ஒரு சிறு கிறுக்கல் ஒருவரை சரித்திரத்தில் இடம்பெற செய்தது…

திருமதி லட்சுமி சரத் அவர்களின் இந்த இடுகை பார்த்தவுடன் நான் முன்னர் மின்தமிழில் இட்ட மடல் நினைவுக்கு வந்தது

http://backpakker.blogspot.com/2008/09/india-through-my-eyes_21.html

ஏப்ரல் மாதம் 1819 ஆம் ஆண்டு , ஜான் ஸ்மித் ( John smith) என்ற சென்னை (
அப்போது மதராஸ் )ரெஜிமேன்டை சார்ந்த ஆங்கிலேய கேப்டன் – தனது
சகாக்களுடன் அடர்ந்த காடுகளில் புலி வேட்டையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் ஒரு குதிரை லாடம் போன்ற பள்ளத்தாக்கில் பல குகைகளை கண்டார்.
ஆம் – அவர்தான் அஜந்தா குகைகளை மீண்டும் கண்டு பிடித்தவர்.

அவர் அதனுடன் நிறுத்தவில்லை – அற்புத ஓவியங்களை உடைய அச்சுவரில் தனது
கையெழுத்து மற்றும் தேதியை கிறுக்கினார். இதோ அந்த வரலாற்று அம்சம்
பொருந்திய அவரது கையெழுத்து
17471749
– ஒரு சிறு கிறுக்கல் ஒருவரை சரித்திரத்தில் இடம்பெற செய்தது.

இந்த செயலை பின்பற்றி தானோ இன்று பல ரோமியோக்கள் ( tanjore s.mani ???)
தங்கள் பெயர்களை வரலாற்றில் பல சாகசங்களை புரிந்து அவற்றை கல்லில்
செதுக்கிய நமது ஒப்பற்ற அரசர்களுக்கு சமமாக இடுகின்றனர்.
17411745
கங்கை கொண்ட சோழபுரத்தில் – நமது கிறுக்கன் கைவரிசை -. பரிட்சையில்
ஒரு வரி கூட எழுத மாட்டார்கள் -இங்கே சாசனம் எழுதுகிறார்கள். இவர்களை
மாறு கால் மாறு கை வாங்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *