் கண் துவாரத்தின் வழி வெளியே வந்து படம் எடுத்து ஆடும். சில இடங்களில் தடி மரத்தால் ஆனதாகவும் இருக்கலாம். பொதுவாக காபாலிக வடிவங்களில் இதனை காணாலாம். இது சிவனின் ஆயுதம். இது சில யோகிகள் மற்றும் ரிஷிகள் கையிலும் இருக்கும். தடி இரண்டு முக தூரமும், இரண்டு விரல் தடிமனும், மண்டையோடு ஐந்து விரல் அகலமும் ஏழு விரல் நீளமும் இருக்க வேண்டும் “

அது மட்டும் இல்லை கூடவே படமும் அப்படியே அச்சில் எடுத்தவாறு இருந்தது. நண்பர் ஓவியர் திரு ராகவேந்திர பிரசாத் அவர்கள் உதவியுடன் இதோ நமக்கு இன்னும் தெளிவான படம்.

இந்தி பற்றி விவாதிக்கும் பொது நண்பர் திரு சுவாமிநாதன் அவர்கள் சோமநாதபுரம் நான்முகன் சிற்பம் ஒன்றைக் கொடுத்து உதவினார். அங்கே இன்னும் ஒரு அபூர்வ வகை ஆயுதம்.

பிரம்மாவின் வலது கையில் உள்ள கருவியை உற்று பாருங்கள்.

மீண்டும் பிரசாத் உதவியுடன்

படைக்கும் கடவுளின் கையில் இருக்கும் இது என்ன என்பதே அவரது கேள்வி.

மீண்டும் நூலைப் புரட்டினேன்.

“சிறுக்’ , ’சுருவம்’ : இவை கரண்டிகள். பிரம்மனின் கருவிகள். யாக சாலையில் யாக குண்டத்தில் தீக்கு நெய்யை உற்ற உதவும் கருவிகள் இவை. யாகம் முடியும் கடை நாளில் பூர்ணஹுதி என்னும் வழக்கில் பல்வேறு காணிக்கைகளை யாக குண்டத்தில் போட இந்தக் கருவிகள் உதவும். ’சிறுக்’ என்பது கட்டையால் ஆன கரண்டியாகும். சுருவம் சற்று வேறுபடும். சதுர வடிவில் இருக்கும் இதன் தலையில் பசு , யானை மற்றும் இதர பிராணிகளின் தலைகளின் வடிவங்கள் அலங்கரிக்கும். இவற்றின் அளவு ஒரு முழமாக இருக்கும். ”

மிகவும் அருமையான வடிவம். அது எழுப்பும் கேள்விகளும் அதிகம். எனினும் தற்போது எனது தேடல் யானை தலையுடன் இருக்கும் ஒரு சுருவம்!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஆலங்குடியானின் அற்புதக்கோலம்.

முந்தைய பதிவில் மகேசன் கையில் விடத்தை எடுக்கும் காட்சியை பார்த்தோம். இந்த பதிவு அதன் தொடர்ச்சி. ஊத்துக்கோட்டை அருகில் இருக்கும் சுருட்டுப்பள்ளி ( சென்னை திருப்தி வழியில் சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் ) இருக்கும் சிற்பத்தை கொண்டு, நண்பர் மருத்துவர் திரு ஷங்கர் குமார் அவர்கள் அருமையான புதிய நடையில், நண்பர் திரு அசோக் கிருஷ்ணசுவாமி அவர்களது படங்களுடன் இதோ ஆலங்குடியானின் அற்புதக்கோலம்.

திருச்சிற்றம்பலம்.

‘முடியாதுன்னா முடியாதுதான்! எவ்ளோ கெஞ்சிக் கேட்டாலும் இதான் பதில்!’ தனது தலையை இப்படியும் அப்படியுமாக வேகமாக ஆட்டியபடியே தீர்மானமாகச் சொல்கிறார் நந்தியார்!

பரிதாபமாகக் கெஞ்சியபடி நின்ற கூட்டம் நிம்மதி இழந்து தவிக்கிறது.

மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், வாயு, அக்னி, வருணன், நாரதர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, இன்னும் இவர்களுடன் எண்ணிலடங்காத் தேவர்களும், முனிவர்களும் அங்கே பதற்றத்துடன் நிற்கிறார்கள்.

‘எல்லாம் இவரால் வந்தது’ எரிச்சலுடன் முணுமுணுக்கிறார் வாயு பகவான்.

தன்னைப் பார்த்துத்தான் சொல்கிறார் எனப் புரிந்த இந்திரன், ‘நான் என்ன எனக்காகவே கேட்டேன்? நம்ம எல்லாருக்காவும்தானே?’ எனப் பதிலுக்கு முறைக்கிறார்.

‘சரி, சரி, இப்ப பழசையெல்லாம் கிளற வேண்டாம்’ எனச் சமாதானப் படுத்த முனைந்தார் பிரமதேவன்.

‘அதெப்படி? வாயு பகவான் சொல்வதும் சரிதானே? இந்திரன் அமிர்தம் வேணும்னு கேட்கப்போனதாலதானே இத்தனை அமர்க்களமும் ஆச்சு.’ எனச் சிண்டு முடிந்தார் நாரதர்.

‘விடாம, துரத்தித் துரத்தி நம்மளையெல்லாம் இம்சை படுத்தின ராக்ஷசர்களோட தொல்லை பொறுக்க முடியாமத்தானே பாற்கடலைக் கடைஞ்சு அமிர்தம் எடுக்க முடிவு செஞ்சோம்? அப்பவும் நம்மளோட சக்தி மட்டும் அதுக்குப் போறாதுன்னுதானே, வேற வழியில்லாம அவர்களையும் கூடச் சேர்த்துகிட்டோம்? இப்படியெல்லாம் ஆகும்னு யார் கண்டா?’ எனச் சற்று தைரியமாகக் குரலை உயர்த்தினார் இந்திரன்.

‘நீ சொல்றதுல்லாம் வாஸ்தந்தான். யாரு இல்லைன்னாங்க? வாசுகியை கயிறா வைச்சுகிட்டு, வடவரையை மத்தாட்டமா கடைஞ்சோம். எங்கே தலைப் பக்கத்தைப் பிடிச்சா பாம்பு கடிச்சிருமோன்னு பயந்துபோயி, நீங்கள்லாம் வாலைப் பிடிச்சுண்டீங்க பாரு, அங்கதான் தப்பாயிடுச்சு. அந்த முரட்டு அரக்கர்கள்லாம் சேர்ந்து வாசுகியோட தலையைக் கெட்டியாப் பிடிச்சு நசுக்கிட்டாங்க பாவிப்பசங்க! வலி தாங்க முடியாம அது தன்னோட வேலையைக் காட்டிடிச்சு. பொங்கிவந்த அந்த ஆலகால விஷத்தைப் பார்த்ததுமே, அதோட உக்ரம் தாங்கமுடியாம எல்லாருமா ‘துண்டைக் காணும், துணியைக் காணும்’னு ஓடிட்டீங்க.’ என நிறுத்தினார் பிரமன்.

