திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்

நண்பர் திரு சக்திஸ் அவர்களுடன் தற்செயலாக சிங்கை அருங்காட்சியகம் சென்ற போது பார்த்த ஒரு அற்புத சோழ சிலையை இன்று உங்களுடன் பகிர்கின்றேன். கருங்கல்லில் சிலை செதுக்குவது என்பது கலைஞனின் கலைக்கு ஒரு சவால், அதுவும் கடினாமான கல்லில் அரங்கனின் கருணை முகத்தை வடிக்கவேண்டும் என்றால், இரும்பு உளி கொண்டு செதில் செதிலாக கல்லை செதுக்கி அவனது அழகு கன்னங்களை வெளிக்கொணர வேண்டும், அலங்காரப்ரியனின் அங்கங்களை அணிகலன்களால் மெருகூட்ட வேண்டும். சிறு பிழைக்கும் இடம் இல்லாத இந்த திறனே அவனது படைப்புகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் அழியாப் புகழுடன் இருக்கச் செய்கிறது.

இந்த சிலை, சற்று சிதைந்துள்ளது – எவரோ வேண்டும் என்றே சிதைத்துள்ளனர். மூக்கறுப்பு . சாதாரணமாக இதற்குப் பிறகு இவை ஆலயங்களில் வழிபாட்டிற்கு வைக்கப்பட மாட்டா. மனிதனின் தேடலில் இறைவனைக் காண பல பாதைகள், பலமுறை இந்த வெவ்வேறு பாதைகள் சந்திக்கும் பொது சிதறும் மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. பாவம் இந்த மோதலில் மனிதனே மடியும் பொது சிலை என்ன செய்யும்.

எனினும் சிதைந்த இந்த வடிவிலும் நாம் பார்க்க நிறைய்ய இருக்கிறது. லியோநார்டோ டாவின்சி சொன்னாராம் – மூன்று விதமான மனிதர் உள்ளனர். சிலர் காண்போர். மற்றவர் இதை பார் என்று சொன்னால் காண்போர். சிலர் காணாதோர்!

இந்த சிற்பத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ? முழுவதுமாக உள்ளே செல்லாமல் ( அதற்கு சிதையாது இருக்கும் ஒரு சிலையை எடுத்து பிறகு பார்ப்போம் )

முதலில் இடையில் அவரது இடுப்பில் உள்ள சிங்க முக பட்டை

சரி சரி, முக்கியமான இடத்திற்கு வருவோம். முன்னரே வெண்கல சிலைகளில் பார்த்த ஸ்ரீவத்சம். இதோ இங்கே முக்கோண வடிவில்

மிகவும் கடினமான பனி. அதுவும் இப்படி மார்பில் இருந்து வெளியே புடைத்து நிற்கும்படி செதுக்குவது மிக கடினம்.

இதை இன்னும் ஆராய வேண்டும். உலோக சிலையில் உள்ள சித்தரிப்பு மற்றும் கற்சிலை – வெவ்வேறு காலங்களில் எப்படி ஸ்ரீவத்சம் வடிக்கப்பட்டுள்ளது என்பதை இன்னும் ஆழமாக பார்க்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *