
சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தின் புராதன கோயில்களில் ஒன்றான தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப சிற்ப வேலைபாடு இது. ஆனால் பராமரிப்பு இல்லாமையால் இந்த அறிய பொக்கிஷம் கேட்பார் அற்று கிடக்கிறது. விலை மதிப்பில்லா சிற்பங்களுக்கு தற்போது காவல் காய்ந்த கருவேல முர்க்களே.
நீங்கள் பார்க்கும் சங்கிலி முற்றிலும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டது
அதுவும் மேல் இருக்கும் தளத்தில் இருந்து தொங்குமாறு செதுக்கிய அந்த மகாசிற்பியின் ஆவி தற்போது நிலையை கண்டால் என்ன பாடு படுமோ. அய்யோ , அக்கற் சிலையை செதுக்க அச்சிற்பி எப்பாடு பட்டுஇருப்பனோ, தனது கை நரம்புகளின் வலியையும் மீறி தலைமுறை தலைமுறையாக தான் கற்ற கலையை ..ஒரு ஆயிரம் ஆண்டு அறிவை…தன் குருதியை ……கல்லினுள் ஊற்றி அதற்க்கு உயிர் கொடுத்த அவன் கரங்கள்…… அக்கல்லும் அந்த படைப்பாலியின் உழைப்பிற்கு ஆதாரமாக புவி இருக்கும் வரை நிற்க ஆவல் பூண்டு பல நூற்றாண்டுகள் நின்றும் பார்போரை நேகிழ்விதும் வந்திருக்கும் …நடுவில் வந்தவர்கள் தெரிந்து சிதைதர்கள் – அவர்கள் விரோதிகள் – பகைவர்கள்… மன்னிக்கலாம் , இம் மூடர்களோ …இவர்களை என்ன வென்று சொல்வது – சபிப்பது . இதை பார்த்தால் சில முறை இவை இருக்கும் இடத்தில் இருந்து சிதைவதை விட எங்கோ ஐரோபிய கண்காட்சியில் இருந்து வாழ்வதே மேல்