சோழ சிற்பியின் அபார திறமையை போற்றி ஆதியும் அந்தமும் இல்லா அருள் பெரும் ஜோதி ரூபமான அவனின் ஆடல் உருவம் இந்த சட்டங்களுக்குள் வந்து ஆடுவது போலவே உள்ளது …..ஆடல் வல்லானின் ஆனந்த கூத்து …. தஞ்சை பெரிய கோவில் சிற்பம்.. பல கோணங்கள்…
சுயன்று ஆடும் அவனின் சுயர்சியை காட்ட கழுத்தில் இருக்கும் பாம்பு நழுவி கையில் தொங்கிக்கொண்டு இருப்பதை பாருங்கள் ..அந்த பாம்பின் சுயல்களில் தான் என்ன ஒரு உயிரோட்டம் ….இடையில் இருக்கும் உடுப்பும் அது போலவே பறந்து அவன் சுயன்று சுயன்று ஆடுவதை வெளி கொணர்கின்றன … அந்த .உடைகளில் தான் என்ன அழகிய வண்ணங்கள்.. ஒரு காலில் நின்று ஆடும் போதும் என்ன ஒரு வலிமை என்ன ஒரு ஒரு நளினம் ..சிற்பியின் வேலைப்பாடு ஒவ்வொரு அங்க அசைவையும் காட்டும் விதத்தில் உள்ளது
பிரமனுக்கு இரவாகும்பொழுது இயற்கை சலிக்காது. சிவபெருமான் அருளினால் ஒழிய இயக்கம் இல்லை. அவன் கழிப்பேருவகை கொண்டு ஆடும்போது சடப் பொருள்கள் மூலம் துயில் நீங்கி எழும் ஒலி அலைகளை வாரி இறைக்கிறான். அசையாத பொருள்களும் அசைந்து அவனை சுற்றி ஒளிக்கற்றைகளை பரப்புகின்றன. ஆடிக்கொண்டே அவன் பல்வேறு தொழில்களை நடத்துகிறான். முடிவு காலம் நெருங்கியதும் எல்லாவற்றையும், உருவங்களையும் நாமங்களையும் – தீயால் சுட்டெரித்து, அவைகட்கு ஓய்வு கொடுக்கிறான். இது கவிதை. இம்மி குறைவின்றி விஞ்ஞானமும் கூட.
– ஆனந்த குமாரசுவாமி.