எல்லோரா ஒரு மேலோட்டம் சென்ற மடலில் பார்த்தோம். அப்போது அஜந்தா, இதோ வருகிறது
அடர்ந்த காடுகளின் நடுவில் குதிரையின் குளம்பு போன்ற வடிவம் கொண்ட மலை சரிவில் – ஒரு பக்கம் அழகிய நீர்வீழ்ச்சியின் வனப்பு … அந்த ரம்மியமான இயற்கை கொஞ்சும் எழில் வனத்தில் தங்களது மடத்தை அமைத்தனர் அந்த பெளத்தர்கள்…. இயற்கையின் அழகுக்கு போட்டியாக கல்லில் தங்களது கலையை குடைந்தனர், அதனுள் எண்ணில் அடங்க எழில் கொஞ்சும் சிற்பங்கள்
அது போதாதென்று பல் வேறு வண்ணங்களில் அழியா ஓவியங்களை தீட்டி … இந்த ஒப்பற்ற பொக்கிஷத்தை – காலத்தினால் அழியாப் புகழை நம் மண்ணுக்கு தந்த விட்டு சென்ற அந்த அன்பு உள்ளங்களுக்கு நாம் என்ன கை மாறு செய்யப்போகிறோம். ???
ஆயனர் ( சிவகாமியின் சபதம் ) இதனை பார்க்க எவ்வளவு இன்னல்களை சந்தித்தார் …….இதனுள் அப்படி என்ன இருக்கிறது…. வரும் மடல்களில்….