சென்ற மடலின் புதிரை உடைக்க முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி ( விடையை முதலில் அளித்த திருவுக்கு ஒரு சபாஷ் ) . கொஞ்சம் கடினமான புதிர் தான். சரி உங்கள் உதவிக்கு இன்னும் சில படங்களை தருகிறேன்.
தூண்களின் படங்கள் – முதலில் தொலைவில் இருந்து , பின்னர் அருகில் சென்று.
சில தருணங்களில் நம் கண்களே நம்மை எப்படி மறைகின்றன பார்த்தீர்கள. இது போலவே இங்கு தினமும் கூடும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பார்த்தும் பார்க்காமலும் செல்லும் தூண்கள் இவை.
இன்னும் பல சிற்பங்கள்
சரி, விடையை நெருங்கிவிட்டோம். அழகிய சிற்ப வேலைப் பாடு மிகுந்த தூண்களை யாரோ வேண்டும் என்றே சிதைத்து உள்ளனர். யாராக இருக்கும் ?
சென்ற மடலில் ஒரு படத்தில் விடையை ஒலித்து வைத்தேன்.
கண்டுபிடிக்க முடிந்ததா ? சற்று அல்லாந்து பாருங்கள்
இரண்டு சிந்தனைகள் மோதிய தருணம் …
ஆம், இந்த தூண்கள் பிறந்து சிதைந்த வேலை நம் நாட்டின் தலை எழுத்தே மாறிய தருணம். இன்னுமா விடை தெரியவில்லை, முந்தைய வாக்கியத்தை இன்னொரு முறை படியுங்கள்.