நாம் முன்பு பார்த்த இரண்டாம் ஸ்ரீரங்கம் தூண் சிற்பம்…அதில் உள்ள காட்சி என்ன வென்று ஆராயலாம். முதுகில் (சரி) பின்னால் இருந்து தாக்கும் பழக்கம் தமிழனுக்கு இல்லை … படங்களை பாருங்கள்….

முன்னால் இருப்பவன் தமிழ் வீரன் – குடுமி, இடுப்பில் வேட்டி, நெற்றியில் திலகம், கழுத்தில் சங்கிலி, ஆரம் – காதில் குண்டலம், இரு கால்களிலும் சிலம்பு – எல்லாவற்றையும் விட தமிழனுக்கே உரிய முறுக்கிய மீசை ….அந்த முகத்தில் தான் என்ன ஒரு கம்பீரம் மேலிருக்கும் பெண்மணியோ அதைவிட அழகு.. கட்டை விரலில் கூட மோதிரம் அணிந்து, கழுத்தில் ரெட்டை வட சங்கிலி, மாலை, ஆரம் -கையில் வளையல், காலில் முறுக்கிய சிலம்பு, தலையில் ராக்கடி ….. அப்பப்ப்பா ஒரு நடமாடும் நகை கடை – அதைவிட முகத்தில் மயக்கும் மந்தகாச புன்னகை.. பின்னால் இருப்பவர்கள் அன்னியர்கள் – அவர்கள் உடையை சற்று பாருங்கள் – மேல் சட்டை, முழு கால் குழாய் …..தலையில் குல்லா மற்றும் மீசையை பார்த்தல் – இது ஒருவேளை மாலிக் கபூர் அரங்கத்தை சூறை ஆடிய கதை போல உள்ளது.
எனினும் அந்த அம்மணி குடையாய் பிடித்திருப்பது என்னவென்று விளங்கவில்லை – அதே கோவிலின் இன்னொரு தூணில் இதே போல் ( அதே அம்மணி ) தலைக்கு மேல் தூக்கி பிடித்து இருக்கும் சிற்பம் பாருங்கள்….முதல் சிற்பத்தில் இரு புறத்திலும் அழகிய கிளிகள் உள்ளன… அவற்றை வைத்து அவள் ஒரு குறத்தி என்று பல இடங்களில் அடையாளம் கொள்கின்றனர்…
குறத்தி … ஊசி பாசி மணி என்று இருப்பால் – அப்போது இந்த சிலையில் இருக்கும் ஆபரங்கள அனைத்தும் …. !!!! இல்லையேல் அந்த நாளில் குறத்தி ஆட்டத்திற்கு வசூல் அதிகமோ ??