‘நான் சொல்லலை…. கொஞ்சம் சீண்டிவிட்டாப் போதும். என்னோட தந்தையார் எல்லா விஷயத்தையும் சொல்லாம நிறுத்த மாட்டார்’ என்பதுபோல ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார் நாரதர்!

அதைக் கவனியாதவர்போல பிரமன் தொடர்கிறார்.

‘விஷமா, அப்பிடியே சீறிப் பாயறது. அந்த உஷ்ணம் தாங்காம, லோகமே…. இந்தப் பிரபஞ்சமே கிடுகிடுத்துப் போயிடுத்து! எனக்கா கையும் ஓடலை, காலும் ஓடலை. என்ன பண்றதுன்னே புரியலை எனக்கு! நேரா அந்த ஆபத்பாந்தவன் சாக்ஷாத் பரமசிவனை விட்டா வேற வழியில்லைன்னு புரிஞ்சிடுத்து.’

‘நிஷ்டையுல இருந்த பரமேச்வரனைப் பாக்கறதுகாக, அப்பவும், இதோ கெஞ்சிக் கூத்தாடிண்டு நிக்கறோமே, அப்படித்தான் இந்த நந்தி பகவான்கிட்ட மன்னாடி, ஒருவழியா அவரையும் மீறிண்டு உள்ளே போயிட்டேன். எல்லாம் புரிஞ்சவர்மாதிரி, தன்னோட கடைக்கண்ணால, பக்கத்துல் நிக்கற சுந்தரரைப் பாக்கறார் சர்வேச்வரன்.’

‘அடுத்த நொடியே, சுந்தரரைக் காணலை அங்கே! சித்த நாழியுல, கையுல அந்த விஷத்தை எடுத்துகிட்டு வரார் அந்தப் பிரபு! கொஞ்சங்கூட முகத்துல இருக்கற களை மாறவேயில்லை அவருக்கு! இத்தனைக் கொடிய விஷத்தைக் கையுல வச்சிண்டிருக்கோமேன்ற பதட்டமே இல்லாம வரார்! அப்படியே வந்து பவ்யமா சிவன் முன்னாடி கையை நீட்டிண்டு நிக்கறார்.’

‘அப்போ நடந்ததுதான் பெரிய ஆஸ்சர்யம்!…. நீங்கள்லாந்தான் அங்கே அப்போ இல்லியே! அதனாலத்தான் இவ்வளவு விவரமாச் சொல்றேன்…… பரமசிவன் லேசாக் கண்ணைத் திறந்து பார்க்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் கையிலிருக்கிற விஷத்தை நொடிப்பொழுதுல எடுத்து, என்னப் பண்ணப் போறாரோன்னு நினைக்கறதுக்கு முன்னாடியே, அப்படியே வழிச்சு தன்னோட வாயுல போட்டுக்கறார்!’

‘என்ன ஒரு கருணை! இந்த லோகத்தும் மேல அவருக்குத்தான் எவ்வளவு அக்கறை! வெளியிலும் இருக்கக் கூடாது அந்த விஷம். தூக்கி எறியவும் இயலாது. எங்கேன்னு எறியறது அதை? இருக்கற ஒவ்வொரு கணமும் அதால இந்தப் பிரபஞ்சத்துக்கே ஆபத்து!! அப்படிப்பட்ட அந்த கடுமையான ஆலகால விஷத்தை இந்த லோக க்ஷேமத்துக்காகத் தானே குடிக்க முடிவு பண்ணின அந்தக் கருணையை நினைச்சு பரவசப்படற அந்த நேரத்துலதான்’ ….என ஒரு இடைவெளி கொடுத்து சுற்றி இருந்தவர்கள் முகத்தைப் பார்க்கிறார் பிரம்மா!

அனைவர் முகத்திலும் ஆச்சரியமும், வியப்பும், திகைப்பும் ஓட பிரம்மாவையே பார்க்கின்றனர்.

அனைவரின் கவனமும் தன் மேல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிரமன் தொடர்கிறார்! நாரதர் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை தவழ்கிறது!

‘ம்ம்ம். மேலே சொல்லுங்க! அப்படி என்ன நடந்தது அப்போ?’ என ஆவலை அடக்கமுடியாமல் வருணன் கேட்கிறார்.

‘வாயில் போட்ட விஷம் இன்னும் தொண்டையைத் தாண்டலை! பக்கத்துல உட்கார்ந்திருந்த உமாதேவி, தனது கையால் பரமேச்வரனோட கழுத்தை இறுக்கிப் பிடிக்கறார்! விஷம் உள்ளே இறங்காம, அப்படியே தொண்டையிலியே நின்னுடுத்து!’

‘ஏன் இப்படிப் பண்ணிட்டார்னு நாங்கள்லாம் திகைச்சுப் போயிட்டோம்! அப்பத்தான் இந்த அற்புதத்தோட அருமை புரிஞ்சுது எனக்கு! யார் இந்தப் பரமேச்வரன்? அகில லோகத்துக்கும் ஆதார சுருதியே இவர்தானே! இவரோட ஆட்டத்தாலத்தானே அகிலமே ஆடறது.. ஆடிக்கொண்டு இருக்கு! அப்படிப்பட்டவரோட வயிற்றுக்குள்ளே இந்த விஷம் இறங்கிட்டா, அப்பறம் இதை வெளியுல வைக்கறதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடுமே! அது மட்டும் உள்ளே போயிட்டா, அந்த விஷம் தன்னோட வேலையைச் செஞ்சுடுத்துன்னா, இந்த லோகமே அழிஞ்சு போயிடாதா?

‘இதைப் புரிஞ்ச ஒரே ஆள் பார்வதிதான்! லோகமாதாவாச்சே அவர்! சர்வலோக ஜெகன்மாதாவுக்கு அந்தச் சிவனை விடவும் இன்னும் அதிகமான அக்கறை இந்த ஜீவராசிகள் மேலே! அதனாலத்தான், அந்த ஆலகாலத்தை அப்படியே பரமசிவனோட தொண்டைக்குக் கீழே போகவிடாம தடுத்து கருணை பண்ணியிருக்கார்! இப்படி ஒர்த்தருக்கு மேலே ஒர்த்தரா அவங்க இரண்டு பேரும் பண்ணின அற்புதத்தாலதான் இன்னைக்கு நாமெல்லாம் இப்படி நின்னு பேசிகிட்டு இருக்கோம்’ எனச் சொல்லிவிட்டு அனைவரையும் பெருமிதத்துடன் பார்த்தார்!

