தமிழகத்தில் பத்மபாணி, தட்சிணாமூர்த்தி வழிபாடு
டாக்டர் நா. கணேசன், ஹ்யூஸ்டன், அமெரிக்கா
மூன்று சோழச் சக்ரவர்த்திகள் அரசவையில் கவிச்சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். அவர் கவிப்பேரரசு ஆகியபோது சோழமாராசன் வீற்றிருக்க, தமிழைக் கற்பித்த ஆசிரியர் ஐவர் யார் என்று பாடினார் – முருகன், அவன் அவதாரம் ஆன சம்பந்தர், கும்பமுனி அகத்தியன், சடையன் சிவபிரான், அவனின் (பௌத்தசமய) அவதாரம் பதுமக்கொத்தன்.
பதுமக்கொத்தன் யார்? என்று தொடங்கி அவனது இருப்பிடம் போதலகிரி யாது என்று ஆராயும் கட்டுரை இது. வடமொழியில் ஒகரக்குறில் இல்லை எனவே பொதியில் > பொதல > போதல(மலை) ஆயிற்று.
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்
என்பது இந்திய மரபு. பௌத்தத்தில் மன்னரைப் பத்மபாணி-அவலோகிதன் என்பார்கள். அதனால் திபெத்தியர் தலாய்லாமாவை அவலோகிதர் அவதாரம் என்றும் அவர் வாழிடத்துக்கு பொதலா என்றும் கொண்டனர்.
தமிழின் பௌத்தசமயத் தொடர்புகள், யுவான் சுவாங்கின் செய்தி, 2-ஆம் நூற்றாண்டு நூலான கண்டவியூகம், அதில் உள்ள தமிழ்நாட்டுக் குறிப்புகள், தட்சிணாமூர்த்தி ~ அவலோகிதன் தொடர்புகள் என்று விரிந்த குறிப்புகள். சீனர் குவான் யின் என்றும், யப்பானியர் கானன் என்றும் வழிபடும் அவலோகிதர் கிழக்காசியாவின் பெருந்தெய்வம். கருணைத் தெய்வம் ஆதலால் கிழக்கே ஆண் பெண்ணாக மாறிவிட்ட விந்தை. அவள் வசிக்கும் போதலமலை (பொதியில் / பொதிகை) அருகே உள்ள சமுத்திரம் அமைந்த சிலைகளைச் சீனர் கோவில்களில் காணலாம். வடமொழியில் பொதியில் / பொதிகை குலபர்வதம், தக்ஷிணாசலம், மலயம் என்று போற்றப்படுகிறது. பொதிகைத் தென்றல் மலயமாருதம் என்றும், பாண்டியர்களின் கொடியில் பொதிகை மலையும் இருந்தன. அதனால், மதுரை மீனாட்சியின் தந்தை மலயத்வஜ பாண்டியன்.
இச்செய்திகளை விரிவாக ஆராயவும், ஒப்புமைக்குப் பழைய சிற்பங்களின் படங்கள் காணவும் பிடிஎப் கோப்பைப் படிக்க உங்களை அழைக்கிறேன்!
தமிழகத்தில் பத்மபாணி, தட்சிணாமூர்த்தி வழிபாடு
padmakottar