‘அந்த அற்புதத்துக்கு ஈடு இணை உண்டா? ஆனா, அதுக்கு அப்புறம் நடந்ததாக் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தாலத்தானே இப்ப நாம இங்கே இப்படி நின்னுகிட்டிருக்கோம்’ என அவரை நிகழ்காலத்துக்கு இட்டு வருகிறார் பெருமாள்!

‘இதோ, இங்க நிக்கறானே இந்த நாரதன், இவன் தான் அதைச் சொன்னவன்! அவனையே கேளுங்க’ என்று நாரதரைப் பார்க்கிறார் பிரமன்.

‘அதான் ஏற்கெனவே சொல்லியாச்சே! விஷத்தை எடுத்து முழுங்கின சிவபெருமான், அது உள்ளேயும் போகாம, வெளியேவும் வராம, அப்படியே அசதியா சாய்ஞ்சுட்டாராம்! அந்த மலைமகள்தான், அவரைத் தன்னோட மடியுல சாய்ச்சுண்டாராம்! இப்ப அப்படியே கண்ணைத் திறக்காம, அந்த சர்வேச்வரன் காலை நீட்டிப் பள்ளி கொண்டிருக்கிறாம்’ என்றார் நாரதர்!

‘என்னது? பள்ளிகொண்டாரா பரமசிவன்? அது என்னோட வேலையாச்சே! அவர் கண்ணை மூடிண்டு படுத்துட்டா இந்த லோகம் என்ன ஆகிறது? அதான் இந்த பிரபஞ்சமே இருளோன்னு இருக்கு. அவரைப் பார்த்து, அவருக்கும், என்னோட சகோதரி மீனாக்ஷிக்கும் அவ்வளவு துணிச்சலா இந்த லோக நன்மைக்காக இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினதுக்காக, என்னோட வணக்கத்தையும், பாராட்டையும் சொல்லலாம்னு பார்த்தா இந்த நந்தி உள்ளே விடமாட்டேன் என்கிறாரே,’ என அங்கலாய்க்கிறார் பாரளந்த பரமன்.

மற்ற எல்லாரைப் போல இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நந்தி பகவான், மஹாவிஷ்ணுவிடம் வந்து, ‘பெருசா ஒண்ணுமில்லை. லேசா தலை சுற்றுகிறாற்போல் இருக்குன்னு சொல்லிட்டு, அம்மையின் மடியில் சயனித்திருக்கிறார் எம்பெருமான். அவர் நிஷ்டையில் இருக்கும்போது எப்படி எவரையும் உள்ளே செல்ல எனக்கு அனுமதி கிடையாதோ, அதே போலத்தான் இதுவும். ‘என்றவர், உடனேயே, ‘கொஞ்சம் இருங்க. உள்ளே ஏதோ சத்தம் கேட்கிறது. என்னன்னு பார்த்துவிட்டு வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட சூரியனும் தனது அன்றாடப் பணிகளை முடித்துவிடும் தருவாயில் லேசாக எட்டிப்பார்க்கத் துவங்கினான்!

‘நான் உதயமாக இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறது. அதற்குள் சிவதரிசனம் கிடைத்தால் நல்லாயிருக்குமே’ எனச் சந்திரன் கைகளைப் பிசைந்து கொள்கிறான்.

அவன் நினைத்ததுபோலவே அருளுறை அன்னை உடன்வர, ஆலவாய் அண்ணல் அன்புப் புன்னகை பூத்தவண்ணம் வெளியே வந்து தரிசனம் தருகிறார்!

அகிலத்தையே தங்கள் கருணையால் காப்பாற்றிய அம்மையப்பனைக் கண்டதும் அனைவர் முகத்திலும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி ததும்புகிறது!

‘ஆலமுண்ட அண்ணலே போற்றி! அகிலம் காத்தருளிய அன்னையே போற்றி போற்றி!’ எனும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது!

“தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”

திருச்சிற்றம்பலம்!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருவட்டது​​றை: ஒரு ஆலயத்தின் ஜீவநாடி – சிற்பம் மற்றும் புராணம்

நமக்கு இன்று மீண்டும் ஒரு விருந்து, மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க் சென்ற பதிவில் ஞானக் குழந்தைக்கு கிடைத்த குடை மற்றும் பல்லக்கை மிக அழகாக நமக்கு விளக்கினார். இன்று முழு விருந்து. ஒரு ஆலயத்தை எப்படி நாம் இனி பார்க்கவேண்டும் என்று நமக்கு கட்டறுக் கொடுக்கிறார்.

ஒவ்​வொரு ​கோவிலும் ​பல்​வேறு தலவரலாறு ​கொண்டது ​போன்​றே, ஒவ்​வொரு ​தெய்வ வடிவமும், சிற்பமும் பல்​வேறு க​தைக​ளை நமக்கு எடுத்து​ரைக்கின்றன. ஒவ்​வொரு மூர்த்தமும் ஏ​தேனும் ஒரு புராணத்​தை ​மையமாகக் ​கொண்டுள்ளது. ​மேலும் அந்த சிற்பம் வடிக்கப்பட்ட காலகட்டத்தின் வரலாற்​றையும் விளக்கக்கூடியது. ஒரு புராணம் அல்லது ​தொன்மத்​தை அந்த சிற்பியின் காலகட்டத்தில் எவ்வாறு ​சொல்லப்பட்டது என்பதற்கு சான்றாக உள்ளது. சாஸ்திரத்தில் உள்ள ​கொள்​கையின் அடிப்ப​டையி​லே​யே ​தெய்வீக வடிவங்கள் அ​மைக்கப்படுகின்றன என்ற​போதும், அதற்கு உயிர்​கொடுப்பது சிற்பியின் இயற்​கையான அறிவாற்றலும், கற்ப​னைத் திறம் மற்றும் அவர் கண்ட ​மேற்​கோள்களும் ஆகும். சிற்பியின் திற​மையான ஆற்றலின்றி இத்தகு ​தொன்மங்கள் உயிர் ​பெறுவது கடினம்.

இந்த இடு​கையில் ​கோவிலின் அ​மைப்புடன் இ​​யைந்த மூர்த்திக​ளைப் பற்றி காண்​போம். ஒவ்​வொரு மூர்த்தத்தின் க​தை​யையும் தனித்தனி​யே கூறுவதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்​தை அறிய முடியும் என்பதால் அவற்​றை அவ்வா​றே கூற விரும்புகி​றேன்.

முதன்மு​றையாக ஒரு ​கோவிலுக்குள் ​செல்வ​தே ஒரு உன்னதமான அனுபவம். ஒவ்​வொரு ​கோவிலுக்கும் அதற்​கென்று ஒரு அதி​ர்வு உண்டு. அதனுள் பல ​பொக்கிஷங்ளும் உண்டு. பற்பல ​கோவில்கள் பிரபலமான​​வை, என​வே அவற்றின் பு​கைப்படங்களும் பல்​வேறு புத்தகங்களும் எளிதில் கி​டைக்கும். அவ்வாறு பிரபலமான ​கோவில்களில் நாம் நு​ழையும்​போது ஏற்கன​வே நமக்குள் எதிர்பார்ப்புகள் நி​றைந்திருக்கும். இருப்பினும் நமது உண்​மையான அனுபவ​மோ வித்தியாசமாகவும் எதிர்பாராததாகவு​மே இருக்கும். ஆனால், நாம் அறியாத ​கோவிலுக்குள் நு​ழைவ​தோ உண்​மையி​லே​யே மிகச் சிறந்த அனுபவமாகும். பல அற்புதங்கள் பு​தைந்துள்ள ஒரு ​பொக்கிஷ நிலவ​றைக்குள் புகும் அனுபவத்​தை ஏற்படுத்தும்.

திருவட்டது​றை சிவன்​ ​கோவிலுக்குள் ​செல்வதும் அத்த​​கைய ஒரு அற்புத அனுபவமாகும். நாங்கள் அக்​கோவிலின் முதன் ​கோபுர வாயிலில் இருந்து ​வெளிப்பிரகாரத்​தை அ​டைந்​தோம். எங்களுக்கு இடதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்குச் ​செல்லும் முற்றத்தின் வாயில் இருந்தது. எங்களுக்கு வலதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. அ​தைத் தாண்டி சிவாலயத்திற்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. மார்கழி மாத ​​வெயிலில் குளுகுளு​வென்றிருந்தது. இரண்டாம் ​கோபுர வாயி​லைத் தாண்டி நாங்கள் ​​சென்​றதும் எங்களுக்கு ​எதிரில் ​தெரிந்தது ஒரு மண்டபத்தின் சுவர்கள் தாம்.

பிரதட்சிணம் ​செய்யும் விதமாக நாங்கள் இடப்புறமாக திரும்பி சுற்றி வரத் துவங்கி​னோம்.

அந்த மண்டபம் மிகவும் அழகாகவும் ​தொன்​மையாகவும் இருந்தது. அதன் தூண்கள் பிற்கால ​சோழர் காலத்தியதாக​வோ அல்லது முற்கால நாயக்கர் காலத்தியதாக​வோ இருக்கக்கூடும், அ​நேகமாக 14ஆம் நூற்றாண்​டைச் ​சேர்ந்தது. அந்த மண்டபத்தின் வாயில் ​தெற்குப்புறமாக இருந்தது. இது ஒரு முகமண்டபத்துடன் இ​ணைந்திருந்தது. அந்த முகமண்டப​மோ இன்னும் ​தொன்​மையானதாக இருக்கக் கூடும். அதன் வாயிலும் ​தெற்குப்புறத்தில் இருந்தது. ஒரு சிறிய வழியும் ​தெரிந்தது. இந்த வழி​யை சுற்றி வந்த பிற​கே விஸ்தாரமான முற்றமும் இ​றைவனின் ஆலயமும் ​தெரிந்தன.

ஆலயத்​தைக் கண்ட உட​னே​யே அது முற்கால ​சோழர் கால ​கோவில் என்று அறிந்து​கொண்​டோம். சுவற்றில் உள்ள மாடங்களில் கல்லினால் ஆன ​தெய்வ மூர்த்தங்கள் காணப்பபட்டன. என்​னை​ ​மே​லே ​செல்ல விடாமல் எதிரில் இருந்த மிக அழகிய பிட்சாடனர் திருஉருவம் ஈர்த்தது. நான் இதுவ​ரை கண்டதி​லே​யே மிக அழகான பிட்சாடனர் சிற்பம்.

ஆளுயர அளவில், பளபளக்கும் கருநிறத்தில், ஒயிலான ந​டையுடனும், இதழ்களில் ஒரு மர்ம புன்ன​கையுடனும் அற்புத ப​டைப்பு. தாருவனத்தில் சிவ​பெருமானின் ஆனந்த நடனத்​தைக் குறிப்பது பிட்சாடனர் திருவுருவம்.

இக்க​தை​யை விளக்கும் மற்று​மொரு அழகிய ஓவியம் சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி ஆலயத்தில் உள்ளது.

தனது ​மேல் இடக்கரத்தில் சூலம் ஏந்தி, அத​னை தனது ​தோள்களில் சாய்த்துக் ​கொண்டு நிற்கிறார். சூலத்திலிருந்து ஒரு மயிலிறகு கற்​றை அழகுற ​​தொங்குகிறது. இடதுகரத்தில் ஒரு மண்​டை ஓடு பிட்​சை பாத்திரமாக உள்ளது. கீழ் வலதுகரம் தன்​னை பின்பற்றி வரும் மா​னை ​நோக்கி உள்ளது. இந்த ஓவியத்தில் காணும்​போது, மானுக்கு உணவளிக்க சிறிது புல் ​கையில் ​வைத்திருப்பது​ ​தெரிகிறது. அவருக்கு இடதுபுறத்தில் ஒரு குறுமனிதன் மிகப் ​பெரிய பாத்திரத்​தைத் தூக்கிப் பிடித்துள்ளார். திருவட்டது​றையி​லோ அருகி​லே ஒரு ரிஷி பத்தினி காணப்படுகிறார்.

தாருவனத்தில் ரிஷிக​ளை எதிர்​​கொண்ட பின் சிவ​பெருமான் தனது ஆனந்த நடனத்​தை நிகழ்த்துகிறார். எட்டு தி​சைகளும் அதிர, திருமுடியில் உள்ள கங்​கை பயத்தால் நடுநடுங்க, சிவ​பெருமான் ஆட, உ​​மையம்​மையும் கூட ஆடத்துவங்குகிறார். பிட்சாடனருக்கு அடுத்துள்ள மாடத்தில் சிவகாமசுந்தரியுடன் ஆனந்த நடனம் புரியும் ஆனந்த தாண்டவ மூர்த்திக் காணப்படுகிறார். இந்த நடராஜரும் மிக அற்புதமானது.

அற்புத ​வே​​லைப்பாட்டிற்காக மட்டுமன்றி, நடராஜர் சிற்பத்தின் ​வரலாற்றிலும் முக்கிய இடம் வசிப்பதாலும், இ​தேப் ​போன்று ​வே​​றெங்கும் காணப்படாதது மிக ஆச்சரியமான விஷயமாகும்.

நடராஜருக்கும் பிட்சாடனருக்கும் இ​டையி​லே சங்கடங்க​ளை தீர்க்கும் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆக, பிட்சாடனர், விநாயகர், நடராஜர் என மூன்று மூர்த்திகள் ​தெற்குமுக அர்த்தமண்டபத்தின் சுவற்றில் காணப்படுகிறார்கள்.

பிரதட்சிணமாக பிரகாரத்​தை வலம் வரும்​போது அடுத்து நாம் காண்பது சிவ​பெருமானின் தட்சிணாமூர்த்தி ​திருவுருவம்.

இந்த சிற்பமும் அற்புத ​​வே​லைப்பாட்டுடனும் அழகுடனும் விளங்குகிறது. நான்கு முனிவர்கள் சுற்றியிருக்க சின்முத்தி​ரையுடன் அருள்புரியும் இவர்தான் பரமகுரு. ​கர்ப்பகிரஹத்தின் தெற்கு சுவற்றிலுள்ள மாட​மே தட்சிணாமூர்த்தியின் இருப்பிடமாகும்.

அடுத்து ​மேற்கு சுவற்றிலுள்ள மாடத்தில் லிங்​கோத்பவ​ரைக் காண்கி​றோம். லிங்​கோத்பவர் பற்றிய க​தை திருவண்ணாம​லையில் நடந்ததாகக் கருதப்படுகிறது. ​மேற்கு மாடத்தில் உள்ள லிங்​கோத்பவ​ரை சிறிய வடிவத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் வணங்குகின்றனர்.

லிங்​கோத்பவ வடிவம் எப்​போது​மே ​மேற்கில் உள்ள மாடத்தில் இருப்பதாக ​தொன்று​தொட்டு எண்ணி வருகி​றோம். இருப்பினும் எப்​​போது​மே இது வழக்கில் இருந்திருக்கிறதா? சற்​றே ​மேல்​நோக்கி விமானத்​தைக் காண்​போம். அங்​கே இரண்டாம் தளத்திலும் சிகரத்திலும் விஷ்ணு​வே ​மேற்கு தி​சையில் குடியிருக்கிறார்.

இரண்டாம் தளத்தில் ஆதி​சேஷன் மீது ஸ்ரீ​தேவி பூ​தேவி ச​மேதராக மஹாவிஷ்ணு காட்சியளிக்கிறார். சிகரத்திலும் விஷ்ணு தனது இரு ம​னைவியருடன் அமர்ந்திருக்கிறார். இருப்பினும் அவரது ஆசனம் காணப்படவில்​லை. இ​தைக் காணும்​போது நமக்குள் ​கேள்வி எழுகிறது. இந்த மாற்றம் ஏன், எப்​போது ஏற்பட்டது? இன்று பல ​கோவில்களில் ​மேற்குமாடத்தில் நாம் விஷ்ணு மூர்த்தி இருப்ப​தைக் காண்கி​றோம். ஆனால் ​கோவில் விமானத்தி​லோ இ​தே இடத்தி​லே​யே விஷ்ணு குடியிருப்பது, ஆதிகாலத்திலிருந்து இது விஷ்ணு மூர்த்தியின் இடமாக இருந்திருக்கும் எனத் ​தெரிகிறது. இதற்கு சான்று கும்ப​கோணத்திலுள்ள நா​​கேஸ்வர ​கோவில். ​மேற்கு சுவற்றின் மாடத்தில் அர்த்தநாரீசுவரர் இருந்தாலும், விமானத்தின் இரண்டாம் தளத்திலும், சிகரத்திலும் விஷ்ணு​வே குடியிருக்கிறார்.

பிரகாரத்​தின் வடக்குப்பகுதியில் வலம்வரவும், அங்​கே வடக்கு மாடத்தில் நான்முகனாகிய பிரம்மா தனது ​தொன்று​தொட்ட இடத்தி​லே காட்சியளிக்கிறார்.

அர்த்தமண்டபத்தின் வடக்குபுற சுவற்றிலும் மூன்று மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சிவ​பெருமானின் இரு வடிவங்கள், கங்காதர​ர் மற்றும் அர்த்தநாரீசுவரர் இருவரும் துர்க்​கையின் ​மேற்கு மற்றும் கிழக்கு தி​சையில் உள்ளனர். துர்க்​கை நடுவில் உள்ள மாடத்தில் வீற்றிருக்கிறாள். அ​னைத்து மூர்த்திகளு​மே மிகவும் அழகுற வடிக்கப்பட்டு அவற்றின் க​தை​யை ஆன்மிக ​நோக்குடனும் அழகுடனும் விளக்குகிறது.


ஆதிகால ​சோழர் ​கோவில்களில் அர்த்தமண்டபத்திலும் விமானத்திலும் உள்ள மாடங்கள் 3-1-1-1-3 என்ற விதமான கட்ட​மைப்பு ஒரு ​பொதுவான அம்சம். இருப்பினும் இக்​கோவிலில் ​மேலும் ஒரு கூடுதலான மாடம் முகமண்டத்தின் வடக்கு முக சுவற்றில் இருப்பது மிக அபூர்வமான ஒன்று.

பத்தாவது மாடத்தில் கால​பைரவர் காட்சியளிக்கிறார். இரு பஞ்சரங்களின் இ​டையி​லே ஓர் தனி மாடத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

அ​நேகமான ஆதிகால ​சோழர் ​​கோவில்களில் விமானத்தின் சுவர்களில் ஒற்​​றை மாடம் இருப்பது வழக்கம். ​தெற்கு சுவற்றில் தக்ஷிணாமூர்த்தியும், விஷ்ணு (முற்காலம் முத​லே), அர்த்தநாரீசுவரர் (சிறிது காலத்திற்கு பின், ​மேலும் சில கால​மே வழக்கில் இருந்தது) அல்லது லிங்​கோத்பவர் (பிற்காலத்தில் வழக்கில் இருந்து இன்று வ​ரை ​தொடர்கிறது). பிரம்மா எப்​பொழுதும் வடக்கு சுவற்றி​லே​யே காணப்படுகிறார். சில சமயங்களில் பிற மூர்த்திகளும் வடக்கு சுவற்றில் காணப்படுவது உண்டு, உதாரணத்திற்கு காமரசவல்லியிலும், கும்ப​கோணத்திலுள்ள நா​கேஸ்வரர் ​கோவிலிலும் இவ்வாறு உள்ளது.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் மூன்று மாடங்கள் இருப்பது ஒன்றும் புதிதன்று. இருப்பினும் இந்தக் ​கோவிலில் ஆறு மாடங்களில் நான்கு மாடங்கள் மு​றையான மாடங்கள் அன்று. இ​வை ​ஒழுங்கான மாடத்தின் கட்ட​மைப்பாக இன்றி, கோவிலின் சுவற்றில் ​​வெட்டப்பட்டு உள்ளன. மகரத்​தோரணம் ​கொண்ட உத்திரக்கல்லும், ​மேலுள்ள வரிகளின் ​தொடர்பின்​மையும் இ​த​னை ப​றைசாற்றும்.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நடுநாயகமாக விளங்கும் விநாயகரும் துர்க்​கையு​மே உண்​மையான மாடங்களாக விளங்கியிருக்கின்றன என எடுத்துக் காட்டுகிறது. இது கூறும் க​தை​யென்ன? ஒரு​வே​ளை சிற்ப கட்டுமானர், கட்டுமானம் துவங்கியபின் இ​டை​யி​லே பல்​வேறு மூர்த்திக​ளையும் ​சேர்க்க எண்ணியிருப்பா​ரோ? அல்லது ஒரு​வே​ளை கட்டுவித்தவர் விருப்ப​மோ? ஆதிகால ​சோழர் ​கோவில்களில் இது எந்த நி​லைமாறுபடு காலத்​தைக் குறிக்கிறது? மற்ற நான்கு மூர்த்திக​ளை விட விநாயகர் மற்றும் துர்க்​கையின் மூர்த்திகள் ​வேறுவிதமாய் இருப்ப​தை அறியலாம். அதிலும் குறிப்பாக துர்க்​கை அ​நேகமாக உருண்​டையாக வடிவ​மைக்கப்பட்டுள்ளது. மஹிஷாசுரனின் த​லைமீது வீற்றிருக்கும் அன்​னை சற்​றே குறுகிய மற்றும் உயரமான ​வே​லைப்பாட்டுடன், சற்​றே அதிக உயரமாகவும் குறுகலாகவும் உள்ள மாடத்தில் மிக அரு​மையாக ​பொருந்தியுள்ளது.

ஆனால் சுவற்றில் ​வெட்டப்பட்டுள்ள மற்ற மாடங்க​ளோ ஆழமின்றியும், அகலமாகவும், உயரமாகவும் உள்ளன. அ​வை வரிகளின் ​மே​லே​யே உள்ளன. ஆனால் ஒழுங்கான மாடங்க​ளோ ​பொதுவாக ​சோழர் கால ​கோவில்களில் காணப்படுவது ​போன்​றே வரிகளின் ஊ​டே ​செல்கின்றன. ஒரு​வே​ளை இந்த மாடங்கள் பிற்காலத்தில் ​வெட்டப்பட்டனவாக இருக்கக் கூடு​மோ என்ற ஐயம் எழுகிறது. ​​வே​றொரு ​கோவிலில் இருந்த வந்த மூர்த்திகளுக்கு அ​டைக்கலம் வழங்க ​​செய்யப்பட்டதாகவும் இருக்கலா​மோ என்றும் ​தோன்றுகிறது. இ​வைகளின் இ​டை​யே உள்ள ஒற்று​மை ​வேற்று​மைக​ளை அறிந்து ​கொள்வதன் மூலம் நாம் இன்னும் ​தெளிவாக புரிந்து ​கொள்ள இயலும். பின்பு வரும் மற்று​மொரு இடு​கையில் இந்த மூர்த்திக​ளை ​மேலும் ஆராய்ந்து பார்த்து இந்தக் ​கேள்விகளுக்கு வி​டை காண முயற்சிப்​போம்.

(தமிழாக்க உதவி – தோழி திருமதி பர்வதவர்த்தினி முரளிகிருஷ்ணா அவர்கள் )


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கல்லில் ஒரு நாடகம் அரங்கேறுகிறது – பிரதீப் சக்ரவர்த்தி

நண்பர்களே இன்று நண்பர் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்கள் நம்முடன் ஒரு அருமையான பதிவை பகிர்கிறார். சரித்திரம், முக்கியமாக கல்வெட்டுகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தும் இவரது கோயில் வாகனங்களை பற்றிய நூல் அறிமுகம் முன்னர் பார்த்தோம்.

அதை அடுத்து அவர் தஞ்சாவூர் பற்றிய ஒரு அற்புத நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார் Thanjavur A Cultural History. வரும் நாட்களில் இவரிடத்தில் இருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம். நமக்காக அவர் ஒரு விசேஷ பதிவை தருகிறார். இதோ

திருமயம் புகழ் பெற்ற யாத்திரை தலம் – மதுரை அருகில் இருக்கும் இந்தத் தலத்தை பற்றி நான் ஹிந்து பேப்பரில் விரிவாக முன்னர் எழுதி இருந்தேன். பலமுறை அந்தப் பக்கம் பயணிக்கும் போது சென்று வருவேன்.

விஜய் சிற்பங்கள் பற்றி இடும் பதிவுகளை வாசித்து விட்டு, நானும் ஒரு சிற்பி கல்லில் எப்படி பல காட்சிகளை கொண்ட நாடகத்தை இயற்றுகிறான் என்பதை, அவரைப்போலவே, இந்தப் பதிவில் விளக்க முயற்சிக்கிறேன். நாம் மூலவரை பார்ப்போம். பிரம்மாண்ட சிற்பம் பத்தடிக்கும் மேலே இருக்கும் – தாய் பாறையில் குடைந்து வடிக்கப்பட்ட இதன் காலம் சுமார் 7ஆம் நூற்றாண்டு என்றும் பெரும்பிடுகு முத்தரையர் என்ற முத்தரையர் தலைவருடைய அன்னை பெருந்தேவி என்பவர் உபயம் என்றும் தெரியவருகிறது. மேலும் வெளியில் கட்டுமானக்கோயிலின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

பெருமாள் ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டிருக்கும் காட்சி. நாபியில் இருந்து பிரம்மா தோன்றுகிறார்.

நண்பர் அசோக் அவர்களின் அற்புத உதவியுடன் ( தூண்களை மாயமாக மறைத்துவிட்டார் – copyright image)

குப்தர் காலத்து சிற்பி போல இங்கேயும் சேஷனின் உடலை சாதாரணமாக சுருட்டி இருப்பது போல காட்சி அமைத்துள்ளார்கள் – மற்ற இடங்களில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக இருக்கும் ஆதிசேஷனின் உடலை போல அல்லாமல் காட்சி ஆரம்பித்து விட்டது.

அசுரர் மீது தனது விஷத்தை துப்பும் காட்சி – விஷம் அக்னி பிழம்புகளாய் சீறிச் செல்கிறது.

அவ்வளவு பலத்துடன் விஷத்தை கக்கிய பாம்பின் தலை மிகவும் தத்ரூபமாக கொத்திவிட்டு பின்னால் அசைவதை போல சிற்பி வடித்துள்ளது மிகவும் அருமை.

காட்சி நகரும் திசையை நமக்கு உணர்த்தும் வகையில் மேலே நித்யசூரிகள் பறந்து வருகின்றனர். எம்பெருமானின் திருமுகத்திற்கு மேலே சிற்பி – இயற்கையாகவே அமைந்த கல்லின் வளைவை தனது சிற்பத்தின் ஒரு அம்சமாக உபயோகித்து, மேலே பறந்து வருபவர்களுக்கும் கீழே நடக்கும் காட்சிகளுக்கும் ஒரு இடைவெளி நிறுவ முயற்சிக்கிறானோ? பறந்து வருவோரை குறிக்க அவர்களது கால்களின் அமைப்பை, அப்படி வடிக்கும் போதும் கவனமாக, கடவுளின் முகத்திற்கு முன் கால்கள் இல்லாத படி வடித்திருப்பது அருமை.

ஒரு பக்கம் கருடனும் சித்திரகுப்தனும் உள்ளனர். சிலர் இது குடைவரையை நிறுவிய அரசனின் சிலையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அந்தப் பக்கம் பார்க்கும் போது இயற்கையாக வரும் கல்லின் வளைவை கொண்டு இரு அசுரர்களும் கொஞ்சம் தொலைவில் இருக்கின்றனர் என்று நமக்கு உணர்த்துகிறான் போல.

ஒரு பக்கம் சாயும் வண்ணம் அசுரர்களை செதுக்கி அவர்கள் சீக்கிரமே மாண்டு அழியப்போகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறான் அந்த சிற்பி.

இதே கதை பல்லவ சிற்பி வடித்த முறையும் முழு கதையையும் படிக்க

பிரம்மாவின் அருகில் மான் தலையுடன் இருப்பது யார்?

நன்றி படங்கள்: Flickr : lomaDI, Prof Swaminathan and http://senkottaisriram.blogspot.com/2008/04/thirumayam-near-pudukkoottai-tamil-nadu.html


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

பேரூர் கனகசபையின் மனம் கவரும் சிற்பங்களுக்கு இது ஒரு காணிக்கை. பாகம் 1

பேரூரின் கலைச் சுரங்கத்தை என்று கண்ணுற்றேனே அன்று முதல் இந்தக் கலையழகை நம் கலாஇரசிகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து இரசித்து சுவைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல! பத்து வருடங்கள்! ஆனால் இத்தனைக் காலம் பொறுத்ததிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பதிவினை படித்து முடிக்கும் பொழுது அதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.

இன்று நாம் பார்க்கப் போவது அழகுப் பெட்டகமான ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் அற்புத அழகைத்தான். இதோ, சிறைக்குள் இருக்கும் இந்த உயிர்ச் சிலையைப் பாருங்கள்.

முதலில், இது ஒரு தூண் சிற்பம்! ஒரே கல்லால் ஆன தூண் சிற்பம். பேரூரின் இந்தக் கனகசபையில் மிகவும் அற்புதமான வேலைப்பாடமைந்த எட்டு தூண்கள் இங்கே வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை கி.பி 1625 முதல் கி.பி. 1659 வருடங்களில் இராஜா சிவத்திரு அழகாதிரி நாயக்கர் அவர்களால் அமைக்கப் பெற்றது.


இரும்புக் கூட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ, சிற்பக்கலையின் உச்சமாகத் தோன்றும் இந்தக் கலையின் அழகு பெரும்பாலானோர் கவனத்திற்கு வருவதேயில்லை! இதைப் படித்த பின்னாவது சில நல்ல உள்ளங்கள் இந்தச் சிறைக்கு பதில் நல்ல கண்கவரும் கண்ணாடிக் கூண்டை அமைப்பார்கள் என நம்புவோம்.



சோழர்களின் காலத்திற்குப் பின்னும், 13 – 14 ஆம் நூற்றாண்டு பாண்டியர்களின் காலத்திற்குப் பிறகும் சிற்பக் கலையின் வளர்ச்சி சற்றே குன்றியது போல்தான் இருந்தது. ஆனால் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கனகச்சபை சிற்பம், சிற்பக் கலை இன்னும் மறைந்து விட வில்லை மாறாக அந்தக் கலையில் தேர்ச்சி அடைந்து அழகில் இமயத்தையும் விஞ்சியதை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

கம்பிகளுக்குள் இல்லாமல், கம்பீரமாக நிற்கும் பிரிட்டிஷ் காப்பகத்தின் பழைய புகைப்படம் இதோ…

ஓவியர் சிற்பி அவர்கள் ஓவியமும் இதோ ( நன்றி varalaaru.com )

நம்முடைய கலை மீதான கட்டுக்கடங்காத ஆர்வத்தை அறிந்து, புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் இந்த அழகுச் சிலையின் அழகை கண்ணார பருகுவதற்காக கதவையும் திறந்து காட்டிய அந்த ஆலயத்தின் EO அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, இந்தக் கலை விருந்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இதோ, மனதைக் கொள்ளையடிக்கும் அந்த அழகுச் சிலையின் உருவம்.

இது ஒரு தனித்துவம் வாய்ந்த சிற்பம், கற்சிலையாகப் பார்த்தாலும், சிவனின் நடனமாகப் பார்த்தாலும் சாமனியர்களால் எளிதில் புரிந்துகொள்வது கடினம்தான். சிவனை நாடி அவனை அறிந்தால்தான் இந்த நடனத்தையும் புரிந்துகொண்டு இரசிக்கமுடியுமாம்! ப்ரம்மா, விஷ்ணு, கந்தன், நாரதர், பரதன் (நாட்டிய சாஸ்திரத்தை எழுதியவர்) இவர்களால்தான் நடனத்தை அறிந்து கொண்டு இரசித்து ஆனந்திக்க முடியுமாம்!

சாலுவன் குப்பத்தில் இருக்கும் கல்வெட்டு ஒன்று சிவநடனத்தின் தனிச் சிறப்பை கூறுவதோடு, நாட்டியத்தின், சங்கீதத்தின் கூறுகளை விளக்கி, சிவநடனத்தை கண்டுகளிக்க விளக்குகிறது: யதி ந விததா பரதோ யதி ந ஹரிர் நரதோ ந வ ஸ்கந்தா பொத்தம் க இவ ஸமர்த்தாஸ் ஸங்கிதம் கலகலஸ்ய (Epigraph. Ind. 10, p. 12).
நூல்: NATARAJA – THE LORD OF DANCE – Dr. Sivaramamurti

சிவநடனத்தைக் கண்டுகளிக்கும் இந்தக் கடவுளர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் இரசனைக்கு தக்கவாறும், நடனத்தை ஊக்குவிப்பதைப் போலவும், பல்வேறு இசைக் கருவிகளை உபயோகித்து நாயகனின் நாட்டியத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றனர். இதோ அதைப்பற்றி சில வரிகள், நடனத்தை நாயகன் துவக்கிய கணமே விஷ்ணு மர்தளம் என்னும் வாத்தியத்தை இசைத்து தன் தெய்வீக இசைய பரவவிட, துடிப்பாய் எழும் அந்த ஒலி வண்ணமயில்களைத் தோகைவிரித்தாடச் செய்யும் கரு மேகங்களின் இடியாய் எழுகிறது. தாமரைக் கையோன் பிரம்மாவோ வெங்கலத் தாளத்தை நாட்டியத்திற்கும் விஷ்ணுவின் தாளத்திற்கும் ஏற்றார் போல் தட்டி இசைத்து காமனை வென்ற சிவனின் நர்த்தனத்தை இடைவிடாது நடத்துகிறார்.

இங்கிருக்கும் பிரம்மாவிற்கு அப்படி என்ன சிறப்பு, தெரிகிறதா?


ஐந்து சிரங்களைக் கொண்ட பிரம்மா, சிவனுக்குரிய சின்னங்களான மானையும், மழுவையும் கொண்டுள்ளார்!!

இசைக்கலைஞர் எவ்வாறு கணநேரம் தன் பாடலை நிறுத்தி, தாளத்திற்கும், ஸ்ருதிக்கும் ஏற்றவாறு எப்படி திரும்பத்தொடர்கிறாரோ, அதே போல் இங்கு நம் ஆடலழகனும் கணநேரம் தன் நடனத்தை நிறுத்தி தன் மத்தளத்தை இசைத்து இசையை தன் வழிக்கு நேர்த்திசெய்து மீண்டும் தொடர்கிறார்.

காரைக்கால் அம்மையார் இங்கே மற்றுமொரு தனித்துவம்! இது தனிச் சிற்பம் அல்ல அதே தூணில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பமே!

என்னவொரு அற்புதமான வடிவமைப்பு! வற்றிய முலைகள், சுருங்கி மடிப்புகளைக் காட்டும் கழுத்து தசைகள், வயதான தோற்றத்தை அற்புதமாக எடுத்துக் காட்டும் இந்தச் சிலை இளம் வயதிலேயே, வயதான பேய் உருவம் கேட்டுப் பெற்ற காரைக்காலம்மையார்! (முந்தைய பதிவுகள் பார்க்கவும்)

முயலகன் மட்டும் தப்பி விடுவாரா என்ன? இதோ தன் கையில் பாம்பை பிடித்தவாறு காணப்படும் கொழு கொழு முயலகன்.

சற்றே நீளமான பதிவுதான், என்னசெய்வது இதை பாகங்களாகப் பிரித்து பதிவது தவறென்று தோன்றுவதால் வார்த்தைகளைச் சுருக்கி, வண்ணப் படங்களை பேச வைக்கிறேன்.

அழகான பிரிந்த தாடை, அழகிய வரிகளைக் கொண்ட நாசிகளை உடைய அழகிய இளமைத் ததும்பும் வதனம் கொண்ட சிவன்.

உயர்த்திய கால்கள், எவ்வளவு அழகாக கனக் கச்சிதமாக வடிக்கப் பட்டிருக்கும் மூட்டு, கைகள், கைவிரல், நகம், விரல் மூட்டுகளின் மேல் உள்ள வரிகள், நகச்சதை, என்னவொரு தத்ரூபமான படைப்பு!!



மற்றுமொரு அழகிய வடிவமைப்பு, மேல்பாகமும் அடிப்பாகமும் காட்டும் கால் பாதம், விரல்கள், பாதத்தின் மேல் தெரியும் காலணியின் வார்ப்பட்டை, வளைந்து திரும்பி அழகிய முத்திரையைக் காட்டும் கை, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல், இதை விடத் துல்லியமாக யாரால் வடிக்க இயலும்!






எண்ணற்ற வடிவங்களைத் தாங்கி இருக்கும், கைகள் வரிசையாய் விரிகின்றன…

தனித்துவம் பெற்ற எண்ணற்ற சின்னங்கள் எப்படித்தான் வடித்தனரோ! இவைகள் அனைத்திற்கும் பெயர்களும், முக்கியத்துவமும் கூடத் தெரியவில்லை, தேடிக் கண்டுபிடிப்போம்.

சிறப்பிற்கும் மேல் சிறப்பான ஒன்று!


பொதுவாக நாம் சிற்பத்தின் அளவைக்காட்ட ஏதேனும் தெரிந்த பொருளை உபயோகிப்பது வழக்கம், முக்கியமாக அளவில் மிகவும் சிறிய சிற்பங்களின் அளவை எடுத்துக்காட்ட, அதே போல் பெரிய கோவில் துவார பாலகர் சிற்பத்தின் அளவைக் காட்ட சிற்பி உபயோகித்திருக்கும் யானைக் கூட நினைவுக்கு வரலாம் உங்களுக்கு. ஆனால், இங்கு தற்செயலாகவோ, அல்லது சிற்பத்தின் பெருமையைக் கூட்டுவதற்காகவே, இயற்கையாக கிடைத்த இந்த அரிய தடயம், மனதை கொள்ளை கொண்டுவிட்டது! நீங்களேப் பாருங்கள்.

சிற்பியின் திறமையும், சிலையின் தத்ரூபமும் தான் இந்தக் கொசுவை ஏமாற்றி விட்டதோ! பாவம் படைத்தவனின் குருதியையே ருசிப் பார்க்க துளையிட முயற்சி செய்கிறது போலும்!!

இந்தப் பதிவும் இதில் உள்ள சிற்பங்களும் தங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொண்டிருக்கும், அவ்வாறு இருந்தால் இந்தக் கொள்ளை அழகை பேரூர் செல்லும் யாவரும் கண்டு மகிழ வேண்டும் என்று நினைத்தால், இந்தப் பதிவை நண்பர்களோடும், நல்ல உள்ளம் கொண்ட அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள், அப்படியாவது சில நல்ல உள்ளங்கள் சேர்ந்து இரும்புச் சிறையில் இருக்கும் இந்த அழகுச் சிலைக்கு கண்ணாடிக் கூண்டு கிடைக்க வழி பிறக்கட்டும